Sunday, November 14, 2010

ஒரு அயோக்கியர் அயோக்கியத்தனத்தை குறித்து பேசுவதா?

ஒரு அயோக்கியர் அயோக்கியத்தனத்தை குறித்து பேசுவதா?

அன்றைய திருடருமான இன்றைய திருடருமான அந்த புரோகிதர் நமது தார்மீக
அமைப்பை[இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ] தனது வக்கிர புத்தியால்,திருட்டு
புத்தியால் தட்டி பறித்து ,தப்பாட்டம் ஆடுகிறார்.இதுவரையில் தனது நச்சு
கருத்தை தனது அமைப்பின் பெயரில் வெளியிட்டு,சிறு சிறு கருத்துவேறுபாடுகள்
இருந்தாலும் ஒற்றுமையுடன் இருந்த சமுதாயத்தை சிதைத்து சின்னாபினமாக்கி
அதில் சுய ஆதாயம் அடைந்து வந்தவர்,இனி நமது அமைப்பை தனதாக்கி கொள்வதன்
மூலமாக அதிக ஆதாயத்தை அடைய கொஞ்சமும் வெட்கமின்றி துணிந்து விட்டார்.இவர்
நமது அமைப்பை நோக்கி தாவ காரணம் அது வளர்ச்சியின் உச்சத்திற்கு
சென்றுகொண்டிருப்பதால்.இவரிடமிருந்து பிரிந்த பின் நமது செல்வாக்கை
சரிப்பத்தர்க்கு பல பொய்களையும் புரட்டுகளையும் ,பேச்சாலும் எழுத்தாலும்
பரப்பியும் பார்த்துவிட்டார்.முடியவில்லை.நமது வீரியமிக்க வாதங்களுக்கு
முன் அவருடைய அவதூறுகள் ஆடிபோய் ஆட்டம் கண்டன.கருத்துக்களால் எதிர்கொள்ள
முடியாமல் மூர்ச்சையடைந்த இவர் தனது குருமதியால் குடும்பத்தோடு குறுக்கு
பாதையை தேர்ந்தெடுத்துள்ளார் அடாவடித்தனமாக.

ஆரம்பமே பொய் :

நமது அமைப்பின் பெயரில் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துவிட்டு,தனது உண்மையான
நோக்கத்தை மக்களுக்கு மத்தியில் மறைத்து பொய்யான நோக்கம் புனைந்து
"இந்திய தவ்ஹீத் ஜமாத்தை ஏன் அபகரித்தோம்"என்ற தலைப்பில் வழக்கமான
பொய்களை பரப்பியுள்ளார்.ஒரு அமைப்பு இருக்கும் போது அடுத்தவன் அமைப்பு
தேவையா?என்று மக்கள் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த தலைப்பின் கீழ்
பொய்களை பரப்புகிறார்.நேயர் கருத்து என்ற போர்வையில் இவருடைய ஆபாச
புத்தியால் அர்ச்சனை செய்து ஆரம்பிக்கிறார்.இதோ அந்த அர்ச்சனை!
நேயர் -1
விபச்சாரம் செய்வதுதான் சரி !
ஆனால் பதிவு செய்து திருமணம் முடிப்பது மாபெரும் தவறு.
கள்ளத்தனமாக தவ்ஹீத் என்ற போர்வையில் அமைப்பு நடத்துவது தான் சரி!
ஆனால் முறைப்படி பதிவு செய்து செயல்படுவது மகா தவறு !
பாக்கர் கும்பல் புலம்பல்.............
அடுத்து நம் அமைப்பின் நிர்வாகிகள் மீதுபாலியல் மற்றும் பொருளாதார பழிகளை
சமூதாயத்தில் வாய் கிழிய சொல்லி,சொல்லி தோல்விகண்டு துவண்டு போன இந்த
புரோகிதர்,இன்று நமது அமைப்பின் பெயரை அபகரித்து தனது தோல்வியை வெட்ட
வெளிச்சம்மாகியுள்ளார்.அமைப்பின் பெயரை முடக்கினால் தான் இவர்களை முடக்க
முடியும் .மாறாக நமது அவதூறுகளாலும் ஆபாச வார்த்தைகளாலும் இவர்களை
அசைத்துவிடமுடியாது என்று மல்லாக்க படுத்து கனவு கண்டுவிட்டார்
போலும்.அறிந்துகொள்ளட்டும் !சூழ்ச்சிக்காரனுக்கேல்லாம் சூழ்ச்சிக்காரன்
அல்லாஹ் இந்த சூநியக்காரனுக்கு நிச்சயம் தோல்வியைத்தான் தருவான் இன்ஷா
அல்லாஹ.

இந்த பகல் கொள்ளையனின் கொள்கையில் இஸ்லாம் இல்லை என்பதை உணர்ந்த
காரணத்தினால் தங்களின் ராஜினாமா கடிதத்தை முகத்தில் எறிந்துவிட்டு
அநீதிக்கு எதிராக களம் கண்ட கண்மணிகளை கயவர்களாக சித்தரித்து ,தான்
வெளியேற்றியதாக தாளம் போடுகிறார்.அந்த தாளத்தில் அப்பாவி தொண்டர்களை
கடுமையாக ஆடவைக்கிறார். தானும் எதற்க்காக ஆடுகிறோம் என்று தெரியாமல்
ஆடுகின்றனர் தொண்டர்கள்.விரைவில் இன்ஷா அல்லாஹ் தாளமும் கிழியும்
,ஆட்டமும் அடங்கும்.நீதிக்கு களம் கண்ட கண்மணிகளிடம் அன்றைய தினத்தில்
மீடியா துறை இல்லாததால் இந்த தகவலை உடனடியாக சமூதாயத்தின் மேலான
கவனத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் போனது.இது பெரும் வரப்ரசாதமாக
பாவிகளுக்கு அமைந்தது.
“உரிமை” பேசும் பகல் கொள்ளையர் :
"இவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை கோட்பாடுகளில் கருத்து
வேறுபாடு கொண்டு நீங்கிச் சென்றிருந்தால் இவர்கள் ஒரு இயக்கம் ஆரம்பிக்க
தார்மீக உரிமை உண்டு" என்று பகல் கொள்ளையர் கூறுகிறார்." நீதி
வழங்கிடலாம் நீதிதான் என்று எல்லோருக்கும் தெரியனும்,"என்ற இஸ்லாத்தின்
நெறியை குழி தோண்டி புதைக்க நினைத்த கும்பலிடமிருந்து உலகுக்கு
பறைசாற்றுமுகமாக தலைவரின் போர்வையில் ஒளிந்து இருந்த கொள்ளையரையே தூக்கி
எறிந்துவிட்டு வந்தது,கொள்கைபிடிப்பில்லையா?தனி அமைப்பை காணக்கூடாது
என்று சொல்லும் உரிமை இந்த கொள்ளையர்க்கு அறவே கிடையாது.முதலில்"மார்க்க
அறிஞனர்"என்ற சொல்லுக்கு தாம் தகுதி படைத்தவரா?என்பதை அசைபோட்டு
பார்க்கட்டும்.ஒவொன்றாக அசை போட்டு பார்த்து விட்டு அதில் வெற்றி பெற்று
வரட்டும். இல்லை என்றால் தம்மிடம் இல்லாத ஒரு செயலை கண்டிக்கும் இந்த இறை
வசனத்தை ஏற்று அடங்கட்டும்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? 61:2
நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக
இருக்கிறது 61:3
தவ்ஹீதின் போர்வையில் தவறுகள் :
தவ்ஹீதின் பெயரில் தவறுகள் பல செய்து விட்டு தவ்ஹீதின் பெயருக்கே
களங்கத்தை கற்ப்பித்த இந்த கயவர்தான் துளியளவும் அந்த அற்புதமான
பெயருக்கும் சொல்லுக்கும் சிறிதளவும்,தொடர்பற்றவர்.இதைஅந்த கயவர்
கூட்டத்தில் மனசாட்சி உள்ள யாராக இருந்தாலும் மறுக்க முடியாது.இன்றைக்கு
தான்,மட்டுமே அந்த பெயருக்கு தார்மீக சொந்தக்காரர் என்று மதி இழந்து
பெட்டை கோழியாக கொக்கரிப்பது வேதனையாகத்தான் உள்ளது.தனது கொக்கரிப்பை
வலுப்படுத்த த மு மு க-வை துனைக்கிழுப்பது.கொடுமையிலும் கொடுமையடா.
“தவ்ஹீத் பிரச்சாரம் எங்களுக்கு முட்டுக்கட்டை என்று அன்றைய தமுமுக
நிர்வாகிகள் சொன்னார்கள். எழுதியும் தந்தார்கள்.எனவே கொள்கை அடிப்படையில்
அவர்கள் பிரிந்ததால் ஒரு இயக்கம் ஆராம்பிக்கும் அவசியமும் உரிமையும்
அவர்களுக்கு இருந்தது”. என்கிறார் அயோக்கியர்.
இந்த ஆன்மீக அரக்கனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போரில் த மு மு க
சுருண்டதால் தான் இன்று அந்த அமைப்பை ஆதரித்து பேசுகிறார்.மாறாக நாம் த
மு மு வை போல் அல்லாமல் இந்த அயோக்கியரின் அனைத்து அவதூறுகளுக்கும்
மார்க்க முரணான செயல்பாடுகளுக்கும்.அடிமேல் அடி கொடுத்து ஆப்பு வைத்து
இறுக்கியதால் தான் நம்மை தாக்க நேரான பாதையை விட்டு விட்டு குறுக்கு
பாதைக்கு ஓடினார்.
பதவி மோகம் யாருக்கு ?
"ஆனால் இவர்கள் தங்களுக்கு ஒரு பதவி இருந்தால் தான் பணம் வசூலிக்க
முடியும்; இந்த சமுதாயத்தில் நிறைய அப்பாவி செல்வந்தர்கள் உள்ளனர்.
அவர்களிடம் வசூலிப்பதற்காக மட்டுமே இவர்கள் இயக்கம் கண்டனர்." என்று
தான், இயக்கம் கண்ட நோக்கத்தை நம்முடன் தொடர்பு படுத்தி நினைவு
கூறுகிறார் இந்த அயோக்கியர்.இதற்க்கு விளக்கமே தேவையில்லை. நமது
நடவடிக்கைகளையும் இந்த அயோக்கியரின் நடவடிக்கைகளையும் அசைபோட்டு
பார்க்கும் நடு நிலை உள்ளங்களுக்கே எளிதில் புரிந்து விடும்.பதவி
பைத்தியம் ,பதவி பித்து,யாரை ஆட்டி படைக்கிறது என்பதை .
பதவி பித்தில் புதைந்த இவரை பல சந்தர்ப்பங்களில் நாம் தோலுரித்து
தொங்கவிட்டிருக்கிறோம்.ஆனாலும் நமது அமைப்பின் பெயரை அத்து மீறி
அபகரித்து,தனது உறவினர்களுக்கு பதவி பட்வாடா செய்து அதன் பின்னணியில்
இயக்குனாராக இப்போ இருப்பதை ,இவரின் பதவி மோகத்திற்கு சிறந்த
எடுத்துக்காட்டாக கூறலாம். .
இவர்களின், சிந்தனை தூண்டும் பேச்சின் மூலமும் ,எழுத்தின் மூலமும்
நம்மிடம் மூளையை அடகு வைத்த செல்வந்தர்கள் எல்லாம் விழிப்படைந்து
விடுவார்கள் .இதனால் குடும்பக்கொல்லைக்கும் புரிகித எல்லைக்கும் புள்ளி
வைக்கப்பட்டு விடும் என்று அஞ்சியதால் தான் இந்த கேவலம்மான நிலையை
தேர்ந்தெடுத்துள்ளார் .இது ஒன்றும் இவருக்கு புதுசு இல்லை.நம்மை போன்ற
பாமரர்களுக்கு தான் புதுசு.இதுவென்ன இதை விட கேவலமான நிலைக்கும்
செல்வார்.மூளையற்ற அப்பாவி தொண்டர்களையும் இழுத்துச்செல்வார்.
சிந்திக்கும் சகோதரர்களை தவிர.
ஒரு அயோக்கியர் அயோக்கியத்தனத்தை குறித்து பேசுவதா?
"தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரைப் பயன்படுத்தினால் மக்கள் தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்தைத் தான் நினைப்பார்கள் என்று தெரிந்திருந்தும் அந்தப் பெயரில்
இந்தியாவைச் சேர்த்து மக்களை ஏமற்றுவதில் எங்களை மிஞ்ச முடியாது என்று
காட்டியது பச்சை அயோக்கியத் தனம்."என்று இந்த அயோக்கியர்
அயோக்கியத்தனத்தை குறித்து பேசுகிறார்.மக்கள் இந்திய தௌஹீத் ஜமாஅத்
எது?தறுதலை ஜமாஅத் எது? என்று வித்தியாசம் தெரியாமல் தான் இவ்வளவு
போராட்டங்களுக்கு கூடினார்களா?மக்கள் தெளிவாக இருக்கிறர்கள் அவர்களை
குழப்புவதற்கு மேற்கொள்ளப்படும் சதி தான் இது.தனது செல்வாக்கு சரிய
தொடங்கிவிட்டது.தனக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விட்டது. என்று உணர்ந்து
கொண்ட ஒரே காரணம் தவிர வேறு காரணம் இல்லை இந்த கயமைத்தனத்துக்கு.தெம்பு
இருந்தால்,திராணி இருந்தால்,மார்க்கரீதியாகவும்,கருத்து ரீதியாகவும்
எங்களை எதிர்கொள்ளட்டும்.இனி இந்த அயோக்கியருக்கு எதிராகவே நமது ஆயுதம்
நிறுத்தப்பட்டு இருக்கும். இன்ஷா அல்லாஹ். விரைவில் இறைவனின் உதவியை
எதிர்ப்பார்ப்பவர்களாக ... .
ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

0 comments:

Post a Comment