ஸகர்ரில் இருந்து பாதுகாப்பு
(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில்(இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்- (40)குற்றவாளிகளைக் குறித்து- (41) "உங்களை ஸகர் (நரகத்தில்)நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.) (42) அவர்கள் (பதில்)கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.(43) "அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.(44) "(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். (45) "இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். (46) "உறுதியான (மரணம்)எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்). (47)[74:40......]
இந்த மாதம் வழங்கியது |
சககர் எனும் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேட மாதம் ஒரு முறை ஒரு ஏழை குடும்பத்தை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு ஒரு மாதம் முழுவதிற்கும் தேவையான அனைத்து மளிகை பொருட்களும் தாராபுரம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வழங்கி வருகிறது கொள்கை சகோதரர்களே (நீங்களும் இது போல் செய்யலாமே) நம் அனைவரையும் ஸகர் என்னும் நரகத்தில் இருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக. செய்தி:மார்வலஸ் சாகுல்
0 comments:
Post a Comment