Tuesday, November 16, 2010

இதஜவுக்கு எதிராக கலகம் செய்த பிஜெ கும்பலுக்கு நீதிமன்றம் தடை விதித்தது!

பி.ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்

அல்ஹம்துலில்லாஹ்..!! அல்ஹம்துலில்லாஹ்..!!

அல்லாஹு அக்பர்!!
ஏக இறைவனின் நம்பிக்கையும், பாதுகாப்பையும் பெற்றுள்ள நமக்கு, இந்த கண்ணியம் மிகுந்த நன்னாளில் அல்லாஹ் மிகுந்த வெற்றியினை தந்து உள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த 2 வருடமாக அல்லாஹ்வின் அருளை மட்டுமே நம்பி களம் இறங்கி, மாபெரும்அவதூறுகளை எல்லாம் தகர்த்து எறிந்து தமிழக முஸ்லிம்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை கள்ளத்தனமாக அபரிக்க முயன்ற அநியாயக்காரன் பிஜெயின் அடவடித்தனத்திற்கு சென்னை 1வது சிவி்ல் நீதிமன்றம் முற்றுப் புள்ளி வைத்து விட்டது.
நீதிபதி ஆனந்தி அவர்கள் வழங்கிய தீர்ப்பில், ஜெய்னுல் ஆபிதீனோ, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் புதியதாக சோஷியல் ஆக்ட்டில் 2010இல் பதியப்பட்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சங்கம் ஆகிய மூவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு ட்ரஸ்ட் ஆக்ட்டில் பதியப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் (பதிவு எண் : 45/2009) எந்த செயல்பாட்டிலும் தலையிடக்கூடாது என தடை விதித்துள்ளது.
சதிக்காரர்களுக்கு எல்லாம் சதி செய்யும் வல்ல இறைவன் சதிக்காரன் பிஜெயின் சதிக்கு முற்றுப்புள்ளி வைத்தான். அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த நான்கைந்து தினங்களாக கடுமையான வேதனையில் சிக்கி தவித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சொந்தகளின் உள்ளங்களில் அல்லாஹ் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளான். எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே நன்றியினை உரித்தாகுகின்றோம்.
இந்த ஈனனில் செயலை வன்மையாக கண்டித்தும், மன ஆறுதலையும் நல்கிய நல்ல உள்ளங்கள் அத்தனைப் பேர்களுக்கும் காருண்யமிக்க ஏக இறைவன் இந்த தியாக திருநாளில் நல்லருள் புரியட்டும் என துஆச் செய்கின்றோம்.
வஸ்ஸலாம்.
என்றும் சமுதாயப் பணியில் விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு களம் காணும் உங்களின்.......

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.
சென்னை - 1.

0 comments:

Post a Comment