Wednesday, June 30, 2010

மறுமையை நம்பாத கலைஞரும் ! பெருமையடிக்கும் பீ.ஜே.அன் கோவும்



கலைஞர் செம்மொழி மாநாட்டின் இறுதி உரையின் போது குறிப்பிட்ட ஒரு விஷயம் நம்மை கவர்ந்தது. ஏனெனில் ஏகத்துவம் பேசும் அண்ணனிடம் இல்லாத பண்பு, கடவுள் இல்லை எனும் கலைஞரிடம் கண்டபோது, கலைஞரை விட இயக்க வெறி பிடித்து, ஏகத்துவ நெறி மறந்த இவர்களின் சமுதாய ஒற்றுமை அழைப்பு உண்மையிலேயே சந்தர்ப்பவாத அழைப்பு என்பதும், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளத்தான் தவ்ஹீத் முகமூடி என்பதும் புரிந்தது.
“செம்மொழி மாநாட்டின் போது திமுக கொடிகளை எங்கும் நான் காணக் கூடாது! ஏனெனில் இது ஒட்டு மொத்த தமிழினத்தின் நிகழ்ச்சி, இதில் கழகத்தின் இரு வண்ணக் கொடியை முன்னிறுத்தி, செம்மொழி மாநாட்டுக்கு வேறு வண்ணம் பூசி விடக் கூடாது! என நான் விடுத்தத கோரிக்கையை ஏற்று திமுக கொடிகளை தவிர்த்தமைக்கு கழக உடன் பிறப்புகளுக்கு நன்றி !” கலைஞர் உரையின் சாராம்சம் இதுதான்!
ஆனால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்குமான உரிமை மீட்பு போராட்டத்தில் கருத்து வேறுபாடை மறந்து களமிறங்க வேண்டும் ! என இவர்கள் விடுத்த அழைப்பை கேட்டு “நாங்கள் எங்கள் கொடியோடு வரலாமா? எனக்கேட்ட வேலூர் மாவட்ட சகோதரர் ஒருவரிடம், கண்டிப்பாக வரக் கூடாது.” என உங்கள் பொதுச் செயலாளரே கூறியுள்ளார்.அப்படியானால் எல்லோரும் வர வேண்டும் என அழைப்பு விடுக்கும் நீங்கள். கோரிக்கையை வெல்வதற்காக உங்கள் கொடியையும் தவிர்க்களாமே! மறுமையை நம்பாத கலைஞருக்கு இருக்கும் மனப்பான்மை, உங்களுக்கு ஏன் இல்லை? சிந்தியுங்கள் மற்றவர்கள் ஏன் தங்கள் கொடிகளோடு வரக்கூடாது ? உங்கள் கொடியின் கீழ் ஒட்டுமொத்த சமுதாயமும் ஏன் வரவேண்டும் என்பதற்கு உருப்படியான ஒரு காரணம் கூற முடியுமா ? கோரிக்கையை முன் வைத்து கூடும் கூட்டத்தை உங்கள் கூட்டமாக காட்டி தேர்தல் வரும் நேரத்தில் பேசுகின்ற பேரத்தை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்.

Tuesday, June 29, 2010

மண்ணடியில் திரண்ட மக்கள் கூட்டம்


பயங்கரவாத எதிர்ப்புப் பொதுக் கூட்டம் வட சென்னை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மண்ணடி, தம்புச் செட்டித் தெருவில் ஞாயிறன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க, மண்ணடி ஜாகிர் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் துவக்கமாக உரையாற்றிய மாநிலப் பேச்சாளர் மசூதா ஆலிமா, அழைப்புப் பணியின் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, ""அழைப்புப் பணியை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இருந்தே துவங்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
அடுத்து பேசிய மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது, கல்வியின் அவசியம் குறித்து பேசினார். ""அல்லாஹ் திருமறையில் கூறும் கல்வி, நாம் விளங்கி வைத்துள்ள உலகக் கல்விதான். பூமி விரிக்கப்பட்டிருப்பதையும், வானம் உயர்த்தப்பட்டுள்ளதையும், மலைகள் நாட்டப்பட்டிருப்பதையும் இறைவன் திருமறையில் விவரிப்பதை எடுத்துரைத்தார். 
அவரைத் தொடர்ந்து பேசிய மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் ஐஎன்டிஜே கடந்து வந்த பாதை எனும் தலைப்பில் பேசினார். கடந்த 18 மாத காலங்களில் ஐஎன்டிஜே ஆற்றிய பணிகளையும், சமுதாய ஒற்றுமைக்கு இன்று அழைப்பு விடுபவர்களின் சந்தர்ப்பவாதத்தையும் எடுத்துரைத்தார். மேலும் சமுதாய ஒற்றுமைக்கு இன்று அனைவருக்கும் விடுக்கும் அழைப்பு உண்மையானால், அனைவரும் தங்கள் கொடியோடு வரலாம் என அழைக்கட்டும். இதுபோல் பொதுப் பிரச்சினையில் மற்றவர்கள் அழைத்தால் நாங்கள் வருவோம் என கூறட்டும் என இடித்துரைத்தார்.
இறுதியாக பேசிய தலைவர் எஸ்.எம். பாக்கர், ""உலக அளவிலான பயங்கரவாதிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வரலாற்றை எடுத்துரைத்தார். உலக முஸ்லிம்களுக்கு ஒன்றுபட்ட ஒரு தலைமையை தர இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறி உரையை நிறைவு செய்தார்.
தீர்மானங்களை புளியந்தோப்பு பீர் முகம்மது வாசிக்க வண்ணை பாஷா நன்றியுரை நிகழ்த்திய இக்கூட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக் கூட்டங்களிலும், செயற்குழு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிறமத சகோதரர்கள் கலிமாச் சொல்லி இஸ்லாதை ஏற்பது வழக்கமாகிவிட்ட நிலையில், மண்ணடி கூட்டத்திலும் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற அந்த இளைஞர் உமர் என பெயரிடப்பட்டார். அல்ஹம்து லில்லாஹ்!
========
கல்வி உதவிப் பணியில் ஐஎன்டிஜே
மத்திய அரசின் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி (ஸ்காலர்ஷிப்) பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் பணியை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது. சென்னையில் ஐஎன்டிஜேவின் திருவல்லிக்கேணி, வேளச்சேரி, பெரம்பூர் வீனஸ், சேப்பாக்கம் ஆகிய கிளைகளை சேர்ந்த நிர்வாகிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். (படத்தில் பெரம்பூர் வீனஸ் கிளை நிர்வாகிகள் விண்ணப் படிவங்களை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.)

கும்பகோணம் கூட்டத்தை காட்டி ஜேஜேவிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்ட பொய்ஜே !


கும்பகோணம் கூட்டத்தை காட்டி ஜெயிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்ட பொய்ஜே விஷயம் வெளிவந்ததும் தனக்கே உரிய பாணியில் பழியை சித்திக், முனீர், மீது போட்டுள்ளார். சரி உங்கள் வாதப்படி சித்திக், முனீர், A.S அலாவுடீன்  செய்திருந்தாலும் உங்கள் கட்டளைப்படித்தானே செய்தார்கள். உங்கள் கவனத்திற்கு வராமல் ஒரு துரும்பு கூட ஜமாஅத்தில் அசையாது எனும்போது, ஐம்பது லட்சம் ரூபாயில் பெரும்பகுதிக்கு உங்கள் பிரச்சார செலவு, கார் விமானம் என பறந்த செலவு பில், உங்கள் மைத்துனர்களின் நோட்டிஸ், போஸ்டர், பில், தம்பியின் பொறுப்பில் உள்ள உணர்வில் வேட்பாளர் விளம்பரம் போட்ட பில், அத்தனையும் உங்களுக்கு தெரியாமலா நடந்தது. பரிசுத்தமான உங்கள் இயக்கத்தின் கொடி, சீருடையெல்லாம் எப்படி வந்தது? பாவக்கரை படிந்த ஜெவின் ஊழல் பணத்தில் தானே ? இது உங்களுக்கு தெரியாதா ? கடந்த தேர்தலில் லட்சங்களில் புரண்ட நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் தயாநிதியும், ரித்திசும் தந்த நிதியான கோடிகளில் புரள்கின்கிறீர்கள். உங்கள் வேலைக்கு காசு ஏற்கனவே கொடுத்து விட்ட காரணத்தால் தான் எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் மேட்டரில் நீங்கள் காவல் நிலையத்தில் உட்கார வைக்கப்பட்ட போதுபோன் எடுக்க மறுத்தவிட்டதாக புலம்பினீர்கள். தற்போது மாநாட்டிற்கு பிறகு தான் உங்கள் புதிய ரேட் தெரியவரும் ! இதெல்லாம் அறியாத மக்களிடம் உங்களுக்காகதான் போராடுகிறோம் வாருங்கள் என அழைக்கின்றீர்கள்! அவர்களும் நம்பி வருகின்றனர். அது எப்படி உங்களை காட்டி விலை பேச மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே மக்களைகாட்டி விலை பேசுகின்றீர்கள் ? அது சரி தக்லீது கூடாது என்று கூறியே ஒரு கூட்டத்தை தக்லீது செய்யவைத்த தலைமை புரோகிதரல்லவா நீங்கள் !

Friday, June 25, 2010

முஸ்லீம்களுக்கு அரசின் இலவச கல்வி உதவி-தவற விடாதீர்!

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .


இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது

1 - 10 வகுப்பு வரை

தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
* ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது

பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
* சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல் நகல் (xerox)
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
புதுப்பிக்கும் மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்



11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)

தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி


சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்

* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
ஏற்கனவே பயணித்த மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்



தொழிற்படிப்புகள் ( Engineering )


தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )
* IIT (சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்

* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை

* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி


சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்


மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் : http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm

ஒற்றுமை அழைப்பு உண்மையானால்!

ஒரு நாளாவது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று கூடுவோம் என விடுக்கும் அழைப்பு உளப்பூர்வமானது. உண்மையிலேயே சமுதாய அக்கறை கொண்டது என்பது உண்மையானால் நாம் சில ஆலோசனைகளை சொல்கிறோம் !
இயக்கவேறுபாடுகளை மறந்து எல்லோரும் வரவேண்டும் என விடுக்கும் அழைப்பு உண்மையானால் அவரவர் அவர்களது இயக்க கொடிகளோடு வரலாம். தங்கள் கட்சி கொடிகளோடு வரலாம் என அழைப்பு விடுங்கள் ! இட ஒதுக்கீட்டுக்காக எல்லோரையும் ஒருங்கிணைக்க களத்தில் இறங்கி அனைவரிடமும் பேசுவோம். இதுவும் நபி (ஸல்...) அவர்களின் வழிமுறை தான் ! மக்கா வெற்றியின் போது ஒவ்வொரு குலத்தவரும் தங்கள் கொடியோடு தான் ஒரு குறுகிய கணவாயை கடந்ததாக வரலாறு நமக்கு சொல்கிறது. நபி (ஸல்...) வழிமுறைப்படி மக்கா வெற்றி போல் இட ஒதுக்கீட்டையும் வெல்லலாம். மற்ற இயக்க தலைவர்கள் எல்லோரையும் மேடையில் பேச வைக்கலாம். ஒவ்வொரு வரும் தங்கள் பலத்தை நிரூபிக்க கட்டாயம் கொடிகளோடு வருவர். அனைவரின் லட்சியம் இடஒதுக்கிடு தான் என்றால் இப்போதும் காலம் கடந்து விடவில்லை. இல்லை உங்கள் பாலிஸிதான் பெரிதென்றால் மற்றவர்களை அழைக்காமல் ராமநாதபுரம் பொதுக்குழு தீர்மானத்தில் “மற்ற அனைத்து ஜமாஅத்துகளையும் புறக்கணித்து தனித்து செயல்படுவது” என்ற முடிவின்படி.
டிஎன்டிஜே வின் சுய பலத்தை காட்டுங்கள்.

Thursday, June 24, 2010

PJ vs PJ














பாக்கர் vs ராமகோபாலன்













கேட்கிறவன் கேனப்பயலா இருந்தால்....

15,000 பேரை தாங்காத தீவுத்திடலில் 15 லட்சம் பேரை கூட்டுவோம் என்பது சாத்தியமா? சவடலா ? என நாம் வைத்த கருத்து வாக்கெடுப்பிலிருந்து நமக்கு ஓர் உண்மை தெரிகிறது. நமது இணையத்தளத்தை டிஎன்டிஜே சகோதரர்கள் தான் நிறைய பார்க்கின்றார்கள் என்பது.
சாத்தியம் என்ற உங்கள் கருத்து உண்மையெனில் நாம் சவால் விடுகின்றோம் ! 50,000 சேர்களை தீவுத்திடலில் போட்டு அதில் மக்களை நிரப்பி காட்டட்டும் 10 லட்சம் வேண்டாம் 5 லட்சம் வேண்டாம். 50000 பேரை சேர்போட்டு அதில் உட்கார வைக்கட்டும் இல்லையென்றால் மார்க்கத்திற்கு மக்களை அழைப்பதற்காக கூட பொய் சொல்லக் கூடாது என்ற நிலைப்பாட்டை மறந்து, 15 லட்சம் பேர் என்று பொய் சொல்லி இம்மையில் பெறும் இட ஒதுக்கிட்டிற்காக மக்களை அழைப்பது தவறு என்பதை மக்களிடம் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளுங்கள். செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்திலேயே 60,000 பேர்தான் அமர முடியும் என்றால் தீவுத்திடலில் 15 லட்சம் பேர் என்பது “கேட்கிறவன் கேனப் பயலாயிருந்தால்.....” என்ற பழ மொழிதான் நினைவுக்கு வருகிறது.

Monday, June 21, 2010

குடும்ப கொள்ளை

செம்மொழி மாநாட்டையோட்டி தமிழகம் முழுவதும் ஒரு எஸ்.எம்.எஸ். வலம் வருகிறது.

வாழ்க ஜனநாயகம்
தந்தை - முதல்வர்
இளைய மகன் - துணை முதல்வர்
மூத்த மகன் - மத்திய மந்திரி
மகள் - நாடாளுமன்ற உறுப்பினர்
பேரன் - மத்திய மந்திரி
தமிழன் - இளிச்சவாயன்
5 நாள் செம்மொழி மாநாட்டுக்கு !
அரசின் பணம் 300 கோடி விரயம்
அதை பார்த்த நமக்கு தோன்றியது.

வாழ்க ஏகத்துவம்
தந்தைக்கு - எடிட்டிங்
மகனுக்கு - ரிக்கார்டிங்
1. மைத்துனருக்கு - பிரிண்டிங்
2. மைத்துனருக்கு - பப்ளிசிங்
தம்பிக்கு - சம்பளம் + ஏஜென்ஸி
தவ்ஹீத்வாதி - இளிச்சவாயன்
வரும் தேர்தலில் அரசியல் வாதிகளிடம்
பேரம் பேச மாநாட்டின் பெயரில்
மக்கள் பணம் விரயம் 3 க்ரோரு !
அண்ணனின் குடும்ப வியாபராம் படு ஜோரு !

தங்கள் குடும்பத்தினரை அரசிலோ, நிர்வாகங்களிலோ திணிப்பதை அதன் மூலம் பலன் பெறுவதை நல்லமனிதர்கள் யாரும் விரும்பமாட்டார்கள் ! நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு ஒரு அடிமையை உதவியாக கேட்ட பாத்திமா (ரலி) அவர்களுக்கு அடிமையை வழங்காமல் தஸ்பீஹ் கற்றுத்தந்த ஹதீஸிலும், பைத்துல் மாலுக்கு சொந்தமான பேரிச்சம்பழத்தை வாயில் போட்ட பேரனை சிறுவர் என்றும் பார்க்காமல். வாய்க்குள் கைவிட்டு துப்பச் சொன்ன ஹதீஸையும், தந்தைக்கு சொந்தமான நிலத்தை, தனக்கு பாத்திமா (ரலி) கேட்ட போது கலிபா அபுபக்கர் (ரலி) மறுத்த சம்பவத்தையும், ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து உமர் (ரலி) தன் மகனை தள்ளிவைத்த சம்பவத்தையும் நமக்கு சொன்னவர்கள் மற்றும் நாங்கள் தான் நபி வழியில் நடக்கிறோம் என்று சொல்பவர்களின் குடும்ப கொள்ளையை பார்த்து இன்று ஊர் சிரிக்கிறது.
உணர்வு பத்திரிக்கையில் சம்பளமும் பெற்றுக் கொண்டு அதை பிரிண்ட் செய்யும் ஏஜென்ஸியும் யாருக்கு தெரியுமா ? ஜூம்மா கூட தொழாத தம்பிக்கு ! சாதாரண அரசு அலுவலர் கூட அரசின் திட்டங்களின் குத்தகை பணி எடுக்க கூடாது என்பது நடத்தை விதி ! இதைக் கூட பின்பற்றாத இவர்கள் ஏகத்துவாதிகளாம்.
மைத்துனர்கள் குறைந்த அளவு கொட்டேஷன் கொடுத்தார்களாம் எப்போது அறிவிப்பு செய்து ஏலம் விட்டீர்கள் ! மூன் பப்ளிகேஷன் விளம்பரத்திற்கும் காலண்டர் மற்றும் குடும்ப நிறுவனங்களின் விளம்பரத்திற்கு காசு கொடுத்ததுண்டா ? 5 வருட கணக்கை காட்டத் தயாரா என நாம் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலில்லை ! ஜமாத்தின் பணத்தில் நடக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் உணர்வு போன்ற பத்திரிக்கைகளிலும் குடும்ப வியாபார நிறுவனங்களான, சன், மூன் விளம்பரத்திற்கு பணம் வசூலிக்காதது ஏன் ? எடிட்டிங்கில் ரூ.2,000 மட்டும் தான் கிடைக்கிறதாம். பாவம் ! ஏற்கனவே இதுபோன்று சொல்லியபோது நஷ்டம் என்றால் அதை நான் நடத்துகிறேன். என்று சொன்ன ஒருவரை ஆஹா என் வியாபாரத்தில் கை வைக்கிறாயா? என்று “ஜமாஅத்தை விட்டு விலகி விடுங்கள் இல்லையென்றால் விலக்க வேண்டியிருக்கும்” என்று சொன்னார். இப்போது ஜமாஅத்தே எடிட்டிங் எடுத்து நடத்த விருப்பதாக கேள்வி. இப்போது என்ன செய்வார் ? இவர் ஜமாஅத்தை விட்டு விலகி விடுவாரோ? அப்படியெல்லாம் செய்ய மாட்டார் அது மான ரோஷமுள்ளவர்கள் செய்யும் வேலை ! காலெண்டர் விஷயத்தியில் குட்டுப்பட்டும் திருந்தவில்லையே! ஏனென்றால் கடந்த தேர்தலில் ஜெவிடம் பெற்ற தொகையில் பெரும்பகுதி குடும்ப கொள்ளை கூட்டதிற்கு தான் சென்றது. பிரச்சார செலவு (பிளைட் பயணம்) பிரிண்டிங், கொடி, சீருடை என வரும் தேர்தலிலும் வசமாய் மாட்டுகிறவனிடம் கறக்க வேண்டுமே. தயாநிதியும், ரித்திசும், தந்த நிதி இப்போது தான் களமிறக்கி விடப்பட்டு தமிழகம் முழுவதும் சுவர் விளம்பரங்களாகவும் நோட்டீஸ், பேனர், போஸ்டர்களாகவும் காட்சி தருகின்றது.
இது இப்போது செய்யும் முதலீடு இது வரும் தேர்தலில் பலமடங்காக திரும்ப வரும், அதையும் அன்வரிடம் கொடுத்து பணம் பண்ணலாம். தேவைப்படும் போது மீண்டும் களமிறக்கலாம். எல்லவாற்றையையும் ஏகத்துவத்திற்காக ஏற்றுக் கொண்ட ஒரு தக்லீது கூட்டம் இருக்கும் வரை குடும்ப வியாபாரம் கொடி கட்டிப்பறக்கும்.

மூன்று சம்பவங்களுக்கு மூடர்களின் ஒப்புதல் : மருத்துவமனை விவகாரம் !

அஸ்ஸலாமு அலைக்கும் !
இலங்கை முஸ்லீம் பெண் தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற விவகாரத்தில், சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு வந்த தக்லீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரியை சந்திப்பதை விடுத்து, மருத்துவருக்கு ஆதரவாக நடந்ததை குறிப்பிட்டு நாம் கூறியதற்கு, பதில் கூறிய மூடர்கள், நாம் கட்ட பஞ்சாயத்து செய்து, டாக்டரை மிரட்டியதாகவும், உடனே அவர்கள் “பிஜே மனைவிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் தங்களை தவறாக நினைத்துவிடக்கூடாது” என்பதற்காக வந்தார்களாம். இவர்கள் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்தால் உண்மையை அறிய சம்மந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களை சந்தித்து விசாரித்தார்களா? மேலும் அந்தப்பெண் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டு இருந்தால் நஷ்டஈடு வாங்கிக் கொடுத்தார்களா? என முட்டாள்தனமாக கேட்பதிலிருந்தே இவர்கள் காழ்ப்புணர்வை மட்டும் வைத்துதான் எதையும் பார்க்கிறார்கள். எதையும் ஆராய்ந்து பேசுவதில்லை (குர்ஆன், ஹதீஸ் உள்பட) என்பது தெரிகின்றது. நாங்கள் வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு எவ்வளவு என குறித்து கொள்ளுங்கள் தேவையென்றால் சம்மந்தப்பட்டவர்களிட்ம் விசாரித்து கொள்ளுங்கள்!
தன் மருத்துவமனையில் கட்டிய தொகையை
நோயாளிக்கு மருத்துவமனை திரும்ப கொடுத்தது 75,000
6 மாத காலம் பில்ராத் ஹாஸ்பிடல் பில் 18,00,000
நஷ்ட ஈட்டு தொகை ரொக்கம் 8,00,000
மொத்த தொகை 26,75,000
தவறு எதுவும் செய்யாமல் மொத்தம் 26 லட்சத்தி எழுபத்திஐந்தாயிரத்தை திரும்ப கொடுக்க முதல்வரின் சிறப்பு மருத்துவர் என்ன முட்டாளா ? பைத்தியக்காரரா ? இனியாவது எதையும் தீரவிசாரித்து முடிவெடுங்கள் இல்லையென்றால் தீர்ப்பு நாளில் உங்களோடு உங்களை நம்பி நீங்கள் சொன்ன பொய்யை பரப்பும் தக்லீது ஜமாத்தினரும் தண்டனைக்குறியவர்கள் ஆக நேரிடும்.

Friday, June 18, 2010

நபி வழியில் நடந்து நிரூபிப்பாரா ?


எதிர்த்து கேள்வி கேட்கும் எவரும் இருக்க கூடாது என்பதற்காக தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக முந்திக்கொண்டு மற்றவர்கள் மேல் பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டுகளை கூறும் “இவர் இரண்டு விஷயத்தை யார் மீது எறிந்தாலும் அவன் காலிம்மா ! ஒன்று பொம்பள, இன்னொன்று பொருளாதாரம்,” என்பது கூறும் இவரின் கொள்கையாகும். இவரின் இந்த கொள்கைக் திட்டத்திற்கு பலியானவர்கள் பட்டியலை தந்தோமென்றால் எண்ண முடியாது. அபு அப்தில்லா தொடங்கி பாக்கர்வரை இவரின் இந்த அஸ்திரம் பாயாத நபர்கள் இல்லை.

பாட்டெழுதி புகழ்பெறும் புலவர்களும் உள்ளனர். குற்றம் கண்டுபிடித்த புகழ்பெறும் புலவர்களும் உள்ளனர். என்பது போல் மற்ற இயக்கங்களை மற்ற தலைவர்கள் தனக்கு பிடிக்காதவர்கள் தனக்கு கீழ் உள்ளவர்கள் என தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் புகழ் பெற்ற மார்க்க அறிஞர்கள் இமாம்கள் என எவரும் இவரின் வசவுகளுக்கு தப்பியதில்லை. ஏன் ஸஹாபாக்களையும் நபிமார்களும் கூட இவரது நாசநாவிற்கு தப்பியதில்லை! இவ்வளவுபேரையும் குறை கூறும் இவர் என்ன குறைகளற்ற கோமேதமா ? மாசற்ற மாணிக்கமா ? பத்தரை மாற்று தங்கமா ? பரிசுத்த ஆத்மாவா என்றால் சாதாரண கிளை நிர்வாகிக்கு உள்ள இஃலாஸ், தக்வா, ஒழுக்கம், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், இபாதத் என எதுவும் இவரிடத்தில் இல்லை.
மார்க்கத்தை அறிந்து கொள்ள தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பெண்களிடம் இவர் போடும் கடலை சொல்லி மாளாது ஆற்காடு (டீச்சர்), பரங்கிப்பேட்டை (லீனா), முஹம்மது பந்தர் (மெகருன்னிஸா), திருமுல்லைவாயில் என இவர் அடிக்கும் கூத்து கன்றாவி எந்த அளவுக்கு என்றால் முதல்வன் பட மனிஷா போல் நீலக்கலர்சட்டை உங்களுக்கு நன்றாக உள்ளது, என கூறியதும் தொடர்ந்து நேரடி நிகழ்ச்சியில் நீலக்கலர் சட்டை!
கேவலத்திலும் கேவலம் மாநில நிர்வாகத்தின் விஷயங்கள் எல்லாம் மேற்படி மங்கையருக்கு தெரியும். சிலசமயம் நிர்வாக குழு பேச்சுக்களை தனது தொலைபேசியின் மூலம் நேரடியாகவும் மேற்படி பெண்களுக்கு ஒளிபரப்புவார். இதில் நிர்வாக விஷயம் வெளியில் கசிகிறது என்று மாநில நிர்வாகிகள் சத்தியம்வேறு வாங்குவார் இந்த விஷயங்களை மறை முகமாகவும் நேரடியாகவும் சுட்டிக்காட்டியதால் தான் பாக்கர் குறி வைத்து வெளியேற்றப்பட்டார். இது பொய் என மறுப்பாரானால்
நபி (ஸல்) அவர்கள் தான் பேசிக் கொண்டிருப்பது தன் மனைவியோடு தான்என எப்படி சஹாபாக்கள் கேட்காமலேயே தாங்களாக முன் வந்து நிரூபித்தார்களோ அதுபோல் இவரும் நாங்கள் கூறும் மேற்கண்ட பெண்களின் தொலைபேசி எண்கலை தருகிறோம். இவர் அப்போது வைத்திருந்த எண்களையும் தருகிறோம். அவற்றின் இன் அவுட் கால் விபரங்களை வெளியே காண்பிக்க தயாரா ? மற்ற பெண்களோடு மணிக்கணக்கில் பேசியது மார்க்க ரீதியில் சரிதான் என நிரூபிப்பாரா ?
நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தாங்கள் தக்லீத் ஜமாஅத் மட்டுமல்ல தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் எனவும் நிரூபித்து வருகின்றனர். இவர்களது ஆபாச வெப்சைட்டில் அபு யூசுப் என்ற பெயரில் இவர்கள் கக்கியுள்ள விஷயத்தைப்பார்த்து இவர்களது ஜமாஅத்தை சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் வேதனைப்படுகின்றனர்.
கேள்வி கேட்கும் நபர்களின் குடும்பத்தை இழுக்கும் இவர்களின் கேடு கெட்ட நிலையை பார்த்து நடுநிலையாளர்களின் முகம் சுளிக்கின்றனர். பாக்கருக்கு வக்காலத்து வாங்கும் இவர்கள் தங்கள் மனைவியரை பாக்கரோடு பஸ்ஸில் ஏற்றி அனுப்புவார்களா ? என்று கேள்வியை தலை முதல் அடி வரை தப்பாது கேட்கும் இவர்களை பார்த்து நாமும் “ஏற்கனவே நீங்கள் வக்காலத்து வாங்கி கடலூரில் முபாஹலா செய்தீர்களே, பக்கத்தில் அமர்ந்து சென்றதை தவிர பாக்கர் தவறேதும் செய்யவில்லை என்று பாவமன்னிப்பு வழங்கினீர்களே. மாநில செயற்குழுவில் தீர்மானம் போட்டிர்களே, (பார்க்க கடலூர் பொதுக்குழு) மாநில நிர்வாககுழுவில் சுட்டிக்காட்டிய கலில் ரசூலை குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் நிருபி என தட்டிக் கேட்டிர்களே! நீங்கள் உங்கள் மனைவியரை பாக்கரோடு பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விட்டுத்தான் சப்பைக்கட்டு கட்டினீர்களா ? பாக்கரின் தூக்கிப்போட்ட எலும்பு துண்டுக்காக தான் மீண்டும் அவர் பொது செயலாளராக்கி, பொருளாதார குற்றங்களை மறைத்து மன்னீத்தீர்களா ? என்று நாம் கேட்டால் நாக்கைப்பிடுங்கி கொண்டு சாக வேண்டியிருக்கும்.
மங்கிஸ்கானின் மேன்சன் தொழில் பற்றி இப்போது குற்றச் சாட்டும் நீங்கள் உங்கள் மகளுக்கு பேசிய மாப்பிள்ளை மண்ணடியில் தங்கினால் மகளின் காதல், தற்கொலை விவகாரங்கள் எல்லாம் தெரிந்துவிடும் என்பதற்காகத்தான் மங்கிஸ்கானின் திருவல்லிக்கேணி மேன்சனில் தான் தங்க வைக்கப்பட்டரா? என்று நாம் கேட்டால் தூக்குபோட்டு தொங்க வேண்டிருக்கும்! கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

பொய் J - வின் பொய் முகம்











அன் நஜாத் சொத்தை அபு அப்துல்லாஹ் தன் பெயரில் வாங்கி துரோகம் செய்தார் என்ன கோவை வெடிகுண்டு வழகில் அபுருவர் ஆகி சாட்சியம் சொன்ன P.J. ......
அபு அப்துல்லாஹ் அவதுறு வழக்கு தொடர்ந்ததும் தான் அப்படி சொல்லவே இல்லை...!
காவல் துறை அதிகாரி தானாக எழுதி கொண்டார் என தண்டனைக்கு பயந்து திருச்சி நீதி மன்றத்தில் அல்லாஹுவின் மீது ஆணையிட்டு பொய் சொல்லி தப்பித்தார்.........
ஆனால் அவர் வாயால் அவதூறு கூறும் காட்சியை பாரிர் ......
மேலும் விபரம் அறிய : http://www.annajaath.com/?p=1875

Wednesday, June 9, 2010

SLTJ-யை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

டிஎன்டிஜேயை இலங்கையிலுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துடன் இணைக்கும் முயற்சிகள் திரை மறைவில் மேற் கொள்ளப்பட்டது. ஆனால் (SLTJ) எந்த ஒரு வெளிநாட்டு இயக்கத்தின் கிளையாகவும் இயங்க போவதில்லை என்று இன்று (04.06.2010) நடைபெற்ற ஜும்ஆவில் எஸ்.எல்.டி.ஜெயின் நிர்வாகம் அறிவித்து விட்டது. அவ்வறிப்பை அதன் மேலாண்மை குழு உறுப்பினர் ஸித்தீக் முறைப்படி அறிவித்தார்.

மாஷா அல்லாஹ் இதன் மூலம் TNTJ(PJ)-யினால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் மற்றும் அதன் தலைமையகம் இயங்கும் 3 மாடி கட்டிடத்தை கைப்பற்ற எடுத்த கபட முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

-அஹ்மது ஃபஸ்லி மற்றும் ஸராஃபுதீன், இலங்கை.

பொய் j வுக்கு புதிய சவால் ?......

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினை இருக்கிறது'50:35.

அன்புச் சகோதரரே! பல சகோதரர்களின் உருவப்படங்களுடன் எனது உருவப் படத்தையும் இணைத்து நீங்கள் தொகுத்த ஒரு ஆக்கம் கண்டேன். அதைக் கண்டபோது அதைத் தொகுத்த நீங்கள் தவ்ஹீதில் அக்கறை உள்ளவர் என்பதும், அதே நேரம் நீங்கள் தமிழகத்தில் தவ்ஹீத் உருவான, உருவாகி வளர்ந்த வரலாறு தெரியாதவர் என்பதும் பளிச்சென தெரிந்து விட்டது. எனவே உங்களைப் போன்று தமிழகத்தில் தவ்ஹீத் உருவான வரலாறு தெரியாமலேயே செயல்படும் பல இளைஞர்கள் உண்மையைப் புரிந்து உரிய பலனைப் பெற வேண்டுமென்ற நன் நோக்கில் மேற் குறிப்பிட்டிருக்கும் இறைவாக்கிற்கொப்ப இதனை அறியத் தருகிறேன். யா அல்லாஹ்! சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதனை பின் பற்றும் பாக்கியத்தையும் அசத் தியத்தை அசத்தியமாகக் காட்டி அதனை தவிர்ந்து கொள்ளும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

அன்புச் சகோதரரே! தமிழகத்தில் குர்ஆனும் ஹதீசும்தான் மார்க்கம் அவ்விரண்டிற்கும் மாற்றமானவை மார்க்கமற்றவை என்பதை நமது நாட்டில் துவங்கி பல இடையூறுகளை அனுபவித்து அல்லாஹ்வின் மா பெரும் அருளால் அது வளர ஆரம்பித்ததும் தமிழகத்தில் பல பகுதிகளில் பல்வேறு பெயர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல அமைப்பின் சகோதரர்கள் திருச்சியில் 1986 களில் கூடிய ஒருசமயத்தில் எல்லோர் உள் ளத்திலும் ஒரே பெயரில் நாம் இயங்கினால் நன்றாக இருக்குமே என்று எண்ணியபோது நிறுவப்பட்ட அமைப் புதான் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன், வல்ஹதீஸ்., அன்றைக்கு அந்த சிந்தனையைப் பரப்புவதில் அதிகப் பங்கு வகித்தவர்களில் முக்கியமாக இருந்த உங்களின் தலைவர் தான் அப்போதைக்கு முதலாவதாக தற் காலிகத் தலைவராக இருந்தார் அதன் பின்னர் கூடிய கூட்டத்தில் தான் உங்களின் தலைவரும் சேர்ந்து இவ்வமைப்பிற்கு தற்போது இருந்து வரும் கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார்.

அன்று உருவாகப் பட்ட அமைப்பில் அங்கம் வகித்த நான் அன்றிலிருந்து இன்று வரை அல்லாஹ்வின் பேரருளால் அதே கொள்கையில் அதே தலைமையில் அதே அமைப்பில் இருந்து செயல்பட்டு வருகிறேன். அல்லாஹ் இதே நிலையில் என்னை இறுதி வரை வாழ வைத்து ஈமானுடன் உண்மை முஸ்லிமாக மரணிக்கச் செய்ய வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டுமிருக்கிறேன். ஒரே அமைப்பில் இருக்கிறேன் என்று சொல்வதால் உங்கள் தலைமையை கண்மூடித்தனமாக உங்களைப் போன்றவர்கள் பின்பற்றுவது போல என்று எண்ணி விடக்கூடாது. மாறாக, அல்ஹம்து லில்லாஹ் தலைமையில் காணுகின்ற குறைகளை அன்றும் இங்கு வரு வதற்கு சில தினங்களுக்கு முன்பும் கூட தயவுதாட்சண்யமின்றி சுட்டிக் காட்டித்தான் வந்திருக்கிறேன்., அல்ஹம்துலில்லாஹ் எங்களது தலைவர் உங்களின் தலைவர் போன்றில்லாமல் தவறை உணர்த்தப்பட்டால் உடனே மன்னிப்புக் கேட்கும் தலைவர். அச்சுபாவம் உங்களின் தலைவருக்கு இல்லாததால் தான் அமைப்பு அமைப்பாக தலைவர் தலைவராகத் தாவிச் சென்று இறுதியில்-- நான் எந்த அமைப்பிலும் கேள் விப்படாத தலைவரை உதவித் தலைராக்கிவிட்டு--தானே தலைவராகிவிட்டார்.

உங்களின் தலைவர் பகிரங் கமாகக் கூறிய பொய்ச் செய்தியைச் சுட்டிக்காட்டியபோதும் கூட அதை ஏற்காதவர். மட்டுமின்றி நாங்கள் ஒரே தலைமையின் கீழிருந்த காலத்தில் நான் சுட்டக்காட்டிய அளவிற்கு உங்கள் தலைவர் சுட்டிக் காட்ட வில்லை --அவருக்கு தலைமையின் மூலம் இலாபமிருந்தது-- மட்டுமின்றி தனது கருத்தைத்தான் தலைவர் செய்ய நிர்ப்பந்திப்பார்.

விஷயத்திற்கு வருவோம்;.

எனது படத்தைப் போட்டுவிட்டு எனது பெயரைக் குறிப்பிடாமல் ...குராஃபாத் அமைப்புகளில் பைஅத் செய்து கொண்டதாகவும் ஏகத்துவத்தைக் கை கழுவி விட்டதாகவும் எழுதியிருந்ததைப் பார்த்ததும் உங்களின் மீது அனுதாபம்தான் எனக்கு ஏற்பட்டது. ஹைர்! அல்லாஹ்வே சாட்சி! அல்லாஹ்வே போது மானவன்! நீங்கள் கூறியதை சாட்சியோடு இன்னவரிடம் பைஅத் செய்துள்ளார், இன்ன இடத்தில் தவ்ஹீ துக்கு மாற்றமாக பேசியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தால் நீங்கள் ஒரு தெளிவான தவ்ஹீத்வாதி என ஏற்றுக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு நம்மைச் சுற்றி என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்ற மதமதப்பில் உங்கள் தலைவர் போல பல செய்திகளை அடித்துவிட்டிருக்கிறீர்கள்.



நினைவுக்கு வந்த சிலவற்றைத் தருகிறேன், படியுங்கள் சிந்தியுங்கள், திருந்துங்கள், திருத்துங்கள்.நான் குறிப்பிட்டவற்றில் தவறு கண்டால் சுட்டிக் காட்டுங்கள், ஆதாரத்துடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்திக் கொள்வேன். இவையெல்லாம் சுட்டிக் காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்ப வர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறெனத் தெரிந்ததும் திருந்துபவர், திருத்திக் கொள்பவர், திருத்த முயற்சி செய்பவர் ஆகிய அனைவரும் இறையன்பைப் பெறும் தகுதிக்குரியவர், தவறைத் திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள். யா! அல்லாஹ் ஏகத்துவ வாதிகளை உன் அன்பைப் பெறத் தகுதியானவர்காக ஆக்கி அருள்வாயாக!.

நீங்கள் உங்களின் ஆக்கத்தில் கூறியிருக்கிற குற்றச்சாட்டுகள் உங்கள் தலைவரைத்தான் என்பதை நீங் களே நான் தருகின்ற ஆக்கங்கள் மூலம் புரிந்துகொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

உங்களின் தலைவர் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சத்தியத்தைக் கூறுவதெற்கென்றே தமிழகத்தில் உருவாக்காப்பட்ட அமைப்பிலிருந்து தடம்புரண்டு வேறு அமைப்பில் பைஅத்துச் செய்து கொண்ட பின் அவரின் முரண்பாடுகளில் சில:


ஏகத்துவ மேடைகளில் (நான் ஏகத்துவ மேடை என்று குறிப்பிடுவது 1986 களில் தமிழகத்தில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாகப்பட்ட அமைப்பு) தர்க்காவிற்கு செல்வது அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன், நிரந்தர நரகம், அப்படிச் செய்பவர் முஷ்ரிக், காஃபிர் இத்தகையவர்களிடம் சமரசம் செய்து கொள்வதற்கு இடமே இல்லை என்று அழுத்தம் திருத்தமாகப் பேசிய அதே நாக்கு, முஸ்லிம் என்ற பெயர் உள்ள எல்லோரும் வாருங்கள் நீங்கள் எந்தக் கொள்கையில் இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்காக குரல் கொடுப்ப தற்கே அமைப்பை உருவாக்கப்பட்டிருக்கிறது, இது தவ்ஹீதைக் கூறாது எனக் கூறி அந்த அமைப்பின் தலைவரிடம் பெயருக்கு பைஅத் செய்து அமைப்பாளராகி, தவைலரும் தனது கருத்தையே பிரதிபலிக்க வேண்டுமென்று அங்கிருந்து விலகும் வரை நிர்பந்தித்து கொண்டிருந்தவர்தான் உங்கள் தலைவர்.
  • அந்த மேடையில் எங்கள் தர்காவிற்கு பஸ் விடு என்று முழங்கினார். பித்அத்கள் நரகத்திற்கு இட்டுச் செல்லு மென முழங்கிய அதே குரலிலல் எங்கள் ஹஸரத்தைக் கூப்பிட்டு ஃபாத்திஹா ஓதச் செய் என்றும் முழங் கினார்-சத்தியம் அவர் உள்ளத் தில் இருந்ததால் பேசியபோதே நினைவு வந்தவுடன் தர்கா கூடுமா? கூடாதா என்பது வேறு என்றும் சொல்லிக் கொண்டார்- அரசியலுக்கு ஒரு தலைமை ஆன்மீகத்திற்கு ஒரு தலைவர் என்று முஸ்லிம் சமு தாயம் சென்றதால்தான் சமுதாயம் சீரழிந்து போய்விட்டது என்று பேசிய அதே குரல் தான் அரசியலுக் கும் ஒரு அமைப்புத் தேவை என்று அமைப்பாளரானார்.
  • அமைப்பாளரானதும் தவ்ஹீத் மேடைகளில் முஸ் லிம்களின் பின்னடைவுக்கு ஆலிம்களே காரணம், ஏனெனில் இவர்கள் ஆங்கிலேயனின் மீது கொண்ட வெறுப்பால் இங்லீஸ் படிக்ககக் கூடாது என்றனர், பேண்ட் போடக்கூடாது என்றனர் என்று முழங்கினார், அதே குரலில் தவ்ஹீத் அல்லாததைச் சொல்வதற்காக பைஅத் செய்து கொண்ட மேடையில் முழங்கும் போது –சுப்ஹானல்லாஹ் நரம்பில்லா நாக்கு என்பார்களே அதை அப்படியே மெய்ப்பிக்கும் விதமாக- நமது ஆலிம்கள் எப்படிப்பட்ட தியாகிகள் தெரியுமா? (தேச பக்திக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தவ்ஹீத் மேடையில் ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாகப் பேசியவர்)தேசபக்தியின் காரண மாக ஆங்கிலம் படிப்பது ஹராமென்றார்கள், பேண்ட் அணியக்கூடாது என்றனர் என்று முழங்கினார் முரண்பட்டுப் பேசுகிறாறே என்று ஆட்சேபிக்க வேண்டிய உங்களைப் போன்ற தவ்ஹீத் வரலாறு தெரியாத வர்கள் அப்போதும் நாரே தக்பீர் அல்லாஹுஅக்பர் என்று முழங்கினார்கள்.
  • உங்கள் ஓட்டு யாருக்கு என்ற தலைப்பில் எல்லா அரசியல்வாதிகளையும் அலசி எவருக்கும் ஓட்டுப் போடக்கூடாது என்று பேசிய அதே வேகத்தில் எந்த அரசியல்வாதியும் செய்யாத ஒன்றை-- அதாவது ஒரு முறை திமுக, அடுத்து அதிமுக, அதையடுத்து சில பகுதிகளில் திமுக, சில பகுதிகளில் அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று -தடுமாற்றத்தையே வாடிக்கையாகக் கொண்டவர் தான் நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்பின் தலைவர். மட்டுமா! ஜெயலலிதாவை மிகக் கடுமையாக கேவலமானவர் என்று ஆதார அடிப் படைகளுடன் விமர்சனம் செய்து உணர்விலும் எழுதி, மேடைகளிலும் பேசிவிட்டு அம்மையாரை முத லமைச்சாருக்குங்கள் என்று ஊர் ஊராகச் சென்று ஓட்டு வேட்டை நடத்தினார், அவரின் தலைமை யின் கீழுள்ள சிலர் அம்மாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என்றாகள்.
  • தவ்ஹீத் (தமிழ் நாடு தவ்ஹீதல்ல) மேடையில் பெண்களிடம் ஆட்சியை ஒப்படைப்பவர்கள் மண்ணுக்கு மேல் வாழ்வதை விட மண்ணுக்கடியில் வாழ்வதே சிறந்தது என்ற ஹதீஸை அற்புதமாக எடுத்துரைத்த மாமேதை தான் உங்களின் தலைவர்.
  • ஜம்மியத் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பின் தற்காலிகத் தலைவராக இருந்து பின்னர் அவரும் இணைந்து இவ்வமைப்பிற்கு கமாலுத்தீன் மதனியை தலைவராகத் தேர்வு செய்து, அது வளர ஆரம்பித்த கட்டத்தில் தலைவரின் மீது பலரும் பல குற்றச் சாட்டுகளைக் கூற தலைவர் தனது தலைமைத் தனத்திலிருந்த விலகிக் கொள்கிறேன் என்று வந்தபோது இஸ்லாத்தில் தலைமையை மாற்ற இடமேயில்லை மரணிக்கும் வரை அவர்தான் தலைவர் என்றும் அதற்கு நானே அவரிடம் முதன்மையாக பைஅத் செய்கிறேன் என்றும் கூறினார். பின்னர் அதிகாரமுள்ள தலைவர் அதிகாரமற்ற தலைவர் என்ற தத்துவத்தை முன் வைத்து தமிழ் முஸ்லிம்களுக்கு ஆன்மீகத்திற்குத் தலைவர் ஒருவர் கிடையாது என்று இரண்டாம் முறையாக அவர் பைஅத் செய்து கொண்ட மேடைகளில் பேசினார், எழுதினார்.
  • இன்றைக்குத் தமிழகத்தில் சமுதாயப் பணிகள் செய்வதற்கு முஸ்லிம்கள் நம்பிச் செயல்பட, உதவிகள் செய்ய மிகத் தகுதியான அமைப்பு தமுமுக, மார்க்கப்பணிகள் செய்திட நம்பி உதவி செய்யத் தகுதியான அமைப்பு ஹாமித் பக்ரியின் தலைமையில் இயங்கும் அனைத்துத் தவ்ஹீத் ஜமாஅத் என்று என்று மனம் திறந்து மடல் என்று மடலை-- தமிழகம் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் எதுவும் செய்கிறது என்பது போல—உணர்வில் எழுதினார், சுப்ஹானல்லாஹ் எழுதிய சில மாதங்களிலேயே வஹி வந்தவர்போல தமுமுக தவ்ஹீத் வாசலை அடைத்துவிடக்கூடிய அமைப்பு, ஹாமித் பக்ரிக்கு தீவிர வாதிகளுடன் தொடர்பு இருக்கின்றது என்றார், சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் கண்மூடித் தனமாக பின்பற்றும் தன்மையை ஒழிக்க வேண்டுமென முழங்கிய அவரே அத்தகைய கூட்டத்தின் தலைவராக மாறியிருக்கிறார்.



அல்லாஹ்வின் கிருபையால் தமுமுக அவர் வெளியே வந்த பின்னர் தமுமுக மேடையிலேயே தவ்ஹீதை பகிரங்கமாக முழங்கும் நல்ல சூழலுக்கு மாறியுள்ளது, பல நல்லவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் அமைப்பாகவும் மாறியுள்ளது அல்ஹம்து லில்லாஹ்.
  • மா மனிதர் என்று ஒரு தலைப்பில் மிக அழகாக (ஸல்)அவர்களைப் பற்றி பல காலமாகப் பேசியிருக்கி றார். அதில் ஒரு முறை மாமனிதர் (ஸல்)அவர்கள் சபையில் இருக்கும்போது அவர்களைத் தேடி வருபவர்கள் முஹம்மத் யார் எனக் கேட்குமளவிற்கு மக்களோடு மக்களாக அமர்ந்திருப்பார்கள் என்ற உண்மையை அழகாக அழுத்தமாக எடுத்துச் சொன்னவர் உங்களின் தலைவர் இன்று வரை அவரை யாராவது பார்க்கச் சென்றால் நேரடியாகச் செல்ல முடியாது, ஏன் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட நேரடியாக தொடர்பு கொள்ள இயலாது, சபையில் மக்களோடு மக்களாகப் பார்க்கவே முடியாது.
  • உங்களின் தலைவர், மா மனிதர் இடம், நேரம், காலத்திற்குத் தகுந்தாற்போல உங்களைப் போன்ற தம்பிகள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பேசுவதில் அவருக்கு நிகர் அவரே. சிறந்த அறிவாளி ஆனால் அறிவாளிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் அற்றவர்.



ஒவ்வொரு அமைப்பை விட்டும் வெளியேறும்போது ஏதேனும் நொண்டிக் காரணங்களை தூய எண்ண முள்ளவர்கள் கூறுவதுபோல கூறிவிட்டு சென்ற பின்னர் தான் சார்ந்திருந்த காலங்களிலெல்லாம் அவர்க ளுடன் கைகோர்த்து எல்லாக் காரியங்களையும் செய்து விட்டு அல்ல அல்ல தனது சர்வாதிகாரத்தால் செய்ய வைத்துவிட்டு இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுவார் உங்களைப் போன்ற புகழ் பாடும் கூட்டமிருப்பதால்! எந்த அளவிற்கென்றால் அல்லாஹ்வும் ரசூலும் வண்மையாக மிக மோசமான கெட்டவை என்று கண்டித்துக் கூறியதை அவரது கட்டுப்பாட்டிற்கு கீழிருந்த இருக்கிறவர்களில் இருவரை ஊர் ஊராக அனுப்பி குற்றங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து வீடியோவில் பதிவு செய்து அதைப் பார்க்கச் செய்து பலரை பெரும் பாவம் செய்ய வைத்தவர்.



சுருங்கச் சொல்வதாயிருந்தால் தமிழகத்தில் -- இவரும் இணைந்திருந்த காலத்தில்--ஏகத்துவத்தை உருவாக்க இன்று வரை கஷ்ட, நஷ்டங்கள் பட்டுக் கொண்டிருப்பவர்களையும் அவர்கள் நடத்தப்பட்டு வரும் இதழ்கள், அழைப்பு மையங்கள், கல்லூரிகளை இழித்தும் பழித்தும் கூறிக் கொண்டிருக்கிறார்.

இவையெல்லாம் சரிதானே என்று உங்களைப் போன்ற ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டு செய்கிறது. மிகத் துணிவாக பொய்களைக் கலந்து சேற்றை வாரி வீசுவதற்கு முக்கியக் காரணம் தற்போது அவர் பின்னாலிருக்கும் கூட்டம் உங்களைப் போன்ற தவ்ஹீதின் உருவாக்கத்தைத் தெரியாதவர்கள் என்பதுதான். நினைவுக்கு வந்த சிலவற்றைக் கூறியுள்ளேன், இதுவும் அவரின் குறைகளை அலச அல்ல. மாறாக உங்களைப் போன்று தவ்ஹீதை தவ்ஹீதுவாதிகள் மூலம் பெறாமல் செய்திச் சாதனங்கள் மூலமாக மடடும் தெரிந்து கொண்டு, தெரிந்த கொண்ட ஆர்வக் கோளாறுகளால் தலைவரைப் போன்றே உங்களைப் போன்றவர்கள் இறங்கிவிடுகிறார்கள், தெரிந்ததைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இவற்றை அறியத் தருகிறேன், நீங்கள் அவரை விட்டு வெளியேறிவிடுவீர்கள் என்ற எண்ணத்தில் அல்ல எடுத்துச் சொல்வது மட்டுமே அல்லாஹ் இட்ட கட்டளை!.

ஆரம்ப காலங்களில் தவ்ஹீதை பரவச் செய்ய பொருளால், அறிவால் இன்னும் பல வழிகளில் பாடுபட்ட பல நல்லவர்களை உங்கள் தலைவர் பகைத்துக் கொண்டு வரலாறு தெரியாத புதியவர்களோடு இணைந்திருக்கிறார்., பழையவர்களோடு இருந்தால்தான் குறை நிறைகளை தெரிந்து தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள முடியும், ஒருவேளை குறைகளே தெரியக்கூடாது என்று எண்ணுகிறாரோ என்னவோ! அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.



உங்களின் தலைவருக்கு உங்கள் மூலமாக இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என பல சந்தர்ப்பங்களில் பேச்சுக்களின் மூலமும் எழுத்துக்கள் மூலமும் தெரிவித்திருக்கிறேன். இப்போதும் அதையேத் தெரிவித்துக் கொண்டு மற்றொன்றையும் சேர்த்து சொல்லிக் கொள்கிறேன்.

சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என்ற தலைப்பிலும், மற்றும் உலகம் முழுவதற்கும் பிறை ஒன்றே என்ற இந்த இரு தலைப்புளையும் பற்றி நீங்கள் விரிவாக அலசுவதற்குத் தயாரா? நாம் எப்போதும் தயார்.



இதையெல்லாம் இன்ஷா அல்லாஹ் நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயார் பல சமயம் இவற்றில் பலவற்றை தபால் மூலமும் உங்களின் தலைவருக்குத் தெரிவித்திருக்கிறேன்.

உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வரவேண்டி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் என்றும் நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்---ஒருவேளை உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வந்துவிட்டால் அவரோடு கைகோர்த்து முந்தைய காலங்களைப் போன்று பணி செய்யவும் காத்திருக்கிறேன்-- அல்லாஹ் போதுமானவன்.

அவனே காரியங்களை நம்பி ஒப்படைப்பதற்கு மிகத் தகுதியானவன், மிக்க நல்லவன், யா அல்லாஹ் உள்ளங்களில் உணர்வுகளை அறிந்தவனே! உள்ளங்களை விரல்களுக்கிடையில் வைத்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவனே! எந்தெந்த உள்ளங்களை ஈடு இணையற்ற உனது தவ்ஹீதைப் படிக்க பரப்ப தேர்ந்தெடுத்தாயோ அந்த உள்ளங்களை ஓரணியில் இணைப்பாயாக! உனது திருப் பொருத்தைத்தை மட்டுமே நாடி உனது பணியினை மேற்கொண்டு உண்மை முஸ்லிமாக வாழ்ந்து உண்மை முஸ்லிமாக மரணித்து முடிவே இல்லா நிரந்தர இன்ப பாக்கியங்கள் நிறைந்த சுவனபதியில் நலலோர்களுடன் இருக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக! ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமீன்.

கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

அல்கோபர்

சவுதி அரேபியா


நன்றி :INTJ அதிரை



Saturday, June 5, 2010

புரோகிதர் பீ.ஜே. கடைந்தெடுத்த பொய்யர்,

அறைகூவல் மன்னன் பீ.ஜே.க்கு!
அளவில்லா அருளாளன், இணையில்லா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்….அறைகூவல் மன்னன் பீ.ஜே.க்கு!அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)பாக்கருக்கு பீ.ஜே.யின் பகிரங்க அறைகூவல்!கைத்தடிகள் மூலம் வசை பாடாமல் பாக்கர் நேரடியாகப் பதில் தருவாரா?டாக்கர் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவதூறு என்றும், அவர்மீது கூறப்படும் பொருளாதாரக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவருடன் (பாக்கருடன்) சேர்ந்து கொண்ட முன்னாள் நிர்வாகிகள் பிரசுரம் வெளியிட்டுள்ளனரே இது சரியா? என்று பல சகோதரர்கள் கேட்கின்றனர். பாக்கரின் கைத்தடிகள் பெயரில் வெளியான பிரசுரத்தில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதாகவும் எடுத்துக்காட்டுகின்றனர்.…………………………………………………………………………………………………………………………………………………………………………………….……………………………………………………..(முழு விபரங்களுக்கு உணர்வு ஜனவரி 23/29,2009 இதழ் பக்கம் 13ஐ பார்க்கவும்)………………..……………………………………………………………………………………………………………………………………………………………………………………..மோசடி செய்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காதவரை அவரை ஆதரித்து மோசடியை மறைக்கத் துணை செய்பவர்கள் மறுமையைப் பயந்து தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கொள்கைச் சகோதரர்கள் இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். எந்த ஊருக்கு அவர் வந்தாலும் இந்த இரண்டு அறைகூவலுக்கும் பதில் கேட்டு வற்புறுத்த வேண்டும். தேவைப்பட்டால் பிரசுரமாகவும் இதை வெளியிடலாம். என் பெயரிலேயே இதை வெளியிட்டாலும் கிளை பெயரில் வெளியிட்டாலும் எனக்கு மறுப்பு இல்லை. அன்புடன், பீ.ஜைனுல் ஆபிதீன் (உணர்வு வார இதழ் உரிமை 13 குரல் 21 ஜனவரி 23-29,2009, பக்கம் 13)இது ததஜ புரோகிதர் பீ.ஜே.யின் அறைகூவல்! இது அவரது கடந்த 22 வருட வாழ்க்கையில் எத்தனையாவது அறை கூவல் எனக் கணக்கிட்டுக் கூற முடியாது. ததஜ புரோகிதரின் முதல் அறை கூவல் 29.7.1987-ல் நூருல் அமீன் மற்றும் இளைஞர் இயக்கத்தினருக்கு எழுதிய கடிதத்தில் பல அப்பட்டமான அவதூறுகளை எழுதிவிட்டு, கடித இறுதியில், “நான் எழுதியுள்ள மேற்கூறிய விபரங்களை நிரூபணம் செய்ய நான் தயார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தயார்” என்று உறுதி அளித்திருந்தார். அடுத்து 26.12.1987-ல் ததஜ புரோகிதர் வெளியிட்ட பிரசுரத்தில்“அடுத்து நான் (ஒன்றுபட்டிருந்த ஜமாஅத்தை விட்டும்) வெளியேறியதற்கும் தவறான காரணம் கற்பித்துள்ளனர். அல்லாஹ்வின் மீது ஆணையாக “ஸலபி” (என்ற பிரிவு) பிரச்சனை காரணமே இல்லை. பல நண்பர்கள் ஒருவரை நிர்வாகியாக ஏற்படுத்தித் தொடங்கிய பத்திரிக்கைக்கு தன்னை உரிமையாளர் என சட்டப்படி பதிவு செய்து கொண்டதும் அதை நாம் தட்டிக் கேட்டும், மற்ற முன் வராததுமே காரணமாகும்.”“தன்மீது குற்றங்கள் நீரூபிக்கப்படுமானால் எந்தத் தண்டனைக்கும் தயார் என்று அவர்(அபூ அப்தில்லாஹ்) பகிரங்கமாகவே கூறிவிட்டதால் நான் (பீ.ஜே) அதை பகிரங்கமாகவே ஏற்றுக் கொள்கிறேன். ஆரம்பத்திலிருந்து எல்லாப் பிரச்சினையையும் பகிரங்கமாகவே அலசுவோம். அதற்கு நான் தயார்”. பீ.ஜைனுல் ஆபிதீன்அடுத்து புரட்சி மின்னல் பிப்ரவரி ஹ988 பக்கம் 120-ல் எப்படி அந்தர் பல்ட்டி அடித்துள்ளார் என்று பாருங்கள்!சென்ற இதழுடன் இணைத்திருந்த துண்டுப் பிரசுரம் கண்டிருப்பீர்கள். நான் அதில் குறிப்பிட்டிருந்த பிரகாரம் பல்வேறு உண்மைகளை பகிரங்கப்படுத்திடவே விரும்பினேன். நான் மிகவும் மதிக்கின்ற பெரியவர்களின் கோரிக்கைகள் என் கைகளைக் கட்டிவிட்டன……………….“பல தரப்பினரும் எதையும் எழுத வேண்டாம் என்றே என்னை வற்புறுத்தினார்கள்……………………………………………………………………….………………………………….. ஆனால் ஏற்கனவே எழுதியிருந்த அவ்வாசகத்தை மட்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறேன்.” “அடுத்தவருக்குச் சொந்தமானதை தன்னுடையதாக்கிக் கொண்டதும் அமானித மோசடியும்தான் பிளவு ஏற்பட முக்கிய காரணம். இதை எங்கேயும் நான் நிரூபிக்க முடியுமு் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். பீ.ஜைனல் ஆபிதீன்நீருபிக்கத் தயார். நிரூபிக்கத் தயார் என வாய்ச் சவடால் விட்டாரே அன்றி 22 வருடங்கள் ஆகியும் நாம் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தும், இன்று வரை வாக்களித்தபடி தனது அவதூறுகளை நிரூபிக்க முன் வரவேயில்லை ததஜ புரோகிதர். ஆம்! ததஜ புரோகிதர் பீ.ஜே. கடைந்தெடுத்த பொய்யர், அயோக்கியர், அல்லாஹ்மீதே ஆணையிட்டு அவதூறுகளைப் பரப்பும், அல்லாஹ்வையும், மறுமையையும் அஞ்சாத துன்மார்க்கர் என்பதை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்.நான் மிகவும் மதிக்கின்ற பெரியவர்களின் கோரிக்கைகள் என் கைகளைக் கட்டிவிட்டன. பல தரப்பினரும் எதையும் எழுத வேண்டாம் என்றே என்னை வற்பறுத்தினார்கள். அதனால் 26.12.1987 துண்டுப் பிரசுரத்தில் வாக்களித்தபடி அவற்றை பகிரங்கப்படுத்தவில்லை என்று பிப்ரவரி 1988 புரட்சி மின்னலில் எழுதினாரே அல்லாமல், கடந்த 22 வருடங்களாக அவதூறுகளை நிரூபிக்க முன்வராமல் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடிக்கொண்டிருப்பதோடு அவரும், அவரது கைத்தடிகளும், பக்தர்களும் அந்த அப்பட்டமான அவதூறுகளை உலகம் முழுவதும் இன்று வரை பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அல்குர்ஆன் அன்னிஸா 4:112, அல்அஹ்ஸாப் 33:58, அல்ஹுஜ்ரத் 49:12 போன்ற இறைக் கட்டளைகளை நிராகரித்துப் புறக்கணிக்கும் பெரும் பாவிகளாகவே ததஜ புரோகிதரும், அவரது கைத்தடிகளும் பக்தர்களும் இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட அப்பட்டமான அவதூறுகளை நம்மீது மட்டும் சுமத்தவில்லை. கடந்த 22 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 100ஐத் தாண்டும். ததஜ புரோகிதரின் வல்லம் மாநாட்டில் தடம் புரண்டவர்கள் என்று 65 பேர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது அனைவருக்கும் தெரியும். இப்போது பாக்கர் பிரிந்து இதஜ அமைத்த பின்னர் அந்த எண்ணிக்கை ததஜ புரோகிதரின் அகராதிப்படி 100ஐத் தாண்டும் என்பதில் சந்தேகம் உண்டா?இந்த 100 பேரும் யார் தெரியுமா? பீ.ஜே.யின் அறிமுகத்திற்கும், பிரபல்யத்திற்கும் தனி மனித வழிபாட்டிற்கும், அவரை தக்லீத் செய்யும் ஒரு கூட்டத்தை உருவாக்குவதற்கும் தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து உழைத்தவர்கள். ஆம்! ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் நன்றி கெட்டவன் என்பார்களே. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் பெரும் துரோகி என்பார்களே அப்படிப்பட்டதொரு கொடூர நெஞ்சம் படைத்த பெரும் பாவி ததஜ புரோகிதர் பீ.ஜே. நூற்றுக்கணக்கானோரைப் பற்றி நூற்றுக்கணக்கான அவதூறுகளை உலகம் முழுவதும் பரப்பி இருக்கிறாரே அவதூறு மன்னன் பீ.ஜே. நிரூபிக்கத் தயார், நீரூபிக்கத் தயார் என சவால் விட்டிருக்கிறாரே! அவர்களில் ஒரே ஒருவரைப் பற்றிய ஒரேயொரு அவதூறையாவது(மார்க்க விஷயமல்ல) உண்மை என்று நிரூபித்துள்ளாரா பீ.ஜே.? இல்லையே! உண்மைக் குற்றச்சாட்டாக இருந்தால் அல்லவா நிரூபிக்க முடியும். அவதூறுகளை நிரூபிக்க முடியுமா? முடியாதே!ஒவ்வொருவர்மீதும் பெண்கள் சம்பந்தமாகவும், பொருளாதாரம் சம்பந்தமாகவும் அப்பட்டமான அவதூறுகளை அவை அவதூறுகள்தான் என்று தன் கைத்தடிகளிடம் சொல்லிக் கொண்டே பரப்புவார். கைத்தடிகளைக் கொண்டும், பக்தர்களைக் கொண்டும் பரப்பச் செய்வார். விவாதத்திற்கு வா, விவாதத்திற்கு வா என விவாத மன்னன் பீ.ஜே.சவால் பிடுவார். குற்றச்சாட்டுக்களை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டுமேயல்லாது, அங்கு விவாதத்திற்கு இடமே இல்லை என்ற அடிப்படை அற்ப அறிவும் ததஜ புரோகிதருக்கு இல்லை என்பதுதான் வேதனை. சம்பந்தப்பட்டவர்கள் துணிந்து “வா! வந்து நிரூபி!” என அழைத்தால் பிடரியில் பின்னங்கால் அடிபட ஓடுவார். கடந்த 22 ஆண்டுகளாக இக்கூத்தாடியின் கூத்தை, அறிவை அவரிடம் அடகு வைக்காமல் சுயமாகச் சிந்திக்கும் மக்கள் அனைவரும் பார்த்துத்தான் வருகிறார்கள்.எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். அனைத்துக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ஒரே ஜமாஅத் எங்கள் ததஜ ஜமாஅத்துதான் என அகம்பாவத்துடன் பீற்றுவார் ததஜ புரோகிதர். ஆனால் நாம் கேட்டுள்ள மார்க்கச் சம்பந்தப்பட்ட எண்ணற்றக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல் வாய்க்கூசாமல் பொய் பேசித்திரிகிறார் என்றால் அவரது நாணயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தான் ஒரு ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த அண்டப்புளுகன், ஆகாசப் பொய்யன் என்ற உண்மை அம்பலத்திற்கு வந்து விடுமே என்ற அச்சத்திலேயே அந்நஜாத் வெளி வருவதில்லை, நின்றுவிட்டது என்ற அப்பட்டமான பொய்கூறி தனது பக்தர்களை அந்நஜாத்தைப் படிக்க விடாமல் ஏமாற்றி வருகிறார் பக்தர்களில் யாருக்கும் அந்நஜாத் பற்றி தெரிய வந்த படிக்க ஆரம்பித்தால் அவர்களை படிக்க விடாமல் தடுக்கிறார். அவரது பக்தர்களும் அவரது கூற்றை இறைவாக்காக(?) ஏற்று அந்நஜாத்தை தொடுவது கூட பாவம் என்று எண்ணிப் பயப்படுகிறார்கள். 1993 மே அந்நஜாத் இதழிலேயே பீ.ஜே.யின் அவதூறுகள் அனைத்தும் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு அவர் மகா பொய்யர், அயோக்கியர் என்பதை நிலைநாட்டி பீ.ஜே. அடையாளம் காட்டப்பட்டுள்ளார். அவரது முகத்திரை 1993லேயே கிழித்தெறியப்பட்டுவிட்டது. 1993 மே அந்நஜாத் இதழை முழுமையாகப் படிக்காதவர்களே பீ.ஜேயின் வசீகர வலையில் இன்று வரை சிக்கிச் சீரழிகிறார்கள். பாவப்பட்டவர்கள், பரிதாபத்துக்குரியவர்கள், பெரும் நஷ்டத்துக்குரியவர்கள். (அந்நஜாத் பிரதிகள் ஆரம்பம் முதல் கிடைக்கும்)பீ.ஜே.யின் பேச்சுச் சூன்யத்தில் மயங்கிக் கிடந்த பக்தர்களில் அல்லாஹ் அருள் புரிந்த சில சகோதரர்கள், அவர் ஆக், ஜாக், தமுமுக, ஐதஜ, ததஜ போன்ற புதிய புதிய அமைப்புகளுக்கு, குரங்கு மரத்திற்கு மரம் தாவுவது போல் தாவுவதையும், பச்சோந்தி போல் நிறம் மாறிக் கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியுற்று, சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்ததின் விளைவாக, ததஜ வழிகெட்ட பிரிவை விட்டும் தெளபா செய்து மீண்டு வருகின்றனர். பீ.ஜே.யின் கைத்தடிகளும், பக்தர்களும் சுய சிந்தனைக்குத் திரும்பியவர்களை வலிய வம்புக்கிழுத்து, அண்ணன் பீ.ஜே.யுடன் ததஜ பற்றி விவாதம் செய்ய அபூ அப்தில்லாஹ்வை அழைத்து வர முடியுமா? என அறைகூவல் விடுகின்றனர்; வற்புறுத்துகின்றனர். பீ.ஜே. விவாதப் புலி என்பது அவர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கை.ததஜவை விட்டு விடுபட்டவர்கள் எம்மை அணுகி பீ.ஜே.யுடன் விவாதம் செய்யும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு நீங்கள் தயாரா என் கேட்கின்றனர். நாம் ஒப்புக் கொள்கிறோம். ததஜவினர் விவாதத்தில் நழுவிச் செல்லும் கெட்ட நோக்கத்துடன் நேரடியாகக் கடிதம் எழுதாமல், ததஜ கிளையினருக்கே, நம் ததஜமாஅத் விவாதிக்கத் தயார் என்று பீ.ஜே. நழுவும் விதமாகக் கடிதம் எழுதுவது போல், அல்லது பீ.ஜே. தனது கைத்தடிகளைக் கொண்டு எழுதச் செய்வது போல், நாம் நழுவிச் செல்லும் நோக்கமில்லாமல் பீ.ஜே.க்கும் ததஜ தலைவர், செயலர், பொருளாளருக்கும் நேரடியாக நாமே தயார் என்று கடிதம் எழுதிக்கொடுக்கிறோம். அதை ஏற்கும் பக்குவமோ, தைரியமோ, நாணயமோ அவரிடம் இல்லை. நேரடி விவாதத்தை தவிர்க்க, நழுவிச் செல்ல என்ன என்ன தந்திரங்கள் உண்டோ அவற்றை எல்லாம் கைத்தடிகளைக் கொண்டு எழுதச் செய்து பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடுகிறார் பீ.ஜே.பீ.ஜே. தான் விவாதப்புலி அல்ல; காகிதப் புலி என்பதை நிரூபிக்கிறார். அவரது கைத்தடிகளும், பக்தர்களும் பீ.ஜே. விவாதப்புலி அல்ல; காகிதப்புலி மட்டுமே என்பதை உணர முடியவில்லையா? உணரும் காலம் வெகுவிரைவில் வரும். இன்ஷா அல்லாஹ்.விடுகிவாய்ச் சவடால் பேர்வழி ததஜ புரோகிதர் பீ.ஜே.க்கு இப்போது மீண்டும் பகிரங்கமாக நாம் அறை கூவல் ததஜ புரோகிதர் 26.12.87 துண்டுப்பிரசுரத்திலும், 1988 பிப்ரவரி புரட்சி மின்னல் மாத இதழ் பக்கம் 120லும் முதன்முதலில் சவால் விட்டு கடந்த 22 ஆண்டுகளாக பீ.ஜே.யும், அவரது கைத்தடிகளும், பக்தகோடிகளும் உலகெங்கும் பரப்பித் திரியும். “அடுத்தவருக்குச் சொந்தமானதை தன்னுடையதாக்கிக் கொண்டதும், அமானித மோசடியும்தான் பிளவு ஏற்பட முக்கிய காரணம். “ஸலபி என்ற பிரிவுக் கொள்கை” காரணமில்லை; இதை எங்கேயும் நான் நிரூபிக்க முடியும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்” என்று வாக்களித்தபடி வந்து நிரூபிப்பது ததஜ புரோகிதரின் கட்டாயக் கடமையாகும். அதன் பின்னரே மற்றவை; பின்னர் ஏற்பட்ட விவகாரங்களை எல்லாம் இத்துடன் இழுத்து பக்தர்களை தடுமாற்றத்தில் விட முற்படக்கூடாது. இது பீ.ஜே.க்கு கைவந்த கலை என்பதை நாம் மட்டுமல்ல பலரும் அறிவார்கள்.ததஜ புரோகிதர் பீ.ஜே. முன்வந்து, தான் 1987, 88களில் வாக்களித்தபடி அவரது அவதூறுகளை நிரூபிக்கத் தவறினால் அவர் அண்டப் புளூகர், ஆகாசப் பொய்யர், அல்லாஹ்மீது ஆணையிட்டு அப்பட்டமான அவதூறுகளை வாரி இறைக்கும் அயோக்கியர், அல்குர்ஆன் 7:175,176 கூறுவதுபோல் அவரை விட ஒரு கேடுகெட்ட ஜன்மம் இந்த வானத்தின் கீழ் இல்லை என்றெல்லாம் நாம் கூறி வருவதை அவரும் ஒப்புக் கொண்டு விட்டார் என்றே சுய சிந்தனையுள்ள மக்கள் முடிவுக்கு வருவார்கள். ததஜ புரோகிதர் உண்மையாளர் என்றால் 1987,88களில் கூறிய அவதூறுகளை முன்வந்து நிரூபித்துக் காட்டட்டும் பார்ப்போம். அல்லது பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கட்டும். “மோசடியை மறைக்கத் துணை செய்பவர்கள் மறுமையைப் பயந்து தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றும், ஏகத்துவம் பிப்ரவரி 2009 இதழில் இடம் பெற்றுள்ள பாக்கர் பற்றி அனைத்து உபதேசங்களும் பீ.ஜேக்கும் முதலில் மிகமிகப் பொருந்தும் நிலையிலும், அல்குர்ஆன் பகரா 2:44 கூறுவது போல் தன்னை மறந்து பிறருக்கு உபதேசம் செய்வதை விட்டு, ததஜ புரோகிதர் மறுமையைப் பயந்து, பொய்களையும், அவதூறுகளையும் பரப்பும் இழிசெயலை – கேடுகெட்ட செயலையும் மற்றும் அனைத்து கேடுகெட்ட இழி குணங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவே அவருக்கு மறுமையில் வெற்றியைத் தரும். பீ.ஜே. க்கு அல்லாஹ் மீதும் மறுமையின் மீதும் உறுதியான நம்பிக்கை இருந்தால் இதைத் தவிர வேறு வழி அவருக்கு இல்லை என்பதை அவர் உணர வேண்டுமே! ததஜ நிறவனர் பீ.ஜே. அவரது தவறை உணர்ந்து பாவமன்னிப்புக் கேட்டு மீள முன்வராவிட்டால், அவர் “தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்(ததஜ)” என்ற இயக்கத்தை உரமிட்டு, நீர்ப்பாய்ச்சிக் செழிப்பாக வளர்த்து வருகிறார் என்றே அல்லாஹ்வையும், மறுமையையும் அஞ்சி நடப்பவர்கள் முடிவுக்கு வரநேரிடும். வஸ்ஸலாம்.இடம் : திருச்சி – 620 008. தேதி : 18.02.2009இவண் உண்மையுடன்அபூ அப்தில்லாஹ், அந்நஜாத் ஆசிரியர்.5 1/1, ஜாஃபர்ஷா திருச்சி-8.

Wednesday, June 2, 2010

மூன்று சம்பவங்களுக்கு மூடர்களின் ஒப்பதல்.... சம்பவம் 2

சம்பவம் 2

தனி நபர் ஜமாஅத்தின் தலைமையகம் எதிரே இருந்த முஸ்லிம் சொத்தை அபகரிக்க, வக்கீல் ஒருவர் முயன்ற போது நாம் களமிறங்கி மீட்க நின்ற போது, எதிரே இருந்த இவர்கள் தலைமையகத்திற்கு தொழச் சென்ற நம்மை காவல் நிலையம் சென்று இவர்கள் தொழ வருவது அச்சுருத்தலாக உள்ளது. இவர்களின் தாஃவா சென்டர் எங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என புகார் அளிக்க சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார். இதுதான் இவர்களின் தாவா என கேலி செய்கின்றனர். இதுவும் ஒருவகை தாஃவா தான் அபகரிக்க நினைக்கும் மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம் சொத்தை மீட்டுக் கொடுப்பது பாவமா ? இவர்களை காட்டி வக்கீல்களை மிரட்டினோமாம். கற்பனைக்கு ஒரு அளவில்லையா ?
புகாரை ஏற்க மறுத்த போலிஸ் காறித்துப்பாத குறையாக துரத்தி விட்டதை மறைத்து, தலைமையகத்தை தாக்க பாக்கர் கூட்டம் வந்துவிட்டது என பொய் சொல்லி கிளை நிர்வாகிகளை வரவழைத்து, காவல் நிலையத்தில் உண்மையறிந்த கிளை நிர்வாகிகள், இவர்களை காய்ச்சிய கதையெல்லாம் மறைத்து பொய்யர்கள் புளுகுகின்றனர். சம்பவத்தன்று நாம் உதவிசெய்த சம்மந்தப்பட்ட சொத்துக்காரரை நீங்களே விசாரித்து உண்மை நிலையை அறிந் கொள்ளுங்கள் ! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
ஒரு புறம் வக்கீல்கள், மறு புறம் இவர்கள் 50 பேர் நிற்க காவல்துறைக்கு புகார் கொடுக்க இவர்கள் கூறுவது போல் கட்டப் பஞ்சாயத்து செய்திருந்தால், காவல்துறை ஏன் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? இதிலிருந்து தெரிவில்லையா? இவர்களின் குற்றச்சாட்டு பொய் என்று !

மூன்று சம்பவங்களுக்கு மூடர்களின் ஒப்பதல்.... சம்பவம் 3

சம்பவம் 3

பேருவளை சகோதரர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் பாக்கர் எங்களுக்கு உதவி செய்யவில்லை என பேட்டி கொடுக்க வேண்டும், என கேமராவும் கையுமாக வந்தவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர் அவர்கள் பாக்கரிடமும் வாங்கி, தங்களிடமும் வாங்கி விடுவார்கள் என அஞ்சியதால் தான் பேட்டி கேட்டனராம். அவர்கள் யாரிடமும் உதவி பெற்றுவிட்டு போகிறார்கள் உங்களுக்கு சந்தேகமிருந்தால் நாங்கள் இது சம்பந்தமாக யாரிடமும் உதவி பெறவில்லை என எழுதிக் கொடுங்கள் என கேட்டிருக்க வேண்டியது தானே ! அதை விடுத்து பாக்கர் உதவி செய்யவில்லை என பேட்டி கொடுங்கள் என பாக்கரை குற்றம் சாட்டுவதையே நோக்கமாக கொண்டு கேமாரவும் கையுமாக ஏன் அலைகின்றீர்கள் ?

ஆக இந்த மூன்று சம்பவங்கள் வாயிலாகவும் “எங்கப்பன் குதுருக்குள் இல்லை” என உண்மையை உளறி இறுக்கின்றனர் நாம் அல்லாஹ்வின் மீது ஆனையிட்டு சொன்னதாள் விளைவு அல்லாஹ் பொய்யர்கள் தங்கள் வாயிலேயே உண்மையை ஒத்துக் கொண்டதை பொதுவான முஸ்லிம்கள் புரிந்து கொண்டனர். இவர்கள் எந்தளவுக்கு இறங்கி தராதரமின்றி பேசுவார்கள் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த தான் நாம் முயன்றோம் அதில் அல்லாஹ் வெற்றியளித்து கொண்டிருக்கிறான். அல்ஹம்துல்லாஹ்.