Thursday, November 18, 2010

பல்லாவரத்தில் ஜண்டா அகற்றம் ! மதரசா துவக்கம்!





இஸ்லாத்தில் இருந்து கொண்டு அதன் மூலாதாரக் கொள்கையான தவ்ஹீதை மறந்து தர்காக்களுக்கும் , ஜன்டாக்களுக்கும் [கொடி மரம்] சென்று , அதன் அருகில் நின்று கொண்டு கை ஏந்தி பிரார்த்திக்கும் ஏதுமறியா மக்களிடம் எடுத்து சொல்லி , அவர்களுக்கு இணை வைப்பின் தீமையை எடுத்து சொல்லி ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பு விடுத்து வருகிறோம்! அப்படி ஒரு கொடி மரத்தை வைத்து மந்திர வேலை செய்து, மக்களிடம் பணம் பெற்று அதை பிழைப்பாக நடத்தி வந்த ஒருவருக்கு சில வருடத்திற்கு முன் தாவா செய்ததன் அடிப்படையில் ,அவர் அந்த கொடி மரத்தை இடித்து தகர்த்து விட்டு அந்த இடம் இன்று ஏகத்துவத்தை பறைசாற்றும் பள்ளிவாசலாக ஐவேளை தொழுகை நடை பெற்று வருகிறது!

சேப்பாகத்தின் லாக் நகரில் உள்ள அந்த சகோதரர் யூசுப் தற்போது இ.த.ஜ.வின் சேப்பாக்கம் கிளை செயலாளராக பணியாற்றி வருகிறார்.தான் நரக நெருப்பின் கரையில் வெளியேறி விட்டாலும் ,பல்லாவரத்தில் இருக்கும் என் சகோதரிகள் இந்த ஜண்டா எனும் இணை வைப்பில் இன்னும் இருந்து வருகின்றனர்.அவர்களுக்கும் நீங்கள் எடுத்து சொல்லி அதில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்! என அழைப்பு விடுக்க காஞ்சி மாவட்ட, மற்றும் பல்லாவர கிளை நிர்வாகிகள், தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில செயலர் ஜாகிர் ஆகியோரோடு நாம் அங்கு சென்று அவர்களுக்கு எடுத்து சொல்லி , மத பேதமின்றி [!?] அப்பகுதி மக்களால் ஊது பத்தி ஏற்றி வணங்க பட்டு வந்த அந்த கொடி மரத்தை சிறிது நேரத்தில் அகற்றிய நம் சகோதரர்கள் மற்றொரு சகோதரியின் வீட்டில் பச்சை நிற துணியில் தொங்கிக் கொண்டிருந்த தேங்காயையும் அகற்றினர் .

அகற்றி விட்டு 'இதனால் ஏதும் ஏற்பட்டு விடும்' என அறியாத மக்கள் உங்களிடம் வந்து குழப்புவார்கள்! நீங்கள் அவர்களிடம் சொல்லுங்கள் அல்லாஹ் விதித்ததை தவிர வேறொன்றும் அணுகாது' என்று கூறுங்கள் என சொன்ன போது இந்த பகுதி மக்கள் எல்லாம் இணை வைப்பில் மூழ்கி கிடக்கின்றனர் அவர்களை மீட்டெடுக்க இங்கு வாராந்திர பெண்கள் பயானுக்கு ஏற்பாடு செய்யுங்கள் அதற்க்கு எனது மாடியை பயன்படுதிக் கொல்லுங்கள்! என்றார் சத்தியம் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் அது தன் வேலையை உடனடியாக செய்ததை நம் கண்ணால் கண்ட போது உண்மையிலேயே உள்ளம் மகிழ்ந்தது!

0 comments:

Post a Comment