Monday, April 18, 2011

நன்றி நவில வந்த த.மு.மு.க.நிர்வாகிகள்.


நன்றி நவில வந்த த.மு.மு.க.நிர்வாகிகள்.


கடந்த 16.4.11 INTJ தலைமையகத்திற்கு வந்த மனித நேய மக்கள் கட்சியின் திருவல்லிக்கேணி வேட்பாளர் மற்றும் மாநில் நிர்வாகிகள் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகளை நேரில் சந்தித்து தேர்தலில் களப்பணி ஆற்றியதற்காக தங்களது நன்றியை தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் பல அமைப்புகள் எங்களை ஆதரித்தாலும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தொண்டர்களும் மகளிரும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து களப்பணி ஆற்றியதையும் , பூத் ஏஜெண்டுகளாக பணியாற்றியதையும் நன்றியோடு நினைவு கூர்ந்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் நடத்திய பிரமாண்டமான அந்தப் பொதுக்கூட்டமும் , பி.ஜே.வாதங்களை தவிடு பொடியாக்கி சமுதாய ஒற்றுமைக்கும் , கடந்த தேர்தலைப் போல் வன்முறையின் மூலம் மக்களை வாக்கு சாவடிக்கு வார விடாமல் தடுக்கும் சதிகாரர்களின் திட்டமும் இந்தக் கூட்டத்தின் மூலம் தவ்டு பொடியானது! என கூறினர்.

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

0 comments:

Post a Comment