Monday, November 8, 2010

நபி வழியில் கூட்டுக் குர்பானி! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது..


.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


இறைவனால் தனது நண்பர் என தேர்வு செய்யப்பட்ட தியாக செம்மல் மாநபி இபுராஹீம் (அலை) அவர்களையும் அவர்களது மகன் அருமை நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாள் அன்று நம்மின் கண்ணியமிக்க இறுதித் தூதர் முஹம்ம்து (ஸல்) அவர்கள் செய்து காட்டிய குர்பான் எனும் பலிகளை வழங்குவது நம் கடமையாகும்.

எவர் ஒருவர் சக்தி பெற்றிருந்தும் குர்பான் கொடுக்கவில்லையோ அவர் (தொழுகைக்காக) ஈத்காவை நெருங்க வேண்டாம் என அல்லாஹூடைய தூதர் எச்சரித்துள்ளார்கள்.
அதன்படி ஆடு ஒரு குடும்பத்திற்கும் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டையும், 7 பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையும் குர்பானாக கொடுக்க வேண்டும்.

ஆகவே, இந்த நற்செயலை கூட்டாக பெற்று ஏழைகளுக்கு அதன் இறைச்சிகளை வழங்கி ஏழைகள் அன்றைய தினம் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாடிட வழி வகுக்கும் நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது குர்பான்களையும், அதன் தோல்களையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஆடு ஒன்றுக்கு ரூ. 4,500/-
மாடு ஒரு பங்கு ரூ. 1,100/-
ஒட்டகம் ஒரு பங்கு ரூ. 3,900/-.

தொடர்புக்கு 9600191610, 9940204604, 9841884860
வஸ்ஸலாம்.


இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
3, அஞ்சலக வீதி (போஸ்ட் ஆபீஸ் தெரு)
மண்ணடி. சென்னை - 600 001.

மாவட்டம் மற்றும் ஊர் கிளைகளுக்கு வழங்க உள்ளுர் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

0 comments:

Post a Comment