தஃவா களமான சேப்பாக்கம் லாக் நகர் இருதய பரிசோதனை முகாம்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மதங்களை கடந்து பல மனித நேயப் பணிகளை ஆற்றி வருகிறது ! அந்த அடிப்படையில் ஏழை எளிய மக்கள் பயன் பெரும் வகையில் இருதய பரிசோதனை முகாம்களை நடத்தி வருகிறது! கடந்த சில நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மெட்ராஸ் மெடிக்கல் மிஷனோடு இணைந்து இருதய பரிசோதனை நடத்தியுள்ளது!
இந்த முகாம்களை வெறும் மருத்துவ முகாம்களாக நடத்தாமல் அழைப்பு பணிக்கான களமாகவும் ஆக்கியுள்ளது அதன் சிறப்பம்சம் ஆகும். முகாமுக்கு வரும் முஸ்லிம் மக்களிடம் ஏகத்துவத்தை எடுத்துரைப்பதோடு முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் விதமாக ,பிரசுரங்கள் ,
இஸ்லாத்தை காட்சிப்பூர்வமாக விளக்கும் கண்காட்சி பேனர்கள் ,குரான் தமிழாக்கம் வழங்குதல்
போன்றவற்றால் முகாம்கள் ஒரு தாவா களமாகவே மாறிப் போனது!
அந்த அடிப்படையில் நேற்று சென்னை சேப்பாக்கம் லாக் நகர் பகுதியில் நடை பெற்ற முகாமில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பிற மத சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்தியா தவ்ஹீத் ஜமாத்தின் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள், மனித உரிமை ஆர்வலர்கள் ,மீனவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment