Sunday, November 28, 2010

டிசம்பர் -6- மாவட்ட தலை நகரங்களில் போராட்டம்! இ.த.ஜ.செயற்குழு முடிவு ! .


28112010137.jpg28112010(026).jpg28112010(009).jpg28112010(017).jpg28112010(024).jpg28112010(010).jpg
இறைவனின் திருப்பெயரால் !

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற் குழு கூட்டம் நேற்று சென்னை தலைமையகத்தில் நடை பெற்றது .அதில் டிசம்பர் ஆறு போராட்டத்தை பல முஸ்லிம் அமைப்புகள் கை விட்ட நிலையில், நாமும் கை விட்டால், பாபர் மஸ்ஜித் இடம் பற்றிய அலஹாபாத் தீர்ப்பை ஆமோதிப்பதாகவும், இடமே எங்களுக்கு சொந்தம் என்ற இடித்த இந்துத்துவ சக்திகளின் கூற்றை வலுப்படுத்தும் என்பதாலும் , இன்ஷா அல்லாஹ்
வரும டிசம்பர் ஆறு அன்று மக்களை திரட்டி மாவட்ட தலை நகரங்களில் கண்டனப்போராட்டம் மற்றும் ஆர்பாட்டங்களை மிக வீரியமாக நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது!

சுவரொட்டி வாசகங்கள் :

மறக்க மாட்டோம் டிசம்பர் -6
பாபர் பள்ளி இடித்த நாளை மறக்க மாட்டோம் !
ஏற்றி வைத்த போர் நெருப்பை
அணைக்க மாட்டோம்!

மறக்க மாட்டோம் டிசம்பர் -6
உரிமையை இழந்தோம் ,
உடமையை இழந்தோம்!
உணர்வை மட்டும்
இழக்க மாட்டோம்!

மறக்க மாட்டோம் டிசம்பர் -6
இறை இல்லம் இழந்தோம்
இடத்தையும் இழந்தோம் !
ஈமானை மட்டும்
இழக்க மாட்டோம் !

0 comments:

Post a Comment