Friday, November 19, 2010

பிறை பார்த்த தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்போம்; அண்ணன் அன்று!


பிறை பார்த்த தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்போம்; அண்ணன் அன்று!

இந்தியாவில் எங்கே பிறை பார்த்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் நிலைபாடு என்று பொய்ய டீஜே கும்பல் அறிவித்துள்ளது.இதற்கு முன்னர் இந்த நிலையில் அவர்கள் இருக்கவில்லை. என்று கூறியுள்ளார் நொடிக்கொரு பல்டி அடிக்கும் பீஜே.


இவர் பிறை விஷயத்தில் இதற்கு முன் இருந்த அதே நிலையில்தான் இன்றும் இருக்கிறாரா? என்பதை உலகறியும். தகவல் பிறை, தத்தமது பகுதிப்பிறை, மாவட்டப் பிறை, மண்டலப் பிறை, மாநிலப்பிறை என இவர் அடித்த பல்டிகள்,எடுத்த அவதாரங்கள் ஏராளம். பிறை மட்டுமல்ல. மார்க்கத்தின் ஏனைய எத்துணையோ மசாயில்களில் இவரது பரிமாணங்களை பட்டியலிட்டால் பத்துநாள் லீவு எடுத்து படிக்கவேண்டும். அப்படிப்பட்டவர் இந்திய அளவில் எங்கு பிறை பாரத்தாலும் ஏற்பது என்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையை குறை கூறுவது, அவர் அடிக்கடி கூறும் பழமொழியான 'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை' என்பதற்கு அவரே சாலப் பொருத்தமானவர்.
[நன்றி; அப்துல்முஹைமின்]

இதை இங்கே பதிவு செய்ததன் காரணம் பீஜே, அன்று இருந்த நிலையில் இன்று இல்லை என்று காட்டவே. இப்படிப்பட்டவர் மற்றவர்கள் நிலையை தடுமாற்றம் என கூறுவது வேடிக்கைதான்.

0 comments:

Post a Comment