Sunday, December 25, 2011

குருதி மக்களுக்கு குரான் உங்களுக்கு' இறை மறை நிகழ்ச்சியான சேப்பாக்கம் இரத்த தான முகாம்.

இறை மறை நிகழ்ச்சியான சேப்பாக்கம் இரத்த தான முகாம். 

 எங்கும் தஃவா எதிலும் தாஃவா எனும் தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாத்தின் மீதான ஊடகங்களின் தீவிரவாத பிரசாரத்தை மாற்றும் முகமாக 'இஸ்லாம் இரத்தத்தை வோட்டும் மார்க்கமல்ல மற்ற மக்களுக்க்ளுக்காக இரத்தத்தை கொடுக்கும் மார்க்கம் என்று நிருபிக்கும் முகமாக இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சமுக நல்லிணக்க இரத்த தான முகாம்கள் நடை பெற்றது.
அதில் சேப்பாக்கம் லாக் நகரில் நடந்த ரத்ததான முகாமில் எராளமான முஸ்லிமல்லாத மக்கள் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.
 'குருதி மக்களுக்கு குரான் உங்களுக்கு' 
என இரத்ததானம் செய்த அனைத்து முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கும் திருமறை தமிழாக்கம் வழங்கப் பட்டது.  அதைப் பெற்றுக் கொண்ட சகோதர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் 'இது வரை குரானை படிக்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது! அதை யாரிடம் கேட்பது என்ற தயக்கம் இருந்தது!' அந்த ஏக்கத்தை போக்கிய இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு நன்றி!
என்று கூறிய போது இன்னும் எத்தனை பேர் இப்படி ஏங்கி இருப்பார்கள் ? இன்ஷா அல்லாஹ் இறுதி வேதத்தை எப்பாடு பட்டாவது இந்த மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் எனும் உறுதி ஏற்ப்பட்டது.    










                                                  சபரி மலைக்கு மாலையணிந்த
                                  சகோதரரிடம் ஓரிறை   பற்றி,  இறை மறை பற்றி

                                ஊனம் உதவிக்கு தடையல்ல எனும் சகோதரர் சாகுல்

0 comments:

Post a Comment