அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு விட்டு பதவி ஆசையால் அரசியல் சாக்கடையில் இறங்கி விட்டார்கள்
உடனே அண்ணனுக்கும் அரசியல் ஆசை லேசாக துளிர் விட்டது. அண்ணன் ஜமாஅத் அரசியலில் இறங்கும் என்று சொன்னால் கூடராம் காலியாகிவிடும். ஏனென்றால் நாங்கள் எங்களுக்காக ஓட்டுக் கேட்டு உங்களிடம் வரமாட்டோம் என்று ஓராயிரம் முறை மேடைகளில் ஒப்பாரி வைத்துத் தான் இந்த தக்லீது கூட்டம் உருவாகியுள்ளது
உடனடியாக பைலாவில் உள்ள ஒரு பாராவை தனக்கே உரித்தான வார்த்தை ஜாலத்தால் வளைத்து வியாக்கினம் தந்து உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்றார். எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக உறுப்பினர் தேர்தலில் போட்டியிடலாம் என்று பொதுச்செயலாளர் மூலம் அதிகாரப்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று அண்ணன் அடிக்கடி சொல்லுவார். அந்த அடிப்படையில் அண்ணன் ஜமாஅத்தின் அரசியல் ஆசைக்கு இந்த ஒரு சோற்றை பதமாக எடுத்துக்கொண்டு ஆகவேண்டிய வேலையைப் பார்ப்பது அண்ணனுக்கு நல்லது. இல்லையென்றால் அண்ணனுக்கு துணிவிருந்தால் நேரடி அரசியலுக்கு வந்து சாதித்துக் காட்டட்டும். அதை விடுத்து அரசியல் சாக்கடை என்று சொல்லிக்கொண்டு மறைமுக அரசியலில் ஈட்பட்டால் மானம் போகும் என்பதற்கு இந்த தோல்வி ஒரு பாடமாகும்'' என்று எழுதியிருந்தோம்.
அண்ணன் நம்முடைய அறிவுரையை ஏற்று,
11 . 12 . 11 அன்று நெல்லையில் நடந்த பொதுக்குழுவில்,
அண்ணன் நம்முடைய அறிவுரையை ஏற்று,
11 . 12 . 11 அன்று நெல்லையில் நடந்த பொதுக்குழுவில்,
உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் இந்த ஜமாஅத்தின் உறுப்பினர்கள்போட்டியிடலாம் என்று இருந்த விதியை முழுமையாக மாற்றி, இனி
டி.என்.டி.ஜே உறுப்பினர்களும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எந்த
தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் தனது அரசியல் ஆசை கானல்நீராகி விட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இனிமேலாவது மண்ணைக் கவ்வ வைப்பேன்., மலையைகவ்வவைப்பேன் என்பது போன் ற வெற்று
ஸ்லோகங்களை அண்ணனும் அவரது தம்பிகளும் மூட்டை கட்டுவது அவர்களுக்கு நல்லது.
--அப்துல்முஹைமீன்.
0 comments:
Post a Comment