Sunday, January 30, 2011

அண்ணே ! என்னே உங்கள் தேர்தல் நிலைபாடு?


தேர்தல் நிலைபாடு
1. மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
இவர்கள் சமுதாயத் தொண்டு செய்யாமல் ஜமாஅத் நிர்வாகிகளையும் தலைவர்களையும் மிரட்டுதல் பள்ளிவாசல் நிர்வாகத்தில் நுழைந்து நிர்வாகத்தை சீரழிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, அப்பாவிகளின் நிலத்தை அபகரிப்பது, குடும்பப் பஞ்சாயத்து என்ற பெயரில் அராஜகம் செய்வது ஆகிய காரியங்க்ளைச் செய்து முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளனர். இவர்கள் வளர்வது சமுதாயத்துக்கு கேடாக முடியும் என்பதால் இவர்கள் எந்த அணியில் இருந்தாலும் இவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
யாருக்கு ஆதரவு ?
2. தேர்தல் கூட்டணிகளும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் இன்னும் வெளிவராத காரணத்தாலும் தேர்தல் நடத்தை விதி இன்னும் நடைமுறைக்கு வராததால் ஆளும் கட்சி முஸ்லிம்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை கடைசி நேரத்திலாவது செய்ய வாய்ப்பு இருக்கின்ற காரணத்தாலும் நிலைமை தெளிவானவுடன் மாநில செயற்குழுவைக்கூட்டி யாருக்கு ஆதாரவு என்ற முடிவை எடுக்க செயற்குழுவுக்கு அதிகாரம் வழங்குவது என்று இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது


கேள்வி கேட்க எவருமில்ல்லாத நிலையில் தன் விசுவாசமான அடிமைகளைக் கொண்டு, தான் விரும்பிய நிர்வாகத்தை கொண்டு தானே தலைவரான   சேலம் பொதுக்குழுவில் தன்னுடைய தேர்தல் நிலைப்பாடு தீர்மானத்தின் மூலம் தன்னுடைய தரத்தையும் நிறத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். பொதுவாக கோரிக்கை அடிப்படையில் தான் தேர்தல் நிலைப்பாடு எடுக்கப்படும். யாருக்கு ஆதரவு என்பதை தான் சமுதாய அமைப்புகள் அறிவிக்கும்! ஆனால் யாருக்கு எதிர்ப்பு என்பதை முதலில் அறிவித்து ம.ம.க.வை தோற்கடிப்பது தான் தான் முதல் குறிக்கோள் என்பதை அறிவித்து  இவருடைய விருப்பு வெறுப்பின் அடிப்படையில்தான் தேர்தல் நிலைப்பாடு என்பதை பொய் .ஜே தெள்ளத் தெளிவாக நிரூபித்துள்ளார். பி.ஜே.பி.நிற்கும் தொகுதிகளில்  கூட இந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பதும் சங் பரிவாரங்கள் கூட தமிழகத்தில்  ஒரு முஸ்லிம் கட்சியை தோற்கடிப்போம் என பொதுக் குழுவில் தீர்மானம் போடவில்லை என்பதும் , இவரின் சிந்தனை நிறம் காவியோ என சிந்திக்க தோன்றுகிறது!

யாருக்கு ஆதரவு என பொதுக்குழு முடிவு செய்யும்   நினைத்துக் கொண்டிருக்கையில் இன்னும் பேரம் படியாத காரணத்தால் அதுவும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது!  முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை சற்று உயர்த்தி வழங்கி, ஏற்கனவே இருக்கும் முஸ்லிம் லீக்கை வைத்து முஸ்லிம் வாக்குகளை பார்த்து கொள்ளலாம் என கருணாநிதி நினைத்து விட்டாரோ என்னவோ! திருக்குவளையாருக்கு திருவிடசெரி கொலை ஞாபகம் வந்து, எதற்கு  இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் என நினைத்து விட்டார் போலும்! ம.ம.க.வை வெளியேற்ற சொல்லி ஜெயலலிதாவுக்கு அனுப்பிய தூதும் பயனிள்ளதாதல்  கடைசி நேரத்தில் வேறு வழியின்றி எடுத்ததுதான் அவர்கள் இணைய தளத்தில் வெளியான நீங்கள் மேலே  காணும் தேர்தல் நிலைப்பாட்டு தீர்மானம். 


.

சேலம் பொதுக்குழு சிம்மாசனம்! பி.ஜே மீண்டும் தலைவர் ஆனார்!

 சேலம்  பொதுக்குழு சிம்மாசனம்!    பி.ஜே மீண்டும்  தலைவர் ஆனார்!


கடந்த 2008 -ம ஆண்டு காமராஜ் அரங்கத்தில் நடந்த பொதுக்குழுவில் பாக்கரை வெளியேற்றுவதற்காக நடந்த நாடகத்தை திரைக்கதை எழுதி திறம்பட இயக்கிய 
பொய்.ஜே. 'இந்த பன்னியை [பாக்கரை] வெளியேற்றுவதற்காக தானும் வெளியேறுவதாக போக்கு காட்டி பி.ஜே. என்னவெல்லாம் பிளான் பண்ணினார் தெரியுமா? என பிர்தவ்சி மண்ணடியில் உளறிக்கொட்டிய உண்மையை மீண்டும்   சேலம் பொதுக்குழுவில் சிம்மாசனம் ஏறியதன் மூலம் நிருபித்துள்ளார் பொய்.ஜே.


காமராஜர்  அரங்க பொதுக் குழுவில் இரண்டு முறை பதவி வகித்தவர்கள் மீண்டும் 
பதவிக்கு வரக்கூடாது! என்பது 'பைலா' என்றார் , மக்களெல்லாம் பைலா நாம் உருவாக்கியது 'அதை மாற்றுவோம்'! என குரல் எழுப்பிய போது 'அதெல்லாம் மாற்றக் கூடாது ! நாம உருவாக்கிய பைலாவை நாமே மதிக்கலைன்னா வேறு யாரு மதிப்பான் ? த.மு.மு.க.இத செஞ்சப்ப 'ஏய் பைலாவை மாத்திப்புட்டான்' அப்படின்னு நாம சொன்னமே ! அதயே   இப்ப நாம செஞ்சா நம்மை பார்த்து காரி துப்ப மாட்டானா? என விளக்கம்  அளித்து 'வெளியேறுகிறோம் இது பேங்க் பாஸ் புக் , இது ஜமாத்தின் சொத்து பத்திரம் என நல்லவன் போல் ஒப்படைத்த போது அதை நம்பி கண்ணீர் விட்டு கதறியவர்களில் நானும் ஒருவன்! 


வெளியேறியது  போல் வெளியேறி விட்டு மீண்டும் ' மேலாண்மைக் குழு ' என்ற பெயரில் உள்ளே வந்து 'நிறுவனத் தலைவர் ' என ராமதாஸ் போல் நிர்வாகிகளை  சுயமாக செயல்பட விடாமல், எம்.ஐ. சுலைமான் , அப்துல் ஹமித் .அல்தாபி , கானத்தூர்  பஷீர் என அனைவரும் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு அவர்கள் ஓடுமளவுக்கு அவர்களை டாச்சர் செய்தார். 


ஜமாத்தை  தன் கைப்பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற  நோக்கில் இந்த பொதுக்குழுவுக்கு முன்னே தன் அடிமைகள் மூலம் ' அண்ணன் தான் தலைவரா வர்றாராம்ல' என செய்தியை தானே பரப்பி பதவியை பிடிக்க அரசியல்வாதிகள் செய்யும் சித்து வேலைகளை விட அழகாக  காய் நகர்த்தி அரியாசனத்தை  கைப்பற்றி விட்டார் . அறியா ஜனத்தை [அப்பாவி தொண்டனை]   ஏமாற்றி விட்டார்.  


பின்னாளில் தனக்கு பிரச்னை ஏற்படுத்துவார்கள்  எனக்கருதும் கலீல் ரசூல், தவ்பீக், அல்தாபி போன்றோரை சாதுர்யமாக நகற்றி விட்டார். நம்பிக்கையற்ற பஷீர் ,ஜின்னா போன்றோரும் நகற்றப்பட்டு , தனக்கு விசுவாசமான அடிமைகளை தேர்ந்தெடுத்து  விட்டார். இனி அண்ணன் நிரந்தர தலைவர்ஆனால் பைலாவை மாற்றிய த.மு.மு.க.வை விமர்சித்த த.த.ஜ.தொண்டனின் நிலைதான் பாவம் அவன் தன் முகத்தை இப்போது எங்கே வைத்துக் கொள்வான்  !.  
- இவண் இப்னு ஹுசைன் 
    
  


 .

பஞ்ச் பட்டிக்காட்டான்[13] just4jokes






செய்தி; அகமதாபாத் வணிக கல்லூரி பாடப்புத்தகத்தில் ரஜினியின் "முத்து" படம் இடம் பெற்றுள்ளது. 
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; அப்படியே பொறியியல் கல்லூரியில் பாட்ஷா; சட்டக்கல்லூரியில் எந்திரன் இப்பிடி வரிசையா கொண்டாந்திருங்க. மாணவர்கள் நல்லா உருப்பட்டிருவாங்க!
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்; இந்தியாவில் மாநில அரசுகள் எல்லாம் ஏஜெண்டுகளாக மட்டுமே செயல்படுகின்றன. சட்ட மன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்ற முடியுமே தவிர அதை சட்டமாக கொண்டு வர முடியாது. சட்டமாக கொண்டுவர வேண்டுமென்றால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். எனவே அதிகாரத்தை பகிர்ந்தளித்தால் தான் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும். இதனால் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் வேண்டும். தனிகொடி வேண்டும். மாநிலங்களுக்கு முழு அதிகாரம் வேண்டும் என்பது தான் இறையாண்மை. 
 
பஞ்ச் பட்டிக்காட்டான்நீங்க சொல்ற இறையாண்மை என்பது மீண்டும் குறுநில மன்னர்களை உருவாக்குவது போலல்ல்லவா உள்ளது? மாநிலங்களுக்கு முழு அதிகாரம், தனிக்கொடி எல்லாம் தந்து விட்டால் தனி நாடு ஆகிவிடாதா?
 
மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி; வெங்காயம் விலையை கட்டுக்குள் கொண்டு வருவோம்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்நீங்க வெங்காய விலைய பத்தி வாய் தெறக்குறதுக்குள்ள தக்காளி விலை ஏறிப்போச்சு. அதோட நீங்க பெட்ரோல் விலையை  ஏத்தியதால  எல்லாப் பொருளும் கண்டிப்பா விலை ஏறத்தான் போகுது. அதுனால ஒவ்வொன்னுக்கும் சொல்லிக்கிட்டு இருக்காம, விலைவாசியை கட்டுப்படுத்துவோம்னு மொத்தமா சொல்லீடுறது நல்லது. 
 
திருமண நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின் பேச்சு;  தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மணமக்கள் தங்கள்  குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டவேண்டும். 
 
பஞ்ச் பட்டிக்காட்டான்மொதல்ல உங்க பெயரை தமிழ்ல மாத்திட்டு, பெறகு வந்து எங்ககிட்ட சொல்லுங்கன்னு மணமக்கள் சொல்லமாட்டாங்க என்ற தைரியத்துல பேசுறீக போல.
 
முதல்வர் கருணாநிதி அளித்த மினி பேட்டி:
வெங்காய விலை உயர்ந்திருக்கிறதே அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதை பெரியாரிடம் போய் கேளு...
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; இப்பிடி சொல்றதோட விட்டுட்டா எப்பிடி? மரணித்துவிட்ட பெரியாரிடம் எப்படி கேக்குறதுங்கிற வழியையும் உங்க பகுத்தறிவு மூலமா சொன்னா  தேவலை.
பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன்;  வாஜ்பாய் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் சிறந்த, ஒப்பற்ற தலைவர். சிறந்த பொக்கிஷம். ஆசியாவிலேயே மிக உயர்ந்த தலைவர். ஆகவே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியே தீரவேண்டும்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; விருதுங்கிறது தேடி வந்த காலம் மலையேறி, தந்தே தீரவேண்டும் என்று மிரட்டி வாங்கும் காலம் வந்து விட்டதோ..?
 
நடிகர் விஜயகுமார்பேரன் விஜய் ஸ்ரீஹரி பெயரில் நிறைய கறுப்பு பணத்தை நான் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனால்தான் குழந்தையை விட மறுப்பதாகவும் சொல்கிறார்கள். நிறைய பணம் என்னிடம் கிடையாது. நான் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனோ, தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியோ அல்ல. சாதாரண கவுரவ வேஷம் போடும் நடிகர்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; ஏனுங்க! அமிதாப் மேலயும், ரஜினி மேலயும் உங்களுக்கு என்ன கோவமுங்க.? சந்தடி சாக்குல அவங்ககிட்ட கருப்புப் பணமோ, அல்லது  வெறும் பணமோ  நெறையா இருக்குங்கற மாதிரி சொல்றீங்களே..? 
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா; தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் எனது தலைமையிலான அரசால் 18.5.2004 அன்று பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதையும், மீண்டும் சிறுபான்மை இன மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.


பஞ்ச் பட்டிக்காட்டான்; ரத்துப் பண்ணினது நான்தான்னு சொல்ற நீங்க, அந்த சட்டத்தை கொண்டு வந்ததே நான்தான்னு சேர்த்து சொன்னா நல்லாயிருக்கும். 


தமிழ்நாடு பனைத்தொழிலாளர் வாரிய தலைவர்  குமரி அனந்தன்; பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற கொள்கையுடையவன் நான். முதல்அமைச்சர் கருணாநிதி, படிப்படியாக அதனை நிறைவேற்றுவதாக கூறியுள்ளார். விரைந்து நிறைவேற்றுங்கள் என்று கோரிக்கை வைப்போம். அதனைவிடுத்து, சட்டவிரோதமாக கள் இறக்கிவிற்போம் என்று கூறுவது நியாயமாகாது.


பஞ்ச் பட்டிக்காட்டான்ஓட்டுக்காக சில கட்சிகள் கள் இறக்குவதற்கு ஆதரவளிக்குற இந்த காலத்துல, பனைவாரியத் தலைவரா இருந்துக்கிட்டு கள்ளுக்கு எதிரா பேசுற நீங்க உண்மையிலிலேயே காந்தியவாதிதான்.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்; எது எப்படியாக இருந்தாலும் வரும் 2016ம் ஆண்டு தனித்து நின்று தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம்.


பஞ்ச் பட்டிக்காட்டான்2006 ல்  புதுவையில்  ஆட்சி ; 2011 ல் தமிழகத்தில் ஆட்சி என்று முன்னாடி சொன்னீங்க. இப்ப திடீர்னு இன்னொரு அஞ்சு வருஷம் தள்ளிப் போட்டதுக்கு என்ன காரணமோ..?


கொங்குநாடு முன்னேற்றக் கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி: திருவாரூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்காக கருணாநிதி இருக்கிறார். மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் நலனுக்காக அழகிரி இருக்கிறார். சென்னை பகுதிகளின் நலனுக்காக ஸ்டாலின் இருக்கிறார். அதுபோல், கொங்கு நாட்டிற்கு யாரும் இல்லாததால், கொங்கு நாட்டுக்கு வரவேண்டிய திட்டங்கள் வருவதில்லை.



பஞ்ச் பட்டிக்காட்டான்ஏன் இப்பிடி சுத்தி வளைக்கிறீங்க..? எங்க கொங்கு மண்டலத்துக்கு  ஒரு குறுநில மன்னர் வேணும்னு நேரடியா சொல்ல வேண்டியது தானே!
-by mugavai abbas.

சஞ்சய் காந்திக்கும்- சங்பரிவாருக்கும் என்ன சம்மந்தம்..?




மகன் ராகுல் -   தந்தை சஞ்சய் 



காங்கிரஸ் கட்சி 125 ஆண்டுகள் ஆவதையொட்டி காங்கிரஸ் வரலாறு புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது. மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியை ஆசிரியராக கொண்டு இந்த புத்தகத்தை தயாரித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இப்போதைய கால கட்டம் வரை நடந்த பல்வேறு சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  அதில் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் 1975-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட “எமர்ஜென்சி” பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தவிர்க்க முடியாத சூழலில் அன்று இந்திராகாந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தார். ஆனால் அதை நடைமுறைபடுத்துவதில் ஏற்பட்ட குழப்பத்தால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு விட்டது என்று புத்தகத்தில் கூறியுள்ளனர். எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு அதை நடை முறைக்கு கொண்டு வந்த போது தொடக்கத்தில் மக்கள் அதை வரவேற்றார்கள். ஆனால் கட்டாய குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன், குடிசைகளை கட்டாயமாக காலி செய்ய வைத்தது போன்றவை மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த திட்டங்களை தீவிரமாக அமல்படுத்த சஞ்சய்காந்தி காரணமாக இருந்தார். இது எதிர் மறைவான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது என்று அதில் குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும், அயோத்தி பிரச்சினையில் நரசிம்மராவ் கணிப்பு தவறி விட்டது. பாபர் மசூதி இடிப்பை அவர் தடுப்பதில் தோல்வி அடைந்து விட்டார் என்றும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
இதில் சஞ்சய்காந்தி பற்றிய விமர்சனங்களுக்கு பாய்ந்து வந்து காங்கிரஸ்  மீது பாய்கிறது பாரதீயஜனதா கட்சி. சஞ்சய்காந்தி, இந்திரா காந்தி காலத்தில்  காங்கிரசில் இருந்தவர். அவர் பாஜகவில்  இருக்கவில்லை. சஞ்சய் மீதான விமர்சனம் தவறு எனில், அது பற்றி காங்கிரசின் ஏனைய தலைவர்களோ, அல்லது சஞ்சயின் மனைவி மேனகா காந்தியோ, சஞ்சயின் மகன் வருண் காந்தியோ கருத்துக் கூறியிருந்தால் அது சரியானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும். ஆனால் அவர்களே மவுனமாக இருக்கும் நிலையில், சங்க்பரிவாரத்தை  சேர்ந்த ஷா நவாஸ் உசேன் மற்றும்  ராஜ்நாத் சிங் ஆகியோர், மேனகா காந்தியும் வருண் காந்தியும்  பாஜகவில் இருப்பதால்தான் காங்கிரஸ், சஞ்சய்காந்தி மீது குற்றம் சாட்டியுள்ளது என கூறுகின்றனர்.
சங்பரிவார் சஞ்சயை ஆதரிப்பதற்கு காரணம் இதுவல்ல. மாறாக அவசர நிலை பிரகடனத்தின் போது, குடும்பக்கட்டுப்பாடு  விஷயத்தை முஸ்லிம்கள் மீது திணித்ததாக சஞ்சய்காந்தி மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. எனவே அந்த விசுவாசத்திற்காகவே சங்பரிவார் சஞ்சய்காந்திக்கு ஆதரவாக கொடி பிடிக்கிறது என்பதே உண்மை. உண்மை இதுவல்ல என்று சங்பரிவாரம் மறுக்குமானால், ''அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சமந்தம்? என்பார்களே அதுபோன்று, சங்பரிவாருக்கும்-சஞ்சயுக்கும் என்ன சம்மந்தம் என கூறவேண்டும். கூறுவார்களா?

இந்துத்துவா தீவிரவாதிகளையும் தோலுரிக்குமா தினமலர்..?





லகில் வாழும் மானுடர்களில், அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவராயினும், எந்த மொழியுடையவராயினும், எந்த மதத்தையுடையவராயினும் அவர்களில் நல்லவர்கள்- கெட்டவர்கள் என்று இரு பிரிவினர் இருப்பது போன்று, எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த நாட்டில் தீவிரவாதிகள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அந்த அடிப்படையில்  பாகிஸ்தானிலும் தீவிரவாதிகள் இருக்கலாம்; இருப்பார்கள். ஆனால், ''சோறு திங்கலன்னா பூச்சாண்டியிடம் புடுச்சு குடுத்துருவேன்' என்று குழந்தைகளுக்கு பயம் காட்டும்  தாய்மார்களைப் போல் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக காட்டுவதில்  ஊடகங்களுக்கு அதிலும் குறிப்பாக தினமலருக்கு என்னதான் ஆனந்தமோ  தெரியவில்லை. அந்த பத்திரிக்கையில் 'டவுட் தனபாலு' என்ற பகுதியில்,


மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா: பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. டில்லி வந்தடையும் வெங்காயத்தை உடனடியாக பொதுமக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கும்படி, டில்லி முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: என்னது...? பாகிஸ்தான்ல இருந்து வெங்காயமா...? ஊம்... அந்த நாட்டு பயங்கரவாதிகள் தோலைத் தான் உரிக்க முடியலை... அவங்க வெங்காயத் தோலையாவது உரிப்போம்...! (அப்பவும் நமக்குத் தான் கண்ணீர் வரும்.) 


என்று வெளியிட்டுள்ளது தினமலர். 
இதன் மூலம் பாகிஸ்தானில் மட்டும்தான் தீவிரவாதிகள் இருப்பது போன்றும், அவர்களின் தோலை உரிக்கமுடியவில்லையே என்று ஆதங்கப்படுவது  போன்றும்  காட்டுகிறது தினமலர்.   மேலும் அவங்க வெங்காயத் தோலை உரிச்சாலும் நமக்குத் தான் கண்ணீர் வரும் என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பையும் சொல்கிறது தினமலர். அவங்க வெங்காயத்த மட்டுமல்ல எவங்க வெங்காயத்த உரிச்சாலும், உரிக்கிரவனுக்குத் தான் கண்ணீர் வரும்  என்பது கூட தினமலருக்கு தெரியவில்லையா?
மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தோலை உரிப்பதற்கு முன்னால், உண்மையில் தீவிரவாதிகளின் தோலை உரிப்பதுதான் தினமலரின் நோக்கம் என்றால், முதலில் நமக்கு பக்கத்தில் இருக்கும் தீவிரவாதிகளின் தோலை உரிக்க தினமலர் தயாரா?
  • பாபர்  மஸ்ஜிதை இடித்தவர்கள் தினமலரின் பார்வைக்கு தீவிரவாதிகள் இல்லையா?
  • அதற்கு முன்னால் 'ரத யாத்திரை' என்ற பெயரில் நாடெங்கும் 'ரத்த யாத்திரை' நடத்தியவர்கள் தினமலரின் பார்வைக்கு தீவிரவாதிகள் இல்லையா?
  • குஜராத்-மும்பை-கோவை உள்ளிட்ட  நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களின் ரத்த ஆற்றை ஓட்டியவர்கள் தினமலர் பார்வையில் தீவிரவாதிகள் இல்லையா?
  • அஜ்மீர் தர்கா- மெக்கா  மஸ்ஜித்- சம்ஜாதா எக்பிரஸ்- அஹமதாபாத்- ஜெய்ப்பூர்- மாலேகான்- நந்தேட்- தென்காசி உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் குண்டு வெடிக்க செய்தவர்கள் தினமலரின் பார்வையில் தீவிரவாதிகள்  இல்லையா?
இவர்களின் தோலை உரிக்கவேண்டும் என்று என்றாவது தினமலர் நினைத்ததுண்டா? இல்லை. காரணம் 'நம்மவா' என்பதுதானே! இவ்வாறு நாம் எழுதுவதால் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமல்ல. பாகிஸ்தானாக இருந்தாலும், எவராக இருந்தாலும் தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டிய  விஷயம் என்பதில் கடுகளவும் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் எல்லைதாண்டி வந்து கார்கில்  போர் மற்றும் மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களை  செய்யும் அளவுக்கு பாகிஸ்தானுக்கு வழியை திறந்து விட்டது யார்? நாட்டின் மொத்த வருமனாத்தில் 60 சதவிகிதத்திற்கு மேல் செலவு செய்து பராமரிக்கபப்டும் ராணுவம், காஷ்மீரில் காட்டும் கடுமையை, கவனத்தை,  பாகிஸ்தான் எல்லையில்  காட்டியிருந்தால் எல்லைதாண்டி  பயங்கரவாதம் நுழையமுடியுமா  என்பதையும் சிந்திக்கவேண்டும்.
எனவே தினமலர் போன்ற ஜனரஞ்சக ஊடகங்கள், குற்றங்களை செய்பவர்களை அடையாளம்  காட்டும் விஷயத்தில் நாடு-மதம் கடந்த பார்வையை செலுத்தவேண்டும் என்பதே  நடுநிலையாளர்களின்   வேண்டுகோளாகும்.

முகவை அப்பாஸ் 
குவைத் மண்டல பொறுப்பாளர்.

முஸ்லிகளின் இட ஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்தி முதல்வர் அறிவிப்பு!

 முஸ்லிகளின் இட ஒதுக்கீட்டை  5% ஆக  உயர்த்தி முதல்வர் அறிவிப்பு! 
                                             
அல்ஹம்து லில்லாஹ் ! அல்லாஹ்வின் மாபெரும்
 கிருபையால் ஐ.ஏன்.டி.ஜே. முதல்வருக்கு எழுதிய
 கடிதத்தின் அடுத்த கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது!



 முஸ்லிம்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை
3.5% ஒதுக்கீட்டை  7% சதவீதமாக உயர்த்த வேண்டும்
 என எஸ்.எம்.பாக்கர்  இட ஒதுக்கீடு சம்பந்தமாக 
முதல்வருக்கு எழுதிய கடிதத்திலும் , கோவையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் இதையே வலியுறுத்தினார் 
.இது பற்றிய செய்தியை நமது இணையதளத்திலும்     வெளியிட்டிருந்தோம்!


இன்று காலை 11 காமராஜர் அரங்கில் நடைபெற்ற
 அலாவுதீன் IAS இல்லத் திருமண விழாவில் 
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை  5%   ஆக உயர்த்தி 
வழங்கப்பட்டு  என அறிவித்தார்.


  இதை  அறிந்து கொண்ட அண்ணன் தி.மு.க.
 கூட்டணியை ஆதரிக்க இதையே காரணமாகக
 முடிவு செய்து  1மணிக்கு அவசரம் அவசரமாக
 சேலம் பொதுகுழு தீர்மானத்தில் சேர்த்துள்ளார்.
 .  

Saturday, January 29, 2011

உண்மை கசக்கும்!

கசக்கும் உண்மைகள்!
Filed under ததஜ by அந்நஜாத்
S.ராஸிக், திருச்சி-8.
அநியாயக்காரர்கள் நியாயத் தீர்ப்பு நாளுக்கு அஞ்சட்டும்! ( பார்க்க 56:51-57)
மார்க்க மற்றும் நீதிமன்றத் தீர்ப்புக்காக லஞ்சம் வாங்குபவரையும், லஞ்சம் கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: அபூதாவூது. இப்னுமாஜா, நஸயீ, திர்மிதீ, அஹ்மது.
முஸ்லிம்கள் மீதுள்ள வெறுப்பால் அநியாயக்காரர்கள் பாபர் மசூதியை இடித்தனர். பாபர் மசூதி பள்ளிவாசல் சன்னி வக்பு வாரியத்திற்கு உரியது என ஆவணங்கள் இருந்தும் நியாயமற்றத் தீர்ப்பை வழங்கினர். நியாயத் தீர்ப்பு நாளையும், மறுமையையும் நம்பாத அவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. படைத்தவனை விட்டு படைப்பினங்களை வணங்கும், காசே தான் கடவுள் என்ற கொள்கை உள்ளவர்களிடம் நம்மைப் படைத்தவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை காண முடியாது. உலகிற்கு நீதியையும், நியாயத்தையும் போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லும் முஸ்லிம்கள், அதிலும் குறிப்பாக குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதில் நாங்கள் தான் நம்பர்1 என்று பீற்றிக் கொள்பவர்கள் முதலில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். பின்பு அதை மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். என் மகள் ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று நபி(ஸல்) கூறியதைக் கூறி இஸ்லாம் நீதியுடனும், நியாயத்துடனும் நடக்கச் சொல்கிறது என்று மாற்று மதத்தவர் கேள்விக்கு அந்தத் தலைவர் பதில் சொல்லி அதைக் கேட்டு அவரின் தொண்டர்கள் புளங்காகிதம் அடைந்தால் மட்டும் போதுமா? நியாயமாக நடந்து கொள்ள வேண்டாமா?
“இறை நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செயல்படுவோராகவும் நியாயத்தின் சாட்சிகளாகவும் ஆகிவிடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை, நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டி விட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் பயபக்திக்கு மிகவும் உகந்ததாகும். அல்லாஹ்வை அஞ்சி ஆதரவு வையுங்கள். நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்” (அல்குர்ஆன் 5:8)
“உண்மைகள் எப்போதும் கசக்கும்; கசப்பாயினும் உண்மையைச் சொல்லிவிடு” என்ற நபி மொழியைப் பின்பற்றி இங்கே சில உண்மைகள்.
பள்ளிவாசல் பிரச்சனையில் நியாய, அநியாயங்கள் :
1. பாபர் மசூதி பள்ளிவாசல் வழக்குத் தொடுத்த சன்னி வக்பு வாரியத்திற்குச் சொந்தமானது என்பதற்கு உரிய ஆவணங்கள் இருந்தும், நீர்மோகி அகோரா, ராமஜன்மபூமி நியாஸ் என்ற அமைப்புகள் உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதற்காக அநியாயமான தீர்ப்பைக் கூறினார்கள். இது அயோக்கியத்தனம் என்றால் சிங்காரத் தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசல் JAQH என்ற அமைப்பிற்குச் சொந்தமானது என்பதற்கு உரிய ஆவணங்கள் இருந்தும் நீதிமன்றத்தில், இந்த பள்ளிவாசல் JAQH என்ற அமைப்புக்கு சொந்தமானது என்று தீர்ப்புக் கூறிய பின்பும் TNTJ விற்குத்தான் இந்த பள்ளிவாசல் சொந்தம் என்று உரிமை கொண்டாடுவது அயோக்கியத்தனம் இல்லையா?
2. உரிய ஆவணங்கள் வைத்திராத நீர்மோகி அகோரா, ராமஜன்ம பூமி நியாஸ் அமைப்புகளுக்கு இந்த பாபர் மசூதி உரிமை இருக்கிறது என்று சொன்ன அந்த தீர்ப்பு அநியாயமானது. இதை மாற்று மதத்தவர்கள் கூட கண்டித்திருக்கிறார்கள் என TNTJ பேச்சாளர்கள் பலர் பேசி வருகின்றனர்.JAQH அமைப்பு உரிய ஆவணங்கள் வைத்திருந்ததால் சிங்காரத்தோப்பு பள்ளிவாசல் JAQH அமைப்புக்கே சொந்தம் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. உரிய ஆவணங்கள் வைத்திராத TNTJ வாகிய நீங்கள் உரிமை கொண்டாடலாமா என்று மாற்று மதத்தைச் சார்ந்த போலீஸ் அதிகாரி கூட கண்டித்து நியாயத்தைச் சொன்னது உங்களுக்கு மறந்து விட்டதா?
3. தனக்கு உரிமையில்லாத, உரிய ஆவண மில்லாத பாபர் மசூதியைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நீர்மோகி அகோரா, ராமஜன்மபூமி நியாஸ் போன்ற இந்து அமைப்புகள், இரட்டை வேடம் போட்டு நீதிமன்றத்தை ஏமாற்றியது அயோக்கியத்தனம் என்றால், தனக்கு உரிமையில்லாத, உரிய ஆவணமில்லாத சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நாங்கள் தான் ஜாக் அமைப்பினர் என்றும் தவ்ஹீத் பள்ளிவாசல் கமிட்டி என்றும் இரட்டைப் பொய்முகம் காட்டி நீதி மன்றத்தை ஏமாற்றிப் பள்ளிவாசலைக் கைப்பற்றத் துடிப்பது அயோக்கியத்தனமில்லையா?
4. உரிய ஆவணங்கள் வைத்திருக்கும் சன்னி வக்பு வாரியத்திற்கு உரிமையான பாபர் மசூதி பள்ளிவாசலுக்குள் தொண்டர்கள், குண்டர்கள் புகுந்து கொண்டு அதை விட்டுத் தரமாட்டோம், ராமர் இங்குதான் பிறந்தார் என்பது எங்கள் நம்பிக்கை என்று கூறுவது அநியாயமென்றால்,
சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்கும் JAQH அமைப்பிற்குச் சொந்தம் என்ற தீர்ப்பு வந்தவுடன் சிங்காரத் தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலில் TNTJ தொண்டர்களும், குண்டர்களும் எதற்கும் தயாராக இருந்து கொண்டு இதை விட்டுத்தர மாட்டோம். இந்த பள்ளிவாசல் எங்களுக்குச் சொந்தம் என்பது எங்களுடைய இயக்கத்தின் நம்பிக்கை என்று கூறுவது அநியாயம் இல்லையா?
5. முஸ்லிம்களை ஒழிக்கவும் பள்ளிவாசல்களை அழிக்கவும், பாபர் மசூதியை அபகரித்து அதை அரசியலாக்கி லாபம் தேடுவது அயோக்கியத் தனம் என்றால் SM பாக்கரையும், அவரது தொண்டர்களையும் ஒழிக்க, அவர்களுடைய ணூஹிவீமூ என்ற அமைப்பை ஒழிக்க ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியைப் போல் PJ குடும்பமும், அவரது தக்லீது தோழர்களும் தனக்கு உரிமை யில்லாத INTJ அமைப்பை அபகரித்தது அயோக்கியத்தனம் இல்லையா?
6. உரிய ஆவணங்கள் இருந்தும் சன்னி வக்பு வாரியத்திற்குப் பாதகமாக வழங்கிய தீர்ப்பு அயோக்கியத்தனம் என்றால் அந்நஜாத்திற்கு வாங்கிய சொத்தை அபூ அப்தில்லாஹ் தன் பெயரில் பதிவு செய்து கொண்டதால் அந்த துரோகத்தைத் தாங்க இயலாமல் நான் ஒரு வருடத்திலேயே அந்நஜாத்தை விட்டு வெளியேறிவிட்டேன் என்று அவதூறு வாக்குமூலம் சொன்னதற்கு உரிய ஆவணங்கள் இருந்தும், அபூ அப்தில்லாஹ் தன் பெயரில் பதிவு செய்து கொண்டதற்கு எந்த ஆவணமும் இல்லாததாலும், லஞ்சம் கொடுத்தும் வழக்கு விசார ணையின்போது நீதிபதியிடம் அளித்த வாக்கு மூலத்தில் “”நான் அப்படி சொல்லவே இல்லை; காவல் துறையினரே அப்படி எழுதிக் கொண் டனர்” என்று நீதித் தண்டனைக்குப் பயந்து பின் வாங்கிய இந்த PJ என்ற யோக்கியர்(?) அயோக்கியத்தனத்திற்கு எதிராக நீதிமன்றத்தை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் நடத்துகிறாராம். இது சிரிப்பை வரவழைக்கும் வேடிக்கை இல்லையா?
7. காலங்காலமாக சுன்னத்வல்ஜமாஅத்தினரின் நிர்வாகத்தின் கீழ் SP பட்டினம் பள்ளிவாசல் இருந்தாலும், அப்பள்ளியை சுன்னத்வல் ஜமாஅத்திற்கு வக்பு செய்தவர் இப்போது எங்கள் TNTJ இயக்கத்தில் இணைந்து முன்பு வக்பு செய்ததை, எங்களுக்கு எழுதித் தந்துவிட்டார். அதனால் சுன்னத்வல்ஜமாஅத்திற்கு உரிமையில்லை என்று நியாயம் பேசும் இவர்கள் JAQH பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் JAQH அமைப்பிற்கு சொந்தமான மேலப்பாளையம், கடையநல்லூர் மற்றும் திருச்சியிலுள்ள பள்ளிகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் TNTJ யினருக்கு ஒரு நீதி! மற்றவர்களுக்கு ஒரு நீதியா?
8. நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றும் சுன்னத் வல்ஜமாஅத் என்று எழுதிப் போட்டிருக்கும் பள்ளிவாசல்களில் நுழைந்து அவர்களுடைய நிர்வாகத்திற்கு எதிராகப் பிரச்சனை செய்வதும், திருவிடைச்சேரி பள்ளிவாசலில் இரண்டு உயிர்ப் பலி ஆவதற்குக் காரணமாக இருந்ததும் நியாயமான செயலா?
சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலின் வெளியே TNTJ நிர்வாகத்தில் தலையிடாமல் குர்ஆன், ஹதீஸ் சம்பந்தமாக நோட்டீஸ் கொடுப்பவர்களைத் தடுப்பதும், கெட்ட வார்த்தையால் திட்டுவதும் தவ்ஹீத்வாதிகளின் செயலா?
9. உங்களுடைய தவ்ஹீத் பள்ளிவாசலில் மற்றவர்களை நோட்டீஸ் கொடுக்க நீங்கள் அனுமதிப்பதில்லை என்றால் நோட்டீஸை ஏன் எங்கள் பள்ளியில் கொடுக்கிறீர்கள் என்று சுன்னத் வல்ஜமாத் பள்ளி நிர்வாகம் கண்டித்தால் இவர்கள் எங்கே போய் தாவா செய்வார்கள்? இதை இவர்கள் நியாயம் என்பார்களா? அநியாயம் என்பார்களா?
10. சிங்காரத்தோப்பில் உள்ள இந்த பள்ளிவாசலுக்கு எந்தச் செலவும் செய்யாத நீங்கள் ஏன் நோட்டீஸ் கொடுப்பதற்காக மட்டும் வருகிறீர்கள் என்று கேட்கும் TNTJ யினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சுன்னத் வல்ஜமாஅத் பள்ளிவாசல்களுக்கும் செலவுக்குப் பணம் கொடுத்து விட்டுதான் நோட்டீஸ் கொடுக்கிறார்களா?
11. பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள நம் சகோதரர்கள் தொழுகை நடத்திய பாபர் மசூதி நிலத்தை ஒரு அடிகூட காஃபிர்களுக்கு விட்டுத் தரமாட்டோம் என்று நீங்கள் கூறுவது நியாயம்தான். ஆனால் சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலில் உங்களோடு சேர்ந்து தொழும் முஸ்லிம் சகோதரனுக்கு மார்க்கப் பிரச்சாரம் சம்பந்தமான நோட்டீஸ் கொடுக்க பள்ளிவாசலின் ஒரு படியைக்கூட TNTJ வாகிய நீங்கள் விட்டுத்தர மாட்டோம் என்று சொல்வது நியாயமா?
12. பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஷிர்க், பித்அத் நடந்த பாபர்மசூதி பள்ளிவாசல் விஷயத்தில் இது அல்லாஹ்வுடைய பள்ளி என்ற உரிமையுடன் நியாயம் கேட்டுப் போராடுகிறீர்கள் என்றால், ஷிர்க், பித்அத் இல்லாத JAQHக்குச் சொந்தமான தவ்ஹீத் பள்ளிவாசலில் அல்லாஹ்வுடைய பள்ளி என்ற அடிப்படையில் பள்ளிக்கு வெளியே நோட்டீஸ் கொடுக்க உரிமையில்லையா?
“”நீங்கள் உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள், உண்மையை நீங்கள் நன்கறிந்து கொண்டே (அதை) மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் : 2:42)
“நீங்கள் நெறிநூலைப் படித்துக்கொண்டே உங்களை மறந்துவிட்டு, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு நீங்கள் ஏவுகின்றீர்களா? (இதனை) நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?” (அல்குர்ஆன் : 2:44)
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அல்குர்ஆன் : 61:2)
நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (அல்குர்ஆன் : 61:3)
பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள், எனினும் நிச்சயமாக இது உள்ளச்சம் உடை யோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாக வேயிருக்கும். (அல்குர்ஆன் : 2:45)
(உள்ளச்சமுடைய) அவர்கள் தாம், “”திட மாக(தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச் செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவர். (அல்குர்ஆன் : 2:46)
(சொல்லொன்று செயலொன்று என செயல்படும் நயவஞ்சகர்களாகிய) இவர்கள் தங்களுடைய (பொய்ச்) சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர்; நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் : 63:2)
இது நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொண்டு பின் நிராகரிப்போர் ஆகிவிட்ட தனாலேயாகும். ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே அவர்கள் விளங்கிக் கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் : 63:3)
இவர்களை நீங்கள் பார்த்தால், இவர்களுடைய உடல்(அமைப்பு)கள் உங்களை ஆச் சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால் இவர்களுடைய பேச்சை நீங்கள் (கவ னித்துக்) கேட்பீர்கள்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர், சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர். ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள். இவர்கள் தாம் (நேர்வழி நடப்போருக்கு) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்? (அல்குர்ஆன் : 63:4)
இந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அசிமானந்தாவுக்கிருக்கும் மன உறுத்தல், மனசாட்சி, இறையச்சம் கூட புதிய மத்ஹபு இமாமுக்கு இல்லாதிருப்பது வேதனையான விடயமாகும்! மறுமையைப் பற்றி உறுதியான நம்பிக்கையும், இறைவனைப் பற்றிய அச்சமும் இருக்கும் முஸ்லிம்கள் இவ்வாறு சொல்லொன்று செயலொன்று என அசாத்தியத் துணிச்சலுடன் நடக்கவே முடியாது.


இந்திய தவ்ஹித் ஜமாஅத் கடிதத்திற்கு கை மேல் பலன் ! இட ஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைத்த முதல்வர்!


இந்திய தவ்ஹித் ஜமாஅத் கடிதத்திற்கு கை மேல் பலன் !

இட ஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைத்த முதல்வர்!



3.5% இட ஒதுக்கீட்டின்  பலன் முஸ்லிம்களுக்கு முழுமையாக கிடைத்துள்ளதா என்பதை கண்டறிய குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்ற இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன் தலைவர் எஸ்.எம்.பாக்கர் கடிதம் எழுதிய செய்தியை நமது இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம்! அல்ஹம்து லில்லாஹ்! முதல்வர் ஏற்று இன்று   அதற்கான அறிவிப்பை செய்துள்ளார். அதற்காக முதல்வருக்கு 

நமது  நன்றியை தெரிவிக்கும் அதே வேளையில் அந்த கடிதத்தின் பல கோரிக்கைகளை இன்னும் நிறைவேற்ற வில்லை என்பதையும் , பரிசீலனையில் உள்ள 'வக்பு வீட்டு வசதி வாரியம் எனும் நமது   கோரிக்கையையும் விரைந்து நிறைவேற்றினால் இந்த சமுதாயம் நன்றி உள்ள சமுதாயமாக    இருக்கும்.
  

இடஓதுக்கீடு சம்பந்தமாக தமிழக முதல்வருக்கு இதஜ தலைவர் கடிதம்!

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் S.M.பாக்கர் அவர்கள், இடஒதுக்கீடு சம்பந்தமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பத்திரிக்கை செய்திகள்:


தினமணி 


Thinamani News.jpg


 தினமலர் 

Dinamalar News.jpg

அடக்கஸ்தலம் கோரி தடையை மீறி INTJ ஆர்பாட்டம்! ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதாகி விடுதலை !

அடக்கஸ்தலம் கோரி தடையை மீறி INTJ  ஆர்பாட்டம்!
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதாகி விடுதலை 

Picture 025.jpg

வேளச்சேரி, தரமணி, மடுவங்கரை பகுதி மக்களின் பல வருட கோரிக்கையான அடக்கஸ்தல கோரிக்கையை கண்டு கொள்ளாமல் 'நாய்களை புதைக்க நகரின் மத்தியில் இடம் வழங்கிய ' மாநகராட்சி மற்றும் தி.மு.க.மேயரை கண்டித்து   இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பில் நேற்று மாபெரும் ஆர்பாட்டம் நடை பெற்றது!  

Picture 027.jpg


சமுதயாத்திற்கு ஒன்று என்றால் முதலில் களமிறங்கும் ,இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் போர்க்குணம் மிக்க நிர்வாகிகள் , எதையும் வித்தியாசமான கோணத்தில் கையில் எடுத்து ,இறையருளால் தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகிறார்கள். நேற்றைய தினம் வேளச்ரியில் நடந்த் இந்த போராட்டத்தை சந்தூக்கு ஏந்திய போராட்டமாக அறிவித்து சந்தூக்குகளோடு வந்து குவிந்தனர். 

Picture 013.jpg


வேளச்சேரி மாநகராட்சி முற்றுகை என்றதும் அனுமதி மறுத்த காவல் துறை அனுமதி மறுத்து ,உணர்ச்சி மிகு பிரச்னை என்பதால் அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் காவல் துறையினரின் படை குவிக்க பட்டு பத்திற்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் இருந்தும் ஆய்வாளர் உள்பட அனைவரும் குவிந்திருந்தனர்.


Picture 040.jpg

கண்டன உரை நிகழ்த்திய முஜிபுர் ரஹ்மான் பாகவி, நாய்களை விட நம்மை மோசமாக மதிக்கும் மாநகர மேயரை கண்டித்தார்.  தர்வேஷ் ரசாதி வரும் தேர்தலில் மக்கள் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என குமுறினார் ! விடுதலை சிறுத்தைகள் யூசுப் 'இனி யாரையும் நம்பி பயன் இல்லை! நம்முடைய உரிமைகளைப்பெற நாம் களமிறங்க வேண்டும்! அப்படிப்பட்ட  போராட்டங்களுக்கு சமுதாயம் பாக்கர் தலைமையில் ஒன்று பட வேண்டும் 

Picture 021.jpg
என உணர்ச்சி வசப்பட்டார் !இறுதியாக பேசிய எஸ்.எம்.பாக்கர் இருபத்தோராம் நூற்றாண்டிலும் இறந்தவர்களை அடக்க இடம்   கேட்டு போராடுவது தமிழக அரசுக்கே அவமானம் ! இந்த நிலை நீடித்தால் அடுத்த மய்யித்தை கோபாலபுரத்தில் அடக்குவோம் ' என கூறியபோது அல்லாஹு அக்பர் என ஆர்ப்பரித்தது  கூட்டம் !    
           
சந்தூக்கில் பிணக் கோலத்தில் ஏறி படுத்த ஒருவரை தடுத்தது! எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உரிமை இல்லையா? என பொங்கி எழுந்த மக்களை கண்டு போலீஸ் அடங்கியது! ஆரம்பத்தில் கெடுபிடி செய்த காவல் துறை பின்னர் பணிந்தது. .ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்து கொண்டு செல்ல வாகனமின்றி 
திணறியது .
Picture 036.jpg


சந்தூக்கையும்  போலீஸ் வேனில் ஏற்றிய போது இந்திய வரலாறில் ஒரு சந்தூக்கு கைது செய்யப்படுவது முதல் முறை என கமென்ட் அடித்து கலகலப்பூட்டினார்  .அருகில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் அடைக்கப்பட்ட உடன் , அதையும் வழக்கம் போல் மக்களுக்கு மார்க்கத்தை சொல்லும் இடமக்கினார் , மாநில பேச்சாளர் மசுதா ஆலிமா.

Picture 039.jpg

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் இஹ்லாஸ் ஆன செயல்பாடுகளால் நமது செயற்குழு, பொதுக்குழு , மற்றும்   பொதுக்கூட்டங்களில் யாராவது ஒருவர் இஸ்லாத்தை  ஏற்பது வழக்கமாகியுள்ளது  . அந்த வகையில் நேற்றைய போராட்ட காலத்திலும் ஒருவர் 
இஸ்லாத்தை ஏற்றார் .அவருக்கு கலிமாவை தர்வேஷ் ரஷாதி சொல்லிக்கொடுக்க 
முகமத் இர்பான் என பெயர் இடப்பட்டது.

     
Picture 030.jpg
அசர்,மற்றும் மக்ரிப் தொழுகைகளை ஜமாஅத்தாக   தொழுத போது , நம்முடைய தொழுகை அணிவகுப்பையும் தொழும் முறையையும் கட்டுப்பாடு மிக்க இராணுவத்தின் செயல்களாக வியந்து பார்த்தனர் காவல் துறையினர். மக்ரிப் தொழுகைக்குப் பின் அனைவரையும் விடுவித்தனர்.  
   Picture 011.jpg
அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!