Saturday, November 20, 2010

தாவாவை தடுக்கும் தரங்கெட்டவர்கள் !

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திரு நகரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாளை ஞாயிற்று கிழமை தெருமுனை கூட்டம் ஒன்றுக்கு கிளை நிர்வாகம் ஏற்பாடு செய்து ,அதற்காக நம் சகோதரர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது , அதிலே பேச இருந்த தாயிக்கு மிரட்டல் விடுத்து, ''இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எங்கள் அமைப்பு! நாளை நீ அந்த கூட்டத்தில் பேசினால் உள்ளே போக வேண்டியிருக்கும்' என தாவாவுக்கு தடை ஏற்படுத்தியுள்ளனர்.

அது மட்டுமின்றி இந்த கேடுகெட்டவர்கள் நோட்டீஸ் அடித்து 'நாளை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எந்த நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்படவில்லை' என வீடு வீடாக கொடுத்து, அல்லாஹ்வின் அடிமைகள் என்பதை மறந்து , நாளை மாவட்டத்திற்கு வரும் அண்ணனின் விசுவாசம் மிக்கவர்கள் நாங்கள் என காட்டுவதற்கு அழைப்பு பணியை தடுக்கும் அளவுக்கு கீழ் இறங்கியுள்ளார்கள்.

ஒரு நிகழ்ச்சிக்கு மக்கள் வருவதற்காக நோட்டீஸ் அடித்து வீடு வீடாக செல்வதை பார்த்துள்ளோம்! நிகழ்ச்சி இல்லை என்று சொல்ல நோட்டீஸ் போட்டு வீடுவீடாக செல்வதை கேள்விப்பட்டுள்ளோமா?

தாவாவை தடுத்ததோடு மட்டுமின்றி ஆழ்வார் கிளை நிர்வாகி காதரை , பேசவிருந்த மில்லத் பிர்தவ்சியையும் நீங்கள் கூட்டத்தில் பேசினால் , எங்கள் பள்ளிக்கு தொழவரக்கூடாது என்றும் கூறியுள்ளார்கள். ' அல்லாஹ்வின் பள்ளியில் தொழ வருபவனை தடுப்பவன் யார்' என்ற வசனத்தை , சுன்னத் ஜமாஅதினருக்கு எதிராக முழங்கிய அண்ணன் ஜமாத்தின் அவல நிலை பார்த்தீர்களா ? அவசரத்திற்காக மக்ரிப் நேரத்தில், சென்னை தலைமையகத்தில் தொழச் சென்ற நம் மீது காவல் நிலையத்தில் இவர்கள் வருவது எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என புகார் கொடுத்த தலைமைக்கு கீழ் உள்ள தக்லீத்கள் வேறென்ன செய்வார்கள் பாவம் !
தக்லீது தலைகேறி , இயக்க வெறி எந்த அளவுக்கு இவர்களை கொண்டு வந்து விட்டுள்ளது என்பதை பார்த்தீர்களா? அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்ட பிரார்த்திப்போம்!

0 comments:

Post a Comment