Saturday, March 26, 2011

தேர்தல் நிலைப்பாடு; தாங்கள் பொய்யர்களே என நிரூபித்த தனிநபர் ஜமாஅத்!


முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்பதை முடிவு செய்யும் டிஎன்டிஜே யின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை டி நகரில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் 06..3.11 ஞாயிறன்று காலை 10.30மணிக்கு கூடியது.
 
முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் இந்தத் தேர்தலில் எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கான சாதக பாதகங்கள் அலசப்பட்டு, எந்த எந்த முடிவுகளை எடுத்தால் முஸ்லிம் சமுதாயம் முழு நன்மை பெறும் என்ற விஷயங்கள் பேசப்பட்டு, அதற்கு தகுந்தாற்போல முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளைத் தக்க தருணத்தில் மாநில நிர்வாகம் கூடி அறிவிக்கும் எனவும், செயற்குழுவில் எடுத்த முடிவை அறிவிக்கும் அதிகாரத்தை மாநில நிர்வாகக் குழுவுக்கு அளிப்பது எனவும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்தனர்.
 
என்று  கூறிய தனிபர் ஜமாஅத், தக்க நேரம் வந்தபின்னும் இந்த செயற்குழு முடிவை அறிவித்து எந்த அணிக்கு ஆதரவு என்று தெளிவு படுத்துவதை விடுத்து, 26-3-11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு மாநில அவசரப் பொதுக்குழு என்று அறிவித்தனர். அப்படியாயின்,   ந்த பொதுக்குழுவில்  தான் 'முடிவெடுக்கப் போவதாக' கூறும் இந்த பொய்யர்கள், ஏற்கனவே செயற்குழுவில் முடிவெடுத்தோம் என்று சொன்னதை பொய் என இந்த பொய்யர் பீஜே ஜமாஅத் ஒத்துக் கொள்கிறதா? என்று கேட்டோம். பதிலில்லை.
 
இப்போது 06..3.11 செயற்குழுவில் முடிவெடுத்ததாக கூறியது அப்பட்டமான  பொய் என்பதற்கு இன்னொரு சான்றை பார்க்கலாம். இன்று[26-3-11 ] நடந்த பொதுக்குழுவில்  ஒரு விஷயத்தை சொல்கிறது தனிநபர் ஜமாஅத். அதாவது, ''இதன் காரணமாகவே அதிமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை யாருக்கு ஆதரவு என்னும் முடிவை எடுக்காமல் தள்ளி வைத்தோம். என்கிறது.
 
தனிநபர் ஜமாஅத்தின் இந்த வாக்குமூலப்படியும் கடந்த 06..3.11 செயற்குழுவில் முடிவெடுத்ததாக கூறியது அப்பட்டமான  பொய் என்பது மீண்டும் நிரூபணமாகிறது ஏனெனில் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையை 24 -03 -11 அன்றுதான் வெளியிட்டார். சரியாக சொல்வதானால் இருநாட்களுக்கு முன்னால்தான். எனவே அதிமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை யாருக்கு ஆதரவு என்னும் முடிவை எடுக்காமல் தள்ளி வைத்தோம் என்ற ததஜ கூற்று மட்டுமே உண்மை என்றும், கடந்த 06..3.11 செயற்குழுவில் முடிவெடுத்ததாக கூறி மக்களை எமாற்றியுள்ளார்கள் என்றும் சந்தேகமற தெரிகிறது.  அதோடு தங்களை  அப்பட்டமான  பொய்யர்கள் என்று மீண்டும்  ஒருமுறை சந்தேகமற நிரூபித்துள்ளார்கள். 
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! 
- முகவை அப்பாஸ்.

0 comments:

Post a Comment