Friday, November 12, 2010

அடுத்தவன் சொத்தை தன் பெயரில் பதிவு செய்த பி.ஜே.குடும்பத்தார்!

அல்ஹம்துலில்லாஹ்! எல்லா புகழும் ஏகன் ஒருவனுக்கே!

கடந்த வருடம் ஜனவரி 16, 2009இல் துவக்கப்பட்ட நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், பிஜெயின் பொய் பித்தலாட்டப் பிரச்சாரங்களை கடந்து, தனது வீரியமான பணிகளால் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்பட தமிழகமெங்கும் நல்லதொரு வளர்ச்சியினை கண்டு வருகிறது.

முஸ்லிம்கள் நிறைந்து நிற்கும் மேலப்பாளையம், கடையநல்லூர், கீழக்கரை, காயல்பட்டிணம், அதிராம்பட்டிணம், தென்காசி, முத்துப்பேட்டை, மதுக்கூர், நாச்சியார் கோவில் உட்பட 500க்கும் மேற்பட்ட கிளைளையும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் செம்மையான சேவைகளால் கால் பதித்துள்ள நம் அமைப்பு. இன்ஷா அல்லாஹ் விரைவில் ஸவுதியிலும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் தனது கிளைகளை அமைக்க இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்

ஏகனின் இறுதி வேதத்தை தமிழகமெங்கும் ஹிந்து, கிருஸ்துவ மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பணியினை மிகச் செம்மையுடன் செய்து வரும் நம் அமைப்பின் உன்னத பணியால் நூற்றுக்கணக்கான மாற்று மத மக்கள் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்று வருகின்றனர்.

அதுமட்டும் அல்லாது நோயால் அவதியுறும் மக்களை கண்டு அவர்களுக்கு ஆறுதல் மொழிகள் வழங்குவதுடன் அல்லாஹுடைய இந்த மார்க்கத்தையும் அவர்களுக்கு எத்தி வைக்கும் பணியினையும் நம் தாஃவா குழு மிகச்சிறப்பாக செய்து வருகிறது.

கல்வி உதவிகள், மருத்துவ உதவிகள், மருத்துவ முகாம்கள், கல்விக் கருத்தரங்கள், பெண்கள் விழிப்புணர்வு பயான்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், சமுதாய நலன் நாடி ஆர்ப்பாடடங்கள், போராட்டங்கள் என இந்த 21 மாத கால அளவில் சமுதாயத்தின் அங்கமாக மாறிப் போன நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சியினை கண்டு பொறாமை கொண்ட பிஜெ, ஈனத்தனமான இழிச் செயலைச் செய்துள்ளார்.

ஆம், தனது 3 மகன்கள், தனது தம்பி, 3 மைத்துனன்கள், தன் சகளை மற்றும் சகளை மகன் உள்ளிட்ட 8 பேர்களை நிர்வாகிகள் என காட்டி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் ஒரு அமைப்பை பதிவு செய்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இது கடைந்தெடு்த்த கயமைத்தனமாகும்.

போட்டிப் போடாதீர்கள், பொறாமை கொள்ளாதீர்கள், விலையேற்றம் செய்யாதீர்கள், ஒருவர் ஒரு பொருளை கேட்டு வாங்கினால் நீங்கள் கேட்டு வாங்காதீர்கள் என மேடைக்கு மேடை ஹதீஸை சொன்ன இவர், பொறாமையால் கண் சிவந்து போய் உள்ளார்.

மிகச் சிறந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தனது சொந்த குடும்ப அமைப்பாக மாற்றிவிட்ட பிஜெயின் பொய் முகத்தினையும், பித்தலாட்ஙகளையும் தகுந்த ஆதாரங்களுடன் தோலுரித்து காட்டும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலால் பதறிப் போய், நம் அமைப்பின் பெயரில் கள்ளதனமாக ரிஜிஸ்டர் செய்து கொண்டு பிஜெ தனது சதி வேலையை அரங்கேற்றியுள்ளார்.

நம் பெயரில் வெப்சைட்களையும், இமெயில்களையும், SMS-களையும் அனுப்பி இந்த ஈனத்தின் கூட்டம் ஃபித்னாக்களை செய்து வந்ததை செய்து வந்ததை மக்கள் காறி துப்புகின்றனர். தற்பொழுது அரங்கேற்றியுள்ள செயலால் இன்னும் மக்கள் காறி உமிழ்கிறார்கள்.

ஏற்கனவே, ஸவுதியில் உள்ள அப்பாவி சகோதரர்களுக்கு தான் எதிரியாக கருதும் அமைப்புகளுக்கு, ஆட்களுக்கு கள்ள பெயரில் இமெயில் அனுப்பலாம் என பத்வா கொடுத்துள்ள இந்த பொய்யன் பிஜெ, தன்னால் உடைக்கப்பட்ட பல அமைப்புகளின் பெயர்களில் இவர் ரிஜிஸ்டரேஷன் செய்து வைத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கண்ணியமிகு ஸஹாபா அபுல் ஆஸ் (ரழி) அவர்களை கிரிமினல் என கேவலமாக விமர்சித்த இந்த ஈனனை, அல்லாஹ் இந்த செயலில் மூலம் கிரிமினல் என மக்கள் அடையாளப்படுத்தி விட்டான். அல்ஹம்துலில்லாஹ்.

கேடு வரும் பின்னே மதி கெட்டு விடும் முன்னே என அடிக்கடி சொல்லும் இவரின் ஆணவத்தால் அல்லாஹ் மதியை கெடுத்துக் கொண்டு இருக்கிறான். ஆகவேதான், தன் நிலை மறந்து ஈனச் செயலில் இவர் இறங்கி வருகிறார். தன் செயலை நினைத்து வருந்தி தவ்பா செய்வில்லை என்றால் இன்னும் இழிவுப்பட்டு போவார். அல்லாஹ் இழிவுப்படுத்துவான்.

நம் அமைப்பின் பெயரால் ஒரு ரிஜிஸ்டரேஷனை செய்து விட்டால் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமான பணியினை நிறுத்தி விடலாம் என்ற எண்ணமா? ஒரு அமைப்பு ஒரு பெயரில்தான் இயங்குகிறதா? அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு என்ற பெயரில் இருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என மாற்றிக் கொள்ளவில்லையா? இந்திய அரசால் ததஜ மூடக்கப்பட்டு இருந்தால், வேறு ஒரு பெயரில் இயங்கி இருக்காதா?.....
பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்ட கதையாக, இந்த பொய்யன் பிஜெயும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்.

இவர்தான் அடிக்கடி சொல்வார், யார் நம்மை கட்டுப்படுத்த அதிக கஷ்டம் கொடுக்கிறார்களோ, அப்போதுதான் நம் அமைப்பு வளர்ந்து விட்டது என அர்த்தம். அப்போதுதான் நாம் அவருக்கு எதிராக முழு சக்தியுடன் போராட முடியும் என்று...

தான் சொன்ன வார்த்தையைகூட திரும்ப அசைப் போடத் தெரியாத அறிவிழி பிஜெ! ஆரம்ப காலத்தில் அடியும், உதையும் வாங்கி, வெட்டும் குத்தும் வாங்கித்தான் நம்மின் முழு உழைப்பில் ததஜ வளர்ந்தது. அதை நினைவில் நிறுத்த ஆத்திரத்தில் அறிவை இழந்து மறந்து விட்டீரே!

2009 ஜனவரி 16 அன்று துவங்கப்பட்ட நேரத்தில் இருந்த தைரியத்தைவிட, வீரியத்தைவிட பல மடங்கு காருண்யமிக்க ஏக இறைவன் எங்களுக்கு 21 மாத கால அளவில் அதிகம் அதிகம் தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

சதிக்காரனுக்கு எல்லாம் சதி செய்யும் வல்ல ரஹ்மான், நீதி என்றால் இதுதான் நீதி என தீர்ப்பு வழங்கும் அந்த நீதியரசன் நீதி எது என்பதை எங்களுக்கு மிக விரைவில் காண்பிப்பான்.
நாங்கள் பொறுமையாளர்களுடன் பொறுமை காக்கின்றோம். நன்மை அள்ளி வழங்கும் வல்ல ரஹ்மானின் உதவி ஒன்றே போதுமானது.
வஸ்ஸலாம்.

0 comments:

Post a Comment