Friday, April 29, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்[28] just4jokes!


திருனாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி பேச்சு; "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கோல்கட்டா நகரத்தை, லண்டன் நகரம் போல், உலகத் தரம் வாய்ந்த வர்த்தக நகரமாக மாற்றுவோம். டார்ஜிலிங்கை, சுவிட்சர்லாந்துக்கு இணையான சுற்றுலா தலமாக்குவோம். துறைமுகங்களை, சிங்கப்பூரில் உள்ளது போன்ற நவீன துறைமுகங்களாக்குவோம். கடற்கரையோர டிகா நகரத்தை, கோவா போல மாற்றுவோம்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; இப்பிடித்தான் எங்க ஊருல ரெண்டு பேரு மயிலாடுதுறையையும், ராமநாதபுரத்தையும் துபாயாக மாத்துவேன்னு சொன்னாங்க. மாத்தீட்டாங்களாக்கும்? அதுனால துபாயாகவும் சிங்கப்பூராகவும் மாத்த வேணாம், இருக்கிறத கெடுக்காம இருந்தா போதும்னு மக்கள் நினைக்கிறாங்க.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேச்சு : கடந்த, 34 ஆண்டுகளாக, மேற்கு வங்க மாநிலத்தை இடதுசாரி கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த காலத்தில், எவ்வித வளர்ச்சிப் பணிகளையோ அல்லது தொழிற்சாலைகள் அமையவோ, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. வேலை தேடி குஜராத் மாநிலத்துக்கு, ஏராளமான வங்காளிகள் வந்துள்ளனர்; பல தொழிற்சாலைகளில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; ஒரு மாநிலத்தை சேந்தவுக அடுத்த மாநிலத்துக்கு வேலைக்கு போறதுதான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அளவுகோல்ன்னு சொன்னா, மாநிலத்த விடுங்க; இந்தியாவை சேர்த்த கோடிக்கணக்கானோர் வெளிநாட்டுல வேலைக்கு போயிருக்காங்களே! அப்ப இந்தியாவே தொழில்துறையில் முன்னேறலன்னு சொல்லப் போறீங்களா?

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா பேச்சு: மிகவும் அவசியமான காரணங்கள் இருந்தாலன்றி, வக்கீல்கள், அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்களுடன் தொடர்பு வைத்து கொள்வதை, நீதிபதிகள் தவிர்க்க வேண்டும். எந்த வகையான ஆதரவையும், முன்னுரிமை தரப்படுவதையும் நீதிபதிகள் ஏற்கக்கூடாது. ஓய்வுக்கு முன், வேறு பணிகளை ஒப்புக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இவை தான் ஊழலுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. பாரபட்சமற்ற, அச்சமில்லாத, சுதந்திரமான நீதி வழங்கும் அமைப்பின் அங்கமாக நீதிபதிகள் இருக்க வேண்டும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; நீங்க சொல்றது கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. அதேமாதிரி நீதிபதியா பதவியேத்தவுடனேயே முதல் வேலையாக முதல்வர சந்திச்சு ஆசி வாங்குறதும் சட்டத்துக்கு உட்பட்டதான்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு; எல்லா மாவட்டத்திலும், வட்டார அளவிலும் எனக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். எனக்கும் தொண்டர்கள் பலம், ஆள்பலம் உண்டு. ஆனால், நான் அமைதியாகவும், அடக்கமாகவும் உள்ளேன். தமிழகம் முழுவதும் எனது ஆதரவாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். அவர்களை நான் அடக்கி வைத்துள்ளேன். நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் தமிழகமே பற்றி எரியும். ஆனால், எனக்கு கட்சிதான் முக்கியம். தொண்டர்களை தவறாக பயன்படுத்த மாட்டேன்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; ஒரு அறிக்கை வெளியிட்டால் தமிழகமே பற்றி எரியும்னு நீங்க சொல்றது நெசமுங்க. 19 பேரை கட்சியவுட்டு நீக்கி ஒரு அறிக்கைதான் வெளியிடீங்க. தமிழகம் முழுக்க உங்க கொடும்பாவி பத்தி எரியுதே.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேட்டி: காங்கிரஸ் கட்சியை, 1967ல், வீட்டுக்கு அனுப்பினார் அண்ணாதுரை. நாட்டை நாசமாக்கினதே காங்கிரஸ் தான்னு சொன்னார் அண்ணாதுரை. இன்று, தன் குடும்பத்தைக் காப்பாற்ற, காங்கிரஸ் கேட்பதையெல்லாம் தூக்கி கொடுக்கிறார் கருணாநிதி. இவர் அமைத்திருப்பது கொள்கை கூட்டணியா?

பஞ்ச் பட்டிக்காட்டான்; ரெண்டு திராவிடக் கட்சிகளும் மாத்தி மாத்தி ஆட்சி பண்ணி தமிழ்நாட்ட நாசமாக்கிட்டாங்கன்னு நீங்களும் தான் சொன்னீங்க. இப்ப அந்த ரெண்டுல ஒன்னோட போய் சேர்ந்தது மட்டும் கொள்கை கூட்டணியாக்கும்?

லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பேச்சு: லாலு பிரசாத் ஆட்சியில் இருந்த அதே நிலையில் தான் இப்போதும் பீகார் உள்ளது; ஒரு முன்னேற்றமும் இல்லை. நிதிஷ் அரசின் தோல்விகளை மக்கள் அறியும் வகையில், தீவிர பிரசார இயக்கம் விரைவில் மேற்கொள்ளப்படும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; நிதிஷ் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லன்னு சொல்ற சாக்குல லாலு ஆட்சியிலும் பீகார்ல எந்த முனேற்றமும் ஏற்படலன்னு சொல்றமாதிரி தெரியுதே?


Thursday, April 28, 2011

இரண்டாண்டுகளாக எண்ணற்ற பணிகள் நடைபெற்ற பள்ளிவாசல் கை விட்டு போகும் சூழ்நிலை! உதவுங்கள்!


இரண்டாண்டுகளாக எண்ணற்ற பணிகள் நடைபெற்ற பள்ளிவாசல் கை விட்டு போகும் சூழ்நிலை! உதவுங்கள்!

சென்னையின் இருதயப் பகுதியான திருவல்லிக் கேணியில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் சகோதரர் ஒருவரின் காலி நிலத்தில் அவரின் அனுமதியோடு நோன்பு நேர இப்தார்,இரவு பயான் நிகழ்சிகள் நடை பெற்றது! இது அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றது நோன்பு நேரத்தில் ஐவேளை தொழுகையும் நடை பெற்று பின்னர் அதை அப்பகுதி மக்கள் நீடிக்க விரும்பி இடத்தின் உரிமையாளரும் கட்டிடம் கட்டும் சூழல் தள்ளிப் போனதால் அது பள்ளி வாசலாகவே செயல் பட்டு வந்தது!

ரமலான் மாதத்தில் இப்தார் இரவுத் தொழுகை ,தொடர் பயான் என நிரம்பி வழிந்த பள்ளி ரமலானுக்கு பின்னும் மக்களால் நிறைந்தது! ஜும்மா அன்று நெருக்கி நின்றாலும் ரோட்டுக்கு வரும் சூழலும் , வியாழன் தோறும் பெண்கள் பயானில் கால் வைக்க இடமில்லாத அளவிலும் , சனி தோறும் ஆண்கள் பயான் , ஞாயிறு தோறும் மகல்லா சகோதரர்களின் , மருத்துவ மனை தாவா , முஸ்லிம் அல்லாதவர்களுக்கான இஸ்லாம் அறிமுக நிகழ்ச்சி இஸ்லாத்தை ஏற்றோருக்கான வழி காட்டு நிகழ்ச்சி, அவர்களுக்கான கத்னா, அபிடவுட், ஏற்பாடுகள் , மேலும் சகாத், நன்கொடைகள் மூலம் பல்வேறு மருத்துவ உதவிகள் கல்வி உதவிகள், வாழ்வாதார உதவிகள், மருத்துவ முகாம்கள் , கல்வி வழி காட்டு முகாம்கள் என எண்ணற்ற பணிகள் இறையருளால் நடை பெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடத்தின் உரிமையாளர் அங்கு வந்து நேரில் பார்த்துவிட்டு நீங்கள் பள்ளியாக சிறந்த பணிகள் நடை பெற்று வருவதால் நீங்களே விலைக்கு எடுத்து கொள்ளுங்கள் என விலையையும் நிர்ணயம் செய்து சதுர அடி 7500 ருபாய் [820sq] என ஒப்புக் கொண்டு அதற்க்கு மற்றக அவருக்கு வேறு இடம் பார்த்து அதற்க்கு அவர் அக்ரிமேண்டும் போட்டு வரும் 17.5.11 உடன் அந்த இடத்திற்கு நம்முடைய தொகையை கொடுக்க வேண்டும்! இல்லை என்றால் இரண்டு ஆண்டுகளாக எந்த முன் பணமோ வாடகையோ இன்றி கொடுத்த அவரிடம் இடத்தையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும்!

அன்பார்ந்த சகோதரர்களே ! வெளி நாடு வாழ் நண்பர்களே ! மிகக் குறைந்த நாட்களே உள்ளதால் , நற்பணிகள் நடை பெறும் இந்த இடம் நம் கையை விட்டு போகாமல்; இருக்க இன்ஷா அல்லாஹ் சதுர அடி 7500 ருபாய் என்கிற அளவில் நாமும் நம் நண்பர்களையும் வாங்கத் தூண்டுவோம்! மேலும் தங்கள் பெற்றோருக்காக வாங்கி அதன் நன்மையை அவர்களுக்காக சேர்க்கும் அன்பர்களை நாடுவோம், மேலும் பள்ளிக்காக தரும் தனவந்தர்களை அறிமுகப் படுத்துவோம்! குறுகிய அல்லது நீண்ட கால கடன்களாக அல்லாஹ்விற்காக அழகிய கடன் தரும் அன்பர்களை நாடுவோம் ! மறுமையில் அல்லாஹ் வாக்களிக்கும் மாளிகையை பெற எல்லா வகைகளிலும் முயற்சிப்போம் ! மேலும் நம்முடைய பிரார்த்தனைகளில் இந்த விஷயத்தை மறவாமல் அணு தினமும் கேட்போமாக ! அல்லாஹ் நம் காரியங்களை சீராக்கி வைப்பான் .

இது தொடர்பாக நீங்கள் அழைக்க வேண்டிய தொலை பேசி எண்கள் ; 9677103519, 9600037600 9840078002, 9840077765
நன்கொடைகள் அனுப்ப வேண்டிய முகவரி : அல்முமின் டிரஸ்ட் 32 அங்க முத்து தெரு பெசன்ட் ரோடு ராயபேட் ,சென்னை -14 .
almumin trust a\c no : 301500301000487 vijaya bank triplicane.branch

கடையநல்லூர் கலகம்! KNTJ உதயம் ! பி.ஜே. Vs சைபுல்லாஹ் ஹாஜா.

கடையநல்லூர் கலகம்! KNTJ உதயம் !
பி.ஜே. Vs சைபுல்லாஹ் ஹாஜா.

தன்னைத் தவிர வேறு யாரும் தலையெடுக்க கூடாது, எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எவரும் இருக்கக் கூடாது, தன்னை மட்டுமே தக்லீது செய்யும் ஒரு கூட்டத்தை உருவாக்கி தனி மத்ஹபு என்கிற ரீதியில் பொய் கொண்டிருக்கும் பி.ஜே.வின் பிரித்தாளும் பாலிசியால் கொள்கை சகோதரர்களுக்கு மத்தியில் மீண்டும் ஒரு பிளவு உருவாகியுள்ளது!

கடந்த சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த கடையநல்லூர் விவகாரம் வெடித்து மற்றுமொரு பிளவு ஏற்பட்டுள்ளது! தன் பெயரில் முஸ்லிம் டிரஸ்ட் , மற்றும் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் என இரு டிரஸ்ட் களை வைத்துக் கொண்டு , அமைப்பில் உள்ள வேறு யாரும் டிரஸ்ட் வைத்துக் கொள்ளக் கூடாது ! என குரான் ஹதிஸ் அல்லாத தானே வகுத்துக் கொண்ட ஒரு கூறு கெட்ட கொள்கைக்காக இன்னும் எத்தனை பிரிவுகளோ தெரியவில்லை!

இந்த பிரச்சனையால் முதலில் கீழக்கரை KECT , மற்றும் நாச்சியார் கோயில் பள்ளி எனத் தொடங்கி தற்போது கடைய நல்லூரிலும் வெடித்துள்ளது! சமிபத்தில் த.த.ஜ.வில் இணைந்த த.மு.மு.க. முன்னால் மாநில செயலாளர் புளியங்குடி செய்யது கூட புளியங்குடி தவ்ஹீத் பள்ளியை த.த.ஜ.வில் இணைக்க மறுத்து த.த.ஜ.வில் இருந்து வெளியேறினார் [இந்த பள்ளியில் கடந்த வாரம் ஜும்மா உரை சைபுல்லாஹ்] என்பது குறிப்பிட தக்கது!

டிரஸ்ட் என்பது கூடாது த.த.ஜ.வில் இணைப்பது தான் சரி என்றால் முதலில் தன் பெயரில் உள்ள இரு டிரஸ்ட் களையும் இணைத்து அதில் த.த.ஜ. உறுபினர்களை சேர்க்க வேண்டும்! அதை செய்வாரா? தன்னுடைய மகன்கள் மற்றும் சகலை மகன்கள், மருமகன் பெயரில் திருட்டுத் தனமாக பதிவு செய்த INTJ சங்கத்திற்கு 20 லட்சம் மதிப்புள்ள சொத்திருப்பதாக நீதி மன்றத்தில் கூறியுள்ளரே அந்த சங்கத்தில் த.த.ஜ.வை சேர்ந்த அனைவரும் உறுப்பினராக்கி விட்டாரா? உபதேசம் எல்லாம் ஊருக்கத் தானா?

தற்போது இந்தப் பிரச்சனையால் கடையநல்லூர் த.த.ஜ உடைந்து இரண்டானதோடு ரியாதிலும் TNTJ -KNTJ என இரண்டாக உடைந்து நிற்கிறது! கடையநல்லூரில் போய் மக்களின் மண்டையை கழுவ நினைத்த பி.ஜே.விற்கு பெருந்தோல்வி மட்டுமே மிச்சமானது! அப்துன்நாசிர் மூலம் பி.ஜே துவங்கிய கலகம் மஸ்ஜிதுல் முபாரக் நலச் சங்கம் என உருவாகி தங்கள் சொத்தை தற்காத்துள்ளனர் கடைய நல்லூர் மக்கள். வெறும் ஆம்புலன்ஸ் வேனை மட்டுமே சைபுல்லஹ்விடம் இருந்து வாங்கிக் கொண்டு வெளியேறி உள்ளனர் த.த.ஜ.வினர்.

தற்போது அண்ணனின் அடி வருடிகள் வழக்கம் போல், அண்ணனின் வழக்கமான பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டுகளை சைபுல்லாஹ் மேல் அள்ளி வீசத் துவங்கியுள்ளனர். இணையத் தளம் நாறிக் கொண்டுள்ளது! மக்கள் கேட்பதெல்லாம் சைபுல்லாஹ் மேல் பல வருடங்களாக சொல்லப் பட்டு வரும் குற்ற சாட்டுகளை பள்ளிவாசலை எழுதிக் கொடுக்க மறுத்து பி.ஜே.வின் கட்டளையை புறக்கநிதவுடன் வெளியிட்டு நாறடிக்கிறீர்களே! சைபுல்லாஹ் தரப்பினர் பள்ளியை பி.ஜே.சொன்னபடி எழுதிக் கொடுத்திருந்தால் அவர் புனிதமானவர் ! உங்களின் பரிசுத்த இயக்கத்தில் மேலாண்மை செய்ய தகுதியானவர் ! எதிர்த்தால் இழிவானவர் !. என்னே உங்கள் நிலைப்பாடு !

சைபுல்லாஹ் பி.ஜே.விற்கு எழுதிய கடிதம் !







சைபுல்லா தியாகியா? துரோகியா? பி.ஜே.தரப்பு எழுதிய பதில் கடிதம்!

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்தக்கடிதம் உங்களை பூரண உடல் நலத்துடன் சீரிய இஸ்லாமிய சிந்தனையுடனும் சந்திக்கட்டுமாக!

அன்புச்சகோதரர் அப்துல் பாசித் அவர்களுக்கு,

நீங்கள் சகோ.பிஜே அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் நகல் எங்களுக்கும் கிடைக்கப் பெற்றோம்.

நீங்கள் உங்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக கேள்வி கேட்டால் அதை நாங்கள் விமர்சிக்க மாட்டோம். ஆனால் உங்கள் நோக்கம் அதுவல்ல என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். உங்கள் சகலை சைபுல்லாவுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் சகலையின் ஆலோசனையில் தான் இது போன்ற வேலையில் இறங்கியுள்ளீர்கள் என்பது தெளிவான‌தால் தான் நாங்களும் அதே வழியில் உங்கலை சந்திக்கிறோம். உங்கள் நோக்கம் எப்படி எங்களுக்குத் தெரிந்தது என்று கேட்கிறீர்களா? உங்கள் கடிதத்தின் இறுதியில் இதன் ந‌கலை ரியாத்துக்கும், வெளிநாட்டு கடையநல்லூர்வாசிகளுக்கும் அனுப்புவ‌தாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்தக் இக்கடித‌த்தின் நகலை மர்யம் பள்ளியிலும் போட்டுள்ளீர்கள். பீஜேக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்பது தான் உங்கள் நோக்கம் என்றால் அவர் என்ன பதி தருகிறார் என்பத்ற்காக காத்திருக்க வேண்டும்.

அதன் பின்னர் மற்றவர்களுக்குப் பரப்பலாம். ஆனால் உங்கள் சககையை உத்தமனாகக் காட்டி நல்ல அப்ப்பிராயத்தை உருவாக்குவதும் முன்பு போல் வசூல் செய்து கணக்கு காட்டாமல் உங்கள் சகலை சொகுசாக இருக்க வேண்டும் அதில் நீங்களூம் பங்கு வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே இந்தக் கீழ்த்தரமான வேலையை சகலையுடன் சேர்ந்து செய்துள்ளீர்கள். எனவே கடையநல்லூர் மக்களுக்கு சைபுல்லாவை அதாவது உங்கள் சகலையை அம்பலப்படுத்தும் வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தி விட்டீர்கள். பீஜேயும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் இது போன்ற கெட்ட நோக்கத்தில் உள்ளவரகளை அலட்சியம் செய்வார்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டு இப்படி நீங்கள் செய்தாலும் எங்களைப் போன்றவர்கள் இதை விடப்போவதில்லை.

உங்கள் கடிதத்தில் உள்ள தவருகளை நாங்கள் ஒவ்வொன்றாக அம்பலப்படுத்துகிறோம். நீங்கள் வைத்திருந்த ஒவ்வொரு வாசகத்திற்கும் பதில் சொல்ல பிஜே தேவையில்லை. எங்களைப் போன்ற சாமானியர்களே போதும். பிஜே இந்தக் கடிதத்தை படித்து பதில் சொல்வாரா அல்லது குப்பையில் தூக்கி போடுவாரா என்பது குறித்தெல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் நீங்கள் கேட்டிருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நாங்கள் பதில் தராமல் விடப்போவது இல்லை. இந்தக் கடிதத்தை படிக்கும் நான் மட்டுமல்ல, ஒவ்வொரு தவ்ஹீத்வாதியும் காரித் துப்புவான். பிஜேவை அல்ல! உங்களைத் தான். அந்த அளவிற்கு கேவலமான அயோக்கியத்தனமான வாதங்களை வைத்து கேள்வி கேட்டு இருக்கிறீர்கள். அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் எழுதிய நீங்கள் ஒரு தவ்ஹீதுவாதியா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிற‌து.

கடிதம் எழுதிய உங்களது முகம் தவ்ஹீதுவாதியாக தெரியவில்லை. பிஜேவைக் கேவலப்படுத்துவதாக நினைத்து, நீங்கள் தான் கேவலப்பட்டு நிற்கிறீர்கள். கடையநல்லூர் பொதுக்குழு சீடியைப் பார்க்காத ஒருவன் உங்கள் கடித்ததை நம்புவான். ஆனால் கடையநல்லூர் பொதுக்குழுவைப் பார்த்தவன் என்ற முறையிலும், என் சொந்த ஊரின் பிரச்சனை என்ற முறையிலும் உங்களின் அயோக்கியத்தனங்களை நான் தோலுரிக்கிறேன்.

முதல் வாதம் : சொத்துக்காக தவ்ஹீது கொள்கையை இழக்கிறீர்கள் என பிஜேயை நீங்கள் கேட்டு இருக்கிறீர்கள். அதைப் பற்றி அப்புறம் பார்க்கலாம். முதலில் நீங்கள் தவ்ஹீது கொள்கையில் தான் இருக்கிறீர்களா என்பதை உரசிப் பார்த்துக்க கொள்ளுங்கள். ஊருக்கு மட்டும் உபதேசம் செய்துவிட்டு உள்ளுக்குள் தர்ஹா, தரீக்காவாதிகளை விட படுகேவலமாக நீங்கள் நடந்து கொண்டது அல்லது நடந்து வருவது உண்டா இல்லையா?

ஊருக்கு மட்டும் புத்தி சொல்லி, நீ ஆடம்பர கல்யாணத்துக்கு சோறு திங்க போவாதே, அதிலே கலந்து கொள்வது நபிவழி அல்ல என முழுங்கிய உங்களின் சகலை அது மாதிரி கல்யாணத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அதை நடத்தி வைத்தாரா இல்லையா?

திருமணத்தை எளிமையாக நடத்துங்கள் என ஊருக்கு ஊரு மேடை போட்டு முழங்கிய உங்கள் சகலை தன் மகள் திருமணத்தை எப்படி நடத்தினார்? பிரம்மாண்ட சீர்வரிசை கொடுத்து பிரமாதம் செய்தாரா இல்லையா?அப்பறம் என்னய்யா நீ தவ்ஹீது பத்தி பேசுறது? ஊருக்கு மட்டும் தவ்ஹீதுவாதின்னு காட்டிக்கொள்ளும் உங்களிடம் தவ்ஹீது இருக்கிறதா?

சரி அது போவட்டும். ஏகத்துவத்தில் ஆசிரியர் குழுவில் இருக்கும் உன் சகலை, பெண்கள் படிக்கப்போவது குறித்து ஏகப்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கல்லூரி செல்லும் பெண்கள் தங்கள் கற்பை விற்கிறார்கள் என எழுதிய உன் சகலை அவருடைய மகளை மட்டும் ஹாஸ்டலில் தங்க வைத்து படிக்க வைத்திருக்கிறார். அது உண்மையா இல்லையா?

சரி அது போனா போவட்டும். அது பொம்பளைங்க படிக்கிற காலேஜாவே இருக்கட்டும். அது மேட்டர் இல்லை. ஆனால் உன் சகலை தன் மகளை கல்லூரியில் சேர்த்து விட்ட பிறகு அந்தப் பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடி நிச்சயம் செய்தார். நல்ல விசயம் தான். ஆனால் அத்தோடு நிற்காமல் அந்தப் பையனுக்கு தன் மகளின் போன் நம்பரைக் கொடுத்து அனுப்பி நல்லா ஜாலியா பேசுங்கள் என சொன்னார். அவரது மகளும், அவருடைய மகளுக்கு இன்னமும் அந்நியராக‌ இருக்கும் ஒரு நபரும் தொலைபேசியில் விடிய விடிய தினசரி பேசி கொஞ்சிக் குலவுவதாக நாங்கள் சொல்லவில்லை, நீங்கள் பேசி வைத்திருக்கும் மாப்பிள்ளையே அபுதாபி ஜமாஅத் விசாரித்த போது ஒப்புக் கொண்டார். மேலும் தவ்ஹீத் ஜமாத்தை பூதக்கண்ணாடி போட்டு அலசிக் கொண்டிருக்கும் தவ்ஹீதின் எதிரிகள் இதை பக்கம் பக்கமாக எழுதி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்..

எல்லா ஊர்களிலும் மேடை போட்டு கண்கள் செய்யும் விபச்சாரம், காது செய்யும் விபச்சாரம் என கதை பேசி வந்த உன் சகலை இன்றைக்கு தன் மகளுக்கே அந்த விபச்சாரத்தின் வாசலைத் திறந்து வைத்து வந்தனம் பாடுகிறாரா இல்லையா? அப்பறம் என்னய்யா நீ தவ்ஹீது பேசுற? உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா?பிஜேவிடம் கேள்வி கேட்க உனக்கு என்னய்யா தகுதி இருக்கு? நீயும் உன் சகலையும் இன்னமும் தவ்ஹீது கொள்கையிலும் இந்த ஜமாத்திலும் நீடிக்க என்னய்யா தகுதி இருக்கு?

உன் சகலையின் செயலால் அபுதாபியில் உள்ள தவ்ஹீத் சகோதரன் வெட்கித் தலை குனியும் நிலையை ஏற்படுத்தினாரா? இல்லையா? அபுதாபியில் உள்ள ஒவ்வொரு கடையநல்லூர் தவ்ஹீத் வாதியும் காரித்துப்பிக் கொண்டிருக்கிறான் என்பது உனக்குத் தெரியுமா? தெரியாதா?

அடுத்து தவ்ஹீத் பத்தி பேசும் நீ, உன் சகலையிடம் இதக்கேட்டியா? உன் சகலை அல்லாவுக்கு அடுத்து நமக்கு பீட்டர் அல்போன்ஸ் தான்னு பொது மேஎடையில் பேசி தவ்ஹீதுவாதிகளுக்கு தலைக்குணிவை ஏற்படுத்தினாரே அந்த ஆடியோவை உலகெங்கும் பரப்பி பீஜேக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் பதில் சொல்ல முடியாத சங்கடத்தை ஏற்படுத்திய உன் சகலையைக் கண்டித்து கடிதம் எழுதினாயா?

சொத்துக்காகத்தான் பிஜே கொள்கையை இழக்குறாருன்னு சொல்லுதியே! எப்பா நான் ஒன்னு கேக்கட்டா?இன்னி வரைக்கும் ஆம்புலன்ஸ் கணக்க யாருகிட்டயும் காட்டாம நீங்க வச்சிக்கிறலாம், முபாரக் பள்ளி ஆவனங்களை தனி நபர் பேர்ல வச்சிகலாம். எல்லா எலவுகளையும் நீங்க செஞ்சா சரிதான்! அப்டித்தானே! சொத்துக்காக பிஜே கொள்கைய விடுறதா இருந்தால் இன்னேரம் ஜாக் ஒடையுமா? தமுமுக ஒடையுமா? அழகா வக்ப் போர்டு பதவிய வாங்கிக்கிட்டு சொகுசா வாழ்க்கைய ஓட்டிருக்கலாமே! ஏன் அதையெல்லாம் விடுத்து வெறும் கொள்கையை மட்டும் மூட்டை கட்டி தலையில் வச்சிக்கிட்டு தனியா வந்தார்.

அன்னிக்கு இருந்த தமுமுக கூட்டத்த பாக்குற எவனும் அத ஒடைக்க ஆசப்படுவானா? அவ்வளவு மக்களும் சொல்பேச்சி கேக்குற மக்களா இருக்கும் போது கூட்டம் போனா போவுது கொள்கை தான் முக்கியமுன்னு பிஜே வந்தாரே! அவர் வழியில் பின் தொடர்ந்த உங்களுக்கு ஏனப்பா இப்படி இன்னிக்கு சைத்தான் புகுந்தான்? நீ கேக்குற பிஜேய பாத்து, சொத்துக்கு கொள்கைய விட்டார்னு,. நான் சொல்லுதேன் அன்னிக்கு பொதுக்குழுவில அந்தப்பள்ளிய நீங்களே டிரஸ்டியா பதிவு பண்ணிக்கிருங்கன்னு பிஜே சொல்லியிருந்தா, அவர விட்டுட்டு நாங்க வெளியாகி இருப்போம். அல்லா பாதுகாத்தான்.

பள்ளிவாசல் கேஸ் விஷயமா பிஜேவைக் கேட்டபோது செத்தை பாம்பை என்னிடம் கொண்டு வராதீர்கள்னு சொன்னாரு,இப்ப‌ பள்ளிவாசலை நாங்க நீதிமன்றத்தில் போராடி பெற்ற பிறகு பிஜே இப்போது பள்ளியை அபகரிக்க முயற்சிக்கிறார்னு சொல்லுதாரே உன் சகலை சைபுல்லா?

அத்தோட நீயும் சேர்ந்து முபாரக் பள்ளிய பூட்டிய போது அது நம்மள விட்டு போயிருச்சின்னு பிஜே பத்வா குடுத்தாருன்னு எழுதியிருக்கியே!

முபாரக் பள்ளி சம்மந்தமாக பீஜே பல ஆலோசனைகளை சொல்லி அதைக் கேட்காமல் உன் சகலை அறிவெ கெட்ட தனமாக நடந்து பள்ளியை பூட்டவைத்தார். அந்த நிலையில் தான் பள்ளிவாசல் கேஸ் விஷயமாக பீஜேயிடம் மீண்டும் ஆலோசனை கேட்டீர்கள். நான் சொன்ன் எல்லா யோசனையையும் புறக்கணித்து விட்டு செத்த பினமாக ஆக்கிவிட்டு வைத்தியம் பார்க்கச் சொல்கிறீர்கள் என்று அதற்காகத் தானே அவர் கண்டித்தார்,இதில் என்ன தவறு? அதன் பிறகு அந்தப் பள்ளிக்காக பீஜே செய்த உதவிகளை நீ ஏன் இருட்டடிப்பு செய்தாய்?

அடப்பாவிகளா அதுக்குள்ள மறந்து போச்சா அல்லது மறந்து போன மாதிரி நடிக்கிறியலா? RTO அந்தப் பள்ளிய பூட்ட உத்தரவிட்ட போது தவ்ஹீத் ஜமாத் தானப்பா அதிமுக பன்னீர் செல்வம் வழியா அந்த ஆர்டர கேன்சல் பண்ண சொன்னிச்சி.

இன்னிக்கும் அந்தப்பள்ளி தவ்ஹீத் ஜமாத் கண்ட்ரோல்ல இருக்குன்னு நெனச்சித்தான் தமுமுகவும் ஜாக்கும் உள்ள வராம இருக்கானுங்க. இல்லைன்னா இன்னேரம் அவ்வளவு பேரும் உள்ள வந்து கூடாரத்த காலி பண்ணியிருப்பானுங்க! நீ பேசுற‌ தவ்ஹீத் ஜமாத் அதைக் கைவிட்டதுன்னு! எவ்ளொ பெரிய அபான்டம். அந்த வரலாற்றை நீ மறைக்க பாக்குறியா? நீ மறைக்க நினைத்தாலும் நாங்க மறக்க மாட்டோம்.

பள்ளியை தமுமுககாரன் கைப்பற்ற வர்ரான் என்றவுடன் நீயும் உன் ச‌கலையும் வெடவெடத்துப் போக,பள்ளிவாசலைப் பாதுகாக்க, கொள்கைகாக உயிரையும் ப‌ணயம் வைக்கக் கூடிய‌ ஆட்கள் வேண்டும் என்று பீஜேயிடம் கேட்டீயலா இல்லையா? பீஜே மதுரைல‌ இருந்து எதையும் சந்திக்கும் இளைஞ‌ர் படையை அனுப்பினாரா? இல்லையா? மேலப்பாளையம் சென்று லுஹாவிடம் ஆட்கள் வேண்டும் உன் சகலை கேட்டாரா?இல்லையா? மேலப்பாளையத்தில் இருந்தும் ஆட்கள் வந்து பள்ளிவாசலைக் காப்பாற்றினார்களா? இல்லையா?ஆனால் நீ தவ்ஹீத் ஜமாஅத் ஒன்னும் செய்யவில்லை என்கிறாயே! என்னப்பா இது நியாயம்.

அப்ப உன் சகலை தானப்பா TNTJ வுக்கு மாநில துணைத்தலைவரா இருந்தாரு. அப்பவே ஏன் இதப்பத்தி பேசல?இப்ப என்னப்பா புதுசா வந்து இன்னிக்கு ரீல் விடுத? இதிலிருந்தே தெரியலையா இது பச்சைப்பொய்யின்னு! ஏம்பா இப்படி படு கேவலமா ஆயிட்டீக?

தவ்ஹீத் ஜமாத் பேரச்சொல்லி வசூல் பண்னிட்டு இப்ப தனிநபர் பெயருல பதிவு பண்ணியிருக்கிற பள்ளிக்குரிய இடத்தை ஜலீல் மதனி 40 லட்சம் ரூபா அட்வான்ஸ் கொடுத்து பதிவு பண்ணுனார்னு சொல்லுதியே! நீ சரியான ஆளா இருந்தா, ஜலீல் மதனி போட்ட அந்த அக்ரிமெண்ட் காப்பியை வெளியிடு. யோக்கியனா இருந்தா அந்த ஆதாரத்த வெளியிடு. நாங்களே பிஜே கிட்ட பேசி உங்களுக்கு அந்த பள்ளிய வாங்கித் தர்ரோம். முடியுமா?

கடித்தத்தின் ஒவ்வொரு வார்த்தையில் பொய் பித்தலாட்டம் குடிகொண்டிருக்கும் உன்னிடம் நான் ஒன்னு கேக்கட்டுமா?

உன் சகலை செய்த கேவலங்கள் என்ன என்ன என்று நான் சொல்லட்டுமா? ஜலீல் மதனியைப் பத்தி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது? ஜலீல் மதனி செய்த தியாகத்தை எல்லாம் உன் சகலை செய்ததாக இன்று பிரச்சாரம் செய்யும் உங்களது கூட்டத்தின் முகமூடியை நான் கிழிக்கிறேன் பார்.

நான் நெல்லிகுப்பத்துக்கு போனேன், அங்கே பி.ஜெயினுல் ஆபுதீன் என்பவர் நம்மை போலவே பேசுறார். அவரை அழைத்து வந்து கூட்டம் போடனும்னு நான் தான் ஜலீல் மதனியிடம் சொன்னேன்னு உன் சகலை சைபுல்லா தனது கடிதத்தில் சொல்லி இருக்கிறாரே! எவ்வளவு பெரிய பொய் இது? எவ்ளோ பெரிய அயோக்கியத்தனம் இது? அடப்பாவிகளா! உண்மை தெரியாத மக்களை மடையர்களாக்கும் செயலில் இறங்கி விட்டீர்களா? நீ சொன்ன தவ்ஹீதின் லட்சனம் இதுதானா? பிஜேவை முதலில் சந்தித்தது உன் சகலையா?

வரலாற்றை நான் சொல்லட்டுமா?

1979ம் ஆண்டுன்னு நெனக்கேன், கடையநல்லூரில் ஜலீல் மதனி ஆலிம்சா பட்டத்தை வாங்கிட்டு மதினா இஸ்லாமிய பல்கலைகழகத்தில் சேர்ந்து படிப்பதற்காக காத்துக்கிட்டிருந்த நேரத்தில், அவர் பக்கத்து வீட்டிலிருந்த‌ சைபுல்லா 10ம் வகுப்பில் 250 மார்க்கு வாங்கி படிப்பை முடிச்சிட்டு, வறுமையால் படிப்பை தொடர முடியாமல் இருந்த காலம்.

சைபுல்லா மேல இரக்கப்பட்ட‌ ஜலீல் மதனி, சைபுல்லாவை உமராபாத்தில் ஆலிம்சா படிப்பை ப‌டிக்க மதரஸாவில் சேர்த்து விட்டார். அங்கு சில மாதம் ஓதி விட்டு அதன் பின்னர் கோவை, அத்திக்கடை ஆகிய‌ ஊர்களிலும் ஓதி விட்டு பின்னர் கடையநல்லூர் அன்சாரி மதரஸாவில் சேந்து படிச்சார். அப்பறம் தான் ஜலீல் மதனி வழியாக உன் சகலை சைபுல்லாவிற்கு தவ்ஹீது சிந்தனை ஏற்படுகிறது.

அதன் பிறகு 1985ல் கமாலுதீன் மதனி மூலமாக பிஜேவுடன் ஜலீல் மதனிக்கு தொடர்பு கெடச்சது. பின்னர் கடையநல்லூரை சேர்ந்த‌ தவ்ஹீது சிந்தனை உடைய இந்திசா காஜா, மஞ்சி சபருல்லா, மேத்தன் சபருல்லாசாரு,பெருந்தரவன் அப்துல்காதர், யூசுப் வாத்தியார், காசிம் வாத்தியார் ஆகிய நபர்கள் சேர்ந்து ஜலீல் மதனி தலைமையில் பிஜேவைக் கூட்டி வந்து புது தெருவில் கூட்டம் நடத்தினார்கள்.. அந்த கூட்டத்தில் பெரிய‌ தகராறு ஆகிப்போய் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர், நீங்க பேசுங்க நான் பார்த்துக்கிறேன்னு சொல்லி காவல் இருந்தார். இது உண்மையா இல்லையா?

ஆனா உன் சகலை சைபுல்லா இப்ப‌ சொல்லுதாரு, நான் தான் பிஜேவைக்கூட்டி வந்து கூட்டம் போட்டேன்னு,இப்ப சொல்லு, இந்தப் பச்சப்பொய்யை ஏன் சொன்னீகன்னு, உன் சகலைக்கு உன்னால் கடிதம் எழுதி கேக்க முடியுமா? முதல்ல உன் சகலைக்கு கடிதம் எழுதுய்யா, பின்ன பிஜேக்கு எழுதலாம்.

கடையநல்லூரில் தவ்ஹீதை சொல்லியது ஜலீல் மதனிதான்னு சின்னப்புள்ளைக்கு கூடத் தெரியும். அதுமட்டுமில்லாம‌ ஜலீல்மத‌னியை கடையநல்லூர் மக்கள் அவர் மந்திரி மஜீது அவர்களின் மருமகன் என்பதாலும் அவரை யாரும் எதிர்க்கவில்லை. அவரின் தவ்ஹீது கொள்கைக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். மேலும் எல்லாரையும் அரவனைச்சி கொண்டு தவ்ஹீது கொள்கையில் உறுதியாக நடக்க கூடியவர் ஜலீல் மதனி. ஆனால் அவர் செஞ்ச தியாகங்களையெல்லாம் நான் தான் செஞ்சேன்னு கதையளந்து ஒரு பள்ளிவாசல் இடத்திற்காக தவ்ஹீது கொள்கையை தூக்கிப்போட்டு விட்டு சந்தியிலே நிற்பவர் தான் உன் சகலை சைபுல்லா.

கடையநல்லூரில் பிஜேவின் முதல் கூட்டத்திற்கு பிறகு தவ்ஹீதுவாதிகளின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியது. அதன் பிறகு எங்கு தொழுகைக்கு போனாலும் பிரச்சனை ஏற்படுகிறது. நமக்கென்று ஓர் இடம் வேண்டும் என்று கடையநல்லூர் தவ்ஹீது மக்கள் விரும்பியதால், ஜம்மியத்துல் தவத்துல் இஸ்லாம் என்ற அமைப்பின் மூலம் ஒரு நூலகத்தை தொடங்கி அதில் தனியாக தொழுகை நடந்த‌து. அப்பறம், தவ்ஹீதுக்காக‌ ஒரு பள்ளிவாசல் இடம் வாங்குவதற்கு முடிவுசெஞ்சி அல் ஜன்னத், புரட்சி மின்னல் ஆகிய மாத இதழ்களில் விளம்பரம் செய்தார்கள். இதில் கட்டிட நிர்வாக கமிட்டி தலைவராக ரஹ்மத்துல்லா இம்தாதி, செயலாளர் ஜலீல் மதனி ஆகியோர் செயல்படுவார்கள் என இருந்தது. இதில்கூட உன் சகலை சைபுல்லாவின் பெயர் இல்லையே?

ஆனா உன் சக‌லை எழுதிய கடிதத்தில், நான் தான் பள்ளிக்காக விளம்பரம் செய்து காசு வசூல் செய்தேன் என‌ பொய் சொல்லுதார்.

அதன் பிறகு ஜலீல்மதனி அஞ்சரை லட்சம் ரூவாய் பணம் வசூல் செய்து, அதில் ஜலீல் மதனி பெயருக்கு பள்ளிவாசலுக்கு இடம் வாங்கப்பட்டது. 1995 முதல் கலந்தர் சேக்உதுமான் தலைமையில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி செயல்படுகிறது. அதன் பின்னர் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கடையநல்லூரில் முதன் முதலாக மேத்தன் சபருல்லாசாரு ஏற்பாடு செய்கிறார். அதில் கூட உன் சக்லை சைபுல்லா இல்லையே! ஜலீல் மதனிதானே நடத்தினார்.

இந்த காலத்துல‌ உன் சகலை சைபுல்லா எங்க இருந்தார் தெரியுமா ? நான் சொல்லவா? அந்த நேரத்தில் அவர் வெளியூரில் மதரஸாவில் ஓதிக்கிட்டு இருந்தார். அப்பறம் 1982 முதல் 1986 வரை கடையநல்லூர் அன்ஸாரி மதரஸாவில் ஓதி பைஜி பட்டம் வாங்கினார். பின்னர் ரம்சானில் தவ்ஹீதுக்கு எதிரான கொள்கை உடைய அன்வர் பள்ளியில் தராவியா தொழுகை நடத்தினார். அப்பறம் 1987ல் நாகர்கோவிலில் நஜாத் மதரஸா ஆரம்பித்தார்கள். அதில் ஜலீல்மதனி பரிந்துரையில் ஆசிரியராக சேர்ந்தார் உன் சகலை. 1987-93 வரை நாகர்கோவிலில் இருந்தார். 1993-2000 வரை திருச்சியில் தவ்ஹீது பள்ளியில் இமாமாக வேலைசெய்தார். 2001‍முதல் 2010 வரை கடையநல்லூரில் இஸ்லாமிய கல்லூரியில் முதல்வராக இருந்தார்.

இந்த நேரத்தில் த.மு.மு.க, அனைத்து தவ்ஹீது ஜமாத் கூட்டமைப்பு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்றவற்றில் மாநில பொறுப்புகளை வகித்துகொண்டு இருந்தார். இந்நிலையில் ஜலீல் மதனி அவர்களின் மரணத்தை பயன்படுத்தி முபாரக் பள்ளியை ஆக்கிரமித்து தன்னை ஒரு தியாகி போல் மக்களிடத்தில் சொல்லி வருகிறார் உன் சகலை சைபுல்லா.

ஆக முபாரக் பள்ளிக்கும் உன் சகலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கிறதை, இதை விட உனக்கு என்ன ஆதாரம் வச்சி வெளக்கனும்? உன் சகலை இவ்ளோ பெரிய பொய்யை பரப்பி வர்றாரு, அவரு சொல்லியிருக்கிற எல்லா விசயமும் முழு பொய்யின்னு உனக்கு தெரியுமா? தெரியாதா? என்னை விட உனக்குத் தான் நல்லா தெரியும். ஆனா நீ அதையெல்லாம் கண்டுக்காம பிஜே பள்ளிவாசலுக்காக கொள்கையை விடுதாருன்னு சொல்லுதியே! இந்த கடிதத்த நான் மக்கள் மன்றத்தில் வைத்தால் உன் முகமூடியும் உன் சகலை முகமூடியும் கிழிந்து உங்கள் பிராடு தனங்கள் அம்பலமாகுமே! அதுக்கு என்ன பதில் சொல்லப்போறே! உன் சகலை சைபுல்லா தான் கடயநல்லூருக்கே தவ்ஹீதை கொண்டு வந்தாருன்னு சொல்லும் நீ, கொஞ்சம் அசந்தா பிஜேவையே என் சகலை சைபுல்லா தான் தவ்ஹீதுக்கு கொண்டு வந்தாருன்னு சொன்னாலும் சொல்லுவ!

உன் சகலையின் அடுத்த பிராடு என்ன தெரியுமா? பள்ளிவாசல் கட்ட பணம் வசூல் செய்து, அதில உன் சகலை நர்சரி ஸ்கூல் நடத்துகிறாரா இல்லையா? கடையநல்லூர் மக்களிடம் பணம் வசூல் பண்ணி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெயரில் பதிவு செய்ய மாட்டேங்கிறார் உன் சகலை. நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெயரில் பொது மக்களிடம் பணம் வசூல் செய்யவில்லை என்று சொல்லுதார். பணம் வசூல் செய்வதற்காக நகர தலைவர், நகர செயலாளர் மாவட்ட துணைத்தலைவர், மாநில மேலாண்மை குழு உறுப்பினர்கள் என‌ இவர்கள் எல்லாம் தான் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தார்கள். பணம் கொடுத்த மக்கள் இவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்காரர்கள் என்று பாத்து தான் பணம் கொடுத்தார்களே தவிர உன் சகலைக்காக அல்ல!. இப்ப உன் சகலை தவ்ஹீது ஜமாத்துக்கு மக்கள் பணம் தரல, எங்களுக்கு தான் பணம் தந்தார்கள்னு சொல்லுதாரே! இது தான் உங்க தவ்ஹீதின் லட்சனமா?

தவ்ஹீத் ஜமாத் பேரச்சொல்லி ஊருக்கு ஊர் வசூல் பண்ணிட்டு இப்ப அப்படியே ரெக்கார்ட மாத்தி ஓட்டுதியலே! குவைத்துல முஹிபுல்லா வசூல் பண்ணி தந்த பணம் 8 லட்ச ரூபாய் தவ்ஹித் ஜமாத் பெயரை சொல்லி வசூல் பண்ணியதா? அல்ல‌து உன் சகலை சைபுல்லா பெயர் சொல்லி வசூல் பண்ணியதா? நான் உனக்கு சவால் உடுதேன். இப்ப வா! இங்க வந்து சைபுல்லா பள்ளி கட்ட போறார், காசு தாங்கன்னு கேளு, ஒரு பத்து ரூபா உன்னால வசூல் பண்ண முடியுமா? இங்க வேணாம் எல்லா வெளிநாடுகளுக்கும் போயி இது தவ்ஹீத் ஜமாத் வசூல் இல்ல, சைபுல்லாவின் தனிப்பட்ட வசூல்னு சொல்லி உன்னால ஒத்த பைசா வாங்க முடியுமா?

தவ்ஹீத் ஜமாத் பேர பயன்படுத்தலைன்னு சொல்தியே! உன்ன நினைக்கும் போது ரசூலுல்லா, ஜகாத் வசூல் பண்ண அனுப்பிய‌ ஆளின் ஹதீஸ் ஞாபகம் வருகிறது. இவரு அவங்க அப்பன் வீட்டில உக்காந்து இருந்தா இது கெடச்சி இருக்குமா? அவங்க அம்மா வீட்டுல உக்கார்ந்து இருந்தா இது கெடச்சி இருக்குமான்னு கேட்டாகலே! அதுக்கு நீங்க‌ சரியா பொருந்தி போறீகளப்பா!

தவ்ஹீத் ஜமாத் பேர‌ சொல்லி வசூல் பண்ணிட்டு, இப்ப என்னயா கடையநல்லூர் சகோதரர்களுன்னு வசூல் பண்ணினோம்னு சொல்லுத? இது அயோக்கியத் தனம் இல்லையா? பிராடு இல்லையா? ஒப்பதங்களை மீறும் செயல் இல்லையா? ஒப்பந்தங்களும் வாக்குறுதிகளும் பிஜே பாக்க வேனாம். பெரிய தெரய கட்டி நீயும் உன் சகலையும் பாருங்க! தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமைக்கு பதிவு செய்ய சொன்னால் கூட உன் வாதம் சரியாக இருக்கலாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடயநல்லூர் கிளைக்காக என்று பதிவு செய்தால் அது கடையநல்லூர் மக்களுக்கு உரிய்தாகத்தானே இருக்கும்.? உன் சகலை அமைக்கப்போவதாக சொல்லும் முபாரக் நலச்சங்கத்தில் வரதட்சனை திரும்னத்தில் கலந்து கொள்வோர், ஆடம்பர திருமணத்தில் கலந்து கொள்வோர் கொள்கையில் சமரசம் செய்வோர் எல்லாம் இருப்பார்கள். ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடயநல்லூர் கிளை என்று பதிவு செய்தால் கொள்கையில் உறுதியானவர்கள் மட்டும் அதில் அங்கம் வகிப்பார்கள். இரண்டில் எது நல்லது என்று பீஜே அழகாக கேட்டாரே அதன் பின்னரும் இப்படி எழுதுகிறாயே?

சரிப்பா! அப்படியே நீ சொல்ற லாஜிக் பிரகாரம் பாத்தாலும் தவ்ஹீது பள்ளி கட்ட போறோம்னு வசூல் பண்ணி அதை தவ்ஹீது சகோதரன் பேர்ல பதிவு பண்ணாமா ஒரு தனிநபர் பேர்ல பதிவு பண்ணி இருக்கியே! ஊர்ல அவர் மட்டும் தான் தவ்ஹீத்வாதியா? அப்ப காசு கொடுத்த மத்தவனெல்லாம் விரல் சூப்பிக்கிட்டுத்தான் போகனுமா?

என்னய்யா நீ நியாயம் பேசுற! எவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்த செஞ்சிட்டு ஒன்னுமே தெரியாத பச்ச புள்ளைமாதிரி பேசுக்கிட்டு இருக்க! நீ மட்டும் தான் புத்திசாலி மத்தவனெல்லாம் கேனயன் என்பது தான் உன் கணிப்போ!

வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைக்கும் கடையநல்லூர் தவ்ஹீத் வாதிகள் ஊரில் தவ்ஹீத் பணிகளுக்காகவும் தவ்ஹீதின் அனைத்து பள்ளிகளுக்காகவும் பணத்தை சைபுல்லாவுகு அனுப்பினார்களா இல்லையா? அந்தப் பணத்தை மர்யம் பள்ளிக்கோ மற்ற பள்ளிக்கோ கொடுக்காமல் உன் சகலை சுருட்டிக் கொண்டாரா? இல்லையா?இந்தப் பணம் முபாரக் பள்ளீக்குத் தாப் அனுப்பபட்டது என்று உன் ச்கலை சொன்னாரா இல்லையா? அந்த நேரத்தில் சபையில் இருந்த ஜித்தா சகோதரர் நாங்கள் அனைத்து பள்ளிகளுக்காகவும் தான் பணம் அனுப்பினோம். என்று உண்மையை உடைத்தாரே அது அந்த சீடியில் உள்ளதே அதைப் பற்றி உன் சக்லையிடம் கேட்டாயா?

முபாரக் வழக்குச் செலவை உன் சகலயை செளியிடச் சொல். அதில் உள்ள தில்லுமுல்லை நான் சொல்கிறேன். முபாரக் பள்ளி என்பது உங்களுக்கு பணம் காய்ச்சி மரம். வம்புவழக்கு என்று வசூல் செய்து சாப்பிட அது அட்சயபாத்திரம். அதற்காகத் தான் மாநில தனிக்கைகுழு பதவி போனாலும் இதை விடக் கூடாது என்று உன் சகலை நினைக்கிறார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

ஒன்னா இருந்த எங்கள‌ பிஜே வந்து கிளை கிளையாக பிரித்தார்னு சொல்லுதியே!

கிளைகளைப் பிரிக்க வேண்டும் என்ற முடிவு பீஜே மட்டும் எடுத்ததா? அல்லது கடையநல்லூர் பொதுக்குழுவில் சொல்லப்பட்டு நீயும் உன் சகலையும் ஒப்புக் கொண்ட விஷயமா? ஏன் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறாய்?

ஒற்றுமையை பீஜே குலைத்தார் என்கிறாய். அப்ப ஒற்றுமை தான் நோக்கமா? அதனால தான் உன் சகலை ஆடம்பர கல்யாணத்துல கலந்துகிட்டாரா? அதுனால தான் அவர் மகள் போன் நம்பர அன்னிய ஆனுக்கு கொடுத்து கடலை போடச் சொன்னாரா? நபி வழியைப் புறக்கணித்து விட்டு வர்ர ஒற்றுமை தான் சரின்னு சொல்லுதியா? உங்ககிட்டயிருந்து அந்த கிளைகளைப் பிரிக்கலைன்னா நீங்க கழிசடை ஆன மாதிரி அவங்களையும் கழிசடை ஆக்கி இருப்பீங்க! அதனால தானப்பா பிரிச்சாரு.

இப்ப சக்கரை வியாதி வருதுன்னு வச்சிக்கிவோம். விரலை வெட்டி எடுக்காட்டி உயிருக்கே ஆபத்துன்னு டாக்டர் சொல்லுதாரு. அந்த விரல வெட்டி எடுப்பமா? அல்லது உடலோடு ஒற்றுமையாய் இருந்த விரலை டாக்டர் பிரிச்சிட்டார்னு சொல்வமா? அது மாதிரி தான் இதுவும். நீங்களெல்லாம் வியாதி புடிச்ச விரல் மாதிரி. உங்களை அவங்ககிட்டயிருந்து பிரிக்கலைன்னா, நீங்க கெட்டது மாதிரி அவங்களையும் கெடுத்துடுவீக!

புகார் பட்டியலைத் தரமுடியுமா எனக்கேட்டு இப்போது சவடால் விடும் நீ பொதுக்குழுவில் இது குறித்து ஏன் கேள்வி எழுப்பல?

கேள்வி எழுப்பினா பல வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும் என்பதாலா? மகள் கடலை போட்ட விவகாரம்,அதை விட முக்கியமாக ரிஸ்வான் என்ற சிறுவனை பலவந்தப்படுத்தி ஹோமோ செக்ஸூக்கு முயன்றது,அவரின் தந்தை கெஞ்சிக் கேட்டதால் அந்தச் சிறுவனின் எதிர்காலம் கருதி வெளியிடாதது என ஏகப்பட்ட விசய‌ங்கள் சபையேறினால் சாக்கடை ஆகிவிடும் என்பதால் தான் கேட்கவில்லையா? சொல்லுங்க சைபின் சகலையே!

பொதுக்குழுவில் 2 ஆப்சன் வைத்தாங்களாம். இப்போது அதை மீறுகிறார்களாம். ஆமாம் ரெண்டு ஆப்சன் வச்சது உண்மை தான். ஒன்னு காசையெல்லாம் திருப்பிக் குடுக்கனும். அதுக்கு நீங்க எப்பவுமே தயாரில்லை. சரி இரண்டாவது ஆப்சன் என்ன? டிரஸ்டாக பதிவு செய்தால் வசூல் செய்த ஒவ்வொரு நபரின் பெய‌ரையும் மட்டுமின்றி கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் அதிலே சேர்க்க வேண்டும். நீங்கள் அப்படியா செய்தீர்கள்?

பசீர் மவ்லவி என்ற ஒரு தனி நபர் பெயரில் தான் பதிவு செய்து இருக்கிறீர்கள். கடையநல்லூர் பள்ளிவாசல் சங்கம் என பதிவு செய்தாலும் அதிலே 25 பேர் 50 சேர்ந்தாலும் அதில் காசு கொடுத்த தவ்ஹீத் ஜமாத்காரன் ஒவ்வொருவரின் பெயரையும் சேர்க்க முடியுமா உங்களால்? 25 பேர் பெயரில் பதிவு செய்தால் அதிலே உங்க சகலை, நாத்தனார், கொளுந்தியா என தான் சேர்ப்பீர்கள்? இது தான் பொதுவாக்கும் லட்சனமா? அதிலே வரும் அத்தனை பேரும் கழிசடைகளாகத்தானே இருப்பார்கள். அவர்கள் வழி தவறினால் அங்கிருந்து தவ்ஹீத் சகோதரர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். இதைத் தான் நீங்க எதிர்பார்க்கிறீர்களா? என்னப்பா இது கேடுகெட்ட அயோக்கியத்தனம் இல்லையா? இதைச் சொல்லத்தானா மாங்குமாங்குன்னு 8 பக்கத்துக்கு கடிதம் எழுதி இருக்க?

TNTJ பெயரில் பதிவு செய்தால் மோசடி இல்லையா எனக் கேட்கும் உத்தமரே!

TNTJ என்பது என்ன‌ தனி நபர் சொத்தா? அது பொதுச்சொத்து இல்லையா? மூன்று வருடம் தானே ஒரு நிர்வாகியின் பதவிக்காலம் என்பதை வசதியாக இங்கே மறைத்து விட்டீர்களே! இது நியாயமா? பொதுச்சொத்தை அனைவருக்கும் பொதுவாக்குதலுக்கு பெயர் மோசடி என்றால் தனி நபர் பெயரில் பெயரில் பதிவு செய்வது அயோக்கியத்தனம் இல்லையா?

கடயநல்லூர் கிளையின் துணைத்தலைவரும், துணைச்செயலாளரும் கல்யாண வீட்டில் விருந்து சாப்பிட்டதாக சொல்லும் நீ, அதை ஏன் முன்னமே எடுத்து வைக்கவில்லை. பொதுச்செயலாளராக இருந்த பாக்கரையே தூக்கி வீசிய இயக்கம், சைபுல்லா மீது க

துபையில் (29.04.2011) அல்குர்ஆன் அழைக்கிறது நிகழ்ச்சி!


துபையில் (29.04.2011) அல்குர்ஆன் அழைக்கிறது நிகழ்ச்சி!

விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு மார்க்கம் மற்றும் சமூகப் பணியாற்றும் நம்மின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டலம் வரும் வெள்ளிக் கிழமை (29.04.2011) மாற்று மத சகோதரர்களுக்கு ஏக இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆனை வழங்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் நம் மாற்று மத சகோதரர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறது நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

சாய்பாபாவுக்கு இரங்கல்; சன்மார்க்க சருகலில் மமக!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு அவசியம் என்ற அடிப்படையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மமகவை ஆதரித்து நாம் நிறைய ஆக்கங்கள் வரைந்தோம். அரசியலில் ஏற்கனவே இருக்கும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்து வேறுபட்டு இவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் அரசியல் நடத்துவார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் வாக்கு பதிவு முடிந்த மாத்திரமே பக்கா அரசியல்வாதியாக மாறிவிட்டார் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ். இன்று மரணத்தை தழுவிய கடவுள்[?] சாய்பாபாவின் மரணத்தையொட்டி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார் பேராசிரியர்.அதை கீழே படியுங்கள்;

சாய்பாபா மறைவு-மனித நேய மக்கள் கட்சி அனுதாபம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

இந்து சமய ஆன்மீக குருவான சாய்பாபாவின் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.


இந்து சமய ஆன்மீக வாதியும் சமூக சேவகருமான புட்டபர்த்தி சாய்பாபாவின் மறைவால் வாடும் அவரது பக்தர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்மீக வாதியாக மட்டுமல்லாது நாடறிந்த சமூக சேவகருமாக சாய்பாபா திகழ்ந்தார். ,அவரது நிறுவனங்கள் வாயிலாக கல்வியையும், மருத்துவ உதவியையும் எண்ணற்றோருக்கு வழங்கி பெரும் சேவையாற்றினார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தை நீக்க அவர் பெரும் முயற்சி மேற்கொண்டார் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூர குழாய்கள் அமைத்து 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து வைத்ததோடு அதற்காக நிதியுதவி வழங்க முன்வந்த மத்திய அரசின் நிதியுதவியையும் ஏற்க மறுத்தார்.

கல்வி உதவிகள், மருத்துவ உதவிகள் மூலம் ஏராளமான மக்களுக்கு தொண்டாற்றிய சாய்பாபாவின் மறைவினால் வாடும் அவரது பக்தர்களுக்கும்ஆதரவாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேற்கண்டவாறு அறிக்கையில் கூறியுள்ளார் ஜவாஹிருல்லாஹ்.

ஒரு முஸ்லிம் மரணித்தால் அவனுக்காக துஆ செய்வதும், கணவன் நீங்கலாக யாருக்காவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என்பதும் இஸ்லாம் நமக்கு கட்டிய வழிமுறையாகும். அதே நேரத்தில் ஒரு இணைவைப்பாளர் மரணித்து விட்டால் அவருக்காக நாம் பிரார்த்திக்கவோ, வேறு காரியங்களை ஆற்றுவதற்கோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆனால் சாய்பாபா தன்னை கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும் காட்டிக் கொண்டவர். சில அற்புதங்களை[?] செய்து காட்டி தன்னை வழிபடும் கூட்டத்தை உருவாக்கியவர். சாய்பாபாவின் பக்தர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதன் மூலம் சாய்பாபாவை கடவுள் என நம்பும் அவரது பக்தர்களின் சித்தாந்தத்தை அங்கீகரிக்கிறது மமக. மேலும் சாய்பாபா சமூக சேவகர் என்று புகழாரம் சூட்டுகிறது மமக. அப்படியே இருக்கட்டும் சாய்பாபாவின் சமூக சேவை மறுமையில் அவருக்கு பயனளிக்கும் என்கிறதா மமக? இதோ எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்;

ذَلِكَ هُدَى اللّهِ يَهْدِي بِهِ مَن يَشَاء مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُواْ لَحَبِطَ عَنْهُم مَّا كَانُواْ يَعْمَلُونَ

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.[6:88 ]

இறைமறை இவ்வாறு கூற, அதற்கு நேர் மாற்றமாக புகழ்மாலை சூட்ட மமகவுக்கு ரொம்பவே துணிச்சல். முஸ்லிம் கட்சி, சமுதாய முன்னேற்றம் என்ற பெயரில் மக்களை தவறான வழிக்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று மமகவுக்கு குறிப்பாக இந்த அறிக்கை வெளியிட்ட ஜவாஹிருல்லாஹ்விற்கு அறிவுறுத்துகிறோம்.

-அப்துல்முஹைமீன்.


Tuesday, April 26, 2011

இளையான்குடி நகர நிர்வாக சீரமைப்புக் கூட்டம்


இளையான்குடி நகர நிர்வாக சீரமைப்புக் கூட்டம்


25.4.11. அன்று இளையான்குடி நகர நிர்வாக சீரமைப்புக் கூட்டம் இளையான்குடியில் நடை பெற்றது! மாநில செயலாளர் செங்கிஸ் கான் தலைமையில் நடை பெற்றது ! இளையான்குடி நகர்ப் பொறுப்பாளர் துருக்கி.ரபீக் ராஜா முன்னிலையில் கீழ்க்கண்டவர்கள் நிர்வாகத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

தலைவர்- அப்துல் கரீம்
துணை தலைவர்- ஷெரிப்
செயலாளர்- ரபீக் [பாவா]
துணை செயலர் - அஹ்மத் சிராஜ்
பொருளாளர்- கே.இப்ராஹிம்ஷா

இளையான்குடியில் வரதட்சணை ஒழிப்பு தெருமுனைக் கூட்டம்.




24.4.11 மாலை இளையான்குடி சம்சு தெரு முனையில் இ.த.ஜ. சார்பில் தெரு முனைக் கூட்டம் நடை பெற்றது! இதில் மாநிலப் பேச்சாளர் மவ்லவி.யூசுப் மிஸ்பாகி இஸ்லாம் கூறும் ஏகத்துவம் எனும் தலைப்பிலும் மாநில செயலாளர் செங்கிஸ் கான் வரதட்சணை ஒரு வன்கொடுமை எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர். அடாத மழையிலும் விடாது நடைபெற்ற இந்த உரை நிகழ்ச்சியை ஏராளமானோர் வீடுகளிலும் திண்ணைகளிலும் இருந்த படியே கேட்டு பயன் பெற்றனர்.

இளையான்குடியில் இ.த.ஜ. நடத்திய முகாமில் 40 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை!
















இளையான்குடியில் இ.த.ஜ. நடத்திய முகாமில்
40 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி செம்பிறை மருத்துவ மனையில் கடந்த ஞாயிறு அன்று காலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி நகர கிளையும் மற்றும் அர்விந்த் கண் மருத்துவ மனையும் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாமும் நடை பற்றது!

இதில் இளையான்குடி ,புதூர் , சோதுகுடி, சாத்தானி, சாலையூர் மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 40 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப் பட்டு மதுரை அழைத்து செல்லப் பட்டனர்.இவர்கள் அனைவருக்கும் போக்குவரத்து உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு கண் புரை அறுவை சிகிச்சையும் இலவசமாக வழங்கப்பட்டது!