Thursday, November 18, 2010

சங்கர மடமும் அண்ணனின் குணமும் !

புகழ் உனக்கு அணிவிக்கப்பட்ட மலர் மாலை... கண்ணியம் உனக்கு கிடைக்கபெறும் பொக்கிஷம், புகழுக்கு மயங்காமல் கண்ணியத்திற்கு இடமளித்து வாழ்ந்து வா என்பது வரலாற்றில் சிறந்தோரின் தத்துவம், ஏகத்துவம் பேசி பெற்ற புகழை பிறரை அழிக்க நினைத்த காரணத்தாலோ என்னவோ தன் வாழ்நாளிலே சிகரம் நோக்கி பயணித்த அண்ணன் அவர்கள் அடித்தளம் நோக்கி சென்று கொண்டிருப்பதை கன்கூடாக காணலாம். நாம் மேலே குறிப்பிட்டிருக்கும் தலைப்பு சற்று விகாரமாக தெரியலாம் நன்றாக வரலாற்றை (அண்ணனின் வரலாற்றை) அறிந்தவர்கள் இதனை விளங்கி கொள்வார்கள்.

சங்கர மடம் தமிழகத்தில் உள்ள அனைவராலும் அறியப்பட்ட ஒன்று அதற்கு தலைமை பொறுப்பேற்று இருக்கு சாமியார் என்னதான் தவறு செய்தாலும் அதை நிர்வாகம் கேட்க தயங்கும் இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால், சாமியார் கொலை செய்ததை தெரிந்தும் அதிலும் அவர்கள் சமூகத்தை சார்ந்த நபரை கொலை செய்திருந்தும் மட நிர்வாகம் அவரை விட்டு விட்டு கண்டும் காணாமல் இருப்பது போன்று தான் தற்போதைய த த ஜ வின் நிலையும் கூட, ரசூல் (ஸல்) அவர்களின் இறுதி பேருரையை பேச சொன்னால் மணிக்கணக்கில் பேசும் அண்ணன் அதில் முக்கிய சாராம்சமான பிறர் கண்ணியம் பேணுதலை மருந்திற்கு கூட கடைபிடிப்பதில்லை.

சரி தலைப்பிற்கு வருவோம் சங்கர மட தலைவர் எப்படி தனக்கென்று தனி மரியாதை எதிர்நோக்கி செயல்படுவாரோ அதே நிலை இங்கே அண்ணனும் கடைப்பிடித்து வருகிறார், அவராவது ஏகத்துவம் தெரியாதவர் இவரோ ஏகத்துவத்தின் ஒட்டு மொத்த உரிமையாளர் போன்று செயல்பட்டு கொண்டிருக்கிறார், அல்லாஹ் பாது காக்க வேண்டும் இவர் செல்லும் நிலையை பார்த்தல் இன்னொரு வாப்பா நாயகம் தோன்றி விட்டாரோ என்று என்ன தோன்றுகிறது.

அபகரிப்பையும் செய்து விட்டு அதற்கு அவர் கட்டும் சப்பை கட்டை பார்த்து சலித்து கொண்டு சில த த ஜ தொண்டர்கள் முணுமுணுப்பும் நமக்கு கேட்கத்தான் செய்கிறது என்ன செய்வது சொல்லும் செயலும் ஒன்றானால் தானே கண்ணியன் தன்னை நாடி வரும். இன்ஷா அல்லாஹ் இன்னும் கேவலப்படும் நிலையை அல்லாஹ் உருவாக்குவான். கேவலம் உலக வாழ்க்கை மோகத்தால் மார்க்கம் தெரிந்த எவனும் செய்ய துணியாத திருட்டுத்தனத்தை செய்து விட்டு குருடன் பாம்பு புற்றுக்குள் கை விட்ட கதையாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மாறி மாறி தன்னை இனங்காட்டி வருகிறார். எந்த கேள்வியையும் என்னிடம் கேளுங்கள் பதில் தருவேன் என்று சொன்ன அண்ணனின் அற்புத பதில்களை கேட்கும் அனைவருக்கும் வியப்பாக இருக்கிறது சிலவற்றை மக்கள் பார்வைக்காக இங்கே தருகிறோம்....

1. இயக்க பிறவினைக்கு பிறகு முதன் முதலில் ஐஸ் ஹௌசில் கேளுங்கம்மா பதில் சொல்லுறேன் என்று அமர்ந்த அண்ணன், பலர் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது உங்களால் முடிந்ததை பாருங்கள் என்று பாய்ந்து ஓடிய அண்ணனின் செயலை பார்த்த பலர் கூடி உருவாக்கிய தென் சென்னை கிளை இன்றைக்கு அண்ணனின் இ த ஜ அபகரிப்பு முயற்சிக்கு பிரதான காரணம்.

2. இ த ஜ மற்றும் செங்கிஸ் கான் வெப்சைட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவர்களின் குடும்பத்தாரை கொச்சை படுத்தி ஏகத்துவத்தை நிலை நாட்டியதின் நிலை பாடு மீண்டும் அண்ணனை படுகுழியில் தள்ளியது.

3. இரண்டு பேர் கொண்ட இயக்கம் என்று சொன்ன அண்ணன் பிறகு பத்து பேர் கொண்ட இயக்கம் என்று சொன்ன அண்ணனின் தகிடுதத்தம் மக்களிடம் எடுபடாமல் எப்படியாவது இவர்களை நிறுத்தவேண்டும் என்று களவாட நினைத்த முயற்சிக்கு மக்களிடம் (நல்லுள்ளம் கண்ட த த ஜ வினர் உட்பட) கிடைத்த அடிக்கு மருந்து தேடி கொண்டிருக்கிறார். பாவம் இத்தனை கேவலமா !

4. சரி மேற் சொல்லப்பட்ட விஷயமாவது இயக்க சம்பத்தப்பட்டது மார்க்க சம்பந்தமான ஹஜ்ஜு பெருநாள் கேள்வியில் துவண்டு போய் மீண்டும் கோபத்தின் உச்சிகி சென்று விட்டார் அண்ணன். போகிற போக்கில் பார்த்தால் இ த ஜ வினருக்கு எதிராக மீண்டும் துப்பாக்கி தூக்கும் நிலைக்கு தள்ளபட்டுவிடுவாரோ என்று மக்கள் அஞ்சும் நிலை வந்து விட்டது. பொறுத்திருந்து பார்போம்.

வஸ்ஸலாம்
இறையடியான்

0 comments:

Post a Comment