Tuesday, December 27, 2011

சென்னை சேரி பகுதிகளில் இதஜவின் இஸ்லாமிய அழைப்புப் பணி!


சென்னை சேரி பகுதிகளில் இதஜவின் இஸ்லாமிய அழைப்புப் பணி!

இஸ்லாம் காட்டித்தந்த உன்னத பணியான தஃவா எனும் அழைப்புப் பணியை தனது தலையாய பணியாக செய்யும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்  அனைவரும் அழைப்புப் பணியினை பல வழிகளிலும் செய்து வருகின்றனர்.
மண்டபங்களிலும், மாபெரும் மாநாடு பொதுக் கூட்டங்களிலும் மட்டுமே மார்க்கத்தை சொல்லும் அழைப்பாளர்களுக்கு மத்தியில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தாயிக்கள்    மருத்துவமனை, பூங்கா, கடற்கரை, கோயில்கள், சர்ச்கள் மற்றும் சேரிகள் மற்றும் மாற்று மத மக்கள் குடி இருக்கும் வீடுகள் தோறும் சென்று இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆன் மற்றும் கண்ணியத்திற்குரிய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகள் அடங்கிய அழகிய நூல்களை வழங்கி அழைக்கின்றனர்.
இன்றைய தினம் [22.12.11] சென்னை பல்லவன் இல்லம் அருகில் உள்ள சேரிகளுக்கு சென்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் துணைத் தலைவர் முனீர், மாநில பேச்சாளர் முகைதீன் லாக் நகர் யூசுப், சேப்பாக்கம் கலீல் ரஹ்மான் திருவல்லிக்கேணி நசிர், முத்து இப்ராகிம்  உள்ளிட்ட தஃவா குழுவினர் வீடு வீடாக சென்று இஸ்லாமிய அழைப்புப் பணியினை செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
அஸர் மற்றும் மக்ரிப் தொழுகைகளை ஆள் அதிகமற்ற அங்குள்ள பிரம்மாண்டமான கவர்னர் பாடி கார்டு பள்ளிவாசலில் தொழுத போது 7000 பேர் வசிக்கும் அந்த சேரியில் இஸ்லாமிய வசந்தம் வீசினால் அங்கிருக்கும் நாற்றம் மறைவதோடு அந்தப் பள்ளியும் நிறையும் எனும் எண்ணம் ஏற்பட்டது!     இன்ஷா அல்லாஹ்!  

Sunday, December 25, 2011

பிரதமர் வருகையால் பள்ளியில் தொழத் தடை! INTJ கண்டனம் .


பிரதமர் வருகையால் பள்ளியில் தொழத் தடை! INTJ கண்டனம் .

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாத்திமா பீவி கவர்னராக இருக்கும் போது ஒரு பள்ளி வாசல் கட்டப்பட்டு அங்கு பணிபுரியும் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அப்பகுதி முஸ்லிம்களும் தொழுது வருகின்றனர்.


தற்போது பிரதமரின் வருகையை ஒட்டி அந்தப் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்கள் உள்ளே சென்று தொழத் தடை விதித்து பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி செய்துள்ளனர்.


இது பற்றி பகுதி முஸ்லிம்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தகவல் தர மாநிலப் துணை பொது செயலாளர் செய்யது இக்பால் காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களிடம் கேட்ட போது , அது எங்களின் தவறு அல்ல !தற்போது அந்த கவர்னர் மாளிகை மத்திய பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டப்பாட்டில் உள்ளது !   இன்று மதியம் லுஹர் தொழுகைக்கு வழக்கம் போல் அனுமதிக்கப் படும் !   என சொன்ன போது இக்பால் தனது கண்டனத்தை காவல் துறை அதிகாரிகளிடம் பதிவு செய்தார்.

கண்டன சுவரொட்டி  

                        பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய   கண்டன  அறிக்கை 
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் துரோகத்தால் பாபர் மஸ்ஜிதை இழந்த முஸ்லிம்கள் தற்போது காங்கிரஸ் பிரதமரால் இரண்டு நாள் வழிபாட்டு உரிமையை இழந்துள்ளனர். இவர்கள் ஆட்சியில் இரண்டு நாள் என்றால் நாளை அத்வானியோ, மோடியோ அந்த பிரதமராக வந்தால் நம் நிலை என்ன ? இந்திய அரசியல் சட்ட சாசனப்படி நம் வழிபாட்டு உரிமையை மறுக்க எந்தக் கொம்பனுக்கும்   அதிகாரமில்லை என்பதை ஆளும் வர்கத்திற்க்கு அறிவிக்கவேண்டும் ! காங்கிரஸ் கட்சிக்கு நம் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும். -செங்கிஸ் கான்.

அல்லாஹ்வின்   பள்ளியில் அவன் பெயர்   கூறி, அவனை துதிப்பதை தடுப்பவனை விட அநியாயக்காரன் யார்? அல்-குர்ஆன் [2;114] 

சேப்பாக்கத்தில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம்.

சேப்பாக்கத்தில்  ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம். 

பல்வேறு நலப் பணிகளை செய்து வரும் சேப்பாக்கம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஏழைகளுக்குரிய குர்பானி தோல்களை வசூலித்து அதன் மூலம் வாழ்வாதார உதவிகளை வருடந்தோறும் வழங்கி வருகிறது!
இந்த ஆண்டு அந்தப் பகுதியை சேர்ந்த ஏழை பெண் ஒருவர் தனக்கு ஒரு தையல் இயந்திரம் தந்தால் தன்னுடைய வருவாயை ஈட்டிக் கொள்ள முடியும் என கோரியதன் அடிப்படையில் நேற்று சேப்பாக்கம் பகுதி செயலாளர் 
  யூசுப் லாக் நகர் தவ்ஹீத் பள்ளியில் வைத்து இந்த இயந்திரத்தை வழங்கினார்.






திருச்சியில் கொள்கை சகோதரர்களின் குமுறல்கள் -2 அதிரை அன்வர்

எஸ்.எஸ்.யு.சைபுல்லாஹ் தலைமையில் திருச்சியில் நடந்த தவ்ஹீத் மர்கஸ்கள்-தாயிக்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் 
     கொள்கை சகோதரர்களின் குமுறல்கள் -2 அதிரை அன்வர்


INTJ மதுரை மாவட்டத்தின் மகத்தான பணிகள் .

INTJ மதுரை   மாவட்டத்தின்  மகத்தான  பணிகள் .

மதுரை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மூத்த நிர்வாகிகளின் வழிகாட்டலின் பேரில் தேர்ந்தெடுக்கப் பட்ட இளைங்கர்களை கொண்ட புதிய நிர்வாகம் பல்வேறு மக்கள் பிரச்னைகளைக் கையில் எடுத்து மகத்தான பணிகளை ஆற்றி வருகிறது.அவைகளில் சில உங்கள் பார்வைக்கு !

ஐக்கிய ஜமாஅத் ஏற்பாடு செய்த முல்லை பெரியாறு குறித்த முஸ்லிம்கள் நிலைப்பாடு குறித்து உரை நிகழ்த்தும் INTJ பேச்சாளர்  


இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மதுரை MMC கிளை துவக்க நிகழ்ச்சியின் போது...
 '                
                  சத்திய மார்க்கம்' எனும் அழைப்புப் பணியின் மாதாந்திர பிரசுரம்.

                 
                   பள்ளிவாசல் அருகில் மதுக்கடை அகற்றக் கோரி சுவரொட்டி!
                       
                       மதுக்கடையை மூட வைத்த  முற்றுகைப் போராட்ட்டத்தில்


சமூக நல்லிணக்க இரத்ததானத்தின் போது நிர்வாகிகள் & மருத்துவ குழுவினர்.




                            அல்ஹம்து லில்லாஹ் ! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

குருதி மக்களுக்கு குரான் உங்களுக்கு' இறை மறை நிகழ்ச்சியான சேப்பாக்கம் இரத்த தான முகாம்.

இறை மறை நிகழ்ச்சியான சேப்பாக்கம் இரத்த தான முகாம். 

 எங்கும் தஃவா எதிலும் தாஃவா எனும் தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாத்தின் மீதான ஊடகங்களின் தீவிரவாத பிரசாரத்தை மாற்றும் முகமாக 'இஸ்லாம் இரத்தத்தை வோட்டும் மார்க்கமல்ல மற்ற மக்களுக்க்ளுக்காக இரத்தத்தை கொடுக்கும் மார்க்கம் என்று நிருபிக்கும் முகமாக இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சமுக நல்லிணக்க இரத்த தான முகாம்கள் நடை பெற்றது.
அதில் சேப்பாக்கம் லாக் நகரில் நடந்த ரத்ததான முகாமில் எராளமான முஸ்லிமல்லாத மக்கள் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.
 'குருதி மக்களுக்கு குரான் உங்களுக்கு' 
என இரத்ததானம் செய்த அனைத்து முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கும் திருமறை தமிழாக்கம் வழங்கப் பட்டது.  அதைப் பெற்றுக் கொண்ட சகோதர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் 'இது வரை குரானை படிக்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது! அதை யாரிடம் கேட்பது என்ற தயக்கம் இருந்தது!' அந்த ஏக்கத்தை போக்கிய இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு நன்றி!
என்று கூறிய போது இன்னும் எத்தனை பேர் இப்படி ஏங்கி இருப்பார்கள் ? இன்ஷா அல்லாஹ் இறுதி வேதத்தை எப்பாடு பட்டாவது இந்த மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் எனும் உறுதி ஏற்ப்பட்டது.    










                                                  சபரி மலைக்கு மாலையணிந்த
                                  சகோதரரிடம் ஓரிறை   பற்றி,  இறை மறை பற்றி

                                ஊனம் உதவிக்கு தடையல்ல எனும் சகோதரர் சாகுல்

Saturday, December 24, 2011

ஏன் இந்த கொ[ல]ள்கை வெறி? பொய்யர்களுக்கு புத்திமதி சொல்லும் முஹம்மத் அலி IPS


ஏன் இந்த கொ[ல]ள்கை வெறி? பொய்யர்களுக்கு  

புத்திமதி சொல்லும் முஹம்மத் அலி IPS

சென்ற 2010 ஜூலை மாதம், 'சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு' என்ற கட்டுரையும், அதே வருடம் நோன்பு நேரத்தில், 'தஞ்சை மாவட்டத்தில் திருவிடைசேரி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பந்தமாக, 'கண்கள் குலமாகுதம்மா சகோதர யுத்தம் கண்டு' என்ற கட்டுரையும் மின் அஞ்சலில் வெளியிட்டும், சமுதாய ஊடகங்களிலும் வெளி வந்தன பலர் அறிந்திரிப்பீர்கள்
முபெல்லாம் கதைகள், கட்டுரைகளைப் பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் காசு கொடுத்து வாங்கிப் படிப்போம். தற்போது அசூர வேகத்தில் சுழலும் மின்சார உலகில் பல்வேறு அலுவல்களுக்கிடையே
சில நிமிடங்களிலேயே பல்வேறு நாடுகளிலிருந்து நண்பர்கள்,
உறவினர்கள், உடன் பிறந்தோர், அறிவு ஜீவிகள், மார்க்க அறிஞர்கள் போன்றோர்களிடம் இருந்து செய்திகளைப் பெற மின் அஞ்சல் மிக இன்றியமையானதாக ஆகி விட்டது. ஆனால் அதேமின் அஞ்சலை தங்களது சொந்த விருப்பு, வெறுப்பினை தரம் தாழ்ந்து கொட்டித் தீர்ப்பது சரிதானா என்பதே என் கேள்வியே?

20.12.2011 அன்று மின் அஞ்சலை திறந்து ஒவ்வொன்றாக படித்துக் கொண்டு வந்தேன். அதில் புனித குரான் தமிழ் விளக்கம்,ஹதீசுகள், தவா நடவடிக்கைகள், நோயிற்றிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ உதவி, துவா கேட்டல், பல்வேறு மவுத்து செய்திகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கான விளம்பரங்கள், வெளி நாட்டில் வாழும் ஈமான்தார் ஆக்கப் பூர்வமான செயல்கள் போன்றன வந்திருந்தது கண்டு, ஆகா மின் அஞ்சல் எந்த விதத்தில் நமது சகோதரர்களை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது என்று எண்ணி மகிழ்ந்து இருக்கும்
வேலையில்,அனைவருக்கும்அனுப்பட்டஒரு மின்அஞ்சல் மட்டும்
என்னை திடுக்கிடச் செய்தது. அது என்ன என்று நீங்கள் அறிய உங்களுக்கு
ஆவல் இருப்பது நியாயமே!
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் கடைப் பிடிக்க தமிழ் இலக்கியம் கூறுவது, 'இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகும்'
ஏன் ரசூலல்லாவும் அவர்களது தோழர்களும் எந்த நேரத்திலும் தரம் தாழ்ந்த வார்த்தைகளை உபயோகித்ததில்லையே!
ஆனால் ரசூலல்லா வழி வந்த நாம் மட்டும் நல்ல சொற்கள் இருக்க நாறச் சொற்களை மின் அஞ்சலில் உபயோகிக்கலாமா
என்பதே என் கேள்வியே!

அதுவும் எப்படிப் பட்ட கடுஞ் சொற்கள் என்றால் ஒரு இயக்கத்தினர் அடுத்த இயக்கத்தினவரினை காதில் கேட்க முடியாத
சொற்களைக் கொண்டு வசை பாடி இருந்தனர். அது என்ன காதில் கேட்க முடியாத சொற்கள் என்று கேட்கலாம். வேற்று இயக்கத்தின் தொண்டர் ஒருவரின் மனைவியினை அடுத்தவருக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாகவும், அந்த நபர் அடுத்தவருடன் ஹோமோ செக்ஸ்சில் ஈடுபட்டதாகவும், அந்த இயக்கத்தினர் காதல் களியாட்டங்களில் ஈடு படுவதாகவும், மின்அஞ்சல் திருட்டுச் செய்வதாகவும் மனம் போன போக்கில் சொல்லப் பட்டிருந்தது. 

கல்லூரி மாணவனாக இருந்திருந்தால், 'மஞ்சள் பத்திரிக்கை மற்றும் கிளு கிளுப் பூட்டும் செய்திகள் படிபதிற்கு மிகவும் சுவையாக இருந்திருக்கும்.
ஆனால் வயது முதிர்ச்சியடைந்து, 'வீடு போ போ என்றும் காடு வா வா' என்றும் சொல்லும் நிலையில் இருக்கும் என் போன்றவர்களும், அறிவில் முதிர்ச்சியடைந்த பல்வேறு நாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர் உங்களுக்கும் அதிர்ச்சியாக இருந்ததில் நியாயம் இருக்கத் தான் செய்திருக்கும்! 

சமுதாய இயக்கங்கள் அனைத்தும் ஏக அல்லாவினையும் அவனுடைய இறுதித் தூதரையும் ஏற்றுக் கொண்டு ஒரே கோடையில் வாழ்பவர் தானே!
சமுதாய இளைஞர் பட்டாளத்தினை வழி நடத்த விரும்பும் இயக்கங்கள் தாங்கள் கடைப் பிடிக்கும் வழிகள் பலவாக இருக்கலாம். ஆனால் வெறுமையில் ஒற்றுமை உள்ள இயக்கமாக ஏன் மாறக்கூடாது என்பதே என் கேள்வியே!

ஏக இறைவன் அஹிலத்தினை 'பிக் கோலுசன்' என்ற செயல் மூலம் பல கிரகங்கள் படைத்து அவைகள் அத்தனையும் அதன் அதன் பாதையில்
சுழல விடவில்லையா என்ன? பின் ஏன் நாமும் நமது
இயக்கங்களிடையே உள்ள வேற்றுமை மறந்து அவரவர்
கொள்கையில் இளைஞர்களை வழி நடத்திச் செல்லக்கூடாது?

அந்தரத்தில் உள்ள சில விசயங்களை ஏன் அரங்கத்திற்கு கொண்டு வர வேண்டும்? பிறரைப் பற்றி உண்மை தெரிந்தால் அதனை கூட்டம் போட்டு
பறை சாற்றுவது நல்லது தானா? பிறரைப் பற்றி புறம் பேசுவது மனித மாமிசத்தினை தின்பது போன்றது என்று ஹதிசுகளில் சொல்லவில்லையா?
பின் ஏன் அதுபோன்ற மின் அஞ்சலை எல்லோருக்கும் அனுப்ப வேண்டும்?
உலகில் குறை இல்லா மனிதர் உண்டா? கடைக் கண் பார்வையில் கூட கற்பிற்கு களங்கம் விளைவிற்காதவர் ஊர் முச்சந்தியில் உள்ள
பானையில் பாலைக் கொட்டுங்கள் என்று சொல்லி ஒருவர் கூட ஊற்றவில்லை என்ற கதையினை அனைவரும் படித்திருகின்றோம்., 

மாசில்லா தங்கம் உண்டா? அல்லது துருப் பிடிக்கா ஆயுதம் உள்ள ஆர்மேரி உண்டா?ஆகவே சமுதாய இயக்கங்களிடையே உள்ள குறைகளை பூதக் கண்ணாடிப் போட்டு பெரிதாக்காமல் சமுதாயதினவர்க்கு நாம் என்னென்ன நல்லதுசெய்யலாம் என்று சிந்தனை செய்து அதனை முயற்சிக்கலாம்.
இந்த நேரத்தில் சமுதாயத்தினர் ஒற்றுமை பற்றி தன்னல மற்ற தலைவர் காயிதே மில்லத் அவர்கள் 5.5.1970 அலிகார் பொதுக் கூட்டத்தில்
பேசிய உரைகள் உங்கள் முன் வைக்கின்றேன், 'நாம் சிறுபான்மை மக்களாக வாழ்கிறோம். நமக்குள் ஒற்றுமை மிக மிக அவசியம்.
பெரும்பான்மை சமுதாயம் எப்படியும் பிரிந்து இருக்கலாம். ஆனால் சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்து வாழ்வது குரானின் கட்டளையாகும்' என்றார்கள்.

சிறுபான்மையினர் ஒற்றுமையுடன் வாழ்ந்தபோது அதிக பலத்துடன் இருந்தனர். ஆனால் வேற்றுமையுடன் இருந்ததால் சிறுபான்மையினரை கால் தூசுக்கு மதிப்பில்லாதவர் என பெரும்பான்மையினத்தவர் சிலர் நினைக்கின்றனர்.உதாரணத்திற்கு, லோக் பால் மசோதாவில் 50 சதவீத கோட்டா கொண்டு வருவதினை திண்ணைப் பேச்சு அண்ணாச்சி ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பாருங்களேன்!
அது மட்டுமா தேசிய சிறுபான்மை கமிஷன் மைனாரிட்டி மக்களுக்கு கோட்டா வழங்க வேண்டும் என்ற சிபாரிசின் பேரில் மத்திய அரசு மைனோரிட்டி சட்டம் 1992 பிரிவு 2(சி) யில் உள்ளபடி 4.5 சதவீத கோட்டா
வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இது மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான 10 சதவீதத்திற்கும் குறைவானதானாலும் அதனைக் கூட பி.ஜே.பி
சட்டத்திற்கு புறம்பானது எனசொல்லி ஆர்பாட்டம் செய்கிறது.
அது மட்டுமா? ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகத் சொல்கிறார் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடத்தில் நிச்சியமாக தாவா நிலம் அத்தனையிலும் பெரிய ராமர் கோவில் அயோத்தில் கட்டவேண்டும் என்கிறார்.அதற்குத்
தான் அவர்களின் சாதகமான ஆட்சி மத்தியில் வேண்டும். அதற்கு முன்னோடிதான் திண்ணைப் பேச்சு அண்ணாச்சியின் ஆர்ப்பாட்டம் என்றால் மிகையாகாது.
ஆகவே சமுதாய இயக்கங்கள் தங்களுக்குள் சுயக் கட்டுப் பாட்டுகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களுக்குள் தரம் தாழ்ந்து சண்டையிடாமல், அத்துடன் பொது நலன் சமுதாய மக்களை வழிப் படுத்தினால் நலமாக இருக்கும்.
2) சமுதயத்திற்கு மாறுதலாக அடுத்தவர் நடந்தார் என்றால் அந்த
நபருக்கு தனிப் பட்ட முறையில் மின் அஞ்சல் அல்லது தபால்
எழுதலாம். அல்லது அவர் நடவடிக்கையினை அந்த இயக்க முன்னோடிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.
3) அரசு அலுவலங்களிலும் நமது முஸ்லிம் கல்வி தொழில் அமைப்புகளிலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படுகிறதா என்று கவனித்து அவைகள் கிடைக்க இணைத்து நடவடிக்கை எடுக்கலாம்.
4) பல்வேறு நகரங்களில் கிராமங்களில் சமுதாயத்தினவற்கு ஏற்படும் இன்னல்களை அனைவரும் இனைந்து தட்டிக் கேட்கலாம்.
அதற்கான கிரிடிட் தங்கள் இயக்கம்தான் என்று பறைசாற்றி அடுத்த இயக்கங்கலினை அனாவசியமாக வெறுப்பேற்றத் தேவையில்லை.
5) நமது நாடு ஜனநாயக நாடு. ஆகவே மக்கள் பிரதிநிதிகளுக்குத் தான் முக்கியம் கொடுக்கப் படும். ஆகவே இயக்கங்கள் தேர்தல் நேரத்தில் பொது கொள்கையுடன் இணைந்து சமுதாயம் சார்பாக பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கலாம்.
6) புராதான வழிபாட்டு தளமான பாப்ரி மஸ்ஜிதை இருந்த இடத்திலே கட்டும் வரை தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும். சமீபத்தில் மின் அஞ்சல்களையும், தொலை பெசிகளையும் மத்திய உளவு நிறுவனங்கள் முன் அனுமதியின்றி ஆறு மாத காலத்திற்கு கண்காணிக்கலாம் என்று அனுமதிக்கப் பட்டுள்ளது. உங்களுடைய மின் அஞ்சல்களை வேற்று மத உளவு அமைப்புகளும் கண்காணிக்கின்றன. ஆகவே மின் அஞ்சல்களை அனுப்புவதில் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தனிப் பட்டவர் உரிமை மின் அஞ்சலில் மீறினால் 'சைபர் கிரைம்' சட்டத்தின் மூலம் தண்டிக்கப் பட வாய்ப்புண்டு என்று சுட்டிக் காட்டி
சமுதாய இயக்கங்களிடையே உள்ள குரோதத்தினை அடியோடு  ஒழிப்போமா!