Thursday, March 31, 2011

INTJ தேர்தல் நிலைப்பாடு ஏன்? எதற்கு? பிட் நோட்டீஸ் மாதிரி!

                               INTJ தேர்தல் நிலைப்பாடு ஏன்? எதற்கு?
                                      பிட் நோட்டீஸ் மாதிரி!


ஏப்ரல்ஃபூல் ஒரு ஏகத்துவ பார்வை!


உலக மகளிர்தினம், அன்னையர்தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம், இப்படி வருடத்தில் 365.நாட்களும் ஏதாவது ஒரு தினத்தை ஏற்படுத்தி அதை உலக மக்களில் பெரும்பாலோர் கொண்டாடுவதை பார்க்கிறோம். இதில் உருப்படாத பலவிஷயங்கள் உண்டு அதில் ஒன்றுதான் ஏப்ரல் முதல்நாள் கொண்டாடப்படும் ஏப்ரல் ஃபூல் எனப்படும் முட்டாள்கள் தினமாகும். இந்த முட்டாள்கள் தினம் எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. எனவே, இந்த தினம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆய்வு செய்யாமல், இந்த தினம் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.


இந்த முட்டாள்கள் தினம் என்றால், இல்லாததை சொல்லி மற்றவர்களை நம்பவைத்து அதில் மகிழ்ச்சி கொள்வது, அதாவது பொய்சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவதுதான் இந்த தினத்தின் கொண்டாட்ட முறையாகும். தாய்க்கு போன்செய்து அவர்களின் ஒரேமகன் விபத்துக்குள்ளாகி, குறிப்பிட்ட மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறான் என்று சொல்லி அந்த தாயை தவிக்கவிடுவது; அலுவலகம் சென்ற கணவனை பற்றி மனைவியிடம் , 'ஒங்க வீட்டுக்காரரை ஒரு பொண்ணோட இப்பதான் பீச்சுல பாத்தேன் என்று சரடுவிட்டு குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவது; இப்படி பல்வேறு வகையான பொய்கள் பல்வேறு பரிமாணத்தில் இந்த நாளில் அரங்கேறும் . இதில் வேடிக்கை என்னவெனில், அறிவுப்பூர்வமான மார்க்கத்துக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்களில் சிலரும் இந்த முட்டாள்கள் தினத்தை கொண்டாடுவதுதான். இந்த தினத்தின் மைய கருப்பொருளான பொய் பற்றி இஸ்லாம்;


நபி [ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பிருந்தே வாய்மையாளராகதிகழ்ந்துள்ளார்கள். எந்த அளவுக்கெனில், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத முஷ்ரிக்குகள் கூட நபியவர்கள் பொய் சொல்லக்கூடியவர் என்று சொன்னதில்லை. ஹெர்குலிஸ் மன்னனிடம் [அப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிராத] அபூசுப்யான்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை பற்றி கூறிய வாசகம் பாரீர்;


ஹெர்குலிஸ்; அவர் [நபிஸல்] இவ்வாறு[தூதரென்று] வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?

அபூ சுப்யான்;இல்லை.[ஹதீஸ் சுருக்கம்] நூல்;புஹாரி,எண் ;7

முஸ்லிமல்லாத மாற்றாரும் கூட வாய்மையாளர் என்று சான்று பகர்ந்த நம்தலைவரின் வழிவந்த நாம் முட்டாள்கள் தினத்தை கொண்டாட பொய் சொல்லலாமா?

நீங்கள் முஸ்லிமா? முனாஃபிக்கா?

'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி

வியாபாரத்திலும் பொய் கூடாது;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!"நூல்;புஹாரி

வியாபாரத்தில் கூட பொய் கூடாது எனில், இந்த உதவாத முட்டாள்கள் தின பொய் தேவையா?

எந்த நிலையிலும் பொய்யுரைக்காத சத்திய சகாபாக்கள்;

தபுக் யுத்தத்தில் கலந்துகொள்ளாதவர்களில் மூவர் தவிர மற்றவர்கள் சாக்குபோக்கு சொன்னவர்கள் மன்னிக்கப்பட, பொய் சொல்லவிரும்பாத கஅப் இப்னு மாலிக்(ரலி) ஹிலால்[ரலி], முராரா[ரலி] ஆகியோர் பொய்யுரைக்க விரும்பாததால், அவர்களுக்கு ஏற்பட்ட நிலை பற்றி கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் கூறியதாவது;

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நேர்வழியில் செலுத்திய பிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்துகொள்ளாதது குறித்து வினவியபோது) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் (மற்றவர்களைப் போன்று) பொய்யுரைக்காமல் உண்மை பேசியதுதான். அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால் பொய் கூறிய(மற்ற)வர்கள் அழிந்ததைப் போன்று நானும் அழிந்து போயிருப்பேன்.

'நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 09:95, 96) அருளப்பெற்றபோது அந்தப் பொய்யர்கள் அழிந்து போனார்கள். நூல்;புஹாரி,எண் 4673


மற்றொரு ஹதீஸில்;
அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததைவிட சிறப்பாக வேறவரையும் அல்லாஹ் சோதித்தாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இறுதி நாள் வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் பின் வரும் வசனங்களை அருளினான்.

'நிச்சயமாக அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்பவேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்களின் மீதும் (அருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினரின் இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்களின் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்.' 'மேலும் எவருடைய விவகாரத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாம் விட்டிருந்ததெனில்), பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறும் அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாம் விட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாயிருக்கிறான். இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள்.(திருக்குர்ஆன் 09:117-119) நூல்; புஹாரி, எண் 4678


கஅப் இப்னு மாலிக்[ரலி] உள்ளிட்ட மூவர் பொய் சொல்லி அல்லாஹ்வின் தூதரிடம் தப்பித்திருக்கமுடியும், ஆனால் அல்லாஹ்வுக்கு அஞ்சிய காரணத்தால் பொய்சொல்வதில் இருந்து தங்களை காத்துக்கொண்டார்கள் என்றால், சகாபாக்களும் எம்மைப்போன்ற மனிதர்கள்தான் என்று வாய்கிழிய பேசும் நாம், இந்த பொய்யை மூலதனமாக கொண்ட முட்டாள்கள் தினத்தை கொண்டாடலாமா?

பொய்யர்களுக்கு தண்டனை;


ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நபி[ஸல்]அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள். ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது . பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் என்ன இது என்று கேட்டேன். அதற்கு இருவரும் 'ஆம்! முதலில் தாடை சிதைக்கப்பட்ட வரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.[ஹதீஸ் சுருக்கம்]நூல்;புஹாரி,

என்ன சகோதரர்களே! இம்மை/ மறுமையை பாழாக்கும் பொய்யும் , அதையொட்டிய இந்த முட்டாள்கள் தினமும் தேவையா? சிந்திப்பீர்!
 

Wednesday, March 30, 2011

இறக்கும் தருவாயிலும் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.

மருத்துவமனை தஃவா மூலம் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.

வாரந்தோறும் அரசு மருத்துவனைகளுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல்   கூறுவதோடு  அவர்களை  நலம்  விசாரித்து  அவர்களுக்கு  இஸ்லாத்தை எத்தி   வைப்பதை  தங்களின்  அடிப்படை  பணியாக  INTJ செய்து  கொண்டுள்ளது.  இதன்  மூலம் ஏற்லமான  சகோதரர்கள்  இஸ்லாத்தின்  மீது  நல்லெண்ணம்  கொள்வதோடு , தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டும் வருகின்றனர்.

கடந்த வாரம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று தஃவா பணியில் எடுபட்ட மதுக்கூர் மைதீன் தலைமையிலான குழுவினர் ஆதரவற்றுக் கிடந்த ஒரு சகோதரருக்கு இஸ்லாத்தை எடுத்து சொன்ன போது இந்த நிலையில் இறந்தால் எனக்கு இறைவன்  மன்னிப்பளிப்பானா ? என்று  கேட்டார் ! மன்னிப்போடு  மகத்தான சொர்க்கமும் கிட்டும் என சொன்ன போது 'அப்படியானால் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறேன் ' என்றார். உடனே அவருக்கு கலிமா சொல்லிக் கொடுக்கப் பட்டு இஸ்லாத்தை ஏற்றார். இறக்கும் தருவாயில் இருக்கும் அவருக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக!


    































சென்னை பாரி முனை பள்ளி இடிப்பு! களத்தில் இ.த.ஜ.தலைவர் எஸ்.எம்.பாக்கர்.

சென்னை பாரி முனை பள்ளி இடிப்பு!
களத்தில் இ.த.ஜ.தலைவர் எஸ்.எம்.பாக்கர்.

சென்னை பாரி முனையில் இமேஜ் ஆப்டிகல் என்ற கட்டிடத்தின் மேல் பல வருடங்களாக அப்பகுதி வியபாரிகளுக்காக    தொழுகைப் பள்ளி ஒன்று நடை பெற்று வருகிறது!   அதை அந்த கட்டிட உரிமையாளர் பள்ளிக்கென வக்பு செய்து ,விற்றாலோ இல்லை அவரது வாரிசுகளோ உரிமை கொண்டாடக் கூடாது என சொல்லி தான் அந்த சொத்தை விற்றுள்ளார். ஆனால் வாங்கிய சீனிவாசன் எனும் தி.மு.க நபர் அதை மதிக்காமல் இரவோடு இரவாக தொழுகை பாய் ,  குரான்    போன்றவற்றை தூக்கி எறிந்து பள்ளியை இடிக்க துவங்கியுள்ளனர். மறுநாள் காலை பள்ளிக்கு வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து அனைவருக்கம் தகவல் தர இ.த.ஜ வசென்னை  மாவட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

மேலும் விஷயமறிந்த த.த.ஜ.SDPI  த.மு.மு.க.சகோதரர்கள் அனைவரும் வர பொது மக்களோடு அனைவரும் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்தனர். நிலைமை 
கேள்வி பட்டு எஸ்,எம்.பாக்கர் நேரடியாக களத்திற்கு சென்று உதவி ஆணையர் சேஷ சாயி அவர்களிடம் பேசினார். பின்னர் சம்பந்தப் பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பள்ளி மீண்டும் அசர் தொழுகை முதல் வழக்கம் போல் இயங்க துவங்கியது!  

பாபர் பள்ளிக்கு பின் இனியொரு பள்ளியை இந்த சமுதாயம் தயாராக இல்லை என்பதையும் ,   அதற்காக கருத்து வேறுபாடு மறந்து அனைத்து இயக்கங்களும் கை கோர்த்து காலத்தில் இறங்குவார்கள் என்பதையும் நாட்டுக்கு எடுத்துரைப்பதாக இந்த சம்பவம் அமைந்தது! 










களத்திற்கு வந்து மக்களை கட்டுப் படுத்திய பாக்கருக்கு காவல் துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். நீண்ட நாளுக்குப்பின் பாக்கரின் பேச்சுக்கு த.த.ஜ.வினர் உற்சாகமாக தக்பீர் முழக்கம் இட்டதும், அவரோடு கை குலுக்கி சலாம் சொன்னதும் நெகிழ்ச்சியான சம்பவம். 

Tuesday, March 29, 2011

பதிவு செய்யப் படாத த.மு.மு.க.வில் தான் அமைப்பாளராக இருந்து மக்களை ஏமாற்றியதை ஒப்புக்கொள்ளும் பொய் .ஜே!


பதிவு செய்யப் படாத த.மு.மு.க.வில் தான் அமைப்பாளராக
இருந்து மக்களை ஏமாற்றியதை  ஒப்புக்கொள்ளும்  பொய் .ஜே!     

























இந்திய தவ்ஹீத் ஜமாத்தை அழிக்க நினைத்து முடியாமல், தன கிரிமினல் புத்தியால் அபகரித்த பொய்.ஜே அதற்க்கு விளக்கம் அளித்து பேசும் போது ஒரு ஜமாத்தை பதிவு செய்யாமல் எப்படி நடத்தலாம்? மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா? என்றார்.! 

நாம் நம்முடைய டிரஸ்ட் பதிவு எண்ணை வெளியிட்டதும் , டிரஸ்டில் பதிவு செய்து எப்படி கிளை அமைக்கலாம்? போராட்டம் நடத்தலாம்? என்று கூறியதோடு மட்டுமின்றி இந்துத்துவ இயக்கங்களை விட மோசமாக நடந்து இ.த.ஜ.நடத்திய டிசம்பர் 6 போராட்டங்களை தடுக்க  இவர்கள் டிரஸ்ட் போராட்டம் பொதுக் கூட்டமெல்லாம் நடத்தக் கூடாது!.என  காவல் துறையில் புகார் அளித்தார்!காவல் துறை அதிகாரிகளும் நீதி மன்றமும் காறித் துப்பி 'அதெல்லாம் நீங்கள் சொல்லக் கூடாது ' கண்டித்தனர்.

நாம் அப்போது ' பி.ஜே.அமைப்பாளராக இருந்த த.மு.மு.க.எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பட்டு அதில் கிளை அமைத்து போராட்டம் பொதுக் கூட்டமெல்லாம் நடத்தினோம்? நீங்கள் அதில் இருந்த போது பதிவு விசயமெல்லாம் அப்போது தெரியவில்லையா? http://www.intjonline.org/1338.do எனக் கேட்ட போது அதை நிரூபிக்க தயாரா? எனக் தன கள்ளப் பெயரில் இயங்கும் இணையத் தளத்தில் கீழை ஜமிலுக்கு சவால் விட்டார்.

மக்களின் மறதியை மூலதனமாக்கி அதைக் கொண்டே பிழைப்பு நடத்தும் அவதூறு  மன்னனுக்கு  அல்லாஹ் சில ஆதாரங்களை விட்டு வைத்து, தான் பொய்யன் என்பதை அவரது வாயாலேயே நிரூபிப்பதை பாருங்கள்.
அவரது வாதப்படி த.மு.மு.க.எனும் அமைப்பை பதிவு செய்யாமலே அதன் அமைப்பாளராக இருந்து மக்களை ஏமாற்றியுல்லதை ஒப்புக் கொள்வதை கேளுங்கள்!    
        
 

முஸ்லிம்களுக்கு சீட் தராவிட்டாலும் பா.ம.க.வை ஆதரிப்பேன்! முஸ்லிம்களாக இருந்தாலும் ம.ம.க.வை தோற்கடிப்பேன்!


முஸ்லிம்களுக்கு சீட் தராவிட்டாலும் பா.ம.க.வை ஆதரிப்பேன்!
முஸ்லிம்களாக இருந்தாலும் ம.ம.க.வை தோற்கடிப்பேன்!


நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ள தனிநபர் ஜமாஅத், திமுகவை ஆட்சியில் அமர்த்தியே தீருவது என்ற தனது ஏக்கத்திற்கு  ஏதுவாக இலவச இணைப்பாக சில கட்சிகளை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அதில் ஒன்றுதான் மருத்துவர் ராமதாஸின்  பாட்டாளி மக்கள் கட்சி.  இக்கட்சி பற்றி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிநபர் ஜமாஅத் கொண்ட கொள்கை முழக்கத்தை நினைவு படுத்தி விட்டு பின்னர் விஷயத்திற்கு வருவோம்.


5-4-2009 கோவையில் TNTJ மாநிலப் பொதுக்குழு கூடியது இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் ஒன்று;
5. பமாக தொடர்ந்து முஸ்லிம் விரோதியாகச் செயல்படுவதாலும் இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து முஸ்லிம்களுக்கு தீவிரவாதிப் பட்டம் சுமத்தியதாலும் கடந்த தேர்தலிலும் இந்த தேர்தலிலும் முஸ்லிம்களுக்கு ஒரு இடம் கூட தராத காரணத்தினாலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயத்தில் புதுவையில் உள் வேளை செய்த காரணத்தினாலும் பமகாவை ஆதரிப்பதில்லை என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.


தனிநபர் ஜமாஅத் மேற்கண்ட தீர்மானத்தில் பாமக பற்றிக் கூறியுள்ள விஷயத்தில் எந்த மாற்றமாவது  ஏற்பட்டுள்ளதா? முஸ்லிம்களுக்கு தீவிரவாத பட்டம் சுமத்தியதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டதால் இந்த சட்டமன்றத் தேர்தலில்  பாமகவை ஆதரிக்கிறார்களா? இந்த தேர்தலில்  முஸ்லிம் வேட்பாளர் பலரை பாமக நிறுத்தியதால் தனிநபர் ஜமாஅத் ஆதரிக்கிறதா? முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு விஷயத்தில் புதுவையில் செய்த உள்குத்து வேலையை பாமக விட்டு விலகிவிட்டதாக, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கு புதுவையில் பாமக பாடுபடுவதாக  தனிநபர் ஜமாத்திற்கு ஏதேனும்  அறிவிப்பு வந்ததால் ஆதரிக்கிறார்களா?


மேலும், திமுக ஆதரவு கண்ட தனிநபர் ஜமாஅத்தின் பொதுக்குழுவில், முஸ்லிம்களுக்கு  ஒரு தொகுதி கூட ஒதுக்காத  பாமக பற்றி கேள்வி எழுப்பப் பட்டபோது அந்த தனிநபர், 'பாமக ஒரு ஜாதிக் கட்சிமா; அவன் ஒரு முஸ்லிம்களை நிறுத்தலன்னு சொல்றதே முட்டாள்தனம் என்று திருவாய் மலர்ந்தார்.


ஒரு முஸ்லிமை கூட நிறுத்தாத பாமகவை நாம் ஆதரிக்கனுமா என்று கேட்டால் அவ்வாறு கேட்பதே முட்டாள்தனம் என்று இன்று கூறும் இந்த தனிநபர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாமக முஸ்லிம்களை நிறுத்தாதது  பற்றி தீர்மானத்தில்  கொண்டுவந்தது முட்டாள்தனமில்லையா என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. ஏனென்றால் அண்ணன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.


மேலும் பாமகவை ஜாதிக்கட்சி என்று இந்த தனிநபர் எந்த அடிப்படையில் கூறுகிறார்? ஒரு வாதத்தை வைக்கிறார். அதாவது ராமதாஸ், வன்னியர் ஒட்டு அன்னியருக்கு இல்லை என்று சொல்லி விட்டாராம். எனவே பாமக ஜாதிக்கட்சியாம். ராமதாஸ் சொன்னது அவரது இன உணர்வு. தனது சமுதாயத்தின் மீதான அக்கறை. தனது சமுதாய ஒட்டு வன்னியரைத் தவிர வேறு யாருக்கும் சென்று விடக்கூடாது. தனது சமுதாயத்தின் வாக்கு வங்கி தனது சமுதாயத்தின் வெற்றிக்கே பயன்படவேண்டும் என்ற அவரது சமுதாய நலன் சார்ந்த நோக்கம். அப்படி அவர் தனது சமுதாய வாக்குகளை ஒருங்கிணைத்து சில வெற்றிகளை ஈட்டியதால்தான் இன்றைக்கு திராவிடக் கட்சிகள் அவரோடு கூட்டணி வைக்க போட்டி போடுகின்றன. அவரது கட்சி சில மாவட்டங்களில் மட்டுமே வாக்கு வங்கி உடையதாக இருந்தாலும் தொகுதிகளை அள்ளிக் கொடுக்க திராவிடக் கட்சிகள் முன் வந்ததற்கு காரணம் அவரது சமுதாய ஓட்டுக்களை ஒருங்கினைத்ததே!

ஆனால் இந்த தனிநபரோ தானும் தனது ஜமாஅத்தும்  மட்டுமே முஸ்லிம் சமுதாய பாதுகாவலர்கள்; சமுதாய நலன் விரும்பிகள் என்று சொல்லிக்கொண்டு, சமுதாயத்தின்  வாக்குகளை பிரித்ததோடு, தனது வரட்டு கவுரவத்திற்காக  முஸ்லிம் சமுதாய வேட்பாளரை தோற்கடித்து, சமுதாயத்தின் வாக்குகளை அடுத்தவர் அறுவடை செய்ய திட்டங்கள் தீட்டுகிறார். தீர்மானங்கள்  போடுகிறார். இவர் ராமதாஸிடம் பட்டும்  படிக்கட்டும்.
ஆனாலும் நம்புங்கள் முஸ்லிம்களே! இவர்கள் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாவலர்கள்[!?]


குறிப்பு; பாமக  குறித்து நாங்கள் வைத்த குற்றச்சாட்டு இன்னும்  அப்படியேதான் உள்ளது. பாமக எந்த வகையிலும் தன்னை  மாற்றிக்கொள்ளவில்லை. ஆனாலும் பாமகவை ஆதரிப்போம். ஆனால் மமக குறித்த விசயத்தில் மாத்திரம் மண்ணைக்கவ்வ வைக்கும் எங்களின் முடிவில் எந்த மாற்றமுமில்லை. ஏனெனில் இவர்கள் முஸ்லிம்கள் என்பதால்.

துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!


முன்னுரை; நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியை ஆதரிக்க உள்ளதாம் தனிநபர் ஜமாஅத். அந்த திமுக அணியில் இடம்பெறுள்ள காங்கிரஸ் குறித்த தனிநபர் ஜமாஅத்தின் கடந்த சில மாத எழுத்துக்களை- தீர்மானங்களை மக்கள் பார்வைக்கு வைக்கிறோம். ஆனாலும் இவர்கள் மட்டுமே சமுதாயத்தின் காவலர்கள் என்று நம்ப வேண்டும் இல்லையேல் நீங்கள் தடம்புரண்டவர்களாகி விடுவீர்கள்;


17.10.2010 அன்று செங்கல் பட்டில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழுவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகங்கள்.
துரோகம் : 11949 ஆம் ஆண்டு டிசம்பர் 22, 23 நள்ளிரவில்தான் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோரின் சிலைகள் பாபரி மஸ்ஜிதின் உள்வளாகத்தில் வைக்கப்பட்டன. அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தச் சிலைகளை உடனே அப்புறப்படுத்தி , அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததோடு மட்டுமல்லாமல் ஐவேளை தொழவிடாமல் தடுத்து நிறுத்தி பள்ளிவாசலை இழுத்து மூடிய துரோகத்தை காங்கிரஸ்தான் செய்தது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் இந்த அக்கிரமத்திற்கு துணைபோனது.
துரோகம் : 21989 ராஜீவ் காந்தி பிரதம அமைச்சராக இருக்கும் போது நாடாளுமன்ற தேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இந்துக்கள் ஓட்டுக்களை பொறுக்குவதற்காக பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் அமைந்த நிலத்திற்குள் விஸ்வஹிந்து பரிஷத் குண்டர்கள் சிலா நியாஸ் என்ற பெயரில் அடிக்கல் நாட்டு வைபவத்தை நடத்துவதற்கு அனுமதிவழங்கியததான் 1992ல் பாபர் மஸ்ஜித் உடைப்பிற்கு காரணமானது. இது காங்கிரஸ் கட்சி செய்த அடுத்த துரோகமாகும்
துரோகம் : 31992 பாபரி பள்ளிவாசல் இடிக்கப்படப் போகின்றது என்று உளவுத் துறை தகவல் தெரிவித்தும் மாநில பிஜேபி அரசைக் கலைக்காமல் கரசேவை என்ற பெயரில் இராணுவத்தின் மேற்பார்வையில் இந்துத்துவா சக்தி கயவர்கள் பாபரி மஸ்ஜிதை இடிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததும் காங்கிரஸ் ஆட்சிதான்.
துரோகம் : 4பள்ளிவாசல் இடிக்கப்பட்ட பிறகு அதே இடத்தில் தற்காலிக கோயில் கட்ட அனுமதித்ததும் காங்கிரஸ் அரசுதான்.
துரோகம் : 5பாபர் மஸ்ஜித் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்பது மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்னால் வெறும் சிந்தனையோட்டமாக மட்டுமே இருந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தில் முதன் முதலாக பள்ளியின் கீழ் கோயில் இருந்ததா? என்பதை ஆய்வு செய்வதற்காக தன் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சிக்குரிய வழிகளை ஏற்பாடு செய்தது.. அதுதான் இன்றைய இந்தத் தீர்ப்பிற்கு காரணமாக அமைந்தது. இப்படி அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கு துரோகங்களுக்காக காங்கிரஸ் கட்சியை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.  

தீவுத்திடலில் 15 லட்சம் பேர்[?] கூடிய மாநாட்டில் தீர்மானம்;
இந்திய நாட்டை உருவாக்குவதிலும், இந்தியாவின் அடிமைத் தளையை உடைத்தெறிவதிலும் பெரும் பங்கு ஆற்றிய முஸ்லிம்கள் நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளன. முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மிஸ்ரா கமிஷன் தெளிவான பரிந்துரை யையும் வழங்கியுள்ளது.
 .

காங்கிரஸின் தார்மீகக் கடமை
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தன் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியது. அதை நம்பி முஸ்லிம்கள் வாக்களித்ததால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மிஸ்ரா அறிக்கைக்காக மட்டுமன்றி காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிக்காகவும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் தார்மீகப் பொறுப்பு கங்கிரசுக்கு உள்ளது என்பதையும் காங்கிரசுக்கு இம்மாநாடு சொல்லிக் கொள்கிறது.[2004தேர்தல்அறிக்கையில் சொன்னதை 2011வரை நிறைவேற்றாமல்  அல்வா கொடுக்கும் காங்கிரஸை   மீண்டும்                          ஆதரிப்பது ஒருபுறம்;   அதேபோன்று தேர்தல்  அறிக்கையில் பரிசீலிப்போம்   என்று மட்டும் சொல்லியுள்ள திமுகவை  ஆதரிக்கிறது தனிநபர் ஜமாஅத். காங்கிரஸ்  தந்த அல்வாவை தின்றபின்னும் தேர்தல் அறிக்கைஇல் சொல்லிவிட்டால் அது நம்பகமானது என தனது ரசிகர்களை  நம்ப வைக்கலாம். முஸ்லிம்களை நம்ப வைக்கலாமோ?]  

பிரதமர்-சோனியா சந்திப்பு முடிந்தவுடன் செய்த ஃபில்டப்;
பிரதமர், நீதிபதி மிஸ்ரா அவர்களின் அறிக்கை வந்தது முதல் அது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தருவோம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்கள்.
சோனியாகாந்தி, இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள்.


கடந்த  06-07-2010 ல் நடந்த சந்திப்பின் போது, முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது என்று முடிவாகி விட்டது. எத்தனை சதவிகிதம் என்பதில்தான் விவாதம்  நடக்கிறது என்று சோனியா சொன்னதாக  சொன்ன இந்த தனிநபர்ஜமாத்தினர், அந்த விவாதத்தை இன்னும் தொடரும் சோனியாவின் காங்கிரஸை தமிழகத்தில் ஆதரிக்கிறார்களாம்.


ஆக பாபர் மஸ்ஜித் விசயத்தில் துரோகம் செய்த காங்கிரஸ் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு, இட ஒதுக்கீடு விசயத்தில் இன்றுவரை ஏமாற்றும் காங்கிரஸை தமிழகத்தில் ஆதரிக்க கிளம்பி விட்டது இந்த சமுதாய நலனை மட்டுமே முன்னிறுத்தும்[!?] தனிநபர் ஜமாஅத்.


ஒருவேளை மத்தியில் ஆளும் காங்கிரஸ் வேறு; தமிழ்நாட்டில் இப்போது போட்டியிடும் காங்கிரஸ் வேறோ என்னவோ? அல்லது காங்கிரஸை நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில்   பார்த்துக்கொள்வோம் என்று வாய்ச்சவடால் அடிக்கப் போகிறார்களா? 


அதுவும் செய்யமுடியாது. ஏனென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை ஆதரிக்க மாட்டோம் என்று பொதுக்குழுவில் தீர்மானம் போட்டுவிட்டு, பிறகு கொல்லைப் புறமாக மாவட்ட முடிவு- மண்ணாங்கட்டி முடிவு என தீவிரமாக காங்கிரஸை ஆதரித்ததையும் முஸ்லிம்கள் மறக்கவில்லை.


ஆயிரம் துரோகங்களை முஸ்லிம்களுக்கு செய்தாலும் அன்னை சோனியாவை ஆதரிப்போம். ஆனால் மறந்தும் கூட முஸ்லிமான மமகவை மன்னிக்கவே மாட்டோம்.
நம்புங்கள் முஸ்லிம்களே! இவர்கள் மட்டுமே சமுதாய  காவலர்கள்[?!].

Monday, March 28, 2011

கேடு கெட்ட தானம்தானே இது?


அன்பிற்குரிய இணையதள வாசகர்களுக்கு... 

தனிநபர் தக்லீது ஜமாத்தினர்..பொய் முகமூடி அணிந்து கொண்டு,கள்ளத்தனமாக நடத்திவரும் பொய்யன் டி.ஜே இணையதளத்தில்...மக்கள் ரிப்போர்ட்டில் வெளியான `காணவில்லை' என்கிற விளம்பர அறிவிப்பை பற்றி விமர்சனம் செய்துள்ளார்கள்.இவர்கள் எந்த அளவிற்கு கேவலமாக சிந்திக்கிறார்கள் என்பதற்கு அந்த விளம்பரம் தொடர்பாக அவர்கள் எழுதி இருக்கும் செய்தியே சான்றாக உள்ளது.
"இந்தவார மக்கள் ரிப்போர்ட் இதழில் வந்திருக்கும் ஒரு விளம்பரம் இது. ஒருவர் காணமல் போய் விட்டார். அவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்தவர் என அதிலே குறிப்பிட்டுள்ளார்கள். இது சம்பந்தமாக ஒரு சகோதரர் விளக்கம் கேட்டு இருந்தார். அதற்கு நம்முடைய விளக்கம் அவர் ததஜ வில் இருந்தவரை நல்லாத்தான் இருந்திருக்கார்.காணாமல் போகவில்லை. என்றைக்கு பொய்யன் கூட்டத்தில் சேர்ந்தாரோ அவருக்கு வந்தது வினை. அதன் விளைவு தான் இந்த காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு. அதனால் தான் அவர் ததஜவில் இருந்தவர் என்று போட்டுள்ளார்கள். பாவம் !!!

காணவில்லை என்கிற அந்த விளம்பரம் பஷீர் அஹ்மத் என்பவரால் கொடுக்கப்பட்டது என்பதை அந்த விளம்பர அறிவிப்பே தெளிவு படுத்துகிறது.இது போன்ற அறிவிப்புகளை இடப் பற்றாக்குறையின் காரணமாக பத்திரிகைகள் சிலவேளை  சுருக்கி வெளியிடுமே தவிர,அதில் எதையும் சேர்த்து வெளியிடும் மரபு எந்த பத்திரிகைக்கும் கிடையாது.இந்த அறிவு கூட இல்லாமல் பத்திரிகை நடத்துகிறார்கள்.காழ்ப்புணர்ச்சியை உமிழ்வதாகவே பொய்யன் இணையதளத்தின் எழுத்தை பார்க்க முடிகிறது...தனி நபர் ஜமாத்தின் பெயரை வேண்டுமென்றே நாம் சேர்த்து எழுதியதாக எண்ணிக்கொண்டு மக்கள் ரிபோர்ட்டை சொரிந்துள்ளனர்.
அடுத்து...காணாமல் போனவர் தனி நபர் தக்லீது ஜமாஅத்தில் இருந்தவர் என்று பஷீர் அஹ்மத் சுட்டிக்காட்டி இருப்பதற்கு காரணம்..காணாமல் போன அவரை தேடுவதற்கு எளிதான வழியாக இருக்கும்.அடையாளம் காண ஏதுவாக இருக்கும் என்பதற்காகவே... என்று தான்  அறிவுள்ள எவரும் விளங்குவார்களே தவிர அந்த ஜமாத்தை குறை சொல்வதாக எவரும் கருத மாட்டார்கள்.  மேலும்.. காணாமல் போனவர் ,தமது எதிர் முகாமில் உறுப்பினராக இருந்தவர் என்று தெரிந்தும்,அந்த அமைப்பின் பெயரை தவிர்க்காமல்,காணாமல் போனவர் கிடைத்து விட வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை கொச்சைப்படுத்தி எழுதும் இவர்களின் சிந்தனையை என்னவென்பது?கேடு கெட்ட தானம்தானே இது? 

சரி, நாம் இன்னொன்றை கேட்கிறோம்...மக்கள் ரிப்போர்ட்டில் ஒரு மூலையில் இருந்த விளம்பரத்தை எடுத்துக் காட்டும் இவர்கள்...அதே மக்கள் ரிபோர்டில் முன்பு.... சென்னை கமிஷனருக்கு இவர்கள் எழுதிய அவதூறு,பொய் புகார் குறித்தும்,இவர்களது சமுதாய துரோகம் குறித்தும் ஆதாரங்களுடன் ஒரு பக்க அளவிற்கு எழுதப்பட்ட செய்திகளுக்கு இதுவரை பதில் சொல்லாமல் மெளனமாக இருப்பது ஏன்? மக்கள் ரிப்போர்ட்டில் வெளியான அந்த செய்திகள் எல்லாம் உண்மை என்பதால்,இதற்கு பதில் என்று ஏதேனும் உளறினால் நன்றாக வாங்கிக்கட்டிக்கொள்வோம் என்கிற பயம்,பீதி தானே?
 
ஏற்கனவே மதுரை ஆதீனம் விஷயத்தில் நாக் அவுட் பஞ்ச் வாங்கிக்கொண்டு ஓடிய இவர்கள் மீண்டும் மக்கள் ரிபோர்ட்டை சீண்டி இருப்பது மீண்டும் வாங்கிக்கட்டிக்கொள்ளத் தான்!
 
 

 
  

வாரம் இரு முறை பயான் வையுங்கள்!திருவல்லிகேணி பெண்கள் கோரிக்கை!





வாரம் இரு முறை பயான் வையுங்கள்!
திருவல்லிகேணி பெண்கள் கோரிக்கை! 

திருவல்லிகேணி மர்கசில் வாரந்தோறும் பெண்கள்   பயான் நடை பெற்று வருகிறது! துவங்கிய நாள் முதல் இன்று வரை வாரா  வாரம் பயானுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது!  

இந்த வாரம் வியாழனன்று நடை பெற்ற பெண்கள் பயானில் ஆலிமா.நசீம் செங்கிஸ் கான் 'தொழுகையில் பெண்களின் நிலை ' எனும் தலைப்பில் தொழுகையில் போடு போக்காக இருக்கும் நம் பெண்களுக்கு குரான் ஹதிஸ் அடிப்படையில் இறையச்ச உணர்வை ஊட்டி, தொழுகை இல்லாதவர்களின் மறுமை     நிலை குறித்தும் ,  சகர் எனும் நரகம் குறித்த அச்ச உணர்வையும் ஊட்டினார்.

கால் வைக்க இடமில்லாத அளவுக்கு பள்ளி முழுதும் சுமார் 120 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வாரம் இரு முறை பெண்களுக்கு பயான் வைக்குமாறு திருவல்லிக்கேணி இ.த.ஜ. நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டனர்.  அல்ஹம்து லில்லாஹ் ! 

மாட்டு இறைச்சியை மறுக்காதே மனுதர்மத்தை விதைக்காதேநடுநிலையாளர்கள் போராட்டம்


மாட்டு இறைச்சியை மறுக்காதே மனுதர்மத்தை விதைக்காதேநடுநிலையாளர்கள் போராட்டம்
மனிதர்கள் சாப்பிடும் அசைவ உணவில் உலக அளவில் மாட்டு இறைச்சி ஒருமுக்கியமான இடத்தை பிடித்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் மாட்டு இறைச்சிசாப்பிடுவது வியபாரம் செய்வது தொடர்பாக அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவதுவாடிக்கை.
மனுதர்ம படி மாடு தெய்வமாக கருதப்படுவதால் யாரும் மாட்டு இறைச்சி விற்பனைசெய்வதும் சாப்பிடுவதும் கூடாது என்று ஒரு விஷக்கருத்து விதைக்கப்படுகிறது.இதற்கு மதிப்பளிக்கும் வகையில் மகாவீர் ஜெயந்தி அன்று தமிழகஅரசு மாட்டிறைச்சிவிற்பனை செய்யக்கூடாது என்று இந்தவருடம் அறிவித்ததுஇது தொடர்பாகவியபாரிகளுக்கும்காவல்துறையினருக்கும் இடையில் ஒரு பிரச்சனை ஏற்ப்பட்டநிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை பொதுசெயலாளர் செய்யதுஇக்பால் பிரச்சனை பெரிதாகாமல் தீர்வு கண்டார்இது தொடர்பான விரிவான செய்திமக்கள் ரிப்போர்டில் வெளியிடப்பட்டிருந்தது.
 மகாவீர் ஜெயந்தி அன்று மாட்டிறைச்சி சாப்பிட கூடாது என்றால் இஸ்லாம் பன்றிகறியை ஹராம் என்கிறது என்ற காரணத்திற்காக முஸ்லிம் அல்லாத சகோதரர்களும்பன்றி இறைச்சியை சாப்பிடக்கூடாது என்று அரசு அறிவிக்குமா? வட்டியை இஸ்லாம்தடுக்கிறது என்பதற்காக வட்டியை அடிப்படையாக கொண்டு செயல்படும் வங்கிகளைமூட உத்தரவு போட முடியுமா? யோசித்து பாருங்கள்மனிதகுலத்தை அழிக்கும்மதுவை அரசாங்கமே கடைவிரித்து வியபாரம் செய்யுமாம் குறைந்த செலவில்கிடைக்கும் நல்ல உணவான மாட்டுகறியை அரசு தடுக்குமாம்! என்ன இது கேலி கூத்து.
அரசாங்கம் இப்படி செய்கிறது என்றால் அரசு அதிகாரிகளோ ஒருபடி மேலே போய்குடந்தை போன்ற நகரங்களில் இது கோவில் நகரம் ஆகவே இந்த நகரத்தின் புனிதம்கருதி மாட்டிறைச்சியை விற்பனை செய்யக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்குண்டர்கள்போல் வியபாரிகளை மிரட்டுவதாக நமக்கு செய்தி வருகிறது.
மாட்டை சிலர் தெய்வமாக கருதுகிறார்கள் என்பதற்காக அதிகாரிகள் இந்தியசட்டத்தை மீறி வியபாரிகளை மிரட்டுவது நல்லதல்லநிலைமை இப்படியிருக்க பாபாராம்தேவ் சுவாமி என்பவர் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று பிரச்சாரம்செய்து வருகிறார்இவர் மார்ச் 22 அன்று சென்னை வந்தபோது பெரியார் திராவிடகழகத்தினர் மாட்டிறைச்சியுடன் வந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்நடத்தினர்அதோடு மட்டுமல்ல இவர்கள் கைது செய்யப்பட்ட பின்பும்மாட்டிறைச்சியை சமைத்து சாப்பிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாம் வாழும் இந்தியநாடு எந்த மதத்திற்கும் சொந்தமல்லஅனைத்து மதத்திற்கும்ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் சொந்தமான நாடாகும்இது போன்று ஆளும்அரசும்அதிகாரிகளும் மததுவேஷத்தை தூண்டும்படி நடக்காமல் இருக்கவேண்டும்என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்பாக உள்ளது.
நாச்சியார்கோவில் ஜாஃபர்

--
Thanks&Regards

 M.NOORULAMEEN                              
 cell;9787332923