Saturday, January 29, 2011

இந்திய தவ்ஹித் ஜமாஅத் கடிதத்திற்கு கை மேல் பலன் ! இட ஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைத்த முதல்வர்!


இந்திய தவ்ஹித் ஜமாஅத் கடிதத்திற்கு கை மேல் பலன் !

இட ஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைத்த முதல்வர்!



3.5% இட ஒதுக்கீட்டின்  பலன் முஸ்லிம்களுக்கு முழுமையாக கிடைத்துள்ளதா என்பதை கண்டறிய குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்ற இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன் தலைவர் எஸ்.எம்.பாக்கர் கடிதம் எழுதிய செய்தியை நமது இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம்! அல்ஹம்து லில்லாஹ்! முதல்வர் ஏற்று இன்று   அதற்கான அறிவிப்பை செய்துள்ளார். அதற்காக முதல்வருக்கு 

நமது  நன்றியை தெரிவிக்கும் அதே வேளையில் அந்த கடிதத்தின் பல கோரிக்கைகளை இன்னும் நிறைவேற்ற வில்லை என்பதையும் , பரிசீலனையில் உள்ள 'வக்பு வீட்டு வசதி வாரியம் எனும் நமது   கோரிக்கையையும் விரைந்து நிறைவேற்றினால் இந்த சமுதாயம் நன்றி உள்ள சமுதாயமாக    இருக்கும்.
  

இடஓதுக்கீடு சம்பந்தமாக தமிழக முதல்வருக்கு இதஜ தலைவர் கடிதம்!

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் S.M.பாக்கர் அவர்கள், இடஒதுக்கீடு சம்பந்தமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பத்திரிக்கை செய்திகள்:


தினமணி 


Thinamani News.jpg


 தினமலர் 

Dinamalar News.jpg

0 comments:

Post a Comment