Thursday, April 29, 2010

இதக் கேளுங்க!

இதக் கேளுங்க!

அதிராம்பட்டிணத்தில் பள்ளிவாசல் சுவரை சங்பரிவாரக் கும்பல் இரவோடு இரவாக இடித்த விஷயத்தில் அங்கேயுள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்தன! முதலில் இப்போராட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த தனிநபர் ஜமாஅத்தின் மாவட்ட நிர்வாகி, திடீரென பல்டி அடித்து குழுவில் இருந்து விலகிக் கொண்டாராம்.

இந்த மனமாற்றத்துக்கு இடையில் என்ன நடந் ததோ தெரியவில்லை. ஆனால் அதிராம்பட்டின மக்கள் அந்த ஜமாஅத் தின் மேல் கடுங் கோபத் தில் உள்ளனராம். அது மட்டுமின்றி மேலாண் மைக் குழு தேவையில்லை என்று செயற்குழுவில் தைரியமாக கருத்துச் சொன்ன தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் மீது ""மேல் விசாரணை'' ஏற்படுத்தியுள்ளதும், மாவட்டத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.

குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல் ஒற்றுமை நாடகத்திற்கு அந்த முன்னாள் நிர்வாகியை களமிறக்கி, தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையைக் கிள்ளிவிட்ட கதையாக மேலப்பாளையம் மேலாண்மையை விட்டு ""தூக்கு மாட்டிக்கச் சொன்னவர்களோடு ஒற்றுமையா?'' என பேசவும் வைக்கும் நிஜத் தலைவருக்கு இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஜுஜுபி மேட்டர் என்கிறது நமது உளவுத்துறை.

0 comments:

Post a Comment