Thursday, December 30, 2010

கீழக்கரையில் டிவி வழங்குவதில் முறைகேடை கண்டித்து இதஜ நடவடிக்கை!

கீழக்கரையில் டிவி வழங்குவதில் முறைகேடை கண்டித்து இதஜ நடவடிக்கை!


சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொண்ட நகராட்சியான கீழக்கரையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதில் முறைகேடு நடைபெற்றது.







இதனால் பெண்களும், பொது மக்களும் ஆத்திரம் அடைந்தனர். டிவி வழங்கும் கிழக்குத தெரு கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் பெரும் பிரச்னையும், சலசலப்பும் ஏற்பட்டது. இதையடுத்து இதஜ மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார், வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜமீல் ஆகியோர் தங்களது கண்டனங்களை தினமலர், தினத்தந்தி, தினமணி உள்ளிட்ட பத்திரிக்கைகளும், ஜெயா டிவி, மக்கள் டிவி, விண்டிவி உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பதிவு செய்தனர்.







திமுக கட்சியை சேர்ந்த பஷீர் அவர்கள் தலைமையில் நடைபெறும் நகராட்சி நிர்வாகம், சுகாதாரம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் பின்தங்கி போய் உள்ளது. ஊர் எங்கும் குப்பை கூளங்கள் நிறைந்தும், புதியதாக போடப்பட்ட சாலைகள் அத்தனையும் குண்டு குழியுமாக மழை நீரால் சகதி சாலையாக காட்சியளிக்கிறது. இந்த சீர்கேடுகள் களையப்பட வேண்டும் என ஏற்கனவே நம் இதஜ சார்பாக மனு கொடுக்கப்பட்டும் சரியாக செயல்படவில்லை. இந்த நிலையில் டிவி வழங்குவதில் பாராபட்சம் காட்டுகிறது.



நகராட்சித் தலைவர் தனது வார்டு மற்றும் தனக்கு தேவையானவர்களுக்கு மட்டும் டிவிகளை வழங்கி விட்டு மற்றவர்களுக்கு வழங்காமல் பொறுப்பை தட்டி கழித்த காரணத்தால் மக்கள் மத்தியல் பெரும் குழுப்பம் ஏற்பட்டது.







இதை நகராட்சித் தலைவர், தாசில்தார், கிராம அலுவலக அதிகாரி ஆகியோரிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. கிராம அலுவலக அதிகாரி, டிவி வழங்கும் பொறுப்பு அதிகாரி உள்ளிட்டவர் சம்பவ இடத்திற்கு வந்து அனைவருக்கும் டிவி வழங்வோம் என உறுதி அளித்தனர். இந்த வாக்குறுதியை மீறினால் வரும் வெள்ளிக் கிழமை (01.01.2011) அன்று நகராட்சியினை முற்றுகை இடப்படும் என எச்சரிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கை கீழக்கரை இதஜ நிர்வாகம் செய்து வருகிறது.



-அபூ உமைமா.

Wednesday, December 29, 2010

கனிமொழி சந்திப்பும்; கள்ளபெயரில் பீஜேயின் உளறலும்!

அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்...

''அறுபத்தி ஆறு கேள்விகளுக்கு பதில் என்ற பெயரில் அர்ச்சனையை தொடங்கிய அண்ணன் அதையும் முழுமையாக்காமல், இலங்கை தவ்ஹீத் மவ்லவி  முஜாஹித் விஷயத்தில் செய்த தாதாயிசம் குறித்து எங்கள் சகோதரர் அப்துல் முஹைமின் வைத்த குற்றச்சாட்டு பற்றி மூச்சுவிடாமலும், ''கமிஷனர் அலுவலகத்தில் கள்ளச்சங்கம் சார்பாக கொடுக்கப்பட்ட புகார் மனு பற்றியும் அதையொட்டி வைக்கப்பட்ட வாதத்திற்கும்  [மனுவை தமிழாக்கம் செய்து வெளியிட்ட பின்னாலும்] வாய் திறக்காமலும், ''எனது வண்டவாளத்தை  வெளியிடு, நான் உணர்வு அலுவலகத்திற்கே வந்து நிரூபிக்கிறேன்'' என்று வாய்மையோடு சவால்விட்ட  அபூபைசல் விஷயத்தில் ஆப்பசைத்த குரங்காகவும்  இருந்து வரும் அண்ணன் வழக்கம்போல மற்றொரு கள்ளப்பெயரில், பொய்யன் [பீஜே] டிஜே எனும் கள்ள தளத்தில் கனிமொழியுடன் எங்கள் அமைப்பு நிர்வாகிகள் நடத்திய சந்திப்பு குறித்து கருவுகிறார். கதறுகிறார். அதுபற்றிய சிறு விளக்கம்;


இயக்கம் நடத்துபவர்கள் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கோரிக்கை வைப்பதும் எல்லா இயக்கங்களிலும் உள்ள நடைமுறைதான். அதை யாரும் குறை கூற முடியாது. ஆனால் பொய்யன் பாக்கர் ட்ரஸ்டின் உறுப்பினரான முனீர் கனிமொழி அவர்களைச் சந்தித்து இட ஒதுக்கீடு குறித்து கோரிக்கை வைத்ததாக ஒரு செய்தியை பொய்யன் இணயதம் துணுக்குச் செய்தியை வெளியிட்டுள்ளது
அந்தச் செய்தி இது தான்
இடஓதுக்கீடு சம்பந்தமாக தமிழக முதல்வர் அவர்களின் மகளும், பாராளுமன்ற மாநிலவை உறுப்பினர் கனிமொழி அவர்களை சந்தித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் சந்தித்து கோரிக்கை வைத்தார்
அத்துடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
என்று எழுதியுள்ளார் பொய்யர் பீஜே.


எங்களது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இவ்வாறு மட்டும் சுருக்கமாக உள்ளது உண்மைதான். அதை நாங்கள்  மறுக்கவில்லை. ஆனால் பொய்யர் பீஜே அடுத்தவர் அந்தரங்கத்தை அறிவதற்காக ஆயிரம் தளங்களுக்கு செல்வதில் காட்டும் கவனத்தில் இருந்து கடுகளவு இந்த செய்தியின் உண்மை நிலையை அறிவதில் செலுத்தியிருந்தால்  முழு செய்தியும் கிடைத்திருக்கும். அவர் நோக்கம் செய்தி அறிவதில்லையே! எதிரியை செல்லாக் காசாக்குவதுதானே! இப்ப விஷயத்திற்கு வருவோம். எங்கள் மாநிலச்செயலாளர் செங்கிஸ்கான் அவர்களின் இணையதளத்தில் கனிமொழி சந்திப்பு குறித்த விபரங்கள் உள்ளன. அது கீழே;


இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் முஹம்மத் முனீர் மற்றும் ,மாநில செயலாளர் வேளச்சேரி சிராஜ் ஆகியோர் , மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும் ,
முதல்வரின் மகளுமாகிய கனிமொழி எம்.பி.யை சந்தித்து சமுதாயத்திற்கான பல் வேறு
 கோரிக்கைகளை   வலியுறுத்தினர்.
முக்கியமாக மத்தியில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு குறித்து இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது! மேலும் வேளச்சேரி முஸ்லிம்களின் கோரிக்கையான அடக்கஸ்தலம் பற்றியும் வலியுறுத்தினர். கவனமாக அனைத்தையும் கேட்ட கனி மொழி
தந்தையும் ,தமிழக முதல்வருமான கலைஞரிடத்தில் இது குறித்து பேசுவதாக கூறினார்.

சுமார் முப்பது நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு நம்பிக்கை அளித்ததாக வேளச்சேரி கபர்ஸ்தான் கூட்டுக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், இணையதளத்தில் சுருக்கமான தகவலை தந்த நாம், கனிமொழியுடனான சந்திப்பு குறித்த பொய்யரின் அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவு கிடைக்கும் வகையில், எமது சமுதாய மக்கள் ரிப்போர்ட்டரில் தலைப்பு செய்தியாகவே வெளியிட்டுள்ளோம். பார்க்க இங்கே கிளிக் செய்க; http://4.bp.blogspot.com/_m25dsPmYwkI/TRRv_6Pn8YI/AAAAAAAAAGc/H-UfvHK0sgk/s1600/page-1.ஜபக்


இணைய தளங்களில் சுருக்கமாக போடுவதும்,  பத்திரிக்கையில் விரிவாக போடுவதும்
பொய்யர் பீஜேயும் செய்துவரும் வழமைதான். இதில் ஏதோ பாராதூரமாக கண்டுபிடித்தது  போன்று ஃபில்டப் காட்டுவதும் அவரது வழமைதானே!

அடுத்து

ஒரு இயக்கத்தின் சார்பில் சந்திப்பது என்றால் அந்த இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் இடம் பெற வேண்டும். நிர்வாகிகள் அல்லாதவர்கள் இது போன்ற சந்திப்புகளில் அழைக்கப்படக் கூடாது. என்கிறார் பொய்யர் பீஜே.


நாம் அவரிடம் கேட்பது,  இட ஒதுக்கீடு தொடர்பாக, அப்போது ததஜவில் மாநில நிர்வாகியாக இருந்த இதே முனீர் அவர்கள், இதே கனிமொழியை சந்தித்து மனு கொடுத்தபோது, முனீருடன் சென்றவர்கள் அத்தனை பேரும் மாநில நிர்வாகிகள்தான் என்று பீஜே நிரூபிக்கத் தயாரா?


இந்த புகைப்படத்தில் இருக்கும் முதியவர் யார்? என்று மில்லியன் டாலர்[?] கேள்வியை கேட்டு மிடறு விழுங்குகிறார் பீஜே.
அந்த முதியவர் யார் என்றால் உங்களால் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்ட வேளச்சேரி மையவாடி பிரச்சினை தொடர்பாக மனு அளிக்க வந்த பரியல்கிரவுண்டு கமிட்டியை சேர்ந்த சகோதரர் ஆவார்.
பாதி வெட்டப்பட்டுள்ள இன்னொருவர் யார்? என்று விளங்காமல் கேட்கிறார் பீஜே. இவர் யார் என்றால் எங்கள் அமைப்பின் மாநிலச்செயலாளர் வேளச்சேரி சிராஜ் ஆவார்.


அடுத்து
மத்தியில் இட ஒதுக்கீடு என்றால் பிரத்யேகமாக கனி மொழியை சந்திக்கும் அவசியம் என்ன? என்று கேட்டு தனது ஆற்றாமையை  வெளிப்படுத்துகிறார் அண்ணன்.


மத்தியில் இடஒதுக்கீடு குறித்து கனிமொழியை சந்தித்ததற்கு காரணம், அவர் மாநிலங்களவை உறுப்பினர். இடஒதுக்கீடு  குறித்து பாராளுமன்றத்தில் பேசும் இடத்தில் இருக்கிறார். எனவே அவர் மூலம் பாராளுமன்றத்தில்  இடஒதுக்கீடு தொடர்பாக குரல் எழுப்ப கேட்டுக்கொண்டோம்.


அதெல்லாம் சரிண்ணே! நீங்க அன்றைக்கு  முனீரை அனுப்பி கனிமொழியை சந்திச்சு பேச வைச்சீங்களே! அப்ப மட்டும் கனிமொழி தமிழக முதல்வராக இருந்தாங்களாக்கும்?


அன்பான சமுதயாமே! அண்ணனின் சமீபத்திய உளறல்கள், மலை உச்சியிலிருந்து விழுபவன் தன் கைக்கு கிடைத்த கிளையை  பிடித்தவுடன் நினைத்தானாம் நாம் பிழைத்துக் கொள்வோம் என்று! ஐயோ பாவம்! அவன் பிடித்தது முருங்கை கிளை என்று பின்னர் தான்  தெரிந்ததாம். அதுபோல் அண்ணன் கண்டதைப்  பிடித்து கரையேறப் பார்க்கிறார். அது கனவிலும் நடக்காது இன்ஷா அல்லாஹ்.
 

நாமே அயோக்கியர்கள்... நாமே பைத்தியக்காரர்கள் ! - வாக்குமூலம் தரும் அண்ணன்&கோவினர்

 நாமே அயோக்கியர்கள்... நாமே பைத்தியக்காரர்கள் !
                           - வாக்குமூலம் தரும் அண்ணன்&கோவினர்             
                                                  
 அன்பிற்குரிய இணையத்தள வாசகர்களே .... அஸ்ஸலாமு அலைக்கும்

         பூனைக்குட்டி வெளியில்  வந்தது  -   கிழிபடும் மோசடிக்காரர்களின் பொய்முகம் என்ற தலைப்பில் நாம் வைத்த  வாதங்களுக்கு   உளறுவதைத் தவிர அண்ணன் & கோவினரிடம் பதில் இல்லை என்பதை  அவர்கள்    ஒப்புக் கொண்டுள்ளனர்.  அதனை  அவர்களது வாதத்தை  படிப்பவர்களே  புரிந்து  கொள்வார்கள்.இவர்கள்  எழுதும்  பதிலில் என்ன தவறு உள்ளது என்று சொல்லவேண்டுமாம்!.அதைத்தானே நாம்   இத்தனை நாட்களாக சொல்லி வந்திருக்கிறோம் .மீண்டும் நமது வாதங்களை  எடுத்துப்  பார்க்கட்டும்.கடைசி வரை நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாத அவர்களை   அயோக்கியர்கள்  என்று நாம் நிருபித்து இருக்கிறோம் என்பதை வாசகர்கள் நீங்கள் அறிவீர்கள்.

கள்ள ஜமாத்தின் சங்கப்பதிவிலும் இல்லாமல் தன்னைத்தானே பொதுச்செயலாளர் என்று அறிவித்துக்கொண்ட  ஜாபார் என்பவர் பெயரில்    அண்ணன் வைத்த வாதத்தில், நம்மை மாநில நிர்வாகி என்று  முட்டாள்தனமாக  குறிப்பிட்டிருந்தார்.அதற்கு நாம்,"நாம் எப்போது கள்ள ஜமாத்தில் நிர்வாகியாக இருந்தோம்" எனக் கேட்டதற்கு  நிசார் அஹமத் பெயரில் மீண்டும் வந்து சூப்பர் விளக்கம் தந்து அசத்தி இருக்கிறார்.

" தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தும் கள்ள சங்கமும் ஒன்று தானாம்.கள்ள சங்கத்தின் நடவடிக்கைகளில் டிஎன் டிஜே  விற்கு  உடன்பாடு உண்டாம்.ஆகவே நம்மை  மாநில நிர்வாகி என்றது சரிதான்" என சூப்பர் விளக்கம் தருகிறார்கள்.இவர்கள் நினைப்பது போல் மக்கள் ஏமாளிகளல்ல.

ஒரு உதாரணம் சொல்லி இந்த சூப்பர் பார்ட்டிகளுக்கு புரிய வைப்போமா?

தமிழ் நாடு தறுதலை ஜமாஅத்(tntj) அல்லது தமிழ் நாடு துப்பாக்கி ஜமாஅத்(tntj) என்று ஒரு ஜமாஅத் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம்.கள்ளத்தனமான பதிவு  ஜமாஅத்(ktpj)என்று   இன்னொரு   அமைப்பு  இருக்கிறதென்று வைத்க்கொள்வோம். கேடிபிஜே  ஜமாத்திற்கு  நான் தான்      பொதுச்செயலாளர் என்று சொல்லிக் கொள்ளும்  ஒருவர், நாம் மேற்சொன்ன தறுதலை ஜமாத்தில் ஏற்கனவே நிர்வாகியாக         இருந்த  ஒருவரைப்பார்த்து, "நீ எங்கள் ஜமாத்தின் மாநில நிர்வாகியாக இருந்தாய்" என்று சொல்கிறார்.இப்படிச்   சொல்பவரை  பற்றி என்ன நினைக்கத் தோன்றும்?பைத்தியக்காரன் என்றுதானே சொல்வோம்.!   இப்படித்தான்  அண்ணன் &கோவினர் உளறிக்கொட்டிவிட்டு நம்மை விமர்சனம் பண்ணுகிறார்கள்.

கள்ள சங்கத்தின் நடவடிக்கைகளில்     டிஎன்டிஜே விற்கு   உடன்பாடு உண்டாம்.அப்படியானால் கள்ள  சங்கத்தினர் தான் நமது கேள்விகளை  எதிர்கொள்ளாமல் பின் வாங்கி ஓடி ஒளிகிறார்களே...அவர்களின் மானம்,மரியாதையை காப்பாற்றும் வகையில் டி என் டி ஜே வினராவது  நமது சவாலை ஏற்று இருக்கலாம்.மிஸ் பண்ணிவிட்டார்கள்.நாம் காவல் துறையில் அவர்கள் கொடுத்த புகார் மனுவின் நகலை வெளியிட்டு அவர்களை அயோக்கியர்கள் என்று நிருபித்துவிட்டோம்.(வாசகர்கள் அந்த புகார் மனுவை பார்வையிட www.makkalreport-e-paper.blogspot.com


என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம்)
இப்பொழுது டி என் டி ஜே வினர் வந்து விளக்கம் என்ற பெயரில் உளறினாலும் வாசகர்களே டூ லேட் என்று சொல்லி விடுவார்கள்.


மேலும், நாங்கள் பைத்தியக்காரர்கள்; அப்படித்தான் முரண்பட்டு பேசுவோம்;வாயில் வருவதை எல்லாம் வாதம்,விமர்சனம் என்று உளறுவோம்   என்று அவர்கள் சொல்வதை வாசகர்களாகிய உங்களுக்கு  அவர்களின் வாதத்தை வைத்தே   அழகாக   புரிய வைக்கிறோம்    இன்ஷா  அல்லாஹ்.,

நாம் மேற்கண்ட( பூனைக்குட்டி)தலைப்பில்  வைத்திருந்த வாதத்தில்....

"போகிற போக்கில் நம்மை அவர்கள் மிரட்டவும் செய்கிறார்கள்."நீ மௌனமாக இருந்துவிடு.இல்லை என்றால் இன்னும் உன்னைப்பற்றி நான் அறிந்து வைத்துள்ள,உணர்வு அலுவலகத்தில் பணியாற்றியதுவரை உள்ள வண்டவாளங்களை அவிழ்த்துவிடுவேன்"என்கிறார்கள்அண்ணனுக்கும்,அவரது சீட கோடிகளுக்கும் சொல்லிக்கொள்கிறேன்.அந்த வண்டவாளங்களை உணர்வில் வெளியிடத் தயாரா? வெளியிட்டால் நீங்கள் யோக்கியர்கள் என்று ஒப்புக்கொள்கிறேன்.இல்லையென்றால் உங்களை என்ன சொல்லி அழைப்பது?நீங்கள் வெளியிடுங்கள் இன்ஷா அல்லாஹ் நாம்   நேரில் உணர்வு அலுவலகத்துக்கு வந்து நீங்கள் சொல்வது பொய் என்பதை  நிரூபிக்கிறோம் " என்று கேட்டிருந்தோம். இதற்கு அவர்கள் அளித்த பதில்.....

"உணர்வு அலுவலகம் வந்து நிரூபிக்க தயார் என்று சவால் விட்டுள்ளீர்கள்.இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.நாங்கள் இதுவரை கேட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும்   பதிலளித்து    உங்கள் மன்மதக்கூட்டத்தின் தூய்மையை நிரூபியுங்கள்"
நாம் என்ன வாதம் வைத்திருக்கிறோம்? உணர்வில் நாம் இருந்த காலத்தின்(என்னுடைய )வண்டவாளங்களை வெளியிடுங்கள்.அப்படி வெளியிட்டால் நீங்கள் யோக்கியர்கள் என்று ஒப்புக்கொள்கிறோம்.அதோடு உணர்வு அலுவலகம் வந்து நிரூபிக்கிறோம்.-இது தான் நமது வாதத்தின் சாரம்.இதற்கு சரி...நாங்கள் உங்களின் வண்டவாளங்களை உணர்வில் வெளியிடுகிறோம் நீங்கள் வந்து நிரூபியுங்கள் என்று சொல்ல வேண்டும்.இது தான் சவாலை ஏற்றுக்கொள்ளும் முறை.அதை விட்டு விட்டு பட்டுக்கோட்டைக்கு ஏன் வழி சொல்ல வேண்டும் ? ஏனெனில்   என்னைப்பற்றி வெளியிடுவேன் என்று   மிரட்டியது இவர்கள் தான்.அதை எதிர்கொள்கிறோம்       என்று சவால் விடுத்தது நாம்..அவர்கள் யோக்கியர்கள் என்றால் சொன்னபடி நடந்துகொள்ள வேண்டுமா இல்லையா? அடடா மாட்டிக்கொண்டோமே...என்று நினைத்தால் குறைந்த பட்சம்...
 அதையெல்லாம்  உணர்வில் வெளியிட முடியாது.அது அவதூறாக ஆகிவிட்டால் நீங்கள் வழக்கு தொடுத்தால் மாட்டிக்கொள்வோம்.அல்லது மறுப்பு வெளிடிடச் சொல்லி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாலும் மாட்டிக்கொள்வோம்.அதுவுமில்லாமல் உணர்வு பத்திரிகைக்கு ஒரிஜினல் சர்டிபிகேட் வேறு இல்லை என்று சொல்லி தப்பித்திருக்க வேண்டும்.
இந்த இரண்டில் எதுவும் இல்லாமல் உளறினால் நீங்கள் பைத்தியம் தான்.,நல்ல     மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது.

அன்புடன்
அபு பைசல்

 

குவைத் மண்டலத்தில் நடைபெற்ற வாரந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

 இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல தலைமையகத்தில் நடைபெற்று வரும் வாரந்திர  மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை[ 24 -12 -2010] மாலை 7   மணியளவில் சிறப்புடன் நடைபெற்றது.

மண்டல பொருளாளர் ராஜ்முஹம்மது அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்க, மண்டலசெயலாளர் சாதிக் சதாம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மண்டல அழைப்பாளர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள், சஹாபாக்களின் தியாக வரலாறு  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தனது உரையில்  ஏகத்துவ கொள்கைக்காக அன்று சஹாபாக்கள் செய்த தியாகங்களையும், இன்று  ஏகத்துவ கொள்கையை சொல்லிக்கொண்டு ஏமாற்றும் பேர்வழிகளையும் அடையாளம் கட்டினார்.
மண்டல துணைச்செயலாளர் முஹம்மது சேட்  நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. 
அல்ஹம்துலில்லாஹ்.

செய்தி வெளியீடு;
-முகவை அப்பாஸ், தலைவர்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
குவைத் மண்டலம்.





திருச்சியில் மிக எழுச்சியுடன் நடைபெற்ற வஃக்பு நில மீட்பு மாநாடு!

திருச்சியில் மிக எழுச்சியுடன் நடைபெற்ற வஃக்பு நில மீட்பு மாநாடு


சுமார் ஒரு கோடி முஸ்லிம்கள் வாழும் தமிழகத்தில், கோடிக்கணக்கான முஸ்லிம்களின் வஃக்பு சொத்துக்கள் களவாடப்பட்டு தனி நபர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அவை மீட்டு, வீடு இல்லாத ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கான முதல் முயற்சியை, ஏக இறைவனும் அவனது கண்ணியமிக்க தூதரும் காட்டிய வழியில் போராடும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எடுத்துள்ளது.
ஆம், அதன் முதல் மாவட்ட மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் மிகச் சிறப்பாக கடந்த 26.12.2010 அன்று நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
சுமார் 4 ஆயிரம் மக்கள் பங்கேற்ற இந்த மாநாட்டை மாநிலச் செயலாளர் அபூ ஆஸியா தொடங்கி தொகுத்து வழங்கினார்.

சமூக அறக்கட்டளையின் தலைவர் CMN சலீம் அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கொள்ளை போன வக்ஃபு சொத்துக்கள் என்ற  தலைப்பில் மிக சிறந்த விழிப்புணர்வு உரையை ஒன்றை ஆற்றினார்.

நம் உயிரைக் கொடுத்தாவது வஃக்பு நிலங்கள் மீட்கபட வேண்டும் என கோரிக்கையை அவர் வைத்தார்.

மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது, களம் காணத் தேவை இறையச்சம் என்ற தலைப்பிலும், மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹைதீன்  கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும்  உரையாற்றினர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் நாசர், திருச்சி 34வது வார்டு உறுப்பினர் வெங்கட்ராஜ ஆகியோர் வாழ்ததுரை வழங்கினர்.

இறுதியாக தேசிய தலைவர் S.M.பாக்கர், உணர்வு பூர்வமான உரை ஒன்றை ஆற்றினார். அவர் இறையில்லாத்திற்காக வஃக்பு செய்யப்பட்ட நிலங்கள் கூட எவ்வாறெல்லாம் சூரையாடப்பட்டுள்ளது என பட்டியல் போட்டார்.
முன்னதாக மாநிலப் பொருளாளர் தொண்டியப்பா, வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜமீல், மாநில செயலாளர் செங்கிஸ்கான், மாநிலப் பேச்சாளர் அப்துல் காதர் மன்பஈ, தஞசை மாவட்ட தலைவர் ஜஃபர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர்.
இறுதியாக துணைத் தலைவர் முஹம்மது முனீர், தீர்மானங்களை வாசித்தார்.
வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வக்ஃபு நிலத்தில் இலவச பட்டா வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடு இல்லாத ஏழை எளி மக்களுக்கு, வக்ஃபு வாரிய நிலத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் வாடகை வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும்,

இந்திய முழுவதும் உள்ள வக்ஃபு நிலங்கள் மீட்கப்படுவதற்கும், அது தொடர்பான வழக்குகள்  வழக்குகள் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கும் வக்ஃபு வாரியங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

வக்ஃபு வாரியத்திற்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தமிழகத்திலுள்ள வக்ஃபு சொத்து குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

பெரியபட்டிணத்தில் கடலில் முழ்கி இறந்த ஒவ்வொருவருக்கும் 5 இலட்சம் ரூபாய் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்ற தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

நிலம் இல்லாத ஏழைகளிடம் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்க இருக்கிறது.
இறுதியாக திருச்சி மாவட்டத் தலைவர் ரிஸ்வான் நன்றியுரை வழங்கினார். மிகச் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

0 comments:

Post a Comment

Friday, December 24, 2010

ஊழல்வாதிகளுக்கு ஆன்லைனில் ஆப்பு !






ஊழலை ஒழிப்பதற்கு ஒவ்வொரு குடிமகனும் தங்களால் ஆன இயன்ற பங்களிப்பை
வழங்குவதற்கு வசதியாக மத்திய கண்காணிப்பு ஆணையகம் வசதி ஏற்படுத்திக்
கொடுத்துள்ளது. http://www.vigeye.com/ என்ற இணைய தளம் மூலமாக ஊழல்
நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றி புகார் செய்ய முடியும்.

ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் மூலமாக புகார் செய்யவும் இந்த இணையதளத்தில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தங்களை பதிவு செய்பவர்கள்
மட்டுமே புகார் அளிக்க முடியும். 20.12.2010 வரை இந்த தளத்தில் 1837
நபர்கள் தங்களை இணைத்துள்ளனர். 173 புகார்கள் இதுவரை பதியப்பட்டுள்ளது.

அலைபேசி மூலமாக பதிவு செய்ய விரும்புபவர்கள் VIGEYE என்று தட்டச்சு
செய்து 09223174440 என்ற எண்ணுக்கு அனுப்பினால் பதிவு செய்வதற்கான இணைய
தள முகவரி உங்கள் அலைபேசிக்கு அனுப்பப்படும்.

ஊழலை ஒழிக்க நீங்களும் தயாராகி விட்டீர்களா?

பூனைக்குட்டி வெளியில் வந்தது.








அன்பிற்குரிய இணையத்தள வாசகர்களே .... அஸ்ஸலாமு அலைக்கும்
 
.ஓடி ஒளியும் அய்யோக்கியக் கூட்டம் என்ற தலைப்பில் நாம் எழுதியவற்றுக்கு பதில் சொல்ல திராணி இல்லாத மோசடிப்பேர் வழிகள்,வாதத்தை திசை திருப்பும் வகையில் நாம் சொல்லாத விஷயத்தை சொல்லி,நம்மைக் கேவலப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு ஒட்டு மொத்த வெளிநாடு வாழ் சகோதரர்களையும் கேவலப்படுத்தும் வகையில்  "தமிழகத்தில் பிழைக்க வழியின்றி வெளிநாட்டுக்கு செல்வதாக..." எழுதி,வெளிநாட்டு சகோதரர்கள் மூலம் வாங்கிக்கட்டிக்கொண்டனர்.
 
ஆனாலும் அவர்களின் திரிபுவாதத்தை  நாம் இங்கே  பதிவு செய்து விட்டு நமது விஷயத்திற்கு வருவோம்.
 
நாம் சகோ.நிசார் அகமதை கேவலப்படுத்திவிட்டதாகக் கூறுவது எவ்வளவு மோசடித்தனம் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் எழுதிய அந்த வரிகளை உங்கள் பார்வைக்கு அப்படியே வைக்கிறோம்.
இதோ நாம் எழுதியது..
 
"சகோ.நிசார் அஹ்மத் யார் என்றால் டிஎன்டிஜே தலைமையகத்தில்,மாநில நிர்வாகிகளுக்கு டீ,சாப்பாடு வங்கிக்கொடுக்கும் ஆபீஸ் பாயாக பணியாற்றுபவர்.அவர் பெயரில் டிஎன்டிஜே மாநில நிர்வாகி ஒருவர்தான் அண்ணனின் டைரக்ஷன் படி நமக்கு பதில் அளித்துள்ளார்.இதை நாம் நேரடியாக  டிஎன்டிஜே அலுவலகத்துக்கு நமது சகோதரர் ஒருவரை அனுப்பி தெரிந்து கொண்டோம்.சகோ. நிசாரையோ,அவரது பணியையோ   நாம் இங்கு குறைத்து மதிப்பிடவில்லை.நாம் சொல்ல வருவது... ஏன் நேரடியாக பதில் சொல்லாமல் அப்பாவி சகோதரர்களின் பெயரில்,அவருக்கே தெரியாமல் வெளியிடவேண்டும்  என்பதுதான். இதில் கூடமோசடி செய்பவர்கள் எந்த அளவிற்கு மற்ற விஷயங்களிலும் செய்யத் துணிவார்கள் என்பதை யோசித்துப்பாருங்கள்!."
இப்படி எழுதியதை சாதாரண அறிவு படைத்தவர்களும்   சரியாகத்தான் புரிந்துகொள்வார்கள்.ஆனால்
இவர்களின் புத்தி மழுங்கிப்போயிருக்கிறது என்பதற்கு உதாரணம் தான் அவர்களது திரிபுவாதம்.
 
இதற்கு மறுப்பு என்ற பெயரில்  எழுதப்புகுந்த கள்ள சங்கத்தில்   உறுபினராகக் கூட     அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்படாத-மாநிலச் செயலாளர் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் சகோ.ஜாபர்,"நிசார் டீ,காபி,வாங்கிக்கொடுப்பவன் அவனுக்கு ஒன்றும் தெரியாது   என்று அபு பைசல் எழுதி இருந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார். இவர் சொல்வதைப் போன்ற வாசகம் நமது  மேற்கண்ட வாதத்தில் உள்ளதா என்று பாருங்கள்!
 
இதில் வேடிக்கை என்ன வென்றால்,உளறிக்கொட்டுவதன் மூலம் அவர்கள் நம்மிடம் வசமாக சிக்க...அவர்களின் முகத்திரையை நாம் பல முறை கிழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்பது தான்! ஜாபர் என்பவர் சொல்வதைப்    பாருங்கள்! "(அபு பைசல்) இப்படி எழுதுவது தவறு என்பதை உணர்த்துவதற்காகத்தான்  அரபு நாட்டில் டிரைவராக இருந்த அபு பைசலை      இந்த  ஜமாஅத் மாநிலச் செயலாளராக்கியது." என்கிறார்.
என்னை எப்போது இவர்கள்  மாநிலச்  செயலாளராக்கினார்கள்? நான் செயலாளராக இருந்தது டிஎன்டிஜே வில் தானே? இவர்களது கள்ளச் சங்கத்தில் இல்லையே! இதனை அடுத்த வரியில் உறுதிப்படுத்துவதையும்  பாருங்கள்..."இத்தகைய வேறுபாடு காட்டும் போக்கு நமது ஜமாத்தில் இருந்தால் அபு பைசல் மாநில நிர்வாகியாக ஆகியிருக்க முடியாது"என்கிறார்.ஆக, நமது ஜமாஅத் என்பது டிஎன்டிஜேவை.நான் மாநிலச் செயலாளராக இருந்தது டிஎன்டிஜே  வில் தான்.டிஎன்டிஜே வில் மா.செ வாக இருந்த என்னை கள்ள  சங்கத்தில்  இருந்ததாக சொல்வதும் மோசடிதானே?
  
இப்போது பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது   தெரிகிறதா? அண்ணனின் டைரக்ஷன் படி,  டிஎன்டிஜே நிர்வாகிகள்  தான்    நமக்கு பதில் தருகிறார்கள் என்பதும்,அண்ணன் நேரில் வராமல் திரை மறைவில் கோழையாக நிற்கும் அவலமும்  புரிகிறதல்லவா? அதனால் தான் இயல்பாக தம்மையும்  அறியாமல் நமது ஜமாஅத் என்று சொன்னதன் மூலம் டிஎன்டிஜே நிர்வாகிகளாகிய நாங்கள் தான் இதனை எழுதுகிறோம் என்பதை வெளிப்படுத்திவிட்டார்கள்.  
நாம் தான் நேரடியாக  வந்து பதில் தரச் சொல்கிறோமே,வரவேண்டியதுதானே? இப்போது கள்ள சங்கத்தின் பெயரில்  டிஎன்டிஜே வினர் தான் அவதூறாக எழுதுகிறார்கள் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு கேவலப்பட்டிருக்க வேண்டிய நிலைமை வந்திருக்காதே!இந்த கேவலமான பிழைப்பு தேவையா?
 
 இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்...
நாம் ஆரம்பம் முதலே அண்ணன் பீ ஜே யின் மோசடிகளை மக்கள் ரிபோர்டில் தோலுரித்துக் காட்டி விட்டு,இரண்டு விஷயங்களை மையப்படுத்தி அண்ணனிடம் கேள்வி கேட்டு,நீங்கள் யோக்கியன் என்றால் இவற்றை உணர்வு இதழில் வெளியிடவேண்டும் என்று கேட்டிருந்தோம்.
 
 1 . தமிழக காவல்துறையிடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குறித்து கொடுத்த  புகார் மனுவின் நகல்.
 2 . கள்ள சங்கத்தின் ஒரிஜினல் நிர்வாகிகளின் பெயர் பட்டியல்.
இப்படிக்கேட்டு, இதில் முதல் விஷயம்  சமுதாயத்திற்கும் தெரியும்படி உணர்வு இதழில் பிரசுரிக்குமாறு கடைசியாக நாம் எழுதிய பதிலில் கேட்டிருந்தோம்.அதில் இறுதியாக இப்படி முடித்திருந்தோம்..
 
"அந்தப் புகார் மனுவின் நகலை அவர்களாக வெளியிட்டால் யோக்கியர்கள் என்று நாம் ஒப்புக்கொள்கிறோம்.அதை நாமாக வெளியிட்டால்...அயோக்கியர்கள்,மோசடிப்பேர்வழிகள்  என்று தங்களை அவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.அதனால் அவர்களுக்காக ஒரு வாரம் டைம் தருகிறோம்....."
 
 ஆயினும் அவர்கள் நமது சவாலை எதிர்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் சகோ.நிசார் அஹ்மத் பெயரில் வந்து சீன் காட்டியதால்,நிசார் அஹ்மத் யார் என்பதை கண்டறிந்து அவரை அம்பலப்படுத்தினோம்.நாம் இதனை அம்பலப்படுத்தும்போதே அண்ணன் நம் மீது பாய்வார் என்று எதிர்பார்த்தோம்.ஏனெனில் அண்ணனுக்கு எப்பொழுதும் தவறுகளை ஒப்புக்கொள்வதோ,உண்மைகளை ஏற்றுக்கொள்வதோ பிடிக்காத விஷயம்.ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது.நமது கேள்விகள் அண்ணனின் மண்டையை குடைந்திருக்கிறது.எரிச்சலைக் கிளப்பியுள்ளது.கோபத்தின்  உச்சத்திற்கு  சென்ற அண்ணன் நமக்கு பதில் சொல்வதை விட்டு விட்டு அவரது ட்ரேட் மார்க்கான தனிப்பட்ட விஷயங்களை சொல்லி நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு உளறிக்கொட்டியிருக்கிறார்.அண்ணனின் உச்ச கட்ட எரிச்சல் தான் நம்மை புருனை சுல்தானின் பேரனாகவும்,குவைத் மன்னருக்கு மந்திரியாகவும் சித்தரிக்க வைத்துள்ளது
நம்மைப் பற்றிய அவரது தரக்குறைவான விமர்சனத்தை நாம் அலட்சியப்படுத்துகிறோம்.
 
நாம் சகோ.நிசார் பற்றி கண்டுபிடித்து சொன்னதை அவர்கள் மறுக்கவில்லை என்பதும் நாம் சொன்னது உண்மை என்பதை  நிரூபிக்கிறது.மேலும், நிசார் அஹமது ஒரு அப்பாவி,அவர் பெயரில் அண்ணன் அல்லது அண்ணனின் ஏவலுக்கு இணங்க டிஎன்டிஜே  மாநில நிர்வாகி   ஒருவர்தான்   பதில் தருகிறார் என்றும், ஏன் இந்த கோழைத்தனம்;நேரடியாக நம்மைப்போன்று பதில் சொல்லவேண்டியது தானே என்றும்  நாம் தொடர்ந்து விமர்சித்து வருகிறோம்.அதையும்,"நிசார் அஹமத் பெயரில் எழுதப்படும் அனைத்தும்  நிசார் அஹமதால் தக்கவர்களிடம் ஆலோசனை பெற்று எழுதப்படுகிறது." என்று அவர்கள் எழுதியுள்ளதன் மூலம் நமது கூற்றை  ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் அவர்களை அறியாமலேயே!
 
நாம் இப்போது  கேட்கிறோம்...யார் அந்த தக்கவர்? யாரிடம் பதில் பெற்று சகோ.நிசார் எழுதினார்?அந்த தக்கவர் நம்மைப் பார்த்து பதுங்குவதும்,பின்வாங்குவதும் ஏன்?நேரில் வராமல் ஒரு அப்பாவி சகோதரரை நமக்கு எதிராக பகையாளி ஆக்குவது ஏன்? அந்த தக்கவர் யார் என்பதை இணையத்தள வாசகர்களும் தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள்.அவர் யார் என்பதை அடையாளப்படுத்துவீர்களா?
 
அடுத்து,நம்மைப்பார்த்து, "டீ வாங்கிக்கொடுப்பது கேவலமல்ல.அயோக்கியன் என்று தெரிந்து கொண்டே அவனுக்கு வால்  பிடிப்பது தான் கேவலம்" என்கிறார்கள்.இது அண்ணனை பின்பற்றுபவர்களுக்கு சொல்ல வேண்டிய வார்த்தை.அவரைத்தான் நாம் அயோக்கியன் நிரூபித்து வருகிறோம். போகிற போக்கில் நம்மை அவர்கள் மிரட்டவும் செய்கிறார்கள்."நீ மௌனமாக இருந்துவிடு.இல்லை என்றால் இன்னும் உன்னைப்பற்றி நான் அறிந்து வைத்துள்ள,உணர்வு அலுவலகத்தில் பணியாற்றியதுவரை உள்ள வண்டவாளங்களை அவிழ்த்துவிடுவேன்"என்கிறார்கள்.இதை  அபு.அ.பாசத்  என்ற  புது சகோதரர் எழுதியுள்ளார்.அவர் யார் என்றே நமக்கு தெரியாது.நாம் உணர்வில் பொறுப்பாசிரியராக  பணியாற்றிய காலத்தில் இவர் அங்கு இல்லை.அதனால் நம்மைப்பற்றி அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகவே   இந்த மிரட்டலையும்  அண்ணன்தான் விடுக்கிறார்  என்பது  தெளிவாகிறது.
அண்ணனிடமே கேட்கிறோம்...  அந்த புது அவதூறை,எனது வண்டவாளங்களை கேட்க எனக்கும் ஆசையாக உள்ளது.அதை உடனே கால தாமதம் செய்யாமல் வெளியிடுங்கள்.
 
அண்ணனுக்கும்,அவரது சீட கோடிகளுக்கும் சொல்லிக்கொள்கிறேன்.எனக்கு எதிராக அவதூறு,குற்றச்சாட்டு சொல்வதற்கு முன்னால் 8  தடவை யோசிக்க வேண்டும்.அந்த வண்டவாளங்களை உணர்வில் வெளியிடத் தயாரா? வெளியிட்டால் நீங்கள் யோக்கியர்கள் என்று ஒப்புக்கொள்கிறேன்.இல்லையென்றால் உங்களை என்ன சொல்லி அழைப்பது?
நீங்கள் வெளியிடுங்கள் இன்ஷா அல்லாஹ் நான் நேரில் உணர்வு அலுவலகத்துக்கு வந்து நீங்கள் சொல்வது பொய் என்பதை நிரூபிக்கிறேன்.உங்களைபோல மறைந்து கொண்டு ஈனஸ்வரத்தில் முனக மாட்டேன்.தயவு செய்து கேட்கும் கேள்விகளுக்கு ஆம்,இல்லை என்றாவது பதில் சொல்லித் தொலையுங்கள்.கேள்வி கேட்பவனின் அந்தரங்கத்தை  அல்லது பலவீனத்தை தோண்டித்  துருவி..அதை பதிலாகத் தருவது என்கிற ட்ரேட் மார்க் பழக்கத்தை மாற்றுங்கள்..மக்கள் முன் கேவலப்படவேண்டாம்.என்று அறிவுரையாக சொல்லிக்கொள்கிறேன்  
 
அன்பிற்குரிய இணையத்தள வாசகர்களே...காவல்துறைக்கு இவர்கள் அனுப்பிய புகார் மனு குறித்து இவர்களுக்கு  நாம் டைம் கொடுத்தும்   அதை உணர்வு மூலம் சமுதாயத்தின் பார்வைக்கு வைக்காததால் ,அண்ணனும் அவரைச் சார்ந்தவர்களும் அயோக்கியர்கள்தான் என்பதை நாம் இங்கே பிரகடனப்படுத்துகிறோம்.அதோடு,அவர்கள் காவல்துறைக்கு அனுப்பிய புகார் மனுவின் நகலை நாமே தமிழாக்கத்தோடு அடுத்து வெளியிடுகிறோம்..மிக விரைவில் இன்ஷா அல்லாஹ்.
அன்பிற்குரிய இணையத்தள வாசகர்களே...
நேர் வழி காட்டவும்,சகோதரர்களோடு இணக்கத்தை ஏற்படுத்தவும் அல்லாஹ் போதுமானவன்.யா அல்லாஹ்
சகோதரர்களுக்கு மத்தியில் பகையை,பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகளிடம் இருந்து காப்பாயாக.நமக்கு நேர் வழி கிடைத்த பின் அதிலிருந்து நம்மை வழி தவற விட்டு விடாதே என்று பிரார்த்திப்போமாக!
அன்புடன்
அபு பைசல்
 
 
 

சகோதர அமைப்புகளை பயங்கரவாத அமைப்பு என்று ததஜ சொன்னதில்லையா?


திருவிடைச்சேரி படுகொலையை முன்னிட்டு 19 அமைப்புகள் சார்பாக, பிரச்சினையில் தொடர்புடைய ததஜ அமைப்பினர் மீது நடவடிக்கை கோரும் போஸ்டர் ஒட்டப்பட்டதை அனைவரும் அறிவோம். அந்த போஸ்டர் ஒட்டப்பட்ட மாத்திரமே பொங்கிஎழுந்த தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத்தினர் கீழ்கண்ட போஸ்டரை ஒட்டினர்;


அந்த  போஸ்டரில் சகோதர்கள் பாக்கர் மற்றும் ஜவாஹிருல்லாஹ்வை  தீவிரவாதிகள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சக முஸ்லிம் அமைப்பான பாப்புலர் பிரன்ட் ஐ பயங்கரவாத அமைப்பாகவும் சித்தரித்து தங்களின்  வெறியை  காட்டியிருந்தனர்.

இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு கொஞ்ச நாள் கழிந்துவிட்டதால் மக்கள் இதை மறந்திருப்பார்கள் என்று கருதிய பீஜேயின் தக்லீதுகள் புதுக்கதை ஒன்றை உணர்வில் ''நாடும் நடப்பும்'' பகுதியில் எழுதியுள்ளார்கள்;

'' நான் என்ன சொல்ல வருகிறேன்னா அந்த 19 அமைப்புகளில் ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்புன்னு ஒரு பேப்பர்ல போட்டிருக்காங்க என்ற பாருக், 
எந்த இயக்கமாக இருந்தாலும் அவை செய்யும் தவறுகளை தவ்ஹீத் ஜமாத்தினர் சுட்டிக்காட்டுவார்கள். முஸ்லிம் இயக்கம் என்று பெயரை வைத்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கு துரோகம் செய்வதை சொல்லி மக்களிடத்தில் அவர்களை அடையாளம் காட்டுவார்கள். ஆனால் அது பயங்கரவாத அமைப்பு என்றோ அந்த அமைப்புகளால் நாட்டுக்கு கேடு என்றோ அவர்களை கைது செய் என்றோ அவர்கள் சொன்னதில்லை.
 [உணர்வு 24 -30 பக்கம் 20 ]

இவர்கள் உணர்வில் சொல்லியுள்ளது போன்று உண்மையாளர்களா என்பதை கீழே உள்ள போஸ்டரை பார்த்து 'இறையச்சத்துடன்' முடிவு செய்யுங்கள்; 

என்னாது பள்ளிவாசலில் பொதுக்கூட்டமா?; நல்லத்தான் சுத்துராய்ங்க ரீலு!
















ஒரு நிகழ்ச்சி அது நடத்தப்படும் இடத்திற்கேற்ப உள்ளரங்கு நிகழ்ச்சி- தெருமுனை கூட்டம்- பொதுக்கூட்டம்-மாநாடு இப்படி அழைக்கப்படும். அதிலும் குறிப்பாக பொதுக்கூட்டம் எப்படி இருக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்துள்ளோம். நமது நாட்டில் பொதுக்கூட்டம் நடத்தப்படுவது போன்று அரபகங்களில் குறிப்பாக குவைத்தில் நினைத்தவரெல்லாம் நடத்திட முடியாது. குவைத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரே ஒவ்வொரு பகுதியிலும் 'டென்ட்' [கூடாரம்]அடித்து அந்த டெண்டிற்குள் தான்  தனது பிரச்சாரத்தை  செய்யமுடியும். இந்நிலையில்,

தற்போது அண்ணன் ஜமாஅத்தின் பிரச்சார ஏடாக இருக்கும் உணர்வில் ஒரு செய்தி;''குவைத்தில் நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்'' என்ற தலைப்பில், ரவ்தா டி.என்.டி.ஜே கிளை சார்பாக கடந்த 17 -12 -2010  வெள்ளிக்கிழமை  மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி ரவ்தா கத்தா 5 ல் நடைபெற்றது என்றும் நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டனர் என்றும் அந்த செய்தி கூறியது.

நமக்கு ஆச்சர்யம்! என்னப்பா இது! மண்ணின் மைந்தர்களே பொதுக்கூட்டம் போட்டு பேசமுடியாத நாட்டில் அண்ணன் ஜமாஅத் பொதுக்கூட்டமா? என்று. சரி! 'போட்டோவ பாப்பமே'ன்னு பார்த்தா அப்பத்தான் தெரியுது இது ''தீவுத்திடல் பார்முலா'ன்னு.
என்ன புரியலையா? ஐம்பதாயிரம் பேர் கொள்ளளவு கொண்ட தீவுத்திடலில் பதினைந்து லட்சம் பேரை[?] அமரவைத்துக் காட்டிய கதை  போன்று,

மேற்படி நிகழ்ச்சி பள்ளிவாசலில் நடந்துள்ளது. அதற்கு அவர்கள்  பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள போட்டோவே சான்றாக உள்ளது. ஆனாலும் அது மாபெரும் பொதுக்கூட்டம் என்று செய்தி போடுகிறார்கள் என்றால், பள்ளிவாசலில் நடந்ததை பொதுக்கூட்டம்  என்று உலகத்திலேயே சொன்னவர்கள் இவர்களாகத்தான் இருக்கும். என்ன  செய்ய..? என்னத்த சொன்னாலும் தலையாட்டுவதற்கு ஒரு கூட்டம் இருக்கும்போது கடுகையும் பெரு மலையாக காட்டலாம். கட்டெறும்பையும்  கருஞ்சிறுத்தையாகவும் காட்டலாம். ஆனாலும் இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் குவைத் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சியால்  அவர்கள்  தூக்கம் கெடுவதுதான் அவர்களை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது என்பதுதான் உண்மை.

புகழ்  அனைத்தும் அல்லாஹ்வுக்கே! 

-முகவை அப்பாஸ் 

அபகரிப்பும்- மோசடியும்! மார்க்க அடிப்படையில் சரியா?




மனிதகுலத்திற்கு நேர்வழி  காட்டவந்த  வேதமாம் திருக்குர்'ஆனிலிருந்தும் , அந்த திருக்குர்'ஆனுக்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய நபி[ஸல்] அவர்களின் பொன்மொழியிலிருந்தும் அடுத்தவர் பொருளை அபகரித்தல் மற்றும் அடுத்தவருக்கு மோசடி செய்தல் பற்றிய சில எச்சரிக்கைகள்  'சிந்தனையாளர்களின்' சிந்தனைக்கு;
 
அடுத்தவர் பொருளை அபகரிக்க அதிகாரிகளிடம் நெருங்காதீர்;
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.[2:188 ]
 
தனது பண வலிமையைக் காட்டியோ, அதிகாரத்தைக் காட்டியோ  அடுத்தவர்கள் பொருளை அடையலகாது என்று மேற்கண்ட வசனம் கட்டளையிடுகிறது. ஆனால் அநியாயமாக அநியாயக்கார பீஜே,  பாக்கரின் இதஜ வை அபகரித்ததோடு அதை தக்க வைப்பதற்காக, அழைப்புப்பணிக்காக அரபகங்களில் இருந்து அன்றாடம்காய்ச்சிகள் அரும்பாடுபட்டு அனுப்பிய காசை வழக்கில் கரைக்கிறார். அதோடு நம்மையும் கோர்ட்டுக்கு செலவழிக்கும்  நிர்பந்தத்திற்கு தள்ளுகிறார் என்றால் இவர்தான் தவ்ஹீத்வாதியா? சிந்திக்கவேண்டுகிறோம்.  
 
அனாதைகளின் பொருளாக இருந்தாலும் 'ஆட்டயப் போடலாகாது;
நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்;. நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.[4 ;2 ]
 
அனாதைகள் உடமைகள்தானே; பலவீனர்களின் உடமைகள்தானே என்று பறித்துக்கொள்ளலாகாது என்று பறைசாற்றுகிறது மேற்கண்ட வசனம். ஆனால் இந்த இறைக்கட்டளைக்கு மாற்றமாக, ஏற்கனவே தான் நடத்திவரும் தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத்துடன் இதஜவையும் அபகரித்து ஆட்டயப்போட நினைப்பவர்தான் தவ்ஹீத்வாதியா? சிந்திக்கவேண்டுகிறோம்.
 
விட்டுக் கொடுத்தாலே தவிர அடுத்தவர் பொருளை எடுக்கலாகாது;
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.[4 ;29 ]
எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.[4 ;30 ]
பொருந்திக் கொண்டு சம்மந்தப்பட்டவர் விட்டுக்கொடுக்கும் உடமைகள் நீங்கலாக, மற்றவர்களின் உடமைகளை உண்ணலாகாது என்று உச்சத்தலையில் அடித்து உணர்த்துகிறது மேற்கண்டவசனம். அத்துடன் அல்லாஹ்வின் வரம்பை மீறி அடுத்தவர் பொருளை ஆட்டையப் போடுபவரை நரகநெருப்பில் நுழைவிப்போம் என்றும் எச்சரிக்கிறது இறைவேதம்.
 மோசடி செய்பவர்களுக்கு உதவுபவர்களையும் சேர்த்து எச்சரிக்கும் வசனங்கள்;
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்;. எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.  (4:105)
(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.  (4:106)
ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.  (4:107)
இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்;. ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது. ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.  (4:108)
(முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்?  (4:109)

அடுத்தவர் பொருள் விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சிய முன்னோர்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

(பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், 'என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை" என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், 'நிலததை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (எனவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)" என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், 'உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், 'எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்" என்று கூறினார். மற்றொருவர், 'எனக்குப் பெண்பிள்ளை இருக்கிறது" என்று கூறினார். தீர்ப்புச் சொல்பவர், 'அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள்.  அவர்கள் இருவருக்காவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்" என்று தீர்ப்பளித்தார்.[புகாரி எண்; 3472 ]
இந்த பொன்மொழியில், நிலத்தை வாங்கியவர் நினைக்கிறார். வெறும்  நிலத்தை மட்டுமே வாங்கினோம். அதற்குள்ளே உள்ளே இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கத்தின்  மீது நமக்கு உரிமையில்லை என்று எண்ணி அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக அந்த பொருளை நிலத்தை வாங்கியவரிடம் திருப்பித் தர முனைகிறார். நிலத்தை விற்றவரோ நிலத்தை அதிலிருப்பவற்றுடன்  சேர்த்துதான் விற்றேன். அதிலுள்ளவை உமக்குத்தான் சொந்தம் என்று கூறி பொருளை வாங்க மறுக்கிறார். இந்த இரு நல்லடியார்கள் வாழ்வின் மூலம் அடுத்தவர் பொருள் விஷயத்தில் எந்த அளவுக்கு இறையச்சம்  தேவை என்பதற்கு சிந்திக்கும் மக்களுக்கு படிப்பினை உள்ளது. நிலத்திற்கு அடியில் உள்ள பொருள் விஷயத்தில் அஞ்சிய சமுதாயத்தின் வழிவந்தவர் என்று கூறிக்கொள்ளும் பீஜே, நிலத்திற்கு மேலே இரண்டாண்டுகளாக பாத்தியதை செய்துவரும் பாக்கரின் அமைப்பை ஆக்கிரமிப்பதுதான் தவ்ஹீதா? சிந்திக்க வேண்டுகிறோம்.
குறிப்புமேலே குறிப்பிட்டுள்ள குர்'ஆன் மற்றும் ஹதீஸ்கள் பொருள் சம்மந்தப்பட்டவை. நான் அபகரித்தது பாக்கரின் அமைப்பைத்தான்; அமைப்பு என்பது பொருள் அல்ல.  எனவே முகவை மண்ணாங்கட்டி[!?] எடுத்து வைத்த வாதம் சரியல்ல என்று அண்ணன் வியாக்கியானம் தரலாம். அண்ணனின் வியாக்கியானத்திற்கு 'அல்லாஹு அக்பர்' போட தயாராக இருங்கள்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் !!





பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் !!

அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்இந்திய தவ்ஹீத்ஜமாஅத் ஆரம்பித்த காலம் தொட்டு அவர்களைவசைபாடுவதையே தன்னுடைய தலையாயா கடமையாகநினைத்து இயங்கி வந்த திருவாளர்  தொண்டி பெரியவர் தன்னைமக்கள் மத்தியில் அடையலாம் காட்டும்  போதெல்லாம் தன்னைமிகப்பெரிய அறிவாளி போன்று ஒரு தோற்றத்தைஏற்படுத்துவார்மக்களும் ஆகா ஓகோ என்று புகழ்வார்கள்அவருக்கு பின்னாலிருந்து குறிப்பெடுத்து கொடுப்பர்களைமக்களுக்கு தெரியாது அதையே தனக்கு சாதகமாக்கி கொள்வார்இந்த தோண்டி பெரியவர் இது தான் இவருடைய கடந்த காலநிகழ்வுகள்இது மக்களுக்கு தெரியாது தற்போது அவருடையசெயல்பாடுகள் அனைத்தும் இவரா இப்படி என்று முகம் சுளிக்கவைக்கிறது.

   என்ற சூறாவளி

ஒன்று மட்டும் நிதர்சனமான உண்மையாக புலப்படுகிறது இதுவரை இந்த தொண்டி பெரியவர் பல பேர் குடியை கெடுத்ததுமக்களுக்கு தெரியாமல் இருந்தது இவருக்கு மிகப்பெரும்சாதகமாக அமைந்தது இதை மக்களுக்கு மத்தியில் சொல்லமுனைந்த அனைவர்களையும் இவருக்கே உரிய பாணியில்(பெண் மற்றும் பொருளாதாரம்இரண்டு குற்றச்சாட்டுக்களைவைத்து அவர்களுடைய மானத்தோடு விளையாடி அவர்களும் ந்த சைத்தானுக்கு பதில் அளிப்பதால் தங்களுடைய கண்ணியம் குறையும் என்று கருதி இந்த தோண்டிபெரியவரை சற்றும் பொருட்படுத்தாமல் விட்டு ஒதுங்கிவிடுவார்கள் இதுதான் இவருடைய பலமாக இருந்துவந்துள்ளது,  ஆனால் தற்போது பாக்கர் அவர்கள் விசயத்திலும்   விசயத்திலும் இது போன்றே தன்னுடைய அசிங்க முறையைகையாண்டு கேவலபடுத்தி மக்கள் மத்தியிலிருந்து புறம் தள்ளிவிடலாம் என்று நினைத்து தான் நகர்த்திய அத்தனைசதிகளையும் உடைத்து சோதனைகள் அனைத்தும்சாதனையாக்கபட்டு வருவதை எண்ணி திருவாளர்தொண்டி பெரியவர் ஒரு மன நோயாளி போன்று காட்சியளித்துகொண்டிருக்கிறார்.

   விற்கு பெருமை சேர்த்த தொண்டி பெரியவர்

அல்ஹம்துலில்லாஹ் இதுவரை    வை சகட்டு மேனிக்குபேசி வந்த இந்த தொண்டி பெரியவர் தற்போது இவர் வாயாலே   விற்கு பெருமை சேர்த்து வருவது அல்லாஹ்வுடையவார்த்தையான சூழ்ச்சி காரனுக்கெல்லாம் சூழ்ச்சி காரன்அல்லாஹ் என்பதை இந்த குறு மதியாளர் மூலம் தற்போது புரியவைத்திருக்கிறான் கண்ணிய மிக்க ரப்பு.

இனியும் கேவலம் தொடரும்

தொண்டி பெரியவர் தனக்கு நெருக்கமானவர்களிடம்    வைதன்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று புலம்பும்செய்தியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வந்துகொண்டே இருக்கிறதுஇனிமேலாவது இந்த தொண்டி பெரியவர்பிறர் விசயத்தில் கண்ணியமாக நடப்பார என்று மக்கள்உன்னிப்பாக கவனித்து வருவதை அவருக்கு அவருடையசீடர்கள் தெரிவிப்பது மட்டுமே அவரை காப்பாற்ற எளிய வலி.இல்லையென்றால் தன்னை அபு ஜகில் என்று தானே அறிவித்தவிஷயம் மக்கள் மத்தியில் உண்மை பெற்று விடும் என்பதைஅவர் நினைவு கொள்ளட்டும்

சொல்லும் செயலும்

சொல்லும் செயலும் வெவ்வேறு என்பதை இந்த அற்புத மார்க்கஅறிஞரின் ! கூற்றை கண்ட நல்லுள்ளம் கொண்ட    வினர்கூட தற்போது சிந்தித்து வருவது அல்லாஹ்வின் மாபெரும்கிருபையில் ஒன்றுஇஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில்ஒன்று தொழுகை இது வரை ஜமாத்தை சரி வரி பேணாத இந்தஅறிஞர்  எப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய முடியும் ?பொருளை திருடுவதேர்கி கையை வெட்ட சொன்னது இஸ்லாம்ஒரு சமுதாய இயக்கத்தையே திருட நினைத்தவருக்கு என்னதண்டனை ? அறியாசனையில் வைத்து அழகு பார்பதா ? சிந்திக்கவேந்தாம இந்த    சகோதரர்கள் ?

எச்சரிக்கை

   வின் ஆரம்பமே தன்னுடைய அழிவு என்பதை அறிஹ்துகொந்த இந்த இழி பிறவி தொண்டி பெரியவர் எத்தனை எத்தனைசரிவு எப்படியெல்லாம் கேவலம் நிச்சயம் அல்லாஹ்பாதிக்கபட்டவர்களுடன் தான் இருப்பான் என்பதற்கு சமீபத்திய   வின் வெற்றியும் வளர்ச்சியும் ஒரு மாபெரும்முன்னுதாரணம்   பிளவின் போது ஐஸ் ஹௌசில்விளக்கம் அளிக்க வந்த இந்ததொண்டி பெரியவர் கேளுங்கம்மா எல்லாத்துக்கும் பதில்சொல்லுறேன் என்று உட்கார்ந்த இவர்மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் புற முதுகிட்டு ஓடியதிலிருந்தே அவருக்கு அழிவுஆரம்பித்து விட்டது இதை பற்று தன்னுடையநெருக்கமானவர்களிடம் கூறிய இந்ததொண்டி பெரியவர் "என் வாழ்கையில் கேள்விக்கு பதில்சொல்லாமல் சென்றது இது தான் முதல் முறைஎன்றுஅவரே கூறியதை மீண்டும் நினைவு படுத்துகிறோம்அனைவரும்இந்த தொண்டி பெரியவர் நேர்வழி பெறுவதற்காகஅல்லாஹ்விடம் துவா செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

வஸ்ஸலாம்

இறையடியான்