Tuesday, January 11, 2011

ஆலிம் -அவாம் என ஆணவம் பேசும் பொய்.ஜே !


அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

ஆலிம் -அவாம் என ஆணவம் பேசும் பொய்.ஜே 

அல்லாஹ்வை  மறந்து ஆணவத்தில் பேசிக்கொண்டு திரியும் பொய்.ஜே. முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதையும் , தான் மனோ இச்சைப்படி மார்கத்தை வளைப்பவர் என்பதையும் மற்றும் ஒரு முறை நிருபித்துள்ளார்.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் ,பொய்களையும் அவதூறுகளையும் அவிழ்த்து விட்ட புரட்டுக்காரர் அதில் தோற்றதும்,   இறுதியில் தான் குடும்பத்தார் பெயரில் களவாடிய  பெயரின் மூலம் நம் செயல் பாட்டை முடக்க நினைத்து , காவல் துறையிலும், நீதி மன்றத்திலும் பொய்யான வழக்குகளை தொடுத்து , அங்கேயும் அவமானப்பட்டு , சமுதாயத்திலும் இழிவடைந்து , வளைகுடா மக்களிடம் வாங்கிக் கட்டியும் திருந்தாமல் , தற்போது வேறு ஆயுதத்தை கையில் எடுத்து  இ.த.ஜ.விற்கு பெருகி  வரும் மக்கள் செல்வாக்கை தடுக்க நினைக்கிறார் ! 

அது கூர்மையான ஆய்தம் என அவர் நினைக்கிறார் பாவம் அது பல முறை உபயோகித்தும் பலனற்ற ,முனை மழுங்கிப்போன ஆயுதம்!  ஆம்!

  •   மற்ற மக்களை இழிவாக கருதும் இங்குள்ள பார்ப்பனர்கள் பயன் படுத்திய ஆயுதம் ! 
  • இறைவனின் நெருக்கம் தங்களுக்கு மட்டு தான் என கூறி தட்டழிந்த யூதர்கள் பயன் படுத்திய ஆய்தம் ! 

  • ஏகத்துவத்தை எடுத்து சொல்ல ஆரம்பித்த போது இங்குள்ள சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் பயன் படுத்திய ஆயுதம்!  

  • அறிவின் தந்தை என தன்னை அழைத்து  கொண்டு   அண்ணல் நபிக்கு எதிராக அபுஜஹில் பயன் படுத்திய ஆயுதம்!  

  • ஏன் ஆதம் [அலை] அவர்களுக்கு எதிராக  சைத்தான் பயன் படுத்திய  ஆயுதம் 
தான்  உயர்ந்தவன் எனும் அகம்பாவ ஆயுதம் !  ஆம் ஆலிம் -அவாம் எனும் வேறுபாட்டை கூறி ,தாங்கள் தான் சொர்கத்திர்க்குரியவர்கள் , தாங்கள் மட்டும் தான் மார்கத்திற்கு உரிமையாளர்கள் என மமதை கொண்டு பேசியிருக்கிறார் .

சமிபத்தில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் இ.த.ஜ.பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது 'அவர்களில் யாரும் ஆலிம்கள் இல்லை " என பொய்.ஜே. கூறுகிறார் ஆலிம்கள் மட்டும்தான் மார்கத்தை பேசவேண்டும் என்ற சட்டம் இல்லை ! பல்லிகு அன்னி ஃ பாலவ் ஆயா' என்னிடத்திலே இருந்து ஒரு செய்தி கிடைத்தாலும் எடுத்து சொல்லுங்கள் என்ற நபி மொழிப்படி ,  மார்கத்தை யார் வேண்டுமானாலும் பேசலாம் என ஏகத்துவப் பிரசாரம் துவங்கிய காலத்தில் அனைவரையும் மேடை ஏற்றி ,புரோகித மவ்லவிகளுக்கு எதிராக களம் கண்ட தவ்ஹீத் வாதிகள் இன்று  தவ்ஹீத் வியாதிகள் ஆகி விமர்சிப்பதேன்  ?    

இன்னொரு முறை இணையத்தில் பாக்கரின்  தப்சிரை பாருங்கள் எனவும் , ஏகத்துவத்தில் அல்ஹம்து சூராவையே சரியாக  தெரியாதவர் 
என்றும் , கிண்டல் செய்கின்றனர். பாக்கர் என்னவோ இ.த.ஜ.துவங்கிய பின்பு தான் பயான் செய்வது போலவும் , மேடையில் பேசுவது போலவும்  
எழுதுகிறீர்களே! பாக்கர் த.த.ஜ. வில் உள்ளபோது பயான் பண்ணவில்லையா ? அப்போது உங்களுக்கு அல்ஹம்த் சூராவிற்கு அர்த்தம் தெரியாதவர் என்பது புரியவில்லையா?

தொண்டியப்பவுக்கு பயான் பண்ண என்ன தகுதி உள்ளது!  என கேட்கின்றீர்களே ! தகுதி இல்லாமலா பலவருடம் பயானுக்கு அனுப்பினீர்கள்? இ.த.ஜ. தாயிக்கள்  எல்லாம் என்னவோ  இப்போது தான் பயான் செய்வது போல் பசப்புகிறீர்களே !  ஏன் நாங்கள் எல்லாம் த.த.ஜ.காலத்தில் பயான் பண்ணவில்லையா?

முதலில் ஆலிம் என்றால் யார்? 
  • மதரசாக்களில் ஏழு வருடம் படித்தவர்களா? 

  • அல்லது உங்களது ஹோமோ செக்ஸ் கல்லூரிகளில் மூன்று வருடம் படித்தவர்களா?  

  • அல்லது பண்ணைக் கோழிகள் போல் உங்களது ஒரு வருட ஆலிம்
  • & ஆலிமா  கோர்ஸ் படித்தவர்களா?

  • அல்லது உங்களின் மூன்று மாத முட்டை கோழி தாயிக்களா? 

  • அல்லது நாற்பது நாள் கோர்ஸ் குஞ்சுகளா? 
  • யார் ஆலிம்கள் ? இவர்கள் ஒருவரின் பார்வையில் மற்றவர்கள் ஆலிம்கள் இல்லை! சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள்  பார்வையில் நீங்களே ஆலிம்கள் இல்லை! 

அரபு மொழி தெரிந்தவர் தான் ஆலிமா? நபி [ஸல்] இந்த அரபு மொழி ஆணவத்திற்கு தான் இறுதிப் பேருரையில் சம்மட்டி அடி கொடுத்துள்ளர்கள்! 'உங்களில் அரபி தெரியாதவரை விட அரபி தெரிந்தவர் எந்த விதத்திலும் உயர்ந்தவர் இல்லை' எனும் போது 
நீங்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர் இல்லை! 

இறையச்சம் உடையவர் தான் உங்களில் உயர்ந்தவர்! எனும் இறை வசனமும் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுவோர்தான்    ஆலிம்கள் எனும் இறைவசனமும் நீங்கள்ஆலிம்கள் இல்லை ! என்று கூறுகிறது சாதாரண  கலிமா சொன்ன முஸ்லிமிடம் உள்ள இறையச்சம் கூட உங்களிடம் இல்லை என்பதை  இ.த.ஜ.அபகரிப்பு மூலமும் , உங்களால் அவாம் என விமர்சிக்கப் படும் சாதாரண முஹ்மின்களிடத்தில் உள்ள தொழுகை கூட இல்லாத நீங்கள் எப்படி ஆலிமாக முடியும்!  

எல்லாவற்றையும் விட அல்லாஹ் அனைத்து நபிமார்களிடம் உள்ள அழைப்பு பணிக்கான சிறப்பு தகுதியாக கூறுவது  ' இந்த சத்தியத்தை 
சொல்வதற்காக நாங்கள் எந்தக் கூலியையும் கேட்க வில்லை"  எனும் இந்த வசனத்தின் படி உங்களில் அழைப்பு பணிக்காக கூலி [சம்பளம்] இல்லாமல் பணியாற்றுவோர் எத்தனை தாயிக்கள் என்று கூற முடியுமா ?  மாநிலப் பேச்சாளர்கள் உள்பட அனைவரும் அழைப்பு பணிக்கென 
சம்பளம் பெறுவோர்தான்! இதை மறுக்க முடியுமா? இவர்கள் செய்யும் அழைப்பு பணி என்ன தெரியுமா?  நான்கு ஜும்மா,  ஒரு தெருமுனை கூட்டம்! அதிலும் மற்ற  இயக்கங்களை வசை பாடும்
அவதூறுதான் மிகைதிருக்கும் !

சமுதாயப் பணத்தில் மதரசாக்களில் படித்துவிட்டு ,உண்டு உடல் வளர்த்து , அந்த சமுதாயத்தையே உறிஞ்சும் உங்களை விட எங்கள் வியாபாரத்தை விட்டு, எங்கள் சொந்தப்பணத்தில்  பயணித்து , சொந்தப் பணத்தை செலவிட்டு அழைப்பு பணி செய்யும் எங்களுக்கு அல்லாஹ்வின் மேற்கண்ட வசனத்தின் படி கூடுதல் தகுதி உள்ளது!

ஆகையால் இந்த முனை மழுங்கிய ஆயுதத்தை மீண்டும் பயன் படுத்தினால் , அது உங்களுடைய தாயிக்களுக்கும் பொருந்தும் ஆகையால் பூமராங் போல திருப்பித்  தாக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!  
  
   -இவண் இப்னு ஹுசைன்  .
   
            

0 comments:

Post a Comment