Tuesday, December 27, 2011

சென்னை சேரி பகுதிகளில் இதஜவின் இஸ்லாமிய அழைப்புப் பணி!


சென்னை சேரி பகுதிகளில் இதஜவின் இஸ்லாமிய அழைப்புப் பணி!

இஸ்லாம் காட்டித்தந்த உன்னத பணியான தஃவா எனும் அழைப்புப் பணியை தனது தலையாய பணியாக செய்யும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்  அனைவரும் அழைப்புப் பணியினை பல வழிகளிலும் செய்து வருகின்றனர்.
மண்டபங்களிலும், மாபெரும் மாநாடு பொதுக் கூட்டங்களிலும் மட்டுமே மார்க்கத்தை சொல்லும் அழைப்பாளர்களுக்கு மத்தியில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தாயிக்கள்    மருத்துவமனை, பூங்கா, கடற்கரை, கோயில்கள், சர்ச்கள் மற்றும் சேரிகள் மற்றும் மாற்று மத மக்கள் குடி இருக்கும் வீடுகள் தோறும் சென்று இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆன் மற்றும் கண்ணியத்திற்குரிய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகள் அடங்கிய அழகிய நூல்களை வழங்கி அழைக்கின்றனர்.
இன்றைய தினம் [22.12.11] சென்னை பல்லவன் இல்லம் அருகில் உள்ள சேரிகளுக்கு சென்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் துணைத் தலைவர் முனீர், மாநில பேச்சாளர் முகைதீன் லாக் நகர் யூசுப், சேப்பாக்கம் கலீல் ரஹ்மான் திருவல்லிக்கேணி நசிர், முத்து இப்ராகிம்  உள்ளிட்ட தஃவா குழுவினர் வீடு வீடாக சென்று இஸ்லாமிய அழைப்புப் பணியினை செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
அஸர் மற்றும் மக்ரிப் தொழுகைகளை ஆள் அதிகமற்ற அங்குள்ள பிரம்மாண்டமான கவர்னர் பாடி கார்டு பள்ளிவாசலில் தொழுத போது 7000 பேர் வசிக்கும் அந்த சேரியில் இஸ்லாமிய வசந்தம் வீசினால் அங்கிருக்கும் நாற்றம் மறைவதோடு அந்தப் பள்ளியும் நிறையும் எனும் எண்ணம் ஏற்பட்டது!     இன்ஷா அல்லாஹ்!  

1 comments:

EPPA UNKA ALAPPARAIKKU ORU ALAVE ILLAYA.NEENKALELLAM THAYAVU SEITHU ISLATHAI PATRI SOLLAATHEERKAL.NEENKAL IRUKKUMIDAM NITHYANANTHA SAAMIYAR,PREMANANTHA SAAMIYAR PONDRU ORU AASIRAMAM VAITHU KONDU SEX LEELAIKAL PANNUGADAA

Post a Comment