Friday, June 25, 2010

ஒற்றுமை அழைப்பு உண்மையானால்!

ஒரு நாளாவது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று கூடுவோம் என விடுக்கும் அழைப்பு உளப்பூர்வமானது. உண்மையிலேயே சமுதாய அக்கறை கொண்டது என்பது உண்மையானால் நாம் சில ஆலோசனைகளை சொல்கிறோம் !
இயக்கவேறுபாடுகளை மறந்து எல்லோரும் வரவேண்டும் என விடுக்கும் அழைப்பு உண்மையானால் அவரவர் அவர்களது இயக்க கொடிகளோடு வரலாம். தங்கள் கட்சி கொடிகளோடு வரலாம் என அழைப்பு விடுங்கள் ! இட ஒதுக்கீட்டுக்காக எல்லோரையும் ஒருங்கிணைக்க களத்தில் இறங்கி அனைவரிடமும் பேசுவோம். இதுவும் நபி (ஸல்...) அவர்களின் வழிமுறை தான் ! மக்கா வெற்றியின் போது ஒவ்வொரு குலத்தவரும் தங்கள் கொடியோடு தான் ஒரு குறுகிய கணவாயை கடந்ததாக வரலாறு நமக்கு சொல்கிறது. நபி (ஸல்...) வழிமுறைப்படி மக்கா வெற்றி போல் இட ஒதுக்கீட்டையும் வெல்லலாம். மற்ற இயக்க தலைவர்கள் எல்லோரையும் மேடையில் பேச வைக்கலாம். ஒவ்வொரு வரும் தங்கள் பலத்தை நிரூபிக்க கட்டாயம் கொடிகளோடு வருவர். அனைவரின் லட்சியம் இடஒதுக்கிடு தான் என்றால் இப்போதும் காலம் கடந்து விடவில்லை. இல்லை உங்கள் பாலிஸிதான் பெரிதென்றால் மற்றவர்களை அழைக்காமல் ராமநாதபுரம் பொதுக்குழு தீர்மானத்தில் “மற்ற அனைத்து ஜமாஅத்துகளையும் புறக்கணித்து தனித்து செயல்படுவது” என்ற முடிவின்படி.
டிஎன்டிஜே வின் சுய பலத்தை காட்டுங்கள்.

0 comments:

Post a Comment