வாரம் இரு முறை பயான் வையுங்கள்!
திருவல்லிகேணி பெண்கள் கோரிக்கை!
திருவல்லிகேணி மர்கசில் வாரந்தோறும் பெண்கள் பயான் நடை பெற்று வருகிறது! துவங்கிய நாள் முதல் இன்று வரை வாரா வாரம் பயானுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது!
இந்த வாரம் வியாழனன்று நடை பெற்ற பெண்கள் பயானில் ஆலிமா.நசீம் செங்கிஸ் கான் 'தொழுகையில் பெண்களின் நிலை ' எனும் தலைப்பில் தொழுகையில் போடு போக்காக இருக்கும் நம் பெண்களுக்கு குரான் ஹதிஸ் அடிப்படையில் இறையச்ச உணர்வை ஊட்டி, தொழுகை இல்லாதவர்களின் மறுமை நிலை குறித்தும் , சகர் எனும் நரகம் குறித்த அச்ச உணர்வையும் ஊட்டினார்.
கால் வைக்க இடமில்லாத அளவுக்கு பள்ளி முழுதும் சுமார் 120 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வாரம் இரு முறை பெண்களுக்கு பயான் வைக்குமாறு திருவல்லிக்கேணி இ.த.ஜ. நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டனர். அல்ஹம்து லில்லாஹ் !
0 comments:
Post a Comment