Sunday, May 30, 2010

கண்காணிப்பு கோபுரம் கவிழ்ந்த கதை !



கண்காணிப்பு என்றவுடன் பெரியார் தாசன் நினைவுக்கு வருகிறார். aபெரியார் தாசன் பரங்கிப்பேட்டை ஐஎன்டிஜே மீட்டிங்கில் இவர்களது கண்காணிப்புக்கு சரியான சூடு வைத்தார். “என்னை கண்காணிக்கிறேன் என்றவர்கள் ஒரு வாரத்தில் என் வீடு தேடி ஓடிவந்தனர்” என்று அவர் கூறியது வீறாப்பை விட்டுவிட்டு வளைகுடா எஜமானர்களின் வாய் மொழி கேட்டு பக்கத்தில் நின்று பவ்யமாக போஸ் கொடுத்த பொய்ஜே கூட்டத்திற்கு சரியான சவுக்கடி. மேலும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகளில் நான் ஏன் தொடர்ந்து பங்கேற்கிறேன் தெரியுமா ? அவர்கள் மக்களிடம் மாமறை குர்ஆனை கொண்டு போய் சேர்க்க பாடுபடுகிறார்கள். என்று கூறியதை கேட்ட பிறகு பெரியார் தாசனை தீவுத்திடலுக்கு அழைப்பதில்லை ! என தீர்மானித்துள்ளாராம். ஐஎப்டி. குர்ஆன் மொழியாக்கத்தை படித்து நேர்வழி
பெற்றவரை பிஜே மொழியாக்கம் தான் சிறந்தது என்று அவர் கூறியதாக இவர்கள் விட்ட புருடாவினால் இவர்கள் அழைத்தாலும் அவர் வருவது சந்தேகமே !

குனங்குடி ஹனிபாவை கண்டுகொள்ளாத காரணம் ?

சிறையிலிருக்கும் வரைக்கும் குனங்குடி ஹனிபாவை பற்றி பேசியும் எழுதியும் வந்தவர். அவர் வெளியே வந்ததும் கண்டுகொள்ளவே இல்லை ! ஏன் தெரியுமா ? தமுமுக தலைவர்களோடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தன்னை தமுமுகவில் இணைத்துகொண்டவதும். எஸ்.எம். பாக்கருக்கு அளித்த பேட்டியில் தன் இளைய மகன் ஜாபரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைத்து விட்டதும் தான் காரணம் நிலைமை இப்படியே போனால் தீவுத்திடலில் நடப்பது சமுதாயத்தால் “ ஒதுக்கப்பட்டோர் மாநாடாகத் தான் இருக்கும்.”

நாங்கள் தயார் நீங்கள் தயாரா ?

கீழக்கரை நசீரின் 50,000 எங்கே ? வல்லம் மாநாட்டு கணக்கில் பாண்டிச்சேரி ஜின்னா மற்றும் பொய்ஜே வகையில் விடுபட்ட 1 லட்சம் எங்கே ? தம்பி காஜாவிற்கு பொய்ஜே கொடுக்கச் சொன்னது 5 லட்சம் எங்கே ? கடந்த தேர்தலில் பன்னீர் மூலம் ஜெ கொடுத்து ஜெகவீ செலவழித்த தொகையில் மீதிப் பணம் எங்கே ? அப்போதைய பொருளாளர் தொண்டியப்பா மற்றும் எஸ்.எம். பாக்கருடன் அரசு தரப்பு ஆடிட்டர் மற்றும் இஸ்லாமிய இயக்க தலைவர்களுடன் பொது இடத்தித்திறகு நாங்கள் வர தயார். பொய்ஜே அன்டு கோ 5 வருட கணக்கு வழக்கை (உண்டியல் வரவு உட்பட) கொண்டுவரத்தயாரா ? எங்கள் ஜமாஅத் திறந்த புத்தகம் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கணக்கை பார்க்கலாம் என்று கூறும் நீங்கள் தயாரா ?

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதை

இரண்டு வருடங்களாக இயங்கி வந்த ஆட்டோ ஸ்டாண்டை அனுமதித்துவிட்டு இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் ஐஎன்டிஜே-வில் இணைந்த ஆட்டோ சங்கத்தினரை இப்போது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாய். நாங்கள் இது போன்ற துணை அமைப்புகளை அங்கிகரிப்பதில்லை என சால்ஜாப்பு. சென்னையில் தலைமைக்கு மிக அருகில் உள்ள மாவட்டத்தில் உள்ள ஆட்டோஸ்டாண்டை இரண்டு வருடங்களாக கவனிக்காமல் இருந்த இவர்கள் தான் மாநிலத்தையும் மற்றவர்களையும் கண்காணிக்க போகிறார்களாம்! இவர்களது சங்கம் ஆட்டோ நிறுத்த இடத்தை இழந்த போது போராடாதவர்கள் தான் இடஒதுக்கீடு கேட்டு போராட போகிறார்களாம்.

மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை !

அன்பிற்குரிய சகோதரர்களே ! இணைய தளத்திலே சில சகோதரர்கள் இந்த இணைய சண்டையை நிறுத்த வேண்டும் ! என கோரிக்கை வைத்துள்ளனர். நமக்கு ஆசைதான் ! பேசிச் சேர்த்த நன்மைகளை எல்லாம் ஏசித் தீர்பதற்கு எமக்கும் விருப்ப மில்லைதான் ! ஆனால் நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான். என்ற மாவோவின் தத்துவப்படி மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று அதை இருக்கவிடுவதில்லை. என்பதுபோல் இரண்டாண்டு காலமாக அவர்கள் பொய்யையும் அவதூறையும் ஆயுதமாக சுமந்து தங்கள் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும், இணையத்திலும் இவர்கள் கக்கிய விஷம், ஆபாசம், சொல்லி மாளாது ! மார்க்க வரையறைகளை மீறி மனிதக்கறி தின்ற இவர்களை பார்த்து இப்போது கேட்பவர்கள் அப்போது ஏன் கேட்கவில்லை ! மறுமை நம்பிக்கையற்ற கொள்கையற்ற அரசியல்வாதிகள் கூட பிரிந்துள்ளனர். இவர்களைப்போல் ஒரு மனிதனின் கண்ணியத்தோடும் மானத்தோடும் விளையாடவில்லை ! ஆனால் ஏகத்துவம் பேசும் இவர்களை எதிர்த்து கேள்வி கேட்டவர்களின் குடும்பத்தை இழுக்கும் கேடு கெட்ட இவர்களின் வாயிலிருந்து வந்த வசுவுகள் கொஞ்சமல்ல ! பிரிந்த அன்றே இவர்கள் கேட்ட கேள்வி பாக்கரோடு உன் மனைவியை பஸ்ஸில் அனுப்புவாயா ? கேட்டவர்கள் கிளை நிர்வாகிகள் அல்ல ! கேவலத்திலும் கேவலம் குர்ஆன் ஹதிஸ் பேசும் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள். நாங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டோம். அநீதி இழைக்கப்பட்ட எங்களுக்கு அதே அளவில் பதிலடி கொடுக்க அல்லாஹ் அனுமதித்துள்ளான். பாக்கரோடு பஸ்ஸில் உன் மனைவியை அனுப்புவாயா ? என்று அவர்கள் கேட்டால் குற்றமில்லை ! ஏற்கனவே நீங்கள் உங்கள் மனைவியை அனுப்பினிர்களா ? என்று நாங்கள் கேட்டால் குற்றமா ? நியாத்தை பேசினால் பாக்கர் போடும் எலும்பு துண்டுக்கு பேசுகிறார்கள் என்பவர்களை பார்த்து ஏற்கனவே பாக்கர் போட்ட எலும்பை தின்ற அனுபவமா ? என்று கேட்டால் தவறா ? அவர்களின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பாக்கருக்கு லட்சக்கணக்கில் பணம் தரவேண்டிய நிலையில் இருக்க கேவலம் ரூ. 50,000/- ஜமாஅத் பணத்தை பாக்கர் தின்றார் என்று கூறுகின்றீர்களே நெஞ்சிலே கைவைத்து அல்லாஹ்வுக்கு அஞ்சி சொல்லுங்கள் ! உண்மையை யார் குடும்பத்தோடு ஜமாஅத் பணத்தை தின்கிறார்கள் என்பதை தம்பிக்கு உணர்வு, மைத்துனர்களுக்கு சன், மூன், மகனுக்கு எடிட்டிங், தனக்கு குர்ஆன், என மாதம் ஒன்றுக்கு பல லட்சத்தை மக்களிடம் தவ்ஹீத்தை சொல்லி சுரண்டும் கூட்டத்தை ஊருக்கு உணர்த்தினால் தவறா ?

மேலும், பொய்யன் பிஜே வலைத்தளம் துவங்கியது முதலிலா ? நாம் வலைத்தளம் தொடங்கியது முதலிலா என்பதை சிந்தித்துப் பாருங்கள் ? அபு யூசுப் எனும்பெயரில் அவரே தரம் தாழ்ந்து அவதூறை பரப்பியதால் தான் பதிலுக்கு பதில் என்கிற ரீதியில் நாமும் இறங்கினோம். சகோதரர் சொல்வதுபோல் தாக்குதலை துவங்கியவர்கள் நிறுத்தட்டும் ! பிறகு நாமும் நிறுத்துகிறோம். அவர்கள் ஆயுதத்தை கீழே வைக்காத வரை நாமும் வைக்கப்போவதில்லை.

Friday, May 28, 2010

பொய் ஜெவின் பொருளாதாரச் சுரண்டல் !

பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தினரை கட்சியிலோ பதவிகளிலோ புகுத்தினால் அதை வாரிசு அரசியல் என வசைபாடுவோர். ஏகத்துவம் பேசி மக்களை சுரண்டும் மனிதர்களை மறந்து விடுகின்றனர். மன்னித்து மறந்து விடுகின்றனர்.
பணத்தாசை இல்லாத பரிசுத்தவானாக, அப்பழுக்கில்லாத, அறிஞராக எளிமையை விரும்பும் ஏழையாக புகழை விரும்பாத புண்ணியாத்மாவாக வெளியே காட்டிக் கொள்ளும் இவர் உண்மையில் இதற்கு நேர் எதிரானவர். அபு அப்துல்லாஹ் கூறுவது போல் எதை வேண்டாம் என்கிறாறோ அது வேண்டும் என்று அர்த்தம் பணத்தை வேண்டாம் என்பார் பாக்கெட்டில் வைத்து திணிக்க வேண்டும் என விரும்புவார். எளிமை வேஷம் போடுவார் புதிதாக சந்தைக்கு வரும் அனைத்து எலக்டானிக் கருவிகளும் (குறிப்பாக செல்போன், பேனா, மைக், கேமரா போன்ற புலனாய்வு சாதனங்கள்) இவருக்கு முதலில் கிடைத்துவிடும். எனக்கு ஏசி ரூம் வேண்டாம்மா என்று சொல்லி விட்டு பின்னாள் வரும் நிர்வாகியிடம் நாளைக்கு புரோக்ராம் நல்லா வரனும்னா அண்ணன் நிம்மதியா தூங்கனும் அவர் வேணான்னு தாம்பா சொல்வார் நாம தான் ஏற்பாடு செய்யனும் ! என்று சொல்ல சொல்வார். மேடைக்கு வரும் போது அடக்கமாக பின்னால் சென்று அமர்ந்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்ப்பார்.

இப்படித்தான் ஜமாஅத்தை வைத்து சம்பாதிப்பதாக பாக்கர் உள்ளிட்ட பல நிர்வாகிகளை கூறுவார். ஆனால் உண்மையில் பார்த்தோம் என்றால் இந்த ஜமாஅத்தை வைத்து சம்பாதிப்பது இவரும் இவரது குடும்பத்தினரும் தான் ! கொள்கைச் சொந்தமே சொந்தம் குருதி சொந்தம் தேவையில்லை புறக்கணிப்போம் எனக் கூறி குடும்பங்களையெல்லாம் பிரித்த இந்த புண்ணியவான். அதை தன் குடும்ப விஷயத்தில் கடைப்பிடித்தாரா ? என்றால் இல்லவே இல்லை வெள்ளிக்கிழமை கூட தொழுகாத இவரது தம்பி காஜா இவர்தான் உணர்வின் விளம்பர ஏஜென்ஸியான பிடபில்யூபி ஏஜென்ஸியை நடத்துகிறார். இவரது பொறுப்பில் நடக்கும் உணர்வுக்கு திடிரென 5 லட்சம் கொடுங்கள் என கூறுவார் ஜமாஅத் - பணத்திலிருந்து கொடுக்கும் பொருளாளருக்கு கணக்கேதும் கிடைக்காது.

தொழுகையில்லாத, ஒழுக்கமில்லாத இவரிடம் வரும் தவ்ஹீத் சகோதரர்களிடம் எப்படி பேசுவது என்ற மரியாதையும் தெரியாத மைத்துனர்கள் இவருக்கும் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி கொடுத்தள்ளார். சன் பிரிண்டிங் ஏஜென்ஸியும், மூன் பப்ளிகேஷன் தான் ! அவைகள். இந்த சன் பிரிண்டிங் ஏஜென்ஸிதான் ஜமாஅத்தின் பெரும்பாலான பிரிண்டிங் வேலைகளை எடுக்கும் தேர்தல் வந்துவிட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம் தான் ! ஏனென்றால் அரசியல் வாதிகளிடம் நேரடியாக காசு வாங்க மாட்டோம் செலவு செய்துவிட்டு பில் தருவோம் நீங்கள் கொடுத்து விடவேண்டும் என பேரம் பேசி பெருந்தொகையை பிரிண்டிங்க்கு கறந்து விடுவர். இப்படித்தான் கடந்த முறை பன்னீர் மூலம் ஜெ தந்த பல லட்சம் பணம் ஜெகவீ மூலமாக தேர்தல் பிரசார செலவாக காண்பிக்கப்பட்டது. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு தேதி வேண்டும் என்றால் குண்டு வைத்தது யார் ? என்ற பிரசுரத்தை 3000 பிரிண்டிங் செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்த கொடுமை எல்லாம் பெரிய குளம் சகோதரர்கள் நிகழ்ச்சி நடத்தியபோது வெளிப்பட்டது. பாக்கர் ஜமாஅத் பேரை பயன்படுத்தி சம்பாதிக்கிறார் என குய்யோ முறையோ என குதித்த ஹாமிம் இப்ராஹிம் ஜமாஅத் பெயரை பயன்படுத்தி இவரது மைத்துனர்கள் அப்பட்டமாக காலண்டர் போட்டு சம்பாதிக்கிறார்கள் என நாம் குற்றம் சாட்டிய போதும் பொதுச் செயலாளரே அது தவறு என்று ஒப்புக் கொண்ட பிறகும் கூட கண்டு கொள்ளவில்லை.

இது (சன்) சூரியத் தொல்லை என்றால், (மூன்) சந்திர தொல்லைக்கு எல்லேயே இல்லை ! மூன் பப்ளிகேசன் என்ற பெயரில் குர்ஆனில் அடிக்கும் கொள்ளயோ குடும்பக் கொள்ளை ! தமிழகத்தில் யாரும் வைக்காத விலை வைத்து குர்ஆனை 300 ரூபாய்க்கு விற்று வருடத்திற்கு 10,000 குர்ஆன் மற்ற வியாபாரங்களை எல்லாம் பார்த்து வாங்குங்கள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி என்பதற்காக வாங்கி விடாதீர்கள். என்று விளம்பரம் செய்யும் இவர்கள் மற்ற தர்ஜமாக்களை விட இவர் தர்ஜமாவின் தரம் குறைந்து இருக்கலாம் என விளம்பரம் செய்யாதது ஏன்? மற்ற வியாபாரங்களை பற்றி வந்த புகார்களை விட இவரது குர்ஆன் விலை குறித்து வந்த புகார் அதிகமல்லவா ! மற்ற வியாபாரத்தில் நடந்த தவறுகள் குறித்து வந்த புகாரைவிட தர்ஜமா தவறுகள் குறித்து உலக முழுவதும் உள்ள மார்க்க அறிஞர்களிடத்தில் இருந்து புகார் அதிகமல்லவா.
இதைபற்றிக்கேட்டால் பிர்தவ்ஸியை வைத்து கையை மடக்கி டிவியில் விளக்கம் வேறு ! உயர்தர பிரிண்டிங், உயர்தர பைண்டிங், என்று சப்பைக்கட்டு அதுவும் ஜமாஅத் காசை பயன்படுத்தி மக்கள் பயான் பார்க்கும் நேரத்தில். ரஹ்மத் டிரஸ்ட் புகாரி தமிழாக்கம் எவ்வளவு தெரியுமா? என்று வியாக்யானம் பேசுகின்றனர். ரஹ்மத் டிரஸ்ட் உண்மையில் பெரும் பணத்தை செலவழித்து டிரஸ்ட் வைத்து, அலுவலகம் வைத்து,மொழிபெயர்ப்பு குழு அமர்த்தி, அதில் பல மவ்லவிகளுக்கு சம்பளம் கொடுத்து, பணியார்கள் வைத்து, லட்சக்கணக்கில் விளம்பரம் செய்து தங்களின் தாய் தந்தையருக்கு நன்மை சேர்க்க பணத்தை இழக்கின்றனர். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு பணம் சேர்க்க, ஜமாஅத் ஆலிம்களை இலவசமாக பயன்படுத்தி ஜமாஅத் பணியாளர்களையும், தாவா சென்டர் மாணவர்களையும் பயன்படுத்தியுள்ளீர்கள் யாருக்காவது சம்பளம் கொடுத்ததுண்டா ? சம்பளம் வேண்டாம் ! டிவியில் தினமும் வருகிறதே விளம்பரம் அதற்கு எப்போதாவது கொடுத்ததுண்டா ? சாதாரண கிளை நிகழ்ச்சி விளம்பரத்திற்கு நச்சரித்து காசு வாங்கும் தலைமை, குடும்ப கொள்ளை கூட்டத்திடம் காசு வாங்கிய துண்டா? 2005ல் இருந்து கணக்கு வழக்கை காட்ட துணிவுண்டா? ஜமாஅத்தின் அவ்வளவு வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தி சுரண்டும் நீங்கள் ரஹ்மத் டிரஸ்ட்க்கு ஒப்பிட தகுதி உண்டா? இதில் மற்றவர்களை வழிகேட்டில் உள்ளவர் என சொல்கின்றீர்கள். கோவை குர்ஆன் அறக்கட்டளை 45,000 குர்ஆனை இதுவரை முஸ்லிம்மல்லாத நபர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளது. ஆறே மாதத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 5000 குர்ஆனை மாற்றுமதத்தவருக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தமிழகத்தின் பெரிய ஜமாஅத் என மார்தட்டும் நீங்கள் எத்தனை குர்ஆனை இலவசமாக கொடுத்துள்ளீர்கள் ? 50,000 குர்ஆனை இலவசமாக கொடுத்தவர்கள் வழிகேடர்கள். 50,000 குர்ஆனை ரூ.300க்கு விற்று லாபம் சம்பாதிக்கும் இவர்கள் நேர்வழி
பெற்றவர்களா? சிந்திக்க வேண்டாமா !

மைத்துனர்கள் கதை இதுவென்றால் மகன் கதை அதைவிட மோசம் ஒரு பெண்ணை காதலித்து அவளோடு கலந்துறவாடி, இவரை நம்பி இஸ்லாத்தை ஏற்ற பெண்னை அவளது தந்தையோடு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போட்டு துரத்தியவர் அப்படிப்பட்ட மகனுக்கு ரிக்கார்டிங், எடிட்டிங் என ஜமாஅத்தை வைத்து சம்பாத்தியம். ரீசார்ஜ் கூட இவரது மூன் கடையில் தான். மாநில நிர்வாகிகளுக்கு ! மாதம் ஒன்றுக்கு எடிட்டிங் வகையில் இருந்த குடும்பத்திற்கு 30,000 போய்ச் சேருகிறது. சிடி போட்டு பாக்கர் சம்பாதித்தார் என குற்றம் சாட்டும் ஹாமிம் இப்ராஹிக்கு ரிக்கார்டிங்போட்ட குடும்பம் நினைவுக்கு வராதது ஏனோ ? இப்போது புதிய கடையில் வாடிக்கையாளரை கவர தந்தையே கடையில் நின்று வியாபாரம் செய்து கொண்டுள்ளார். (எதிர் கடைகாரர் இவர் ஏன் எந்த வக்துக்கும் தொழபோகவில்லை என நம்மிடம் கேட்கிறார்.)

ஆக மற்றவர்கள்ளை எல்லாம் “இப்ராஹிம் நபி வழியில் குருதிச் சொந்தங்களை புறக்கணிப்போம் ! எனச் சொல்லிவிட்டு இவர் மட்டும் தொழுகையில்லாத, ஒழுக்கமில்லாத, ஏன் கொள்கையில்லாத, சொந்தங்களை புறக்கணிக்காமல் இருப்பதோடு, அப்பாவி தவ்ஹீத் கொள்கைச் சொந்தங்களை கொள்ளை அடித்து குடும்ப ஆட்சி நடத்துகிறார். ஏஜென்ஸி, சிடி, புக்ஸ், குர்ஆன், எடிட்டிங் ரிக்கார்டிங், ரீசார்ஜ் பிரிண்டிங்க ஏகத்துவ சகோதர்களிடம் சுரண்டி கொழுக்கிறார். கருணாநிதியை விட கேவலமாக தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வைத்து ஜமாஅத்தை உறிஞ்சுகிறார். அப்பாவி தவ்ஹீத் சகோதரன் பார்த்தால் அண்ணன் சிடி, படித்தால் அண்ணன் புக், மாட்டினால் சன் காலண்டர், நோட்டிஸ் போட்டால் சன் பிரிண்டிங், மிட்டாய் வாங்கினால் மூன், ரீசார்ஜ் பண்ணினால் மூன் என கொண்டு போய் கொட்டி விட்டு இன்னும் நடுத்தெருவில் நிற்கிறான்! இதற்காகவா ஏகத்துவம் பேசினோம். இதற்காகவா தவ்ஹீத்தை வளர்த்தோம் ! இவருக்காகவா குடும்பத்தை பகைத்தோம். ஊரை பகைத்தோம். உறவை வெறுத்தோம். நினைத்தால் வேதனையாக இருக்கிறது. இது கேவலமாக இல்லையா அடிவாங்கி உதைவாங்கிய தியாகம் செய்தது எல்லாம் ஒரு குடும்பம் பிழைக்கவா ? வேறுயாராவது இப்படி இந்த ஜமாஅத்தில் குடும்பத்தோடு பிழைக்க ஜமாஅத் அனுமதிக்குமா? ஜமாஅத் நிர்வாகிகள் உண்மையிலேயே நியாய வான்களாக இருந்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கட்டும் ! இல்லையேல் பரிசுத்தமான ஜமாஅத், என்றெல்லாம் கூறுவதை விட்டு பிஜே அன்டு கோ என பேரை மாற்றட்டும்.

Wednesday, May 26, 2010

முன்பே உரைத்த மக்கள் ரிப்போர்ட் !

இதகேளுங்க பகுதியில் மேலாண்மை குழு தேவையில்லை ! என பொதுக்குழுவில் தைரியமாக உரைத்த தஞ்சை நிர்வாகிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்படலாம் என நாம் கூறிய செய்தி உண்மையாகிறது. தஞ்சை நிர்வாகிகள் கட்டம் கட்டப்பட்டு உள்ளனர். என்ற செய்தி நமது உளவுத்துறையின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகிறது.

கடையநல்லூர் கசமுசா உண்மை என ஒத்துக்கொண்ட உணர்வு !


கடைய நல்லூர் கல்லூரியில் நடைபெற்ற ஹோமோ செக்ஸ் குற்றச்சாட்டை நாம் கூறிய போது கொந்தளித்த தக்லீது ஜமாஅத் தற்போது கடந்த வார உணர்வில் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. (பார்க்க உணர்வு) சைபுல்லா மற்றும் நிர்வாகிகளின் கண்காணிப்பு சரியில்லை. பொது மக்கள் கண்காணிப்பு தான் சிறந்தது என்பதினால்தான் மக்கள் கண்காணிப்பு மிகுந்த மேலப் பாளையத்திற்கு கல்லூரி மாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளனர். மாணவர்களை மாற்றி என்ன செய்வது மவ்லவிகளை மாற்றாதவரை தொடர்ந்து நடக்கும் இந்த அசிங்கத்திற்கு தீர்வில்லை !


சிறை சென்றது யாரால் ?அப்துல் கபூர் பேட்டி


பாதிக்கபட்டவர் : அப்துல் கபூர்
CLIP 1



CLIP 2


CLIP3


CLIP4


CLIP 5




Pj வுக்கு பெரியகுளம் INTJ சவால்!!!

Pj வுக்கு
பெரியகுளம்
INTJ சவால் .

1997 ல்
பெரிய குளம் DPI மீடிங்கில் தியாகி முருகன் உருவ பட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியதை குர்ஆன் ,ஹதிஸ் அடிப்படையில் சாட்சிகளோடு நிருபிக்க தயார் !
Pj தயாரா !

விளக்கம் பெற
சலாம் -9944437119
ரபிக் ஜமான் -9443378430

Tuesday, May 18, 2010

P.J வின் பிரித்தாளும் சூழ்ச்சி வரலாறு .

கண்ணியத்திற்குரிய அண்ணன் முத்துப் பேட்டை ஏ.ஆர். பரகத் அலி அவர்கட்கு, கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் நோக்கம் நல்ல நோக்கம்.

தமு.மு.கவின் மாநில நிர்வாகிகள் மற்றும் பீ.ஜெய்னுல்ஆப்தீன், எஸ்.எம்.பாக்கர், ஏ. எஸ். அலாவுதீன் மற்றும் இதர சகோதரர்களுக்கு.. ... சைத்தானுடைய சூழ்ச்சிக்கு விலை போன அ(கே)வலத்தை பார்த்து மனம் வெதும்புகிறோம்... என்று மனம் வருந்தி நீங்கள் எழுதிய ஈமெயில் கிடைத்தது. hவவி:ஃஃறறற.pதஎளவஅஅம.உழஅ என்ற வெப் சைட்டிலும் பார்த்தேன். உங்கள் நிலையில் இருந்து நீங்கள் எழுதியது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது நடக்காத காரியம் என்பது எனது நிலையாகும். உங்கள் நோக்கம் நல்ல நோக்கம். ஒற்றுமைக்கு உங்கள் மனதில் பட்ட வழியை ஆலோசனையாக எழுதி இருந்தீர்கள். எனவே உங்களுடைய நல் எண்ணத்திற்கு மதிப்பளித்தும், இப்படிப்பட்ட சமுதாய உணர்வு உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதை பிறர் அறியச் செய்ய என்னிடம் உள்ள ஐ.டி.களுக்கு பார்வேடு பண்ணினேன்.

சுட்டுக் கொன்றாலும் தவறே இல்லை.

பாவிகளா உங்களை சுட்டுக் கொன்றாலும் தவறே இல்லை. என்ற வார்த்தை சமுதாய நிலையைக் கண்டு உங்கள் மனதில் ஏற்பட்ட பாதிப்பின் வெளிப்பாடு என்று விளங்கினேன். சுடுபவன் சொல்லி விட்டு சுட மாட்டான். நேரடி பொருளில் விளங்கி இருந்தால் மற்றவர்களுக்கு நான் பார்வேடு பண்ணி இருக்க மாட்டேன்.

விளங்குவதற்கும் விளக்குவதற்கும் உதாரணம்.

சுட்டுக் கொன்றாலும் தவறே இல்லை என்ற வார்த்தையை நேரடி பொருளில் விளங்கக் கூடாது. அது ஆதங்கத்தின் வெளிப்பாடு என்று பதில் அளித்த நீங்கள், விளங்குவதற்காக நெருப்பு என்று சொல்வதால் சுடப்போவதும் இல்லை. மிளகாய் என்று சொல்வதால் நாக்கு உறைக்கப்போவதும் இல்லை. என்று உதாரணங்கள் கூறி விளக்கி இருந்தீர்கள்.

விளங்குவதற்கும் விளக்குவதற்கும் உதாரணம் அவசியம் என்று உணர்ந்துள்ள நீங்கள் அனுப்பிய விளக்க மெயிலில், துபையிலிருந்து சகோதரர் பழ்லுல் இலாஹி செய்வதை போலவா செய்ய சொல்கிறீர்கள். இவருடைய பல பிரசுரங்களை படிக்க முடியாவிட்டாலும் சிலவற்றை படித்தேன். அவ்வாறு படித்ததில் த.மு.மு.க வில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மேலப்பாளையம் காரணமா? என்ற பிரசுரமும் ஒன்று. அதில் அவர் ஒரு இடத்தில் நல்ல கருத்தை சொல்லியுள்ளார் அது, இரண்டு பேர்களுக்கு மத்தியில் சண்டை நடந்தால் மனித இதயம் உள்ள 3 வது ஆள் சமாதானம் செய்து வைக்கத்தான் முயற்சி செய்வார்கள். இவரிடம் தவறு குறைவு அவரிடம் கூடுதல் என்று கூறி இரு அணிகளாக ஆக்க மாட்டார்கள்........ என்று எழுதியுள்ளார். ஆனால் அவர் என்ன செய்து கொண்டு உள்ளார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். என்று எழுதி இருந்தீர்கள். அதற்குரிய விளக்கம் - நேரடி பதில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அதை எழுதுவதற்கு முன் விளக்குவதற்காக ஒரு உதாரணம்.

தலாக் வழக்குகளில் கூறிய 2 விதமான தீர்ப்புகள்.

50 வயது பெரியவரும் 20 வயது இளைஞரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அங்கு 25 வயதுக்கு உட்பட்ட கணவன் மனைவி வழக்கு வருகிறது. ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள். இனி சேர்ந்து வாழ முடியாது தலாக்தான் சரியான முடிவு என்று 2 பேருமே கூறுகிறார்கள். அப்பொழுது 50 வயதுக்காரர் உங்கள் கணவர் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் தெரியுமா? உங்களது குணத்தை எவ்வளவ உயர்வாக புகழ்ந்தார். உங்களுக்காக எவ்வளவு தியாகம் செய்துள்ளார் என்று பொய்யான வார்த்தைகள் கூறி ஒற்றுமையாக வாழச் சொல்கிறார். அதே மாதிரி மனைவியைப் பற்றி அந்தக் கணவர் இடம் உயர்வாகக் கூறி சேர்ந்து வாழச் சொல்கிறார்.

அதே இளைஞருடன் இன்னொரு நாள் அந்த பெரியவர் இருக்கும் போது இன்னொரு கணவன் மனைவி வழக்கு வருகிறது. வந்த கணவர், 'எதற்கெடுத்தாலும் எப்பப் பார்தாலும் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஷபோய்விடுவேன், போய்விடுவென்' என்று சொல்லி வேதனை செய்து கொண்டிருந்த என் மனைவி போய் விட்டாள். நானாக தலாக் விட்ட மாதிரி எழுதி என்னிடம் கையெழுத்து வாங்கி போய்விட்டாள்' என்கிறார். அதற்கு அந்த முதியவர் உன்னை பிடித்திருந்த சனியன் தொலைந்து விட்டது என்று நிம்மதியாக இரு என்று சொல்லி விடுகிறார்.

அருகில் இருந்த இளைஞர் கடுங் கோபம் அடைந்து, நீங்கள் நீதியான நல்ல மனிதர் என்று எண்ணினேன். முன்பு வந்த கணவன் மனைவி இடம் சேர்ந்து வாழ வலியுறுத்தினீர்கள். ஒற்றுமை பற்றி மணிக் கணக்கில் பேசினீர்கள். இப்பொhழுது என்ன செய்தீர்கள்? வந்தவரிடம் என்ன சொன்னீர்கள்? ஒற்றுமைக்கு முயற்சி செய்யாமல் அதற்கு முரணாக நடந்து கொண்டீர்களே! இது என்ன நியாயம் என்றார்.

அதற்கு அந்த முதியவர் சொன்னார் முதலில் வந்தவர்கள் இளம் தம்பதியினர். 2 பேருக்கும் மத்தியில் இதுதான் முதல் தகராறு. 2 வது வந்தாரே அவருக்கு அவள் முதல் மனைவி. அவளுக்கோ அவர் 10 வது கணவர். ஒவ்வொரு கணவனிடமிருந்தும் ஓரிரு குழந்தை பெற்றதும் தானாக பிரிந்து விடுவாள். வேறு ஒருவரை திருமணம் செய்து விட்டு முந்தைய கணவனை ஆண்மையற்றவன் என்று விமர்சித்து அசிங்கப்படுத்தி விடுவாள் அந்த ஈவு இறக்கமற்ற அரக்கக் குணமுடைய சுயநலக்காரி. புதிய கணவனை வரம்பு மீறி புகழ்வாள். இதை 20 வருடமாக பார்த்து வருகிறேன்.

இது வரை எந்த கணவனும் பெரிய மஹர் வைக்கவில்லை. தலாக்கை கணவனிடமிருந்து பெறாமல் தானாக பிரிந்து விடுவாள். கடைசி கணவர் பெரிய சொத்தை மஹராக வைத்துள்ததால், தானாக போனால் மஹர் சொத்து கிடைக்காது என்பதால் கணவன் தலாக் விட்ட மாதிரி எழுதி வாங்கிவிட்டு போய் விட்டாள் அந்த சண்டாளப் பாவி என்று விளக்கம் கூறினார்.

அது மாதிரிதான் காலித், சிபகத் விஷயத்தில் நான் எடுத்த ஒற்றுமை முயற்சி முதலில் வந்த தம்பதிகள் மாதிரி. பி.ஜே. விஷயம் இருக்கே 2 வது வந்த வழக்கு மாதிரி.

கொள்கைக்காக ஊரை உறவை எல்லாம் தியாகம் செய்திட்ட எழுச்சி.

1986 ஏப்ரலில் இருந்து சரியாக ஓராண்டு காலம் அந்நஜாத் மூலம் தவ்ஹீது எழுச்சி வரலாற்றில் நினைத்து பார்க்க முடியாத பரபரப்பு. ஆறு குளம் பாபர்ஷhப் என எங்கு பார்த்தாலும் அரசியல் பேசி வந்தவர்கள் ஹதீஸ் ஆயத்கள் பற்றி பேசினார்கள். அந்த ஹதீஸில் வரும் ராவி பலஹீனமானவராம் என்று அரபி கல்லூரிகளுக்குச் செல்லாதவர்களெல்லாம் பேசிய காட்சி, கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் கொள்கைக்காக ஊரை உறவை எல்லாம் தியாகம் செய்திட்ட எழுச்சி.

அறிஞர் அபு அப்துல்லாஹ்.

இந்த எழுச்சியின் போது அபு அப்துல்லாஹ் அவர்களை அறிஞர் என்று பாராட்டிய பி.ஜே. கொள்கை எழுச்சியைப் பற்றி கவலைப் படாமல் அந்நஜாத்தை விட்டு வெளியேறினார். அப்பொழுது ஏற்பட்டிருந்த எழுச்சி அப்படியே அமுங்கியது. அபு அப்துல்லாஹ்வுடன் ஒரு கூட்டம் இருக்க இவர் பின்னால் ஒரு கூட்டம் பிரிந்து வந்தது.

வரலாற்று நிகழ்ச்சியுடன் நீங்கள் ஒன்றி விட்டால் போதும்.

சுட்டுக்கொன்றாலும் தவறே இல்லை என்ற வார்த்தையை எப்படி உங்களின் ஆதங்கமாக எடுத்துக் கொண்டோமோ அது போலவே, எனது விமர்சனங்களில் வரும் வார்த்தைகளை ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். என்ற நிபந்தனை வைத்து விட்டு, ஆங்காங்கு எமது ஆதங்கத்தில் வெளிவரும் கடுமையான வார்த்தைகளை எழுத முடியும். ஆனால் எந்த வார்த்தையையும் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிடும் வரலாற்று நிகழ்ச்சியுடன் நீங்கள் ஒன்றி விட்டால் போதும். சரியான தீர்வு ஏற்படும் இன்ஷh அல்லாஹ்.

நபி வழியில் நம் ஜக்காத் நூலை எழுதியவர் ..

1987ல் இப்படி இரண்டு கூறுகளாக்கியவர் இக்பால் மதனியின் துபை ஐ.ஏ.ஸி கிளையை மதுரையில் துவங்கி புரட்சி மின்னல் பத்திரிக்கையில் எழுதி வந்தார். நபி வழியில் நம் தொழுகை, நபி வழியில் நம் ஜக்காத் ஆகிய சிறு நூல்களை எழுதிய பி.ஜே. இக்பால் மதனியை உயர்வு படுத்த அவர் எழுதியது போல் வெயிட்டார்.

இக்பால் மதனியின் ஐ.ஏ.ஸி.

1987ல் இக்பால் மதனி, அப்போதைய ஐ.ஏ.ஸி. தலைவர் கள்ளக் குறிச்சி சுலைமான் ஹாஜியார், மற்றும் துபை ஐ.ஏ.ஸி ஜமாஅத்மார்கள் பி.ஜே.யுடன் போனில் பேசி ரிக்கார்டு செய்து பொது மக்களுக்கு போட்டுக் காட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்நஜாத்திலிருந்து பிரிந்த அந்த புண் ஆறி வரும்பொழுது 1988ல் இக்பால் மதனியின் துபை ஐ.ஏ.ஸியை குறை கூறி ஒரு கடிதத்துடன் உறவை முறித்து பிரிந்தார்.

அந்த கடிதத்தை கண்ட துபை ஐ.ஏ.ஸி ஜமாஅத்மார்கள் இடிந்து போனார்கள். மனம் உடைந்து போய் இருந்த அவர்களின் அன்றைய நிலை இன்றும் கண்களில் நிற்கிறது. இதன் மூலம் ஒரு சிறு கூட்டத்தை கூறு போட்டு இக்பால் மதனியுடன் போக வைத்தார். பெருங் கூட்டத்துடன் ஐ.ஏ.ஸியில் இருந்து பிரிந்து வந்தார் அண்ணன் பி.ஜே.

கமாலுத்தீன் மதனிதான் அகில உலக அமீர்.

ஜாக்தான் இஸ்லாத்தின் அடிப்படையிலான முழுமையான அமைப்பு. கமாலுத்தீன் மதனிதான் அகில உலக அமீர் என்று புகழ்ந்தார். இவரது நடவடிக்ககைகளால் கடந்த காலங்களில் ஏற்பட்ட வீழ்ச்சிகளை மறந்து ஜமாஅத் மீண்டும் எழுச்சி பெற்று நல்ல வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அங்கிருந்தும் வெளியேறினார். இங்கேயும் ஜமாஅத்தை 2 கூறுகளாக்கி ஒரு கூட்டத்தை கமாலுத்தீன் மதனி பின்னால் இருக்க வைத்து விட்டு தன் பின்னால் ஒரு கூட்டத்தை பிரித்து வந்தார்.

மாவீரன் கோவை பாஷh.

கோவை பாஷhவை ஆதரிப்பதாக கூறி கமாலுத்தீன் கோழை, கோவை பாஷh மாவீரன் என்றார். அதுவரை கோவை பாஷh என்று அழைக்கப்பட்டு வந்தவரை பாய் என்று மட்டும் சொல்ல வைத்து கவுரவபடுத்தினார். இந்த நிலையில் குணங்குடி ஹனீபா அவர்களின் த.மு.மு.க.வில் சேர்ந்த அண்ணன் பி.ஜே. தவ்ஹீதுவாதிகள் த.மு.மு.க.வில் சேர வேண்டியதன் அவசியத்தை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கினார், த.மு.மு.க. வளர்ந்தது. அதன் மூலம் சன் டி.வி.யில் பேட்டி அளிக்க கிடைத்த வாய்ப்பை பாய்க்கு அளித்து அவரை உயர்வு படுத்தினார்.

கீழே போட்டு மிதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

"இப்படி யாரை புகழ்ந்து தூக்கி விட்டாரோ அவரை கீழே போட்டு மிதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே இவரது அகராதி" என்று அடிக்கடி லுஹா கூறுவார். அது போலவே கோவை பாஷhவை தூக்கிய வேகத்தில் தூக்கி வீசினார். கோவை பாஷh பின்னால் அல் உம்மா என்று இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் பிரிந்து செல்ல வைத்தார் அண்ணன் பி.ஜே.

அமைப்புகளின் தலைவர் ஹாமித்பக்ரி.

ஹாமித்பக்ரியை தலைவராகக் கொண்டு தவ்ஹீது பிரச்சாரக் குழு, இஸ்லாமிய கல்விச் சங்கம் இப்படி பல அமைப்புகள் துவங்கினார். தான் விரும்பியவர்களையே மக்கள் தலைவராக ஏற்க வேண்டும் என்பதே அண்ணன் பி.ஜே. அவர்களின் நிலைப்பாடு. கூட்டமைப்பு துவக்க நிகழ்ச்சியில் கூடி இருந்தவர்களில் பெரும்பாலனவர்களின் பேராதரவால் ஹாமித்பக்ரி தலைவரானார். தன்னைத் தவிர யாரும் மக்கள் செல்வாக்குப் பெறுவதை விரும்பாத பி.ஜே. சந்தர்ப்பம் பார்த்து அவரை தலைமை பொறுப்பில் இருந்து கழட்டி விட்டார்.

முன்னதாக இமாம் அலி சகோதரியை திருமணம் செய்யச் செய்தார். இதை ஒட்டிய எல்லா விபரமும் ஹாமித் பக்ரி கைது பற்றி பி.ஜே. விளக்கம், ஹாமித் பக்ரியின் கைதுக்குப் பின்னால் உள்ள உதிரத்தை உரைய வைக்கும் சதி. ஆகிய தலைப்புகளில் வெளியான பிரசுரங்களில் உள்ளது. ஹாமித்பக்ரி கைதை காரணமாக்கி அவர் முழுமையாக கழட்டி விட்டார். அவர் பின்னால் ஒரு கூட்டமும் தாஇகளில் பெரும்பாலானவர்களும் செல்ல 2 கூறுகள் ஆகச் செய்தார் அண்ணன் பி.ஜே.

ஜமாஅத்கள் வளரும்பொழுதெல்லாம்.

ஜமாஅத்கள் வளரும்பொழுதெல்லாம் இப்படி ஒவ்வொருவருடனும் சிறு சிறு கூறுகளை போட்டு ஜமாஅத்களை பிரித்து பலஹீனப்படுத்தி வந்தார் அண்ணன் பி.ஜே. புரட்சி மின்னல் அப்துல்லாஹ், ரஹ்மதுல்லா இம்தாதி, முஹ்யித்தீன் உலவி, கோவை ஐயூப், முஸ்தபா கமால், சீனி நைனா முஹம்மது என்று பட்டியல் நீளுகிறது.

அதிலாவது உருப்படியாக இருந்தாரா?

தவ்ஹீது அமைப்புகளில்தான் இப்படி கொள்கை கோட்பாடுகள் பெயரால் கூறு போட்டார். கொள்கை வேறுபாடுகளையும் மனிதர்களிடம் உள்ள குறைகளையும் மறந்து முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம் என்று சமுதாயம் த.மு.மு.க.வில் ஒன்றுபட்டது. அதிலாவது உருப்படியாக இருந்தாரா?

சமுதாயத்திற்குத் தெரிந்த இரு நிகழ்ச்சிகள்.

1997 திருச்சி பொதுக்குழுவில் மக்களிடம் கோபித்துக் கொண்டு அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்தையும் விட்டு ராஜினாமா செய்தார். அப்பொழுதும் சமுதாய எழுச்சியில் வீழ்ச்சி எற்பட்டது. அடுத்து மனம் திறந்த மடல் எழுதி ஒரு சோர்வை எற்படுத்தினார். பகிரங்கமான இந்த இரு நிகழ்ச்சிகள்தான் சமுதாயத்திற்குத் தெரியும்.

உயிருக்குத்தான் ஆபத்து என்பதில் சந்தேகம் உண்டா?

உடலில் ஒரு காயம் ஏற்பட்டால் அது அரிவாளால் வெட்டப்பட்ட மிகப் பெரிய காயமாக இருந்தாலும் வெட்டுப்பட்ட அந்த புண்ணுக்கு தையல்கள் போட்டு மருந்து கொடுத்து சரிபடுத்திவிட முடியும். மிக மிகச் சிரிய புண்ணாக இருந்து அது அழுகி விட்டால் அதை வெட்டி தூரே வீசி விட்டு மருந்து போட்டால்தான் உடல் குணமாகும். அழுகிய நிலையில் உள்ள அந்த பகுதி நம் உடலில் ஒரு பாகம் ஆயிற்றே என்று அப்புறப்படுத்த தயங்கினால் உயிருக்குத்தான் ஆபத்து என்பதில் சந்தேகம் உண்டா?

சமுதாயம் என்பது உடல் என்றால் தலைமை என்பது மூலையாகும்.

உடலில் எந்த ஒரு பாகத்திலும் எவ்வளவு பெரிய பாதிப்பு எற்பட்டாலும் மூலை அதை மேனேஜ் பண்ணிக் கொள்ளும். உடல் முழுவதும் நன்றாக இருந்து மூலைக்கு சிறு ஒரி என்றாலும் உடலின் செயல்பாடுகள் ஸ்தம்பிக்கும். சமுதாயம் என்பது உடல் என்றால் தலைமை என்பது மூலையாகும்.

ஒன்றா? இரண்டா? எழுத்தில் சொல்ல.

அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டேன் விலகிவிடுவேன் என்று சொன்னது பகிரங்கமாகிவிட்ட இந்த ஒரு முறைதான் என்று சமுதாயம் எண்ணுகிறது. இது முதல் முறை அல்ல சின்னச் சின்ன விஷயங்களுக்கும் இப்படி கூறி விடுவதும். தன்னுடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று வீட்டில் உள்ள போனை கீழே எடுத்து வைத்து விடுவதும், பிறகு தலைமையில் உள்ள ஒவ்வொருவரும் போய் கெஞ்சிக் கூத்தாடி சரி கட்டி கொண்டு வருவதுமான நிகழ்ச்சிகள் ஒன்றா? இரண்டா? எழுத்தில் சொல்ல.

சேனல், போலீஸ் ஸ்டேஷன் தன்மை, தவ்பா வாசல்.

இப்படி சின்னச் சின்ன விஷயங்களுக்கு வீட்டுக் கதவை மூடி விட்டு இருப்பதும் திறப்பதுமான நிகழ்ச்சிகளைத்தான் தவ்பா வாசல் மூடி இருக்கிறது. தவ்பா வாசல் திறந்தாச்சு என்று கூட்டுடைப்பு மவுலவிகள் சொல்வார்கள். இதைத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 6-4-02ல் பி.ஜேக்கு எழுதிய கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த பி.ஜே.யின் சேனல், போலீஷ; ஸ்டேஷன் தன்மை, தவ்பா வாசல் ஆகிய வார்த்தைகள். அந்த வார்த்தைகள் அன்று பலருக்குப் புரியாமல் இருக்கலாம். சேனல் என்றால் என்ன என்பதற்கு ஒரு வகை விளக்கத்தை சமீபத்தில் வெளியான 2 சி.டி.களிலும் பி.ஜே. கூறி உள்ளார். போலீஸ் ஸ்டேஷன் தன்மை என்ற வார்த்தை சமீபத்தில் வெளியாகி உள்ள சி.டி.களில் இடம் பெற்றுள்ளது என்றாலும் அது விளக்கப்படவில்லை. வரும் சி.டி.களில் விளக்கம் கிடைக்கலாம்.

பீஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட தொண்டர்களை திரும்ப பெறாவிட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி விடுவேன் என்று கூறி இருக்கிறார். இதை முதல் சி.டி.யில் அண்ணன் பி.ஜே. அவர்களே ரிசைன் பண்ணி விடுவேன் என்று சொன்னதாக ஒப்புக் கொண்டு பேசி உள்ளார். திருச்சியில் பேசும்போது இந்த உண்மையை ஒப்புக் கொள்வது தனக்கு பாதமானது என்று உணர்ந்த அண்ணன் பி.ஜே. சுதாரித்துக்கொண்டார். எனவே அதை அவருடைய ஹிக்மத்படி ஷஷவெளியில் போய்தான் சொல்ல வேண்டி வரும்|| என்று சொன்னதாக கூறி மக்கள் கவனத்தை திசை திருப்பி சமாளித்து உள்ளார்.

முஸ்லிம் பெண்மணி ஜக்கரிய்யா.

சின்னச் சின்ன விஷயங்களுக்கும் இது மாதிரி நடந்து கொண்டு யாரும் தொடர்பு கொள்ள முடியாத வண்ணம் அவரது வீட்டு போனை கீழே எடுத்து வைத்து விடும்போதெல்லாம் அவருக்கு தேவையான போன் என்றால் முஸ்லிம் பெண்மணி ஜக்கரிய்யாவிடம் சொல்லி வைப்பார்.

முஸ்லிம் பெண்மணி ஜக்கரிய்யாவுக்கு போன் வரும் அவர் மாடியில் உள்ள ஆபீஸில் இருந்து கீழே இறங்கி வந்து, இவர் இருக்கும் மாடிக்கு ஏறிச் செல்வார். அதே தெருவிலோ அடுத்தடுத்த தெருவிலோ எங்கு இருக்கிரோரோ அங்குபோய் சொல்வார். அப்படி அவருக்கு பணி செய்த அந்த ஜக்கரிய்யா அவர்களைத்தான் இன்று புத்தக வியாபாரி என்று கூறி உள்ளார்.

ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யா.

முஸ்லிம் பெண்மணி ஜக்கரிய்யா என்றுதான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். பி.ஜே. ஸாஜிதா புக் சென்டர் புத்தக வியாபாரி என்று கூறியதிலும் உண்மை இருக்கிறது. பி.ஜே. எழுதிய புத்தகங்களை வெளியிட்டு அதன் மூலம் ராயல்டி கொடுத்தவர் அல்லவா ஜகரிய்யா. அவரிடம் ராயல்டி பெற்ற பி.ஜே.க்கு ஸாஜிதா புக் சென்டர் புத்தக வியாபாரி ஜக்கரிய்யா என்றுதான் தெரியும்.

வாழ்வுரிமை மாநாட்டு மகிழ்ச்சியை அப்பொழுதே தொலைத்தவர்கள்.

வாழ்வுரிமை மாநாடு மகிழ்ச்சியில் இருந்து இன்று வரை மீளாதவர்கள் உண்டு. த.மு.மு.க. தலைமையினர் அந்த மகிழ்ச்சியை அப்போதே தொலைத்து விட்டனர் என்பது சமுதாயத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்? மார்ச் பேரணி மகிழ்ச்சியை ஒட்டு மொத்தமாக எல்லாரும் தொலைத்து விட என்ன காரணமோ அதேதான் அன்று நடந்தது. அந்த வேதனையை தலைமையினர் மட்டும் அனுபவித்தனர். இதையெல்லாம் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார்களே அவர்களின் அந்த பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா.

தலைவர்களுக்கு நிம்மதி இருக்குமா?

குடும்பத்தில் மூத்த மருமகள்தான், கொழுந்தனுக்கு கல்யாணம் நடந்தாலும் கொழுத்தியாவுக்கு கல்யாணம் நடந்தாலும் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சியான நிகச்சியின் போதும் நான் தலாக்காகி போய் விடுவேன்;. இது எனக்கு பிடிக்கவில்லை நிறுத்தாவிட்டால் தெருவில் நின்று சப்தம் போடுவேன், இல்லை தலாக்காகி போய் விடுவேன் என்று சொன்னால், அந்த குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கு ஒன்றும் தெரியாமல் இருக்கலாம் புரியாமல் இருக்கலாம். குடும்ப தலைவர்களுக்கு நிம்மதி இருக்குமா?

இதையெல்லாம் தெரிந்த ஒருவர் தானாக தலாக்காகி போய் விட்ட அவளை கூப்பிடுங்கள். குடும்பத்தில் சேர்த்து கொள்ளுங்கள் என்று சொல்ல முடியுமா? சொன்னால் அவரை அறிவு உள்ளவராக மனித உள்ளம் உள்ளவராக உண்மையை அறிந்தவர்கள் ஏற்பார்களா? வஸ்ஸலாம்.
அன்புடன்: கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி,துபை
தாயக முகவரி: 22ஏ.சமாயினா Nஷக் முஹம்மது மூப்பன் தெரு மேலப்பாளையம். 627005


முஸ்லிமாக முதலில் தொழட்டும் பிறகு முஸ்லிம்களை அழைக்கட்டும்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....


சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர் மாநாடு என்ற பெயரில் மக்களை அழைக்கின்றனர். அழைக்கட்டும் தவறில்லை ஆனால் அழைக்கும் போதே பொய்யை சொல்லி அழைக்கின்றனர். தீவுத் திடலில் 15 லட்சம் முஸ்லிம்கள் என்ற மாபெரும் பொய்யை கூறி அழைக்கின்றனர். இவர்களது பொய்யை பார்த்து உளவுத்துறை வட்டாரம் சிரிக்கிறது. 15,000 பேரை தாங்காத தீவுத்திடலில் 15 லட்சம் பேரை கூட்டுவதாக இருந்தால் ஒருவருக்குமேல் ஒருவராக 100 பேரை அடுக்கினால் தான் உண்டு. தீவுத்திடலில் கூடிய பெரிய கூட்டம் சோனியா கலைஞர் பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் 15,000 சேர் போடப்பட்ட ஒரே கூட்டம். ஆனால் மக்களை மடையர்களாக்க, பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற தத்துவத்தின்படி, 15 லட்சம் என்று மக்கள் மனதில் பதியவைத்து பின்னர் அறியாத மக்களிடம் அதையே 15 லட்சமாக்கும் வித்தை அண்ணணுக்கு
கை வந்த கலை மற்றவர்கள் மாநாடுகளில் மக்கள் எண்ணிக்கையை குறைத்தும் தங்கள் மாநாட்டில் மக்கள் எண்ணிக்கையை கூட்டியும் காட்டும் கணக்கை எங்கே கற்றாறோ தெரியவில்லை. கடந்த 2008 அக்டோபர்
13 அன்று சென்னையில் நடந்த பேரணியில் மூவாயிரம் பேரை தாண்டாத (மாநிலம் முழுவதும் இருந்து) மக்களை உணர்வில் லட்சக்கணக்கான மக்கள் என்று எழுதினார்கள். மார்க்கத்திற்காக கூட பொய் சொல்லக்கூடாது. எனும்போது, குருடர்கள் பார்க்கிறார்கள் செவிடர்கள் கேட்கிறார்கள் என்பதை நாம் விமர்சிக்கும் போது, கேவலம் அரசியல் வாதிகளை ஈர்ப்பதற்கும் அதன் மூலம் தேர்தல் ஆதாயம் பெறுவதற்கும் ஏன் பொய் சொல்லுகின்றீர்கள். இட ஒதுக்கீடு எனும் பொதுப்பிரச்சனைக்காக மக்களை கூட்டிவிட்டு அதை வைத்து தங்கள் பக்கம் தான் முஸ்லிம்கள் உள்ளனர் என்று காட்டி, வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னைiயும் தன் இயக்கத்தையும் வளர்த்துக் கொள்ள மக்களை மடையர்காளக்குவதா?

15 லட்சம் முஸ்லிம்கள் கூட வேண்டும் என்றால் 30,000 பஸ்களில் 40 பேர்வீதம் வந்தால் கூட 12 லட்சம் தான் வருகிறது. 30,000 பஸ் என்றால் எத்தனை கிலோமீட்டருக்கு நிறுத்த வேண்டும் தெரியுமா ?
இதைச் சொன்னால் சில சகோதரர்கள், கோரிக்கையை முன்வைத்து போராடும் போது எண்ணிக்கை பற்றி பேசி நம்மை நாமே குறைத்து காட்டுவது அந்த கோரிக்கையை பாதிக்காதா? என கேட்கின்றனர்.

இதே கேள்வியை அவர்களிடம் நாம் கேட்கிறோம் டிசம்பர் 6 அன்று ப.சிதம்பரம் வீடு முற்றுகையிட்டு கைதான போது நாமும் கோரிக்கையை முன்வைத்து தான் போராடின தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அமைப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து உணர்வைக்காட்டி நம்விடுதலைக்கு போராடிய நேரத்தில் இவர் என்ன சொன்னார் ஆயிரக்கணக்கானோர் கைது என்றால் சில ஆயிரம் பேராவது இருக்க வேண்டும். வீடியோவை ஓடவிட்டு இவர்களின் தலைகளை எண்ணிவிடலாம். இவர்களை அடைத்து வைத்துள்ள மண்டபத்தின் அளவு எவ்வளவு சதுரடி? என்றெல்லாம் கொச்சைப்படுத்தினார்கள். இப்போது தனக்கு எனும் போது வலிக்கிறது.

மேலும் இடஒதுக்கீடு பொதுவான கோரிக்கை முஸ்லிம்கள் எங்கள் பின்னால் வந்தே தீரவேண்டும் வேறு வழியில்லை. என்றெல்லாம் கூறுகின்றீர்களே ! நீங்கள் எத்தனை பொதுவான கோரிக்கைகளுக்காக மற்ற மாநாடுகளில் பங்கேற்றீர்கள் நீங்கள் செய்யாத ஒன்றை பிறருக்கு ஏன் சொல்லுகின்றீர்கள் இது அல்லாஹ்விடத்தில் வெறுப்புக்குரியதாகும். என்பது உங்களுக்கு தெரியாதா? பீஸ் போன்ற மார்க்க மாநாடுகளுக்கே மற்றவர்கள் அழைத்தால் யாரும் போக கூடாது நீங்கள் அழைத்தால் அரசியல் மாநாட்டுக்கு அனைவரும் வரவேண்டும் என்பது என்ன நியாயம். பொதுவான கோரிக்கை என்று இப்போது பேசும் நீங்கள் இந்த கோரிக்கைக்காக மற்ற இயக்கங்களை அழைத்து எத்தனை முறை பேசியுள்ளிர்கள் ! பேச வேண்டாம் மற்ற அமைப்புகளுக்கு அழைப்பாவது விட்டீர்களா ? சுன்னத் ஜமாஅத் மக்களை வரவேண்டும் என கூறும் நீங்கள் முஸ்லிம் லீக், தமுமுக, இதஜ, எஸ்டிபிஐ உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்காதது ஏன் ?
மற்ற நேரங்களில் மற்ற முஸ்லிம்களை முஸ்லிம் இல்லை நாங்கள் மட்டுமே பரிசுத்த முஸ்லிம்கள் என பிராமணியம் பேசி, மற்ற பள்ளிகளில் தொழக்கூடாது மற்ற முஸ்லிம்களின் பின்னால் தொழக்கூடாது மற்றவர்கள் நடத்தும் பொதுக்கூட்டம் மாநாடுகளுக்கு பேசக்கூடாது என இஸ்லாத்தில் இல்லாத தீண்டாமையை கடைபிடிக்கும் நீங்கள் இப்போது மட்டும் முஸ்லிம்களை வாருங்கள் என அழைப்பது ஏன் ? என்று கேட்டால் உலக கணக்கில் அவர்கள் முஸ்லிம்கள் மறுமைகணக்கில் அவர்கள் முஸ்லிம்களா ? என்று கேட்கின்றீர்களே மறுமை கணக்கில் அவர்கள் முஸ்லிம்கள் இல்லையா என்பது அல்லாஹ் அறிந்த விஷயம் அல்லாஹ்வின் அதிகாரத்தை நீங்கள் ஏன் கையில் எடுக்கிறீர்கள் ?
உங்கள் கொள்கைப்படி உங்கள் இயக்கத்தினர் தவிர யாரும் முஸ்லிம் இல்லை! இஸ்லாமிய கொள்கைப்படி நீங்களும் முஸ்லிம் இல்லை! ஏனென்றால் உங்களிடம் தொழுகை இல்லை பின் எப்படி 15 லட்சம் முஸ்லிம்கள் தீவுத்திடலில், இதைச் சொன்னால் தொழுகையை பற்றி பேசாதீர்கள். அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ளது. என்று சப்பைக்கட்டு கட்டுகின்றீர்கள். தொழுகை அவருக்கும் அல்லாஹ்விக்கும் உள்ளது என்றால் ஷிர்க், பித்அத், வரதட்சனை, வட்டியை பற்றி பேசுகிறீர்கள் அது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் என்று அவர்கள் கூறமாட்டார்களா?
மார்க்க ரீதியில் ஒருவனின் தொழுகையை பற்றி சுட்டிக் காட்டலாமா ? என்று கேட்கின்றீர்களே ருக்கூவையும் சுஜூதையும் சரியாக செய்யாதவன் தொழுகை திருடன் என நபி (ஸல்...) சுட்டி காட்டும் போது முழுத் தொழுகைகளையும் திருடுபவரை சுட்டிக்காட்டக்கூடாதா?
சுப்ஹூ தொழ வராதவர்களை வீட்டோடு எரிக்க நினைத்ததுண்டு என நபி (ஸல்...) சுட்டிக்காட்டவில்லையா?
சுப்ஹூ தொழுகையும், இஷாவையும் விடுவது முனாபிக்கின் அடையாளம் என இப்படிப்பட்டவர்களை நபி (ஸல்...) அவர்கள் அடையாளம் காட்டவில்லையா ? கண் தெரியாத சஹாபாவிற்கே பாங்கு சத்தம் கேட்டால் பள்ளியில் தொழுவது கட்டாயம் என்று நபிகள் எடுத்து சொல்லவில்லையா ? கடைசி மூச்சுவரை கால் தரையில் இழுபட நபி (ஸல்...) தொழ வந்தார்கள். என்ற ஹதிஸ் எல்லாம் மக்களுக்குத்தானா ! மவ்லவிகளுக்கு இல்லையா ? உங்களை மறந்துவிட்டு மக்களை நன்மை செய்ய ஏவுகின்றீர்களா? இவ்வளவு ஏன் மீலாது விழா நடத்து பவர்கள் ஊர்வலத்தில் உட்கார்ந்து கொண்டு தொழமாட்டார்கள். அஸர் போகும், மஃரிப் போகும் ஆனால் ஊர்வலம் போகும் என இவர் மற்றவர்களை விமர்சித்தாரா இல்லையா ஆகையால் வக்காலத்து வாங்குவதை விட்டுவிட்டு இயக்கநிர்வாகிகள் அவரை ஜமாஅத்தோடு தொழச்சொல்லுங்கள் நபி ஸல் கூறுவது போன்று ஷிர்க் மற்றும் குப்ரிலிருந்து காப்பாற்றுங்கள் முஸ்ஸிமாக அவர் முதலில் தொழுகட்டும் பிறகு முஸ்லிம்களை அழைக்கட்டும் ஏனெனில் தொழுகையில்லாதவனுக்கு இஸ்லாத்தில் எந்த பங்கும் இல்லை என்பது நபி ஸல் அவர்களின் வாக்கு !

சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன்.


சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் என்றுதான் எழுதியுள்ளேன். சிறை கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் என்று சிறையில் பீடி வாங்கி கொடுத்தவர்களோ,முன்பு அவருடன் நெருக்கமாக இருந்தவர்களோ இப்படி படித்தால் நான் பொறுப்பு இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாக்கரை கோழையாக சித்தரித்துள்ள மாவீரன்.

அநியாயமாக சிறையில் தள்ளப்பட்டதும் நியாயமாக சிறையில் தள்ளப்பட வேண்டியபி.ஜெ.யைக் காட்டிக் கொடுக்காதவர்களில் தடாவில் தள்ளப்பட்ட பாக்கரும் ஒருவர். அந்த பாக்கரை கோழையாக சித்தரித்துள்ள மாவீரன் பி.ஜெ. பூட்டு உடைப்பு போராட்டத்தில் 800பேருடன் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறை சென்று பொறுமையுடன் இருந்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த மாவீரனைப் பற்றி அப்பொழுதே தெரிந்திருந்த கோவைவாசிகள்.

சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. அதுவும் முதல் நாள் நடந்த பேரணியில் கூட்டத்தை கண்டு விட்டு உட்சாக அறிவாளியாக வாய் குளறி பூட்டு உடைப்பு போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என அறிவித்து விட்டார் மாவீரன் பி.ஜெ. இந்த மாவீரனைப் பற்றி அப்பொழுதே தெரிந்திருந்த கோவைவாசிகள் வசமாக பிடித்துக் கொண்டார்கள்.

அவரது முகம் எந்த அளவுக்கு வெண்மையாக ஆனது.

காலையில் கைது செய்து மாலையில் விட்டு விடுவார்கள் என்ற எண்ணத்தில் அதுவும் கோவைவாசிகள் பின்னால் இருக்கிறார்கள் ஹைதர் அலியும் நம்முடன் இருக்கிறார் என்ற தைரியத்தில்தான் பூட்டு உடைப்பு போராட்டத்தில் இறங்கி கைதானார். ரிமாண்ட் செய்யப்பட்டதும் அவரது முகம் எந்த அளவுக்கு வெண்மையாக ஆனது என்பதை அவருடன் இருந்தவர்கள் அன்றே சொன்னார்கள். ஹைதர் அலி நன்றாகவே அறிவார்.

குணங்குடி ஹனீபா களத்தில் இறங்கினார்.

அப்பொழுது அவரது விடுதலைக்கு த.மு.மு.க. மாநில தலைவராக இருந்த குணங்குடி ஹனீபாதான் கதி என்றானது. எப்படியாவது உடனடி விடுதலைக்கு வழி செய்ய வேண்டும் என அவரை முடுக்கி விட்டார். பா.ம.க. மாநில பொருளாளர் என்ற பின் பலத்துடன் இருந்த த.மு.மு.க. மாநில தலைவர் குணங்குடி ஹனீபா களத்தில் இறங்கினார். த.மு.மு.க. மாநில அமைப்பாளர் பி.ஜைனுலாப்தீனை விடுதலை செய்யாவிட்டால் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வீட்டு முன் மறியல் என அறிவித்தார். விளைவு
சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் விடுதலை செய்யப்பட்டார்.

மகா கோழை மகத்தான கோழை மட்ட ரகமான கோழை யார்?

இது இப்பொழுதுள்ள யாருக்குத் தெரியும். அதனால்தான் மற்றவர்களை கோழைகளாக சித்தரிக்கிறார். மகா கோழை மகத்தான கோழை மட்ட ரகமான கோழை யார் என்பதை வரலாறு உள்ளவர்கள் அறிவார்கள்.

மீசைக்காரன் சரி இல்லை.

பாபரி மஸ்ஜிதை மீட்க பாராளுமன்றத்தில் தொழுகை நடத்துவோம் என்ற வீரியமிக்க போராட்டத்தை அறிவித்தார் த.மு.மு.க. மாநில தலைவராக இருந்த குணங்குடி ஹனீபா. சிறைக்கஞ்சா வீரியமிக்க மாவீரன் ஜைனுல் ஆபிதீன் வெளிநாட்டுக்கு போன் போட்டு என்ன சொன்னார். மீசைக்காரன் சரி இல்லை. அவன் நம்மளை அவன் வழியில் இழுக்கப் பார்க்கிறான். அவன் அறிவித்த பாராளுமன்ற தொழுகை போராட்டத்தை நடத்தினால் பா.ம.க.வில் அவனுக்கு செல்வாக்கு கூடி விடும். எனவே பாராளுமன்ற தொழுகை போராட்டம் வேண்டாம் என்றார்.

இந்த போராட்டம் வேண்டாம்.

நீங்களும்தானே பாபரி மஸ்ஜிதை கட்டித் தராவிட்டால் பாராளுமன்றத்தை பள்ளிவாசலாக ஆக்கி தொழுகை நடத்துவோம் என்று பேசி உள்ளீர்கள் என்றதற்கு அப்படி பேசினால்தான் இந்த போராட்டம் வேண்டாம் என்று நாம் சொல்ல முடியும் என்றார் சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன்.

மாதக்கணக்கில் சிறையில் கிடக்க வேண்டி வரலாம்.

டெல்லிக்கு போகும்போது முன்னெச்சரிக்கையாக சென்னையிலேயே கைது செய்து விட்டால் சென்னை போலீஸ் பிரச்சனை இல்லை. போராட்ட தேதி முடிந்ததும் விடுதலை செய்து விடும். விடுவிக்காமல் நாளை நீடித்தால் ஹனீபாவுக்காக பா.ம.க. களத்தில் குதிக்கும். ஒரு வாய்தாவில் விடுதலை கிடைத்து விடும். வட நாட்டில் கைது செய்யப்பட்டால் முதலில் மொழி தெரியாது. பா.ம.க. செல்வாக்கு அங்கு பயன்படாது. எனவே மாதக்கணக்கில் சிறையில் கிடக்க வேண்டி வரலாம். எனவே பாராளுமன்றத்தில் தொழுகைப் போராட்டம் என்பது சாத்தியப்படாது என்றார் சிறைக்கஞ்சா மாவீரன்.

மக்களே மறந்து விடுவார்கள்.

எந்தப் போராட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்குள் நடத்துவதே நமக்கு நல்லது.
எனவே இப்பொழுது குளிர் காலம் என்று போராட்ட நாளை ஒத்தி வைப்பதாகக் கூறி அப்படியே கிடப்பில் போட வேண்டியதுதான். அடுத்தடுத்து வரும் போராட்டங்கள் மூலம் பாராளுமன்ற தொழுகைப் போராட்ட அறிவிப்பை மக்களே மறந்து விடுவார்கள் என்றார். சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன்.

கேடயமாக பயன்பட்டவர் பாக்கர்.

பாராளுமன்ற தொழுகைப் போராட்ட அறிவிப்பை மக்கள் மறக்க கவர்னர் மாளிகையில் தொழுகைப் போராட்டம் நடத்தினார் சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன். மதுரை ராஜகோபாலன் கொலை வழக்கில் பி.ஜெ. கைது செய்யப்படாமல் இருக்க கேடயமாக பயன்பட்டவர் பாக்கர். அந்த பாக்கரை கோழையாக சித்தரித்துள்ளார் பி.ஜெ.


இவர் மற்றவர்களை கோழை என சொல்லட்டும்.

இது உண்மை இல்லை என்று மறுத்தால் உண்மையிலேயே அவர் சிறைக்கஞ்சா மாவீரன்தான் என்றால் 1996இல் அவர் சவால் விட்டு பேசியபடி பாபரி மஸ்ஜிதை மீட்க பாராளுமன்றத்தை தொழுகை இடமாக ஆக்கும் போராட்டத்தை ஜைனுல் ஆபிதீன் அறிவிக்க வேண்டும். அறிவிக்க வேண்டும் என்றால் முன்போல் அறிவித்து நாடகமாடக் கூடாது. டெல்லி சென்று போராட்டத்தை நடத்திக் காட்டட்டும். அதன் பிறகு இவர் மற்றவர்களை கோழை என சொல்லட்டும்.

நடை பிணமாக ஆகி விடுகிறார் என்பதுதான் உண்மை.


அடுத்த ஆண்டு (1998டு)க்குள் பாபரி மஸ்ஜிதை கட்டித்தராவிட்டால் அடுத்த ஆண்டு அயோத்தி நோக்கி நடை பயணம் செல்வோம் என்று 1997இல் கர்ஜித்தார் சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன். 98 போய் 2008டும் போய் விட்டது. போயஸ் தோட்டத்து பொன்மகளை பார்க்கத்தான் மாவீரனாய் நடை பயணம் போனார். அயோத்தி நோக்கி நடை பயணம் என்றால் நடை பிணமாக ஆகி விடுகிறார் என்பதுதான் உண்மை.

முதலில் தான்கோழை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

இதை உண்மை இல்லை என்று மறுத்தால் உண்மையிலேயே ஜைனுல் ஆபிதீன் சிறைக்கஞ்சா மாவீரன்தான் என்றால் 1997இல் அவர் கர்ஜித்து பேசியபடி பாபரி மஸ்ஜிதை மீட்க அயோத்தி நோக்கி நடை பயணம் செல்லட்டும். அதன் பிறகு அவர் யாரை கோழை என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம். ஒருவன் மற்றவர்களை கோழை என்று விமர்சிப்பதாக இருந்தால் முதலில் தான்கோழை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் நிரூபிப்பாரா?

இது சிறைக்கஞ்சா மாவீரன் செய்யும் செயலா?

அந்நஜாத் ஆசிரியர் அபூஅப்துல்லாஹ் பற்றி வண்டி வண்டியாகக் குற்றம் சாட்டினார். கோர்ட்டுப் போனதும் தொண்டிக் குதிரை நொண்டிக் குதிரையாக ஆனது. இது வீரமிக்க செயலா? இது சிறைக்கஞ்சா மாவீரன் செய்யும் செயலா? சந்தி சிரிக்கிறது.

கோர்ட்டு பக்கமே தலை வைத்து படுக்கவில்லை.


பஸ்லுல் இலாஹி தாயகம் வர மாட்டான் வர முடியாது. வந்தால் சிவில் கிரிமினல் வழக்குப் போடுவேன் என்றார். அவரது சவாலை ஏற்று பல முறை தாயகம் வந்தோம். தாராளமாக வழக்குப் போடுங்கள். நீங்கள் தொடரும் வழக்கை கொண்டே தமிழகத்தில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் மூல காரணம் நீங்கள்தான் என நிரூபித்து உங்களை சிறையில் தள்ளுவேன் என்றோம். அவ்வளவுதான் சிறைக்கஞ்சா மாவீரன் கோர்ட்டு பக்கமே தலை வைத்து படுக்கவில்லை.

இப்பொழுது சொல்லுங்கள்.

காரைக்காலில் இமாம் அலியை தங்க வைத்து விட்டு பெண்களை கேடயமாக்கி தன்னைக் காத்துக் கொண்டவர்தான் சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் . பெண்களைக் கேடயமாக ஆக்கிய பெட்டை யார் என்பதை இப்பொழுது சொல்லுங்கள்

Monday, May 17, 2010

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு !



மேற்குறிப்பிட்ட பழமொழி ஏட்டளவுக்கு பழமையாக இருந்தாலும் இன்றைய சமகால சூழ்நிலையில் பலருக்கு கனகச்சிதமாக பொருந்தும் குறிப்பாக ஏகத்துவம் பேசி கொண்டு ஏகாதிபத்திய உணர்வோடு செயல்படும் பிதற்றல் ஜென்மங்களுக்கு நிறையவே பொருத்தமாக இருக்கும் அல்லாஹ்வின் ஆற்றலை பற்றி பிறருக்கும் உரைக்கும் போது அற்புதமாக பேசும் இவர் ஏகத்துவம் பேசும்போது மட்டும் அல்லாஹ்வின் ஆற்றலை மீறி அல்லாஹ்வுக்கே உண்டான தனித்தன்மையான உள்ளங்களை உளவு பார்க்கும் தன்மையை தனக்குண்டாக்கி ஏகத்துவத்திலிருந்து வெளியேறியவர்கள் என்ற பட்டியல் தயாரித்த மாமேதை பரிசுத்த மகான் ? இன்றைய பிதற்றல் ஜென்மத்தின் அவதூறு பிரச்சாரத்தை பற்றிதான் இந்த கட்டுரை :
காலங்கள் பல சென்றாலும் நிகழ்வுகள் நித்தம் நம்மை பின் தொடர்ந்து வரும் ! மறுமை நாளில் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் அனைவரும் நிறுத்தப்படும் நாள் மிக சமீபத்தில் தான் உள்ளது. விசுவாசிகள் இதை நன்கு அறிந்து இருப்பார்கள்.
ஏகத்துவத்தை பிறருக்கு எடுத்து சொல்வதில் மட்டும் கவனம் செலுத்தும் பிதற்றல் ஜென்மம் அதன்பால் சார்ந்து வாழ்வதை அறவே புறந்தள்ளி வருவதை உலகம் நன்கு அறிந்ததுதான். இஸ்லாத்தின் கட்டாய கடமைகளின் பிரதான கடமையான தொழுகையைக்கூட சரிவர நிரைவேற்ற முடியாத இந்த பிதற்றல் ஜென்மத்தின் சமீபத்திய கூற்று பிறரை பின்தொடர்ந்து ஆராய்வது தான் நபிகள் நாயகம் (ஸல்...) அவர்கள் பிறரின் குறைகளை ஆராய்வதை விரும்பாதவர்கள் அதிலும் அவதூறை முற்றிலும் விரும்பாதவர்கள். நபிகளாரை போற்றி பேசும் இந்த பிதற்றல் ஜென்மம், மறந்தும் கூட அவர்களின் நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. மாறாக பிறரின் தவறுகளை ஆராய்வதில்தான் தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதியை செலவளித்து இருக்கிறார். இதற்கு கடந்த கால வரலாறுகள் சான்று பகரும்.
இப்ராஹீம் நபியின் வீர வரலாற்றை பலர் நன்கறிந்திருப்பார்கள். அவர்களின் பாணி காபிர்களின் (நிராகரிப்பாளர்களின்) இடத்திற்கே சென்று ஏகத்துவத்தை போதிப்பது தான் இப்ராஹிம் நபியின் வரலாற்றை பேச சொன்னால் மணி கணக்கில் பேசும் இந்த பிதற்றல் ஜென்மம் அவர்கள் பானியில் பிறர் செயல்படுவதை விரும்பாதவர் காரணம் தன்னுடைய ஏகத்துவம் அன்டு கோ. மட்டும்தான் பிற மக்களுக்கு போதிக்க வேண்டும் மற்றவர்கள் போதிக்க, இல்லை இல்லை இருக்கவே கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பபட்டு வருபவர்தான் இந்த பிதற்றல் ஜென்மம்.
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாய பணி கண்டு தாங்க முடியாத இந்த பிதற்றல் ஜென்மம் தன்னால் பழி சுமத்தி வெளியாக்கப்பட்டவர்கள் தடம் தெரியாமல் போய் விடுவார்கள் என்ற உள்ளக் களிப்பில் தன்னை மறந்து இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக உதித்தது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இதனை சற்றும் பொறுக்க முடியாத இந்த பிதற்றல் ஜென்மம் எப்படியாவது இதன் வளர்ச்சியை தடுத்து நிருத்த தன்னால் முடிந்த அனைத்து சூழ்ச்சியையும் ? செய்ய துணிந்தார் கேவலம் மிஞ்சியது அவமானம்தான் டிசம்பர் 6ஐ கொச்சைபடுத்தி பார்த்தார் அதிலும் தோல்விதான் மீடியாக்கள் சூழ்ந்து நடந்த போராட்டம் என்பதால் உலகம் கண்டு கொண்டது இந்த இழிசெயல் பிறவியின் எழுத்து விபச்சாரத்தை.
தற்போது மற்ற சகோதரர்களின் மேடை ஏறி ஏகத்துவத்தை மொழிந்துவிட்டு வந்திருப்பவரை பார்த்து பொருக்க முடியாமல் தனக்கே உண்டான பாணியில் கொச்சை படுத்தியிருக்கிறார். இந்த இழி பிறவி, சிலை வணக்கம் கூடாது என்று சிற்பங்கள் இருக்கும் இடத்தில் சென்று உறைப்பது வீரமா ! அல்லது நம்மவர்களின் செலவில் மேடை அமைத்து நமக்கு மத்தியில் பேசுவது வீரமா ! ஆணவமும் காழ்ப்புணர்வும் ஆதிக்க மனப்பான்மையும் அதிகரிக்கும்போது ஆற்றல்மிகு மூளையும் திறனற்று போய்விடும் என்பதற்கு இந்த இழி பிறவி ஓர் உதாரணம் இனியாவது பிறர் புறத்தை நுகர்ந்து பார்க்காமல் சரிவர நடக்குமா இந்த பிதற்றல் ஜென்மம் பொருத்திருந்துத்தான் பார்க்க வேண்டும்.
தோலுரிப்பது தொடரும்....
இப்படிக்கு
இறையடியான்

1. இதுவரை நிரூபிக்காத ஆலயபிரவேசம் !


1. திருமாவளவனோடு பாக்கர் கைகோர்த்து ஆலயப்பிரவேசம் செய்தார் என்று இவர் அள்ளிவிட அதை அல்தாபி அப்படியே வாங்கி குவைத் நிகழ்ச்சி மேடை ஒன்றில் அள்ளிவிட இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக நிரூபிக்க தயாரா ?
என இதைபற்றி இதஜ எழுப்பிய சவாலுக்கு இன்று வரை பதிலில்லை.

2.இம்பீரியல் ஹோட்டல் பொய்


2. விண் டிவியில் தங்கள் கேசட்டை ஒளிபரப்ப மறுத்து விட்டதாக இம்பீரியல் ஹோட்டல் நிகழ்ச்சி மேடையில் வந்த செய்தியை அப்படியே ஆராயாமல் அள்ளிவிட அதன் பின் பல நாட்கள் விண் டிவியில் இவர்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

3.ஐசிஐசிஐ வங்கியை திவால் ஆக்கிய அண்ணன்.

3. ஐசிஐசிஐ வங்கி திவாலாகிவிட்டது உடனே உங்கள் பணங்களை எல்லாம் எடுத்துவிடுங்கள் என தனக்கு வந்த ஆதாரமற்ற செய்தியை அப்படியே எஸ்எம்எஸ்ல் அள்ளிவிட்டு பின் ஐசிஐசிஐ நடவடிக்கைக்கு பயந்து பின்வாங்கினார்

4.வக்ஃப் ஊழலும் வக்கீல் நோட்டீசும


4. வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ ஊழலுக்கு துணைபோனார் என்று உணர்வில் எழுதிவிட்டு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் பின்வாங்கியது

5.இருமுறை இறந்த நாகூர் ஹனிபா


5. நாகூர் ஹனிபா இறந்து விட்டார் என்று வந்த செய்தியை ஆராயமல் மேடையில் அறிவித்து மாட்டிக் கொண்டது. அந்த விஷயத்தை எடிட் செய்யாமல் டிவியில் ஒளிபரப்பி இறக்காத நாகூர் ஹனிபாவை இரண்டுமுறை சாகடித்தது.

6. பில்கேட்ஸ் இஸ்லாத்தை தழுவி விட்டதாக

6. பில்கேட்ஸ் இஸ்லாத்தை தழுவி விட்டதாக வந்த செய்தியை ஆராயாமல் சேப்பாக்கம் மேடையிலே அள்ளிவிட்டு பின்னர் சமாளித்தது ! (பெரியார் தசானை கண்காணிப்பவர் பில்கேட்ஸை கண்காணித்து இருக்க கூடாதா?)
அபு அப்துல்லா வாங்கிய சொத்து

7. அபு அப்துல்லா அந்நஜாத் பெயரில்

7. அபு அப்துல்லா அந்நஜாத் பெயரில் சொத்தை வாங்காமல் தன் பெயரில் வாங்கினார் என கூறிவிட்டு பின்னர் நீதிமன்றம் சென்று பொய்யுரைத்து வழக்கிலிருந்து தப்பியது

8. வேலூர் நாராயண் பீடத்திற்கு சென்று மடாதிபதியோடு

8. வேலூர் நாராயண் பீடத்திற்கு சென்று மடாதிபதியோடு பேசிவிட்டு எழும்போது எடுத்த படத்தை போட்டு சாமயாரின் காலில் விழுந்தார். காதர் மைதீன் என பரப்பியது.
காலில் விழுந்த காதர்மொய்தீன் !
சாமியாரிடம் ஆசிவாங்கிய ஜவாஹிருல்லா

9. தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவாடுதுறை

தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவாடுதுறை ஆதினத்திடம்
குர்ஆன் வழங்கி பேசிக் கொண்டிருந்த படத்தை வெளியிட்டு சாமியாரிடம் ஆசி வாங்கினார் ஜவாஹிருல்லா என பரப்பியது.
பழநி பாபா வைத்திருந்தது யாரை ?

10. மறைந்த பழனி பாபா ஒரு பெண்னை வைத்திருக்கிறார் என செய்தி பரப்பி !

நான் வைத்திருப்பது உன் மனைவியைத்தான் என அவரிடம் வாங்கி கட்டிக் கொண்டது.
இப்படி தனக்கு வரும் செய்திகளை ஆராயாமல் அள்ளிவிடுவதும் பின்னர் பொய்யை மறைக்க மேலும் பொய்களை கூறுவதும் பிறரின் மீது சேற்றை வாறி இறைக்க எத்தகைய அவதூறுகளையும் சுமத்துவதும் மற்ற தலைவர்களின் தரம் தாழ்த்தி அவர்களின் மானத்தோடு கண்ணியத்தோடும் விளையாடுவதும் இதற்காக துணிந்து பொய் வாயிலாக அறிவதோடு மார்க்கத்திலும் பொய் சொல்லக் கூடியவர் என்பதற்கு முஜிபுர்ரஹ்மான் உமரி சொல்லும் சம்பவம் சாட்சியாகிறது. ஒரு விவாதத்தின் போது எதிரணிக்காரர்கள் குறிப்பிட்ட ஒரு ஸஹீஹ் அன ஹதீஸை எடுத்து வைத்தால் என்ன செய்வது என்று இவரது அணியைப் சேர்ந்த ஒருவர் கேட்ட போது அதை நாம் ளயீப் (பலவீனம்) ஆக்கிடுவோம் என்று சொன்ன செய்தி இவர் இதுவரை சொன்ன மார்க்கத்தையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்.ஜே.

அல்லாஹ்வின் திருப்பெயரால்....



“தீயவன் ஒரு செய்தியை கொண்டுவந்தால் அதை தீர விசாரியுங்கள் இல்லையேல் அறியாமல் ஒரு சமுதாயத்திற்கு தீங்கிழைத்து பின் வருந்தக்கூடும்” என அல்லாஹ் திருமறையில் கூறியிருப்பதை நாம் உணர்ந்து நடக்க வேண்டும். “கேள்விப்படுவதை எல்லாம் பரப்புவதே ஒருவன் பொய்யன் என்பதற்கு போது மானதாகும்” என்ற நபி மொழிக்கு இணங்க ஏகத்துவத்தை பின்பற்றுவதாக கூறும் நாம் எந்த ஒரு செய்தியையும் ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையை உணராமல் பரப்பிவிடக்கூடாது. அல்லாஹ் தஆலா திருமறையில் “பாதுகாப்பு பயம் பற்றிய செய்தி கிடைத்தால் உடனே பரப்பி விடுகின்றனர்.அதை அதிகாரமுள்ளவர்களிடத்தில் கொண்ட சென்றிருந்தால் அதன் உண்மை தன்மையை அவர்கள் ஆராய்ந்திருப்பர்” என்று கூறுவதன் மூலம் பொருப்பில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் பொய் பரவுவதற்கு காரணமாகி விட கூடாது.

அந்த வகையில் மக்களிடையே மார்க்க அறிஞர் என அறியப்படும் இவர் குர்ஆனை ஆராய்ந்து தான் பின்பற்ற வேண்டும் சஹாபாக்கள் உட்பட எவரது கூற்றையும் ஆதாரமின்றி பின்பற்ற கூடாது ! எனக்கூறும் இவர் நடைமுறையில் இதற்கு நேர் முரணாக தனக்குவரும் ஆதாரமற்ற செய்திகளை அப்படியே பரப்பிவிடுவதை பலசந்தர்பங்களி;ல செய்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நெல்லை யாதவ மாநாட்டில் சிலை திறப்பு விழாவில் பாக்கர் பங்கேற்று மற்றும் தவ்ஹீதை விட்டு தடம்புரண்டதாக தங்களது இணையதளத்திலும் பத்திரிக்கை வெளியான படத்தை போட்டிருந்தனர். கையில் வாக்கி டாக்கியுடன் தேவநாதன் நிற்கும் படத்தை போட்டு இந்த செய்தியை பரப்பினார். ரிமோர்டுக்கும் வாக்கி டாக்கிக்கும் வித்தியாசம் தெரியாமல், சிலை திறப்பு விழாவை புறக்கணித்து மாநாட்டில் மட்டும் பங்குபெற்று அங்கும்கூட “உங்களின் இந்த சிலைகளால் எந்த நன்மையுமில்லை” என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில், இப்ராஹிம் (அலை) வழியில் சத்தியத்தை எடுத்துரைத்த செய்தியை மறைத்து பொய்யை பரப்பியுள்ளனர். இதுபோன்று இவர் தனக்கு வரும் செய்திகளை அப்படியே பரப்ப கூடியவர் என்பதற்கு கீழே சில சம்பவங்களை தருகிறோம்.
இதுவரை நிரூபிக்காத ஆலயபிரவேசம் !
1. திருமாவளவனோடு பாக்கர் கைகோர்த்து ஆலயப்பிரவேசம் செய்தார் என்று இவர் அள்ளிவிட அதை அல்தாபி அப்படியே வாங்கி குவைத் நிகழ்ச்சி மேடை ஒன்றில் அள்ளிவிட இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக நிரூபிக்க தயாரா ?
என இதைபற்றி இதஜ எழுப்பிய சவாலுக்கு இன்று வரை பதிலில்லை.
இம்பீரியல் ஹோட்டல் பொய்
2. விண் டிவியில் தங்கள் கேசட்டை ஒளிபரப்ப மறுத்து விட்டதாக இம்பீரியல் ஹோட்டல் நிகழ்ச்சி மேடையில் வந்த செய்தியை அப்படியே ஆராயாமல் அள்ளிவிட அதன் பின் பல நாட்கள் விண் டிவியில் இவர்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
ஐசிஐசிஐ வங்கியை திவால் ஆக்கிய அண்ணன்
3. ஐசிஐசிஐ வங்கி திவாலாகிவிட்டது உடனே உங்கள் பணங்களை எல்லாம் எடுத்துவிடுங்கள் என தனக்கு வந்த ஆதாரமற்ற செய்தியை அப்படியே எஸ்எம்எஸ்ல் அள்ளிவிட்டு பின் ஐசிஐசிஐ நடவடிக்கைக்கு பயந்து பின்வாங்கினார்.

வக்ஃப் ஊழலும் வக்கீல் நோட்டீசும்
4. வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ ஊழலுக்கு துணைபோனார் என்று உணர்வில் எழுதிவிட்டு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் பின்வாங்கியது.
இருமுறை இறந்த நாகூர் ஹனிபா
5. நாகூர் ஹனிபா இறந்து விட்டார் என்று வந்த செய்தியை ஆராயமல் மேடையில் அறிவித்து மாட்டிக் கொண்டது. அந்த விஷயத்தை எடிட் செய்யாமல் டிவியில் ஒளிபரப்பி இறக்காத நாகூர் ஹனிபாவை இரண்டுமுறை சாகடித்தது.

இஸ்லாத்தை தழுவிய பில்கேட்ஸ் ?
6. பில்கேட்ஸ் இஸ்லாத்தை தழுவி விட்டதாக வந்த செய்தியை ஆராயாமல் சேப்பாக்கம் மேடையிலே அள்ளிவிட்டு பின்னர் சமாளித்தது ! (பெரியார் தசானை கண்காணிப்பவர் பில்கேட்ஸை கண்காணித்து இருக்க கூடாதா?)
அபு அப்துல்லா வாங்கிய சொத்து
7. அபு அப்துல்லா அந்நஜாத் பெயரில் சொத்தை வாங்காமல் தன் பெயரில் வாங்கினார் என கூறிவிட்டு பின்னர் நீதிமன்றம் சென்று பொய்யுரைத்து வழக்கிலிருந்து தப்பியது.
8. வேலூர் நாராயண் பீடத்திற்கு சென்று மடாதிபதியோடு பேசிவிட்டு எழும்போது எடுத்த படத்தை போட்டு சாமயாரின் காலில் விழுந்தார். காதர் மைதீன் என பரப்பியது.
காலில் விழுந்த காதர்மொய்தீன் !
சாமியாரிடம் ஆசிவாங்கிய ஜவாஹிருல்லா
9. தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவாடுதுறை ஆதினத்திடம் குர்ஆன் வழங்கி பேசிக் கொண்டிருந்த படத்தை வெளியிட்டு சாமியாரிடம் ஆசி வாங்கினார் ஜவாஹிருல்லா என பரப்பியது.
பழநி பாபா வைத்திருந்தது யாரை ?
10. மறைந்த பழனி பாபா ஒரு பெண்னை வைத்திருக்கிறார் என செய்தி பரப்பி ! நான் வைத்திருப்பது உன் மனைவியைத்தான் என அவரிடம் வாங்கி கட்டிக் கொண்டது.
இப்படி தனக்கு வரும் செய்திகளை ஆராயாமல் அள்ளிவிடுவதும் பின்னர் பொய்யை மறைக்க மேலும் பொய்களை கூறுவதும் பிறரின் மீது சேற்றை வாறி இறைக்க எத்தகைய அவதூறுகளையும் சுமத்துவதும் மற்ற தலைவர்களின் தரம் தாழ்த்தி அவர்களின் மானத்தோடு கண்ணியத்தோடும் விளையாடுவதும் இதற்காக துணிந்து பொய் வாயிலாக அறிவதோடு மார்க்கத்திலும் பொய் சொல்லக் கூடியவர் என்பதற்கு முஜிபுர்ரஹ்மான் உமரி சொல்லும் சம்பவம் சாட்சியாகிறது. ஒரு விவாதத்தின் போது எதிரணிக்காரர்கள் குறிப்பிட்ட ஒரு ஸஹீஹ் அன ஹதீஸை எடுத்து வைத்தால் என்ன செய்வது என்று இவரது அணியைப் சேர்ந்த ஒருவர் கேட்ட போது அதை நாம் ளயீப் (பலவீனம்) ஆக்கிடுவோம் என்று சொன்ன செய்தி இவர் இதுவரை சொன்ன மார்க்கத்தையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

- மங்கோலியன்

Thursday, May 13, 2010

பழனிபாபா வைத்திருந்தது யாரை? பி.ஜெவுக்கு பாபா பதில் அடி !




வின் டிவி பற்றி பி.ஜெ கூறும் உண்மை




அல்தாபியின் அண்ட புளுகு




பாகர் தியாகம் குறித்து பி.ஜெ



அல்தாபியின் முரண்பாடு



பாலியல் குற்றசாட்டு பற்றிய பி.ஜெ பத்வா



3. துரத்தியடித்த பின்னர் ஜமாத்தே இஸ்லாமி மாநாட்டில் கர்ஜித்ததேன் ?

துரத்தி கர்ஜிப்பு என்ற வார்த்தைகள் மூலமாக உங்களுடைய பொதுவான முஸ்லிம் என்ற பொய் முகம் கிழிகிறது.
ஜமாத்தே இஸ்லாமி மாநாட்டில் கலநத கொள்வது குர்ஆன் ஹதிஸ்படி குற்றமா? ஆடுகோழி தடைச்சட்டம் போன்ற பிரச்சனைகளுக்காக பிற மதத்தை சேர்ந்தவர்களுடன் டிஎன்டிஜே காலத்தில் மேடையேறி உள்ள போது முஸ்லிம்களோடு மேடை ஏறுவதில் என்ன தவறு ?

2. வசைபாடிய தமுமுக வோடு எப்படி ஒரே மேடையில் அமரலாம் ?

மற்றவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து மறந்து ஒரு பொதுப்பிரச்சனைக்காக ஒரு முஸ்லிம் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்பதை மார்க்க அடிப்படையில் எப்படி தவறு என்று சொல்வார்கள் குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் தவறு என்றால் ஏற்றுக் கொள்கிறோம். பகை வளர்க்கும், பிரித்தாலும் பிஜேவின் கொள்கையை ஏன் ஐஎன்டிஜே பின் பற்ற வேண்டும்.
உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் உள்ள பொதுவான விஷயங்களில் பேச யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் அழைக்கச் சொல்லி அல்லாஹ் திருமறையில் கூறும்போது முஸ்லிம்களோடு ஒரு பொதுவான விஷயத்தில் ஏன் ஒன்று படக்கூடாது ?

1.குற்றம் சுமத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் களங்கத்தை துடைக்க ஏன் பாடுபடவில்லை

1.குற்றம் சுமத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் களங்கத்தை துடைக்க ஏன் பாடுபடவில்லை என்கிறார் குற்றத்தை சுமத்தியவர்கள் தான் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் ! குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் குற்றத்தை நிரூபிக்காமல் வெளியேற்றிவிட்டு நீங்கள் தான் நிருபித்து களங்கத்தை துடைக்க வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம். குற்றமற்றவர் என்று குற்றம் சாட்டபட்டவர்கள் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தானே பொடா சட்டத்தை எதிர்த்தோம். உடனடியாக புதிய இயக்கம் ஆரம்பித்தது ஏன்? என்கிறார் இந்த கேள்வியை ஜாக், தமுமுக உடைத்த போது பொய் பிஜே அவர்களை கேட்டு இருக்க வேண்டும் தனி நபரை தூக்கி எறிந்தால் அவர் இயக்கம் கட்ட மாட்டார் அவரோடு சேர்த்து நியாயம்கேட்ட அனைவரையும் தூக்கி எறிந்தால் அவர்கள் அனைவரும் சேர்ந்து கட்டுவதுதான் சரியாகும் ! ஏனென்றால் அப்போது தான் நன்மை ஏவி தீமையை தடுக்கும் குழுவாக செயல்பட முடியும்.

5. பிஜே தொழுகையை பற்றி இப்போது சொல்வதேன் ?

“உள்ளுக்குள் இருந்த போராடுவதற்கு என்று ஒரு நிலை இருக்கிறது. நாம் சொல்லி சுட்டிக் காட்டிக் கொண்டுதான் இருந்தோம் ! சொல்லித்திருந்தாதநிலை வரும்போது, இதற்கு மேல் உள்ளேயிருந்த சொல்ல முடியாது என்றே நிலை வரும் போது வெளியிருந்து சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.” மேலே சொன்ன வார்த்தைகள் ஜாக், தமுமுக தலைவர்களை வெளியில் வந்து விமர்சிக்கின்றிர்களே அப்போது ஏன் சொல்லவில்லை ? என்ற கேள்விக்கு பி.ஜெ சொன்ன பதில் ! அண்ணனின் வார்த்தைகளை அப்படியே இரவலாக பெற்று உங்களுக்கு கேள்விக்கு பதிலாக்குகிறோம்.

4. சம்சுதின் காஸிமிக்கும் ததஜ விற்கும் உள்ள உறவு தெரிந்தபின்னும் மக்கா பள்ளி சென்று மைக் பிடித்ததேன் ?

சம்சுதீன் காஸிமிக்கும் ததஜவிக்கும் உள்ள உறவை இதஜ ஏன் கடை பிடிக்க வேண்டும்? பீஜே என்ன நபியா ? அல்லாஹ்வின் கட்டளைப்படி மூன்று நபித் தோழர்களை புறக்கணித்து சமூக பகிஷ்கரிப்பு செய்ததுபோல் அவருக்கு பிடிக்காதவர்களோடு நாங்களும் பேசாமல் இருப்பதற்கு, மக்கா பள்ளியில் மைக்பிடித்ததில் மார்க்க ரீதியாக என்ன தவறு என கூறாமல் தனிநபர் விரோத போக்கை ஏன் எங்கள் மீது திணிக்கின்றீர்கள் ?

7. இத்தனை ஆண்டுகளாக தக்லீதுக்கு துணை போனீர்களா?

தற்போது மோசடி மன்னனாக பாலியல் கொடூரனாக, வழிகேடனாக, மார்க்கம் அறியாத மூடனாக, குறைகுடமாக தெரியும் பாக்கர் 2009 ஜனவரி வரைக்கும், புதிய தலைவர் எம்.ஐ. சுலைமானுக்க பீஜே எழுதிய கடிதத்தில் இந்த இயக்கத்தின் முன்மாதிரி என்றும் கூறுமளவுக்கு ரோல்மாடலாக பிஜேவின் கண்ணுக்கு பாக்கர் தெரிந்தது தக்லீது என்றால் நாங்களும் தக்லீதில் தான் இருந்திருக்கின்றோம் பாக்கரை காரணியாக்கி தக்லீதில் இருந்த தப்பவைத்த அல்லாஹ்விற்கே புகழ்அனைத்தும்.

6. கொல்லைப்புற வழியாக வந்து மேலாண்மை செய்வதை இப்போது சொல்வதேன் ?

இந்த கேள்விக்கும் மேற்சொன்ன பதிலையே பதிலாக்குகிறோம் உங்கள் பாணியில் குற்றம் சாட்டப்பட்டவர்தான் களங்கத்தை துடைக்க வேண்டும் என்றால் பதவி ஆசை இல்லை என்று நிரூபிக்க மேலாண்மை பதவிகளை விட்டுவிட்டு மீண்டும் மனம் திறந்த மடல் எழுதி விட்டு ஒதுங்கி இருக்கட்டும்.

9. தற்போது வசைபாடும் நீங்கள் அப்போது உடந்தை தானே ?

ஜமாத்தை வைத்து சம்பாதித்தார், ஹஜ் சர்வீஸ் நடத்தி சம்பாதித்தார், சிடி விற்று சம்பாதித்தார். தமுமுக காலத்திலிருந்து உள்ள குற்றச்சாட்டையெல்லாம் வெளியேற்றும் வரை சொல்லாத பிஜே பாக்கரின் பொருளாதார பாலியல் குற்றங்களுக்கு துணை போனாரா? என்ற கேள்வியும் எழுப்பினால் தான் பொதுவான சிந்தனை என்பதையும் கூறிக் கொள்கிறோம்.

8. பி.ஜேவுக்கு ஜால்றா அடித்த உங்களுக்கு இப்போது வில்லனாக தெரிவது ஏன்?

உங்களின் இந்த கேள்விக்கும் மேலே உள்ள பதிலே போதுமானது. “பாக்கர் மட்டும் இல்லையென்றால் நான் வெறும் பயான் செய்பவனாக இருந்திருப்பேன் பாக்கர் தான் இந்த இயக்கத்தை கட்டமைத்தவர் பாக்கர் தான் வசூல் மன்னன். இந்த மர்கஸ் ஆபிஸ் தாஃவா சென்டர் அனைத்தும் உருவாக அவர் தான் காரணம்” என்றெல்லாம் ஜால்ரா அடித்து காரியம் முடிந்ததும் பாக்கர் வில்லனாக தெரிவது ஏன்? என்பதையும் நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

10. கேள்வி : கழுத்தை பிடித்து தள்ளும் வரை கண்ணில் திரை (பர்ஸக்) இருந்ததா?

ஒரே கேள்வியை திரும்ப திரும்ப வேறு வார்த்தைகளில் கேட்டால் ஒரே பதில்தான் வரும். பிஜேவை கழுத்தை பிடித்து தமுமுக தள்ளிய பிறகுதான் நாம் கேட்டோம். இப்போதும் அதேபோல தான் கேட்கிறோம் எனவே உங்களின் சிந்தனைக்கு போடபட்டுள்ள பர்ஸக்கை அகற்றிவிட்டு பாடுங்கள் உண்மை புரியும்.
இன்ஷா அல்லாஹ் நாங்கள் அல்லாஹ்விற்கு பயந்து பதில் கூறியுள்ளோம் ! நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்து இரு சாரரிடமும் கேள்வி எழுப்புங்கள் அப்போது தான் உண்மை புரியும் ஒரு சாரரின் வாதங்களை மட்டும் கேட்டுவிட்டு முடிவெடுப்பது முன் முஃமினின் பண்பல்ல !
தீயவன் ஒரு செய்தியை கொண்டு வந்தால் தீர விசாரித்து கொள்ளுங்கள் இல்லையேல் அறியாமையால் ஒரு கூட்டத்தாருக்கு தீங்கிழைத்து விட்டு பின்னர் வருந்தக்கூடும் (அல்குர்ஆன்)

Wednesday, May 12, 2010

பொதுவான முஸ்லிம்களுக்கு.......

இணையதளத்தில் ஒரு நபர் பொதுவான முஸ்லீம் ஏகத்துவத்தின் எழுச்சியை மட்டுமே விரும்புவன் என்ற முறையில் சில கேள்விகளை வைத்துள்ளார். இவர் பொதுவானவராக இருந்தால் இரு தரப்புக்கும் கேள்வி வைத்திருப்பார். ததஜவினர் நம்மைப் பார்த்து கேட்ட கேள்வியைத்தான் இவரும் வைத்திருக்கிறார். என்பதனால் இவர் பொதுவான நபர் என்பது முதலில் தவறு இருப்பினும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் உண்மையான பொதுவான முஸ்லிம்களுக்கு செய்தி சென்றடைய நமக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்காக அவருக்கு நன்றி கூறுகிறோம்.
1.குற்றம் சுமத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் களங்கத்தை துடைக்க ஏன் பாடுபடவில்லை என்கிறார் குற்றத்தை சுமத்தியவர்கள் தான் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் ! குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் குற்றத்தை நிரூபிக்காமல் வெளியேற்றிவிட்டு நீங்கள் தான் நிருபித்து களங்கத்தை துடைக்க வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம். குற்றமற்றவர் என்று குற்றம் சாட்டபட்டவர்கள் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தானே பொடா சட்டத்தை எதிர்த்தோம். உடனடியாக புதிய இயக்கம் ஆரம்பித்தது ஏன்? என்கிறார் இந்த கேள்வியை ஜாக், தமுமுக உடைத்த போது பொய் பிஜே அவர்களை கேட்டு இருக்க வேண்டும் தனி நபரை தூக்கி எறிந்தால் அவர் இயக்கம் கட்ட மாட்டார் அவரோடு சேர்த்து நியாயம்கேட்ட அனைவரையும் தூக்கி எறிந்தால் அவர்கள் அனைவரும் சேர்ந்து கட்டுவதுதான் சரியாகும் ! ஏனென்றால் அப்போது தான் நன்மை ஏவி தீமையை தடுக்கும் குழுவாக செயல்பட முடியும்.
2. வசைபாடிய தமுமுக வோடு எப்படி ஒரே மேடையில் அமரலாம் ?
மற்றவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து மறந்து ஒரு பொதுப்பிரச்சனைக்காக ஒரு முஸ்லிம் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்பதை மார்க்க அடிப்படையில் எப்படி தவறு என்று சொல்வார்கள் குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் தவறு என்றால் ஏற்றுக் கொள்கிறோம். பகை வளர்க்கும், பிரித்தாலும் பிஜேவின் கொள்கையை ஏன் ஐஎன்டிஜே பின் பற்ற வேண்டும்.
உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் உள்ள பொதுவான விஷயங்களில் பேச யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் அழைக்கச் சொல்லி அல்லாஹ் திருமறையில் கூறும்போது முஸ்லிம்களோடு ஒரு பொதுவான விஷயத்தில் ஏன் ஒன்று படக்கூடாது ?
3. துரத்தியடித்த பின்னர் ஜமாத்தே இஸ்லாமி மாநாட்டில் கர்ஜித்ததேன் ?
துரத்தி கர்ஜிப்பு என்ற வார்த்தைகள் மூலமாக உங்களுடைய பொதுவான முஸ்லிம் என்ற பொய் முகம் கிழிகிறது.
ஜமாத்தே இஸ்லாமி மாநாட்டில் கலநத கொள்வது குர்ஆன் ஹதிஸ்படி குற்றமா? ஆடுகோழி தடைச்சட்டம் போன்ற பிரச்சனைகளுக்காக பிற மதத்தை சேர்ந்தவர்களுடன் டிஎன்டிஜே காலத்தில் மேடையேறி உள்ள போது முஸ்லிம்களோடு மேடை ஏறுவதில் என்ன தவறு ?
4. சம்சுதின் காஸிமிக்கும் ததஜ விற்கும் உள்ள உறவு தெரிந்தபின்னும் மக்கா பள்ளி சென்று மைக் பிடித்ததேன் ?
சம்சுதீன் காஸிமிக்கும் ததஜவிக்கும் உள்ள உறவை இதஜ ஏன் கடை பிடிக்க வேண்டும்? பீஜே என்ன நபியா ? அல்லாஹ்வின் கட்டளைப்படி மூன்று நபித் தோழர்களை புறக்கணித்து சமூக பகிஷ்கரிப்பு செய்ததுபோல் அவருக்கு பிடிக்காதவர்களோடு நாங்களும் பேசாமல் இருப்பதற்கு, மக்கா பள்ளியில் மைக்பிடித்ததில் மார்க்க ரீதியாக என்ன தவறு என கூறாமல் தனிநபர் விரோத போக்கை ஏன் எங்கள் மீது திணிக்கின்றீர்கள் ?
5. பிஜே தொழுகையை பற்றி இப்போது சொல்வதேன் ?
“உள்ளுக்குள் இருந்த போராடுவதற்கு என்று ஒரு நிலை இருக்கிறது. நாம் சொல்லி சுட்டிக் காட்டிக் கொண்டுதான் இருந்தோம் ! சொல்லித்திருந்தாதநிலை வரும்போது, இதற்கு மேல் உள்ளேயிருந்த சொல்ல முடியாது என்றே நிலை வரும் போது வெளியிருந்து சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.” மேலே சொன்ன வார்த்தைகள் ஜாக், தமுமுக தலைவர்களை வெளியில் வந்து விமர்சிக்கின்றிர்களே அப்போது ஏன் சொல்லவில்லை ? என்ற கேள்விக்கு பி.ஜெ சொன்ன பதில் ! அண்ணனின் வார்த்தைகளை அப்படியே இரவலாக பெற்று உங்களுக்கு கேள்விக்கு பதிலாக்குகிறோம்.
6. கொல்லைப்புற வழியாக வந்து மேலாண்மை செய்வதை இப்போது சொல்வதேன் ? இந்த கேள்விக்கும் மேற்சொன்ன பதிலையே பதிலாக்குகிறோம் உங்கள் பாணியில் குற்றம் சாட்டப்பட்டவர்தான் களங்கத்தை துடைக்க வேண்டும் என்றால் பதவி ஆசை இல்லை என்று நிரூபிக்க மேலாண்மை பதவிகளை விட்டுவிட்டு மீண்டும் மனம் திறந்த மடல் எழுதி விட்டு ஒதுங்கி இருக்கட்டும்.
7. இத்தனை ஆண்டுகளாக தக்லீதுக்கு துணை போனீர்களா?
தற்போது மோசடி மன்னனாக பாலியல் கொடூரனாக, வழிகேடனாக, மார்க்கம் அறியாத மூடனாக, குறைகுடமாக தெரியும் பாக்கர் 2009 ஜனவரி வரைக்கும், புதிய தலைவர் எம்.ஐ. சுலைமானுக்க பீஜே எழுதிய கடிதத்தில் இந்த இயக்கத்தின் முன்மாதிரி என்றும் கூறுமளவுக்கு ரோல்மாடலாக பிஜேவின் கண்ணுக்கு பாக்கர் தெரிந்தது தக்லீது என்றால் நாங்களும் தக்லீதில் தான் இருந்திருக்கின்றோம் பாக்கரை காரணியாக்கி தக்லீதில் இருந்த தப்பவைத்த அல்லாஹ்விற்கே புகழ்அனைத்தும்.
8. பி.ஜேவுக்கு ஜால்றா அடித்த உங்களுக்கு இப்போது வில்லனாக தெரிவது ஏன்?
உங்களின் இந்த கேள்விக்கும் மேலே உள்ள பதிலே போதுமானது. “பாக்கர் மட்டும் இல்லையென்றால் நான் வெறும் பயான் செய்பவனாக இருந்திருப்பேன் பாக்கர் தான் இந்த இயக்கத்தை கட்டமைத்தவர் பாக்கர் தான் வசூல் மன்னன். இந்த மர்கஸ் ஆபிஸ் தாஃவா சென்டர் அனைத்தும் உருவாக அவர் தான் காரணம்” என்றெல்லாம் ஜால்ரா அடித்து காரியம் முடிந்ததும் பாக்கர் வில்லனாக தெரிவது ஏன்? என்பதையும் நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
9. கேள்வி : தற்போது வசைபாடும் நீங்கள் அப்போது உடந்தை தானே ?
ஜமாத்தை வைத்து சம்பாதித்தார், ஹஜ் சர்வீஸ் நடத்தி சம்பாதித்தார், சிடி விற்று சம்பாதித்தார். தமுமுக காலத்திலிருந்து உள்ள குற்றச்சாட்டையெல்லாம் வெளியேற்றும் வரை சொல்லாத பிஜே பாக்கரின் பொருளாதார பாலியல் குற்றங்களுக்கு துணை போனாரா? என்ற கேள்வியும் எழுப்பினால் தான் பொதுவான சிந்தனை என்பதையும் கூறிக் கொள்கிறோம்.
10. கேள்வி : கழுத்தை பிடித்து தள்ளும் வரை கண்ணில் திரை (பர்ஸக்) இருந்ததா?
ஒரே கேள்வியை திரும்ப திரும்ப வேறு வார்த்தைகளில் கேட்டால் ஒரே பதில்தான் வரும். பிஜேவை கழுத்தை பிடித்து தமுமுக தள்ளிய பிறகுதான் நாம் கேட்டோம். இப்போதும் அதேபோல தான் கேட்கிறோம் எனவே உங்களின் சிந்தனைக்கு போடபட்டுள்ள பர்ஸக்கை அகற்றிவிட்டு பாடுங்கள் உண்மை புரியும்.
இன்ஷா அல்லாஹ் நாங்கள் அல்லாஹ்விற்கு பயந்து பதில் கூறியுள்ளோம் ! நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்து இரு சாரரிடமும் கேள்வி எழுப்புங்கள் அப்போது தான் உண்மை புரியும் ஒரு சாரரின் வாதங்களை மட்டும் கேட்டுவிட்டு முடிவெடுப்பது முன் முஃமினின் பண்பல்ல !
தீயவன் ஒரு செய்தியை கொண்டு வந்தால் தீர விசாரித்து கொள்ளுங்கள் இல்லையேல் அறியாமையால் ஒரு கூட்டத்தாருக்கு தீங்கிழைத்து விட்டு பின்னர் வருந்தக்கூடும் (அல்குர்ஆன்)
இன்ஷா அல்லாஹ் தமிழகத்தில் பல ஜமாஅத்துக்கள் உருவாக காரணமாகவும் தவ்ஹீத் வாதிகளை தனிதனியாக துண்டுதுண்டாக்கி “தானே நூலை விற்று பின் துண்டாக்கிய வளை போல்” என்று அல்லாஹ் கூறுவதைப் போன்று தன்னுடைய அகம்பாவத்தினாலும் தன்னைத் தவிர தலைவன் இல்லை என்ற அகந்தையாலும் பிரித்தாலும் சூழ்ச்சி மூலம் மக்களை பிரித்து மார்க்கத்தை பிரித்து, இயக்கத்தை பிரித்து, தனி கொள்கை, தனிப்பள்ளி, தனி இயக்கம் ஏன் தனி மத்ஹப் என்ற நிலையை எல்லாம் கடந்து தனிமதம் என்கிற ரீதியில் செல்லும் அண்ணனால் விரைவில் அங்கிருந்தே உலக தவ்ஹீத் ஜமாஅத், பேரண்ட தவ்ஹீத் ஜமாஅத் எல்லாம் உருவாகும் தமிழீழ விடுதலைக்காக, தன்னை தவிர யாரும் போராடக்கூடாது. என்று கொள்கை சகோதரர்களை எல்லாம் கொன்றொழித்துவிட்டு தானும் அழிந்த பிராபாகரன் போல் பிஜே செயல்படும் வரை புதிய இயக்கங்கள் தோன்றுவதை தடுக்க முடியாது.
கொள்கைக்காக தான் இயக்கங்கள் ஆனால் நீங்கள் சிந்தித்துபாருங்கள் தமிழகத்தில் கொள்கைச் சகோதரர்களிடையே ஏற்பட்ட பிரிவுகள் அனைத்திற்கும் ஒருவர் தான் மூலகாரணமாக இருந்துள்ளார் இதன் மூலம் பிரிவினையின் ஊற்றுக்கண் பிஜே என்பதை உணரலாம். தன்னோடு இருக்கும்வரை உத்தமர்கள். பிரிந்தபின் கொள்கை சகோதரர்களையெல்லாம் கொள்கை தவறியவர்கள் என்றும், தவ்ஹீத்வாதிகள் அனைவரையும் தடம்புரண்டோர் என்றும் அல்லாஹ்வின் அதிகாரத்தை கையிலெடுத்து பட்டியலிடுவது யார் என சிந்தியுங்கள் ? ஒரே கொள்கையை சொல்வதற்கு இரண்டு இயக்கங்கள் தேவையா ? இதே கேள்வியை ஜாக்கிலிருந்து அண்ணன் பேச்சைக் கேட்டு வெளியேறிய போதும் தமுமுகவிலிருந்து வெளியேறிய போதும் கேட்டிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் கொள்கை ரீதியாக விமர்சிக்காமல் தனி மனித விமர்சனங்களை, தனி மனித தாக்குதலை துவங்குவது ததஜ தான் என்பது சமுதாயத்தை உற்று நோக்கும் நடுநிலையாளர்களுக்கு நன்கு தெரியும். பதிலுக்கு பதில் என்கிற ரீதியில் சில நேரங்களில் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறார்கள் என்கிற தத்துவப்படி சில நேரங்களில் நாமும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் உணர்ச்சி மிகு சூழல் ஏற்பட்டு விடுகிறது. இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் இயன்ற வரை தவிர்க்க முயற்சிக்கிறோம். நம்முடைய இலக்கு மார்க்கத்தை மாமறைகுர்ஆனை மக்களுக்கு தூயவடுவில் எடுத்து சொல்வதுதான் அந்த பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது. நம் அனைவருக்கும் நேர் வழியில் தொடர்ந்து நடக்க அல்லாஹ் நல்லருள் புரியட்டும் ! ஏகத்துவம் மட்டுமே எழுச்சி பெறட்டும் !

- இப்னு ஹூசைன்

Tuesday, May 4, 2010

மாமியார் உடைத்தால் மண்குடம் .... மருமகள் உடைத்தால் பொன் குடமா?

1997 பெரியகுளம் விடுதலை சிறுத்தை முருகன் படத்திறப்பு விழவில் கலந்து கொள்வது இஸ்லாத்திற் முரன் இல்லைய? என்று கேட்ட மதுரை ஜாக் சகோதரர்களிடம் திருவாளர் ..pj. சொன்னது.......

எவன் எதை திறந்தால் என்ன?நாம் சத்தியத்தை சொல்வோமா....

இன்று யாதவ மாநாட்டில் பங்கேற்ற பாக்கர் கோணார் என்றால்.....தலித் விழவில் பங்கேற்ற திருவாளர் ..pj. பறையரா?

Saturday, May 1, 2010

தொழுகை இல்லாத PJ





தொடர்புக்கு

send your email and comments to sengiskhanonline@gmail.com