Sunday, March 6, 2011

பொழுது போக்கும் கடற்கரையில் சமுகத்தை பழுது பார்க்க சென்ற இ.த.ஜ. தஃவா குழு.
















பொழுது போக்கும் கடற்கரையில் சமுகத்தை
பழுது பார்க்க சென்ற இ.த.ஜ. தஃவா குழு.



இஸ்லாத்தின் அனைத்துச் செய்திகளும் அனைவருக்கும் பொதுவானவை, அனைத்து மக்களுக்கும் அருளப்பட்டவை என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்வதோடு, இது நமக்கு மட்டும் அருளப்பட்ட மார்க்கம் என்ற சுயநலத்தைக் கைவிட்டு, இஸ்லாமியச் செய்திகள் அடையாத உள்ளங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் பற்றி தெளிவான விளக்கத்தை மாற்றுமத நண்பர்களுக்கு வழங்க வேண்டியது, முஸ்லிம்களின் மீதுள்ள கடமையாகும். இன்றைக்கு மாற்றுமத நண்பர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி தவறான அறிமுகம் செய்யப்பட்டு, அவர்களது உள்ளத்தில் இஸ்லாத்தைப் பற்றி தவறாக புரிந்துணர்வு நிறைந்து கிடக்கின்றது. அவற்றை உரிய முறையில் விளக்கமளித்து. மனிதனை நேரான பாதையில் பயணிக்க அவர்களிடம் அழைப்புப்பணி செய்ய வேண்டும்.

எங்கும் தஃவா! எதிலும் தஃவா! என மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளில் தன்னை அர்பணித்துக் கொண்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தாவா குழு இந்த கலாச்சார சீரழிவின் களமான கடற்கரையில் மாநிலச்செயலாளர் செங்கிஸ்கான் மாநில செயலாளர் ஜாகிர் ஹுசைன் இரண்டு குழுவும் மாநிலச்பேச்சாளர் மசுதா தலைமையில் பெண்கள் குழுவும் இணைந்து மக்களை சந்தித்து அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து கூறி தாஃவா செய்தனர்.

இந்த அழைப்பு பணியில் இ.த.ஜ.கிளை நிர்வாகிகள், இ.த.ஜ.தாவா சென்டரில் பயிலும் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற மாணவர்கள் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் பங்கேற்று அழைப்பு பணி செய்தனர். 2000 கும் மேற்பட்ட இஸ்லாம் பற்றிய
கையேடுகள் மற்றும் சமூக தீமை குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப் பட்டன.

மசுதா ஆலிமா தலைமையிலான பெண்கள் அணி பர்தா அணிந்து வந்த ஜோடிகளை குறி
வைத்து அழைப்பு பணி செய்தனர். மாலை 4 மணிக்கு துவங்கிய அழைப்புப் பணி மக்ரிப்
வரை நீடித்தது! அசர் மற்றும் மக்ரிப் தொழுகையை அங்கேயே ஜமாஅத் ஆக நிறை வேற்றியது ! பொழுது போக்க வந்திருந்த பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு மத்தியில்
சமுகத்தை பழுது பார்க்க வந்த ஒரு கூட்டம் தொழுது கொண்டிருப்பதை மக்கள் வியப்போடு பார்க்க அதுவும் ஒரு அழைப்பு பணியானது! [அல்ஹம்துலில்லாஹ்]

நன்மையை ஏவி தீமையை தடுத்து மக்களை நல்வழியில் அழைக்கும் ஒரு குழு உங்களிடையே இருக்கட்டும்! [அல்குரான் 3-103 ]

0 comments:

Post a Comment