.
பெர்ணம்பட் அருகில் உள்ள சத்காடி கிராமத்தில் 400 ஆண்டு பழமை வாய்ந்த ஜும்மா பள்ளிவாசல் தற்போது பராமரிபற்று அனாதையான நிலையில் உள்ளது . வகப் வாரியமும் பள்ளி நிர்வாகமும் அதை கண்டு கொள்ளவில்லை . பள்ளிக்கு சொந்தமான வகப் நிலங்களை கயவர்கள் முலம் ஆக்கிரமிப்பு செய்ய பட்டுள்ளது . பள்ளியில் 1 வேளை தொழுகை கூட நடை பெறுவதில்லை .
இதை அறிந்த intj பெர்ணம்பட் நிர்வாகிகள் , சர்ப் ராஸ் , பைசுர் ரஹ்மான் , ரபீக் ,அன்சர் ,இம்தியாஸ் ,அப்துல்லா , முஹம்மது ,பாரூக் , உள்ளிட்டோர் அங்கு சென்று அங்குள்ள மக்களுக்கு குரான் ஹதீஸ் படி தாவா செய்து பூட்டப்பட்ட பள்ளிவாசலில் வெளியே அசர் ,மக்ரிப் தொழுகை நடத்தியது .
பள்ளி நிர்வாகத்தின் தவறான நிலையால் இந்த நிலை மற்றும் பள்ளி வாசலை பூட்டும் நிலை ஏற்பட்டுள்ளது . வகப் வாரியம் தகுந்த நடவடிக்கை மற்றும் பூட்டிய பள்ளிவாசலில் தொழுகை நடத்தவும் ,வகப் நிலங்களை மீட்கவும் intj தேசிய நிர்வாகிகள் s.m பாக்கர் , முஹம்மது மொஹிதீன்,இக்பால் ஆகியோரின் அறிவுரை படி வகப் வாரியத்திடம் முறையிட்டுள்ளது .வகப் வாரியம் நடைவடிக்கை எடுக்குமா பள்ளியை மீட்குமா ? இல்லையெனில் இன்ஷா அல்லாஹ் வேலூர் மாவட்ட இ.த.ஜ.பள்ளியை மீட்க மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை அறிவிக்கும் !
0 comments:
Post a Comment