Wednesday, November 17, 2010

இந்துத்துவாவின் வழியில் பீஜே...?

First Alphabet
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
இந்தியாவை பொருத்தமட்டில் மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னால் வரை, எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு நடந்தாலும் அதற்காக கைது செய்யப்படுவது முஸ்லிம்களாகவே இருந்தார்கள். செய்வதையும் செய்துவிட்டு அதை பாதிக்கப்பட்டவர்கள் மீதே பலி விழும் அளவுக்கு டெக்னிக்காக செய்பவர்கள் இந்துத்துவாக்கள்.

அந்த வழியில் பீஜேயும் அநியாயமாக பாக்கரின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை களவாட முயற்ச்சித்ததோடு, தனது மோசடியை மறைக்க பாதிக்கப்பட்ட பாக்கர் மீதே மோசடி பலியை திருப்பினார். அதாவது பாக்கர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என பெயர் வைத்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என மக்களை நம்பவைக்கவே என்று துணிந்து பொய் கூறுகிறார் பீஜே.

முதலாவது ஒரு அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும். தவ்ஹீத் என்ற பதம் பீஜே என்பவருக்கு மட்டும் சொந்தமானதல்ல. மேலும் ததஜ என்ற அமைப்பும் பீஜே என்பவரின் தனி உடமையுமல்ல. ததஜவை உருவாக்கியதில், வளர்த்ததில் பாக்கருக்கு பெரும்பங்கு உண்டு என்பது இந்த பீஜேயும் ஒப்புக்கொண்ட ஒன்றுதான். அப்படிப்பட்ட பாக்கர் பிரிந்தவுடன் தமிழக தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் வைத்தாலும் அதை கண்டிப்பதற்கு, தடுப்பதற்கு பீஜெயிக்கு எந்த உரிமையுமில்லை.

ஏனெனில், பாக்கராவது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்று மக்கள் வேறுபடுத்தி புரிந்துகொள்ளும் வகையில்தான் பெயர் வைத்தார். ஆனால் கடந்த கால தமிழக வரலாற்றை புரட்டினால் ஒரு கட்சியிலிருந்து, ஒரு இயக்கத்திலிருந்து பிரிந்தவர்கள் தனி அமைப்பு காணும்போது ஏற்கனவே தான் அங்கம் வகித்த அமைப்பின் சாயலிலேயே தொடங்கியதை காணலாம்.

அரசியல் கட்சிகளில்;
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணா, 'முன்னேற்ற' என்ற வார்த்தையை மட்டும் சேர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் கண்டார். அப்போது பெரியார், இந்த பொய்யர் பீஜே போல் திமுக பெயரை கள்ளத்தனமாக பதிவு செய்து திமுகவிற்கு உரிமை கொண்டாடவுமில்லை. என் கட்சி சாயலில் ஏன் பெயர் வைத்தாய் என்று அண்ணாவுடன் வம்பிழுக்கவுமில்லை. ஆக பெரியாரை விட மட்டமானவர் பீஜே.
திமுகவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர்., 'அண்ணா' என்ற வார்த்தையை மட்டும் சேர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டார். அப்போது கருணாநிதி, இந்த பொய்யர் பீஜே போல் அண்ணாதிமுக பெயரை கள்ளத்தனமாக பதிவு செய்து அண்ணாதிமுகவிற்கு உரிமை கொண்டாடவுமில்லை. என் கட்சி சாயலில் ஏன் பெயர் வைத்தாய் என்று எம்.ஜி.ஆருடன் வம்பிழுக்கவுமில்லை. ஆக கருணாநிதியை விட மட்டமானவர் பீஜே.
அதே திமுகவிலிருந்து வைகோ பிரிந்து 'மறுமலர்ச்சி' என்ற வார்த்தையை மட்டும் சேர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டார். அப்போது கருணாநிதி, இந்த பொய்யர் பீஜே போல் மதிமுக பெயரை கள்ளத்தனமாக பதிவு செய்து மதிமுகவிற்கு உரிமை கொண்டாடவுமில்லை. என் கட்சி சாயலில் ஏன் பெயர் வைத்தாய் என்று வைகோவை வம்பிழுக்கவுமில்லை. ஆக கருணாநிதியை விட மட்டமானவர் பீஜே.
[இவை சாம்பிளுக்கு மட்டுமே. இன்னும் ஏராளம் உண்டு]

சமுதாய அமைப்புகளில்;

தாய்ச்சபையாம் முஸ்லிம்லீக்கிளிருந்து பிரிந்தவர்கள் தேசிய லீக் கண்டனர். தமிழகத்தில் தேசிய லீக், இந்திய தேசிய லீக் என்று உண்டு. இதுபோக மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், தமிழ் மாநில முஸ்லிம் லீக், காயிதே மில்லத் பேரன் தலைமையில் உள்ள முஸ்லிம் லீக் இவ்வாறு லீக்குகள் பெயரில் ஏராளம் உண்டு. இப்பெயர்கள் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்தவைதான். ஆனால் இவர்கள் எவரும் பொய்யர் பீஜே போல் கள்ளத்தனமாக அடுத்த அமைப்பை பதிவு செய்யவுமில்லை. அடுத்த அமைப்பை வம்புக்கு இழுக்கவுமில்லை. ஆக இந்த அமைப்புகளின் தலைவர்களை விட மகா மட்டமானவர் பீஜே.

அடுத்து இந்த மோசடியாளர் பீஜே, தனது மோசடியை நியாயப்படுத்த சில வாதங்களை வைக்கிறார்.

பத்திரிகைகளில் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இவர்கள் விடும் அறிக்கைகள் தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை என்ற பெயரில் வருகிறது. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிக்கை என்ற எண்ணத்தில் தான் அதை பத்திரிகைகள் வெளியிடுகின்றனர். நம்முடைய கொள்கைக்கு மாற்றமான ஒன்று நம் பெயரில் வருவது குழப்பம் இல்லையா?என்கிறார்.

அதாவது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிக்கைகள் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் வெளியாகிறாதாம். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர் கள்ளத்தனமாக பதிவு செய்து பின்னர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் ஒரு அறிக்கை ஷேக்பரீத் என்பவர் பெயரில் வெளியிடுகிறார். அது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில்தான் வெளியாகியுள்ளது. எனவே இவர் தன்னை பின்பற்றுபவர்களை மட்டுமன்றி பத்திரிக்கையாளர்களையும் ததஜ-இதஜா வேறுபாடு தெரியாத முட்டாள்களாக கருதுகிறார்.
''சிலை திறப்பு விழாவில் தவ்ஹீத் ஜமாஅத் மானிலத் தலைவர் கலந்து கொண்டார் என்று செய்தி வரும் போது இதைக் கடுமையாக வெறுக்கும் நாம் அதைச் சுமக்கும் நிலையை ஏற்ப்டுத்துவது குழப்பம் இல்லையா? என்கிறார்.
இதன் மூலம் தன்னைத்தானே கடைந்தெடுத்த பொய்யர் என்று அடையாளம் காட்டுகிறார். பாக்கர், யாதவர் மாநாட்டில் கலந்து கொண்ட செய்தி பற்றி வெளியான பத்திரிக்கை செய்தி கீழே;

இந்த பத்திரிக்கை செய்தியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாக்கர் என்றுதான் உள்ளதே தவிர, பொய்யர் பீஜே புலம்புவது போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் என்று இல்லவே இல்லை. இதன் மூலம் ஒரு பொய்யை மறைக்க இவர் ஒன்பது பொய் சொல்கிறார் என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள்.

''மார்க்க அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் ஒன்றை சொந்தம் கொண்டாடுவது என்றால் அதற்கான முறையில் தான் சொந்தம் கொண்டாட வேண்டும். என்கிறார் இந்த பீஜே.

இவர் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு ஆதாரமாக உள்ள குர்ஆண் வசனங்களையும்- ஹதீசுகளையும் முதலில் வைக்கவேண்டும். பின்னர் பாக்கர் சொந்தம் கொண்டாடுவது குறித்த மார்க்க ஆதாரத்தை நாங்கள் வைக்கிறோம்.

''ஒரு சொத்து வாங்கினால் அதற்கான பணத்தைச் செலுத்தி பத்திரத்தில் எழுதி பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் யாரும் பயன் படுத்தாத இட்த்தில் குடிசை போடுவது தவறாகும்.என்கிறார் பீஜே.

இதன் மூலம் யாரும் பயன்படுத்தாத இடத்தில்தான் பாக்கர் குடிசை போட்டார் என்று ஒப்புகொண்டு, பாக்கர் எதையும் அபகரிக்கவில்லை. ஆனால் நான்தான் பாக்கர் போட்ட குடிசையின் நடுமனையில் அமர்ந்து கொண்டு சட்டம் பேசுகிறேன் என்று ஒப்புக்கொண்டுவிட்டார் பீஜே.

பொய்யரை நோக்கி நமது சாட்டை தொடர்ந்து சுழலும் இன்ஷா அல்லாஹ்.

--
11/16/2010 08:33:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடு

0 comments:

Post a Comment