Monday, March 28, 2011

மாட்டு இறைச்சியை மறுக்காதே மனுதர்மத்தை விதைக்காதேநடுநிலையாளர்கள் போராட்டம்


மாட்டு இறைச்சியை மறுக்காதே மனுதர்மத்தை விதைக்காதேநடுநிலையாளர்கள் போராட்டம்
மனிதர்கள் சாப்பிடும் அசைவ உணவில் உலக அளவில் மாட்டு இறைச்சி ஒருமுக்கியமான இடத்தை பிடித்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் மாட்டு இறைச்சிசாப்பிடுவது வியபாரம் செய்வது தொடர்பாக அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவதுவாடிக்கை.
மனுதர்ம படி மாடு தெய்வமாக கருதப்படுவதால் யாரும் மாட்டு இறைச்சி விற்பனைசெய்வதும் சாப்பிடுவதும் கூடாது என்று ஒரு விஷக்கருத்து விதைக்கப்படுகிறது.இதற்கு மதிப்பளிக்கும் வகையில் மகாவீர் ஜெயந்தி அன்று தமிழகஅரசு மாட்டிறைச்சிவிற்பனை செய்யக்கூடாது என்று இந்தவருடம் அறிவித்ததுஇது தொடர்பாகவியபாரிகளுக்கும்காவல்துறையினருக்கும் இடையில் ஒரு பிரச்சனை ஏற்ப்பட்டநிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை பொதுசெயலாளர் செய்யதுஇக்பால் பிரச்சனை பெரிதாகாமல் தீர்வு கண்டார்இது தொடர்பான விரிவான செய்திமக்கள் ரிப்போர்டில் வெளியிடப்பட்டிருந்தது.
 மகாவீர் ஜெயந்தி அன்று மாட்டிறைச்சி சாப்பிட கூடாது என்றால் இஸ்லாம் பன்றிகறியை ஹராம் என்கிறது என்ற காரணத்திற்காக முஸ்லிம் அல்லாத சகோதரர்களும்பன்றி இறைச்சியை சாப்பிடக்கூடாது என்று அரசு அறிவிக்குமா? வட்டியை இஸ்லாம்தடுக்கிறது என்பதற்காக வட்டியை அடிப்படையாக கொண்டு செயல்படும் வங்கிகளைமூட உத்தரவு போட முடியுமா? யோசித்து பாருங்கள்மனிதகுலத்தை அழிக்கும்மதுவை அரசாங்கமே கடைவிரித்து வியபாரம் செய்யுமாம் குறைந்த செலவில்கிடைக்கும் நல்ல உணவான மாட்டுகறியை அரசு தடுக்குமாம்! என்ன இது கேலி கூத்து.
அரசாங்கம் இப்படி செய்கிறது என்றால் அரசு அதிகாரிகளோ ஒருபடி மேலே போய்குடந்தை போன்ற நகரங்களில் இது கோவில் நகரம் ஆகவே இந்த நகரத்தின் புனிதம்கருதி மாட்டிறைச்சியை விற்பனை செய்யக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்குண்டர்கள்போல் வியபாரிகளை மிரட்டுவதாக நமக்கு செய்தி வருகிறது.
மாட்டை சிலர் தெய்வமாக கருதுகிறார்கள் என்பதற்காக அதிகாரிகள் இந்தியசட்டத்தை மீறி வியபாரிகளை மிரட்டுவது நல்லதல்லநிலைமை இப்படியிருக்க பாபாராம்தேவ் சுவாமி என்பவர் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று பிரச்சாரம்செய்து வருகிறார்இவர் மார்ச் 22 அன்று சென்னை வந்தபோது பெரியார் திராவிடகழகத்தினர் மாட்டிறைச்சியுடன் வந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்நடத்தினர்அதோடு மட்டுமல்ல இவர்கள் கைது செய்யப்பட்ட பின்பும்மாட்டிறைச்சியை சமைத்து சாப்பிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாம் வாழும் இந்தியநாடு எந்த மதத்திற்கும் சொந்தமல்லஅனைத்து மதத்திற்கும்ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் சொந்தமான நாடாகும்இது போன்று ஆளும்அரசும்அதிகாரிகளும் மததுவேஷத்தை தூண்டும்படி நடக்காமல் இருக்கவேண்டும்என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்பாக உள்ளது.
நாச்சியார்கோவில் ஜாஃபர்

--
Thanks&Regards

 M.NOORULAMEEN                              
 cell;9787332923                                                

0 comments:

Post a Comment