Tuesday, March 22, 2011

கீழக்கரை நடுதெரு ஜமாஅத் சொத்து மீட்பில் INTJ !

கீழக்கரை  நடுதெரு ஜமாஅத் சொத்து மீட்பில் INTJ !

 நன்றி கூற வந்த வந்த நடுத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள்




கீழக்கரை நடுத்தெரு ஜமாத்திற்கு சொந்தமான வளாகம் ஒன்று சென்னை ராயபுரத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து   கொண்டு அங்கே இருப்பவர்கள் முறையான வாடகை தராமல் , காலியும் செய்யாமல் இருந்து கொண்டிருந்தனர். 

புதிதாக பொறுப்பேற்ற கீழக்கரை நடுத்தெரு ஜமாஅத் நீதி மன்றம் சென்று காலி செய்ய ஆணை பெற்றும் உள்ளூர் தாதாக்கள் துணையோடு காலி செய்ய மறுத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சில வாடகைதாரர்களை காலி செய்ய நீதி மன்ற ஆணையை பெற்ற ஜமாத்தார்கள் இ.த.ஜ. உதவியை நாடினர். அதை வட சென்னை நிர்வாகிகள் இ.த.ஜ.நிர்வாகிகள் முன்ன்னின்று காலி செய்ய உதவினர்.

அதைப் போன்று இன்று சில வீடுகளின் நீதிமன்ற ஆணையை பெற்றுக் கொண்டு வந்த நடுத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள் மீண்டும் நம்மை அணுகினர்.உடனடியாக வட சென்னை இ.த.ஜ நிர்வாகிகள் புஹாரி, இஸ்மாயில், அன்சாரி ஆகியோர் நேதாஜி நகர் கிளை சகோதரர்கள் புடை சூழ சென்று வீடு காலி செய்யப் பட்டு ஜமாத்தார்கள் வசம் வந்தது!

இதற்காக நன்றி தெரிவிக்க வந்த ஜமாஅத் நிர்வாகிகள் , அடுத்து மீதமுள்ள வீடுகளுக்கும் நீதி மன்ற ஆணை விரைவில் கிடைத்து விடும் அதற்க்கும் இ.த.ஜ. உதவ வேண்டும் என கூறினர். பள்ளியின் வக்பு சொத்து என்பது அல்லாஹ்வின் சொத்து அதை மீட்க இ.த.ஜ.என்றைக்கும் உதவும்.என மாநில நிர்வாகிகள் கூறினர்.

இதே போன்று அரண்மனைக்காரன் தெருவில் இருந்த கீழக்கரை சகோதரர் ஒருவரின் சொத்து ஒன்றும் நீதிமன்றம் ஆணை பெற்றும் காலி செய்ய முடியாமல் இருந்து கடந்த வருடம் இ.த.ஜ.தலையிட்டு வக்கீல் ஒருவரிடம் இருந்து    மீட்டதும் குறிப்பிடத்தக்கது!   
அல்ஹம்து லில்லாஹ்! எல்லாப் புகழும் இறைவனுக்கே!
  

0 comments:

Post a Comment