Saturday, November 13, 2010

யூத பார்ப்பன பாணியில் இ.த.ஜ.வை அபகரிக்க நினைக்கும் பெரும் பொய்யன் பி.ஜே குடும்பத்தார்.

ஒரு முஸ்லிமின் பொருளும் மானமும், மற்ற முஸ்லிமுக்கு ஹராம்! ஒரு முஸ்லிம் விலை பேசும் பொருளையோ, ஒரு முஸ்லிம் மணம் பேசும் பெண்ணையோ குறுக்கிட்டு நீங்கள் பேசி முடிக்க வேண்டாம்! என்ற நபி மொழிகளை மறந்து, மற்றவர்களின் பொருட்களை தவறான முறையில் அபகரிக்க வேண்டாம் ! போன்ற இறை வசனங்களை எல்லாம் மறந்து, ஒரு கடை நிலை காபிர் செய்வதை விட கேவலமான தன்னுடைய செயலின் மூலம் , இந்திய தவ்ஹீத் ஜமாத்தை அபகரிக்க நினைக்கும் பி.ஜே வின் இழிசெயலைக் கண்டு இஸ்லாமிய சமுதாயமே அதிர்ச்சி அடைந்துள்ளது!

ஒரு அமைப்பின் தலைவர் ,அதுவும் மார்க்கத்தை சொல்லுகின்ற அறிஞர் ! அதிலும் தங்களை தவிர பரிசுத்தவான்கள் யாரும் இல்லை! நாங்கள் தான் குரான்ஹதிஸை அப்படியே பின்பற்றும தவ்ஹீத் அமைப்பினர் என்று , ஏகத்துவத்திற்கு ஏக போக உரிமை கொண்டாடுவோர் செய்யக்கூடிய செயலா? அதுவும் த.த.ஜ. வில் உள்ள யாரையும் நம்பாமல் தன் குடும்ப உறுப்பினர்களைக்கொண்டு ,கடந்த மூன்றாண்டுகளாக இந்த பெயரில் செயல் படுவதாக பொய்யான மினிட் தயாரித்து இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு தன் மகனை தலைவராக்கும் ஈனச் செயலை என்னவென்பது! இவரின் இந்த செயல் மூலம் இவரின் மார்க்க நிலைப்பாடுகளையும் மக்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்! ஏன் எனில் ஒரு பிராணியை புல்லை காட்டி ஏமாற்றி பால் கறந்தவர் சொன்ன ஹதிஸை ஏற்றுக்கொள்ள மறுத்த புஹாரி இமாம் வரலாற்றில் நமக்கு படிப்பினை இருக்கிறது!

இரண்டு வருட காலம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு நிறுவப்பட்டு பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகள் பாக்கர் தலைமையில் நடைபெற்று வருவது உலகம் அறிந்த நிலையில் , பல்வேறு போராட்டம் ,மற்றும கோரிக்கைகளுக்காக எழுத்து பூர்வமாகவும் , அதிகாரிகள் ,அமைச்சர்கள் சந்திப்பு வாயிலான சந்திப்புகள் அரசு பதிவுகளில் இருக்கும் நிலையில் இ.த.ஜ எங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடும் பி.ஜே. விற்கும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த மண்ணின் மைந்தர்களான பாலஸ்தின் முஸ்லிம்களை தங்களின் கிரிமினல் மூளையால் திட்டம் தீட்டி வெளியேற்றி எங்களின் புண்ணிய பூமி என அபகரித்த யூதர்களுக்கும், பல்லாண்டு காலம் தொழுகை நடந்த பாபர் மசூதியில் தான் எங்கள் இதிகாச ராமன் பிறந்தான் என்று, சட்ட விரோத சிலைகளை நிறுவி , மசூதியை இடித்து நீதி மன்றத்தையே தங்களின் ஜாதி மன்றமாக்கி அபகரித்த பாப்பன பாசிஸ்டுகளுக்கும்,என்ன வித்தியாசம்?

உங்களாலேயே 'இந்த இயக்கம் உருவானதில் என்னுடைய பங்கு அஞ்சு சதவீதம் என்றால் தொன்னோற்றி அஞ்சு பாகருடைய உழைப்பு! இந்த சொத்து, பத்து, பள்ளிவாசல், மர்கஸ் எல்லாம் அவருடைய உழைப்பு! எனக்கு பேச மட்டும் தான் தெரியும் கட்டமைக்க தெரியாது' என உங்கள் வாயாலேயே சொன்ன பதிவு படக்காட்சியாக இருந்தும்,சில த,த.ஜ டிரச்ட்டுகளில் அவர் உறுப்பினராக இருந்தும், அவரது உறவினர்களிடம் பள்ளி பத்திரம் இருந்தும்,உங்களால் பழி சுமத்தப்பட்டு , வெளியேற்றப்பட்டு, தனி இயக்கம் கண்டு நின்றாரே தவிர, உங்களைப்போல் த.த.ஜ.விற்கு உரிமை கொண்டாடவில்லை!

உலக வழக்கில் உரிமை கொண்டாடுவது என்றால் , பிரிந்து சென்றவர்கள், அல்லது வெளியேற்ற பட்டவர்கள் தான் உரிமை கொண்டாடி கேள்விப்பட்டுள்ளோம்! ஆனால் பிரிந்து சென்ற இயக்கத்தை , தாய்ச்ச்சபை உரிமை கொண்டாடுவதை இப்போதுதான் நாம் பார்க்கிறோம்! உரிமையிருந்தும், வாய்ப்பிருந்தும் கொள்கை சகோதரர்களிடம் குழப்பம் ஏற்பட்டு பகை ஏற்பட்டு விடக்கூடாது! என்பதில் இன்றளவும் உறுதியாக இ.த.ஜ.
தங்கள் உரிமையை விட்டுக்கொடுத்து வெளியில் நிற்பதை நாம் எடுத்து காட்ட முடியும்!

பி.ஜே.வின் இந்த செயலை த.த.ஜ.வின் கொள்கை சகோதரர்கள் ஏற்கின்றார்களா ? ஏற்கின்றனர் என்றால் இதைப்போல் த.த.ஜ.வுக்கு நாங்கள் உரிமை கொண்டாடலாமா? இது மாநில நிர்வாக குழுவில் எடுத்த முடிவா? நிர்வாக குழு முடிவென்றால் இதை பி.ஜே. குடும்பத்தாரிடம் பதிவு செய்ய கூறியதன் மர்மமென்ன? பி.ஜே. குடும்பத்தாருக்கு த.த.ஜ.வில் என்ன பங்கு? பி.ஜே.வின் மகனாக த.த.ஜ.விற்கு வாரிசாக பி.ஜே.முஹமது தலைவராக வரலாம்! பாக்கரின் இ.த.ஜ.வுக்கு உரிமை கொண்டாட முஹமது யார் ?

இ.த.ஜ.வின் பெயரை சொல்லக்கூட மறுத்து பொய்யன் .டி.ஜே என்று கூறியவர்கள் வாயாலேயே இன்று அவர்களின் நிகழ்ச்சியில் விளம்பரம் செய்து,இ.த.ஜ. ஆதரவுடன் போராட்டம்! என்று போஸ்டர் போடும் நிலை ஏன்?
இ.த.ஜ.இருப்பவர்களை கேவலப்படுத்திய உங்களின் வாயாலே இ.த.ஜ.பெயரில் அழைக்கும் நிலை ஏன்?

பொறாமையை விட்டு நிதானத்தோடு சிந்தியுங்கள்! கொள்கை ரீதியாக குறை சொல்லுங்கள்! கருத்து ரீதியாக எதிர்த்து நில்லுங்கள்! குழப்பம் கொலையை விடக்கொடியது! குழப்பம் செய்வோரை அலலாஹ் நேசிப்பதில்லை! குழப்பம் செய்தோரின் முடிவு என்னவானது? என்ற குரான் வசனங்கள் மூலம் படிப்பினை பெறுங்கள்!

0 comments:

Post a Comment