Friday, December 16, 2011

பாண்டிச்சேரியில் இறை வேதம் அழைக்கிறது! முஸ்லிம் அல்லாதவர்க்கு குரான் வழங்கும் நிகழ்ச்சி!

பாண்டிச்சேரியில் இறை வேதம் அழைக்கிறது!
 முஸ்லிம் அல்லாதவர்க்கு குரான் வழங்கும் நிகழ்ச்சி!


இறை வேதம் அழைக்கிறது எனும் பெயரில் முஸ்லிமல்லாத மக்களை அழைத்து அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி , நபிகள் நாயகத்தின் நற் போதனைகளை எடுத்து சொல்லி, குரான் ஒரு இறை வேதம் என்பதை எடுத்து சொல்லி , அவர்களின் வினாக்களுக்கு விடையளித்து அவர்களுக்கு உணவும் அழைத்து திருமறை குரானின் தமிழாக்கமும் வழங்கும் நிகழ்ச்சியை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் எங்கும் நடத்தி வருகிறது!


எங்கு சென்று வாங்குவது? கேட்டால் தருவார்களா? நாம் அதை படிக்க முடியுமா?  என குரானை படிக்க ஆர்வம் காட்டும் பிற மத மக்கள் இந்த ஆர்வத்தால் உந்தப் பட்டு இந்நிகழ்சிகளில் பங்கேற்று வரிசையில் நின்று அடித்துப் பிடித்துக் கொண்டு வாங்கும் நிலையை காணலாம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இது வரை இரண்டரை ஆண்டு காலங்களில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுமார் 20000 பிரதிகளை மற்று மத மக்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளோம்.

அந்த வரிசையில் வரும் 18.12.12 ஞாயிறு அன்று காலை பாண்டிச்சேரியில் ஆனந்தா இன் ஹோட்டல் அருகில் உள்ள சாயிபாபா மகாலில் இன்ஷா அலலாஹ் சுமார் 500 பேர்களுக்கு திருக் குரான் தமிழாக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற உள்ளது!  புதுவை மாநிலம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில்
எஸ்.எம்.பாக்கர். அப்துல் ஹமித , முஹம்மத் முஹய்யிதீன், ஆகியோர் பங்கேற்கின்றனர்.
  

0 comments:

Post a Comment