இராமநாதபுரத்தில் இதஜ சார்பாக பாபரி மஸ்ஜித் கண்டன ஆர்ப்பாட்டம்!
இராமநாதபுரத்தில் இன்று மாலை 3 மணியளவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பாபரி மஸ்ஜித் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியுடன் மாநில செயலாளர் ஃபிர்தவ்ஸ் தலைமையில் நடைபெற்றது.
கண்டன உரையினை மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹைதீன் மிக உணர்ச்சிப்பூர்வமாக ஆற்றினார்.
மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார், செயலாளர் பக்கீர் ஒலி, பொருளாளர் ஹாஜா, மக்கள் தொடர்பாளர் கமால் நாஸர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை, பெரியப்பட்டணம், ஏர்வாடி, சிக்கல், வாலிநோக்கம், கோரைக்குட்டம், சித்தார் கோட்டை உள்ளிட்ட கிளையில் இருந்து நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
-கமால் நாசர்.
0 comments:
Post a Comment