Wednesday, August 31, 2011

திடலையும் திருடும் திருச்சி தக்ளித் ஜமாத்தினர்.

திடலையும் திருடும் திருச்சி தக்ளித் ஜமாத்தினர்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...
கொள்கை சகோதரன் திருச்சி.ரிஸ்வான் எழுதி கொண்டது. அனைவருக்கும் எனது புனித ரமழான் வாழ்த்துக்கள்(ஈத் முபாரக்).

அல்லாஹ் தனது திருமறையில் ரமழான் நோன்பை பற்றி குறிப்பிடும் பொழுது நோன்பு வைப்பதன் மூலம் இறையச்சம் உடையோராகலாம் என கூறுகின்றான். இறையச்சத்திற்குரிய பாடம் கற்று அல்லாஹ்வுக்கு அதிகம் அதிகம் தக்பீர் கூறி புகழ்ந்து நன்றி கூறவேண்டிய இந்த நேரத்தில் அவதூறு தலைவனின் சீடர்கள் சிலர் "வெற்றி வெற்றி INTJ கழுசடைகள் பெருநாள் தொழுகை நடத்தாமல் ஓடி ஒழிந்தனர்" என்ற அவதூறை SMS வழியாக பரப்பி மகிழ்கின்றனர்.

அதற்கு விளக்கம் தரவேண்டியது நமது கடமை என்கிற அடிப்படையில் சில நிகழ்வுகளை அல்லாஹ்வுக்கு பணிந்த நிலையில் பதிய வைக்க கடமைபட்டுள்ளோம். நபிவழியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக TNTJ சார்பாக ஏற்பாடு
செய்யபடும் இடம் ஒரு மாட்டு கொட்டாய் ஆகும். நபிவழியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக சாணி வாடையையும் பொறுத்தே கடந்த காலங்களில் இருந்து மக்கள் தொழுது வந்தனர். சிலரின் செருப்புகளையும்,  சிலரின் ஆடைகளையும், அதன் மூலம் தொழுகை பாய்களையும் சாணி அலங்கரித்தது. பெருநாள் தொழுகைக்கென வேறு இடம் தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்தின் குரல் மேலாங்கும்போது TNTJ-யில் பணி செய்வது சமஸ்பிரான் தெருவாசிகள் மட்டும்தான் எனவே இந்த இடத்தில்தான் நடத்த முடியும் என்றனர்.

பெரும்பெரும் அரசியல் கட்சி கூட்டங்கள் மட்டுமே நடைபெறும் திருச்சி தென்னூர் உழவர் சந்தையின் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில் முஸ்லிம் நிகழ்சிகளிலும், பெருநாள் தொழுகை ஏற்பாட்டிலும் முதல்முறையாக பல்வேறு விதமான பெரும்பெரும் இடையூறுகளுக்கு மத்தியில் அல்லாஹ்வின் மாபெரும் உதவியுடன் கடந்த ரமழான் பெருநாள் தொழுகையை சிறப்பாக நடத்தி முடித்தோம். இதில் ஆண்களும் பெண்களும் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர். அப்போது நம் பள்ளிவாசலுக்கும், நம் தொழுகை திடலுக்கும் வருவோர் TNTJ-யினரே என்று கைப்புள்ளதனமாக எண்ணிக்
கொண்டிருந்தோரின் கண்கள் விரிந்தன.
பக்ரீத் பண்டிகையும் வந்தது. அடுத்தவர் பள்ளிவாசல் (சொத்து) திருட்டில் இருந்து சற்று கீழிறங்கிவிற்க இயலாத, முஸ்லிம் டிரஸ்ட் போன்ற பெரிய சொத்துக்களும் அற்ப சொத்துக்களும் இல்லாத இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பெயரைகூட விட்டுவைக்காமல் திருடிய தவ்ஹீத் தலைவன்? தவ்ஹீத் ஜமாத்? தவ்ஹீத் தொண்டன்? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். தடம் புரண்டு திருடர்களானவர்கள் நவம்பர் 17 ஆம் தேதி முஸ்லிம்கள் அனைவரும் பக்ரீத் கொண்டாடிய நிலையில் திருடர் ஜமாத் திருடிய இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாகநவம்பர் 18 அன்று தொழுகை நடைபெறும் என்று விளம்பரம் செய்து வழக்கம் போல குழப்பம் செய்தனர். தவ்ஹீத் பணிக்கென மக்களிடம் வசூல் செய்த பணத்தில் இவர்கள் செய்து வரும் பணி குழப்பம், அவதூறு, ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, வன்முறை, கொலை இது மட்டுமே!
பக்ரீத் தொழுகை அனுமதியிலும் TMMK-வினர் சிலர் பெரும் இடைஞ்சல் கொடுத்தனர். எனினும் அல்லாஹ்வின் உதவி கொண்டு தொழுகையை சிறப்பாக நடத்தி முடித்தோம்.குழப்பவாதி பெருநாள் தேதியை மாற்றியதின் காரணமாக, இந்த தொழுகையில் TNTJ-யினர் சிலரில் பெரும்பாலோரும் கலந்து கொண்டனர்.
அமைப்பில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்பதால் 17-ஆம் தேதி அல்லாஹ்வுக்காகவும், 18-ஆம் தேதி அமைப்புக்காகவும் தொழுது என்ட்ரி போட்டனர். (ஷவ்வால் பிறையை பார்த்து இன்று பெருநாள் கொண்டாடக்கூடிய ஜமாத்தின் இணயதளத்தில் இன்று ஷவ்வால் 2 என்று இருப்பதன் மர்மம் என்னவோ?
ஆதாரம் பார்க்க www.tntjtrichy.com )
பொதுமக்களின் வருகை இடம் மாறியதால் வாயை திறந்தனர்.
டிசம்பர்-6 போராட்டம், மற்றும் டிசம்பர்-26 மாநாடு ஆகியவற்றை திருடியதை கொண்டு இடையூறு செய்தனர். நிகழ்ச்சி நடைபெறவில்லை! அனுமதி மறுப்பு என்றும் அவதூறு பிரச்சாரம் செய்தனர். எனினும் நமக்கு இங்கு அந்த திருட்டு பணிக்கு பல்லக்கு தூக்கிய திருச்சி மக்களின் மீது கோபமோ, ஆதங்கமோ வரவில்லை! மாறாக அடுத்தவர் விஷய
த்தில் வரம்பு மீறுபவன் நாளை நம் விஷயத்திலும் வரம்பு மீறுவான் என்கின்ற எதார்த்த கணக்கை புரியாதவர்களாக இருக்கின்றனரே என்று அவர்களின் மீது இரக்கத்தை தவிர வேறேந்த எண்ணமும் எங்களுக்கு ஏற்படவில்லை. அதனால்தான் அவர்களின் மற்ற நிகழ்ச்சிகள், சிங்காரத்தோப்பு JAQH பள்ளிவாசல் விவகாரம் போன்றவற்றில் நாம் தலையிடவில்லை.

 அம்பு எய்தவன் A/C அறையில் இருக்கிறான் போஸ்டர் ஒட்டுபவனுடன்சண்டை எதற்கு? என்ற காரணத்தினாலும், வழக்கு, கைது, போலிஸ் டார்ச்சர் போன்ற சிரமங்களை அனுபவிக்காத தியாகிகள் மட்டுமே அந்த அமைப்பில் மின்னுவதால் அவர்களின் நிகழ்ச்சிகள் எதுவும் தடைபட்டால் ஏங்கி போய்விடுவார்கள் என்பதாலும் நாம் அவர்களை அறவே சட்டை செய்வது கிடையாது. 

தொழுகை, பள்ளிவாசல் விஷயத்தை பொறுத்தவரை அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டிய விஷயம். அதை அறிந்தும் பணிய முடியா காரணத்தினால்தான் பள்ளிவாசல் அருகிலேயே போட்டி பள்ளி, ஆணவம், பெருமை, அவதூறு, ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, வன்முறை கொலை வரை இவர்களை கொண்டு சென்றுவிட்டது.
கடையநல்லூரில் TNTJ-தான் இதற்கு முன்னர் பெருநாள் தொழுகை நடத்தி வருகிறது. எனவே! எங்களுக்குதான் அனுமதி வழங்க வேண்டும் என்று அனுமதி வாங்கியோர், திருச்சியில் நாம் சென்ற வருடம் ரமழான் தொழுகை நடத்திய இடத்தில் அனுமதி கேட்டு ஆக்கிரமிப்பு கரங்களை நீட்டினர். அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் ததஜ-வை சேர்ந்த பெரும் பயில்வான்கள்? பெரிய ரவுடிகள்? ததஜ அமைப்பின் பூர்வீக கட்டமைப்பாளர்கள்? (செம காமெடிப்பா!) நம்முடன் சண்டை செய்ய முயற்சித்த போது நாம் அவர்களை அலட்சியம்தான் செய்தோம். அடுத்தவர் பாத்திரத்தில் வாய்வைப்பதும், மசூராவில் ஒன்றும், மேடையில் ஒன்றும், தனிபட்ட வாழ்வில் ஒன்றுமாக நடந்து கொள்வது அவர்களின் ஷைகுகற்று கொடுக்கும் பாடமாகும். (நம்மை சிந்தித்து செயல்பட கருணை புரிந்த ரஹ்மானுக்கே புகழனைத்தும்)
அவர்களை தாக்க நமக்கு வலிமை இருக்கிறது, போட்டிக்கு தொழுகை நடத்த அருகில் இடம் இருக்கிறது, இவர்களின் தொழுகையை தடுக்க அதிகார பழக்கவழக்கமும் இருக்கிறது, இவை அனைத்தையும் கொடுத்து எங்களை கண்ணியபடுத்தியிருக்கும் அல்லாஹ், எங்களுக்கு இறையச்சத்தையும் சிறிதளவு அருள்புரிந்திருக்கிறான். எனவேதான் நாங்கள் விலகி நின்றோம்.
எங்களுக்கு அல்லாஹ் இறையச்சத்தை அருள் செய்யாதிருந்தால் இவர்களை விட உலக விஷயத்தில் அல்லாஹ் எங்களுக்கு மேலான நுணுக்கத்தை வழங்கியுள்ளான். பொதுவாக யார் தொழுகை நடத்தினாலும், போராடினாலும் வருவோரை கொண்ட அல்லாஹ்வின் சோதனையில் கூட்ட பேயை உங்களுக்கு பிடிக்க வைத்து, உங்களை கர்வத்தில் ஆழ்த்திய இறைவன் உங்களை ஆழப்பதிய வைக்க போதுமானவன்

LASTஇறுதியாக 2 செய்திகளை சொல்ல விரும்புகிறோம். ஒரு நற்செயலை துவங்கி வைத்தோருக்கு அந்த நற்செயல் தொடரும் காலமெல்லாம் அதனுடைய நன்மை வந்து கொண்டே இருக்கும் எண்கிற நபிமொழிக்கு இணங்க பெருநாள் தொழுகைக்கு ஒரு புதிய இடத்தை ஆரம்பித்து வைத்து வழிகாட்டிய வகையில் அந்நற்செயலை யார் தொடர்ந்தாலும் அதன் நன்மை எங்களுக்கு குறைவின்றி வழங்கபடும் என்று அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்கிறோம்.

 பையும், கூடாரமும் காலியாக இருக்கும்போது யாரும் வரம்பு மீற போவதில்லை. எனவே ஒரு கூட்டத்தினரை இறைவன் வேலையை முடிக்க நாடினால் பையையும், கூடாரத்தையும் நிரப்புவான் என்ற வரலாறுகளைதான் குர்ஆன் நமக்கு போதிக்கிறது. அனைவரின் விஷயத்திலும் தீர்ப்பளிக்க அல்லாஹ் போதுமானவன் இவர்கள் விஷயத்தில் பள்ளிவாசல்களை எழுதி தர மறுத்து வெளியேற்றபட்டோரே போதுமானவர்கள்.
இன்ஷா அல்லாஹ்...


Sunday, August 28, 2011

பிஜெயின் மார்க்க முரண்பாடுகள் தோலுரிப்பது தொடரும் - முகவை அப்பாஸ்.



பிஜெயின் மார்க்க முரண்பாடுகள் 

தோலுரிப்பது தொடரும் - முகவை அப்பாஸ்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்பு சகோதர சகோதரிகளே!

அறிஞர்  பீஜேயின் மார்க்க முரண்பாடுகளை, அவருக்கு அவரே முரண்படுவதை, மார்க்க சட்டங்களில் அவரது பொடுபோக்கு தன்மையை உரிய ஆதாரங்களுடன் கண்ணியமாக  நாம் எழுதி வருகிறோம்.
இதை பொறுக்க முடியாமல், தனது பினாமி  தளத்தில் தனது அபிமானிகள் மூலம் அவதூறு தொடரை தொடங்கியுள்ளார் பீஜே. இதனால் நம்மை ஒரு போதும் இவரால் பின்வாங்க செய்யமுடியாது. இவரது மார்க்க முரண்பாடுகள்  தொடர் தொடர்ந்து வெளியாகும் இன்ஷா அல்லாஹ் என்பதை உறுதியுடன் தெரிவிக்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் பீஜேயின் சூன்ய வலையிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுக்க உதவுவானாக!

-அன்புடன் சகோதரன் முகவைஅப்பாஸ்.
மண்டலத்தலைவர் இதஜ-குவைத்.

வ அலைக்கும் வஸ்ஸலாம்
எங்களது கண்ணியத்திற்குரிய சகோதரரும், எங்களது குவைத் மண்டலத் தலைவருமான முகவை அப்பாஸ் அவர்களே! தாங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
நான் மார்க்க விஷயமாக முரண்படுகிறேன் என்பதை பிஜெ ஒப்புக் கொண்டு விட்டார். மார்க்க விஷயமாக அவர் கொடுத்த விளக்கங்களை தாங்கள் கண்ணியத்துடன் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் சுட்டிக்காட்டும் பொழுது, அதற்கு முறையாக பதில் அளிக்க திராணியற்று, தனது கைக்கூலியினை கொண்டு மிக கேவலமாக விமர்சிப்பதில் இருந்தே, அவர் தன்னுடைய தவறுகளை ஒப்புக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். இவருடைய சுய ரூபத்தை அதிகமான மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இனியும் புரிவார்கள்.
கண்ணியமிக்க நபிமார்களை, அன்புக்குரிய ஸஹாபாக்களையே மிக மோசமாக விமர்சிக்கும் பொழுது நீங்கள் எம்மாத்திரம்? 
நாம் அறியாத ஒன்ற அல்ல, அவருடைய பெயரில் இயங்கும் இணையதளம் முழுவதும் விமர்சிக்கப்படாத அறிஞர்கள் உண்டா? மிக கண்ணியத்துடன் கேள்வி எழுப்பி இருந்த அபூ ஸுமைய்யா என்ற சகோதரருக்கு கொடுத்த அற்பத்தனமான விமர்சனங்களை எல்லாம் தமிழ் பேசும் முஸ்லிம் சமுதாயம் நன்கு அறியும். 
அல்லாஹ் உங்கள் மீது நல்லருள் பாலிப்பான், எப்போதும் போல் மிக உற்சாகத்துடன் தாங்கள் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணயினை தொடர துஆ செய்கின்றோம்.
வஸ்ஸலாம்.  

 #
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரே! நான் எல்லா இணையதளங்களையும் பார்வையிடுபவன். அந்த வகையில் பொய்யன் டிஜே என்ற இணையதளத்தையும் பார்வையிட்டேன். தாங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையானது.
சகோ.முகவை அப்பாஸ் கண்ணியமான முறையில்தான் பிஜே அவர்கள் முன்பு கொடுத்த விளக்கத்திற்கும், இப்போதும் தந்துள்ள விளக்கத்திற்கும் வேறுபாடுகளை சுட்டிக்காட்டுகிறார். அதற்கு விளக்கம் அளிக்கம் வேண்டும் என்று இருந்தால், நல்ல முறையில் விளக்கம் அளித்து இருக்கலாம். இல்லாவிட்டால், அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு இருக்கலாம். அதை விடுத்து ரமலான் மாதம் என்று கூட பார்க்காமல், முறையற்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை.
மார்க்க சம்பந்தமாக கேள்வி கேட்பவர்களுக்கு முறையான பதில் அளிக்காமல், ஏன் அவர்களது தனிப்பட்ட விஷயம் குறித்து படு மோசமாக விமர்சிக்க வேண்டும் என தெரியவில்லை?
சகோ.முகவை அப்பாஸ், பிஜே அவர்களின் அந்தரங்க லீலைகளை ஒன்றும் இவர்களை போல் தொடர் போட்டு எழுதவில்லையே இவ்வளவு படுமோசமாக விமர்சிப்பதற்கு?
முகவை அப்பாஸ் இது போல் நடந்து கொண்டாரா என தெரியவில்லை. எத்தனை காலத்திற்குதான் இதையே பல பெயர்களிலும் வெப்சைட் திறந்து எழுதிக் கொண்டு இருப்பார்களோ தெரியவில்லை. ஒருக்கால் அவர் அவ்வாறு நடந்து இருந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு மீண்ட பிறகும், அவரின் மான மரியாதையை இந்த அளவிற்கு பங்கம் வைக்க இஸ்லாம் காட்டி தந்த ஆதாரம்தான் என்ன? இது குறித்து அந்த அமைப்பில் உள்ள சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். அவர்களும் துணைப் போனால் சனிக்கிழமைகளில் மீன் பிடிக்க சென்றவர்களுக்கு துணைப் போன கதையாக மாறி, அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.
தமுமுகவை தலைவர்களை ஏசுகிறார். ஜாக் சகோதரர்களை பேசுகிறார். PFI போன்ற அமைப்பினரை விமர்சிக்கிறார். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினராகிய உங்களை விமர்சிக்கிறார். சைபுல்லாஹ் ஹாஜா அவர்களை விமர்சிக்கிறார். இந்த இணையதளத்தை நடத்தும் சகோதரர் நாளைய நிலையில் முஃப்லிசாக ஆக போகிறார் என்பது மட்டும் தெரிகிறது? அல்லாஹ் இவரை காப்பாற்ற வேண்டும்.
நீங்களும் தேவையில்லாத விஷயங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். நல்லவை ஏவுங்கள். அல்லாஹ் உதவி புரிவானாக. அல்லாஹ் நம் எல்லோருக்கும் நல்ல ஈமானை தரட்டும் என துஆ செய்கின்றேன்
-அபூ அப்திர் ரஹ்மான்
 

பதில் சொல்ல முடியாத கேள்விகள் ???


பதில் சொல்ல முடியாத கேள்விகள் என்ற தலைப்பில் அண்ணன் [பொய்யன் எனும் தன] உண்மைப் பெயரில் நடத்தும் ஆபாசத் தளத்தில் கேட்கப்பட்ட கேள்விகளும் நமது பதில்களும்!

· வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி மக்களிடம் வசூல் செய்தீர்களா இல்லையா? பதில் இல்லை.  
வேலூரில் நல்ல ரசீது அடித்து தான் வசூல் செய்யப் பட்டது! வசூல் செய்த கிளை நிர்வாகிகளின் செயல் தலைமைக்கு தெரிய வந்த போது உடனடியாக தலையிட்டு திருப்பி தர உததரவிட்டோம்!   மேலப்பலயத்தில் உங்களின் ஃபத்வாவால்  ஊர்ப்பணம் 50 கோடியை  ஆட்டயப்  போட்ட  மோசடி  மன்னனோடு  அவனது  காரில்  வலம்  வந்த  பி .ஜே .&லுஹா  வை  முதலில்  மக்கள் பணத்தை மீட்டுக்  கொடுக்கச்  சொல்லுங்கள் .என்றோம்  இதுவரை  பதில்  இல்லை ! பல பள்ளிவாசல்களை திருடிய பக்காத் திருடர்கள் , எங்கள் இயக்கத்தையே திருடி தன குடும்ப பெயரில் கள்ளத்தனமாக பதிவு செய்த இயக்கத் திருடர்கள் எம்மை பார்த்து கேள்வி கேட்பது வெட்க கேடு!
இந்தியப்  பிறைதான் சரியானது என ஆய்வு செய்து முடிவு செய்து விட்டு இந்த வருடம் சத்தமில்லாமல் விட்டுவிட்டது ஏன்?
 மாவட்டப் பிறை. மண்டலப் பிறை, தத்தம் பகுதிப் பிறை, டவுன் காஜி  பிறையை கைவிட்டு தமிழகப் பிறைக்கு வந்த தக்லித் ஜமாஅத் முதலில் காரணம் சொல்லட்டும் !  
சுனாமி கணக்கில் ஊழல் நடந்ததற்கு விளக்கம் தர வேண்டும் என்று வீராவேசம் காட்டிய அப்துல் முஹைமீனிடம் கணக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு உன் தலைவனுக்குரியது. காரனம் கேமிரா, ஒளிபரப்பு, எடிட்டிங், விளம்பரம் என அனைத்தும் மீடியா வேல்டு தானப்பா பாத்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டு மொத்த சுனாமி காசு கணக்கையும் உன் தலைவர் பாக்கர் தான் பார்த்தார், அப்போது தான் 10 லட்சம் ரூபாய் கையாடல் நடந்தது என எல்லாவற்றையும் தெளிவாக எடுத்து வைத்தோம். இன்றுவரை பதில் இல்லை.
 உங்க கிட்ட சுனாமி ஊழலை வைத்துக் கொண்டுதான் த.மு.மு.க.வை சுனாமி திருடர்கள் என சொன்னீர்களா?   என அவர்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் நீங்கள் பதில் சொல்லுங்கள். மேலும் சுனாமி பணத்தில் உங்கள் இயக்கத்திற்கு கொடியும் , சீருடையும் தைத்ததை முஹைமின் நிருபித்தாரே  அவருக்கு  பதில்  சொல்லுங்கள்.
  இலங்கையில் பேரா.அப்துல்லா அவர்களுக்காக நட்த்தப்பட்ட மாநாட்டில் சட்டவிரோதமாக கலந்து கொண்ட இவர்கள் அங்கே ஒரு பிலிப்பைன்ஸ் சகோதரியை இஸ்லாத்திற்கு மாற்றுகிறோம் என்ற பெயரில் ஒரே ஒரு போட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை துரத்திய கொடுமைக்கு என்ன விளக்கம் என்று கேட்டோம் இன்று வரை பதில் இல்லை.
சட்டப்படி எங்கள்  பெயரை  போஸ்டர்  -இல் போட்டு கூட்டம் நடத்தினோம் என போஸ்டர் ஆதாரம் காட்டினோம் ! அதற்க்கு பதில் எங்கே? இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணை பி.ஜே.வின் அண்ணன் மருமகனின் உறவினர் தான் திருமணம் செய்துள்ளார் ! தேவை என்றால் அண்ணன் மகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள்.
 சேலத்தில் அரவாணிகள் சிலர் கூடி கும்மியடிப்பதற்காக ஒரு இயக்கத்தை தோற்றுவித்து அதற்கும் கூட பைலா என்ற அமைப்பு விதிகள் வைத்திக்கும் போது இதஜடி க்கு இன்று வரை பைலா இல்லையேப்பா அது ஏன் என்று கேட்டோம் . இன்றுவரை. பதில் இல்லை.
இரண்டு முறைக்கு மேல் பதவிக்கு வர மாட்டோம் ! என பைலாவை காரணம் காட்டி பாக்கரை நீக்கிய பின்  'தொடர்ச்சியாக தான் இரண்டு முறை வரக்கூடாது, இடையில் கொஞ்ச காலம் இல்லாமல் மீண்டும் பதவிக்கு வரலாம் ' என கொல்லைப் புற வழியாக பதவிக்கு பதவிக்கு வந்ததையும், சைபுல்லாஹ் விசயத்தில் பைலாவை காற்றில் பறக்கவிட்டதையும்  ஆதாரத்தோடு நிருபிதொமே! உங்கள் பைலாவையே   பின் பற்றாத நீங்கள் அடுத்தவன்  பைலா பற்றி பேசுவது வெட்க கேடு!  எங்களின் பைலா குரான் ஹதிஸ் மட்டுமே!·
இராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் என்கிற ரைசூதின் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை. முகவைத்தமிழன் எங்கள் நிர்வாகி இல்லை என அல்லாஹ்வின் மேல் ஆணையிட நாங்கள் தயார்! இ.த.ஜ.நிர்வாகிதான் என நீங்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிடத் தயாரா? 
 மதுரை செய்யது இப்ராஹீம் பொருளாளராக இருந்த நேரத்தில் செங்கிஸ்கான் ததஜவில் இருந்த போது 10 ஆயிரம் ரூபாயைத் திருடி அல்லாஹ் மீது சத்தியமாக நான் திருடவில்லை என்று சொல்லி அதை புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் ஒருவர் நிருபித்த போது, அன்றைய நிர்வாகிகள் செங்கிஸ்கானை ரூமுக்குள்ளே விட்டு செருப்பால் அடித்து ததஜவில் இருந்து தூக்கி வீசிய செய்தி உண்மையா என்று நேரடியாகவே செங்கிஸ்கானிடம் கேட்டோம். அதற்கு இன்றுவரை பதில் இல்லை.
 யார் செருப்படி வாங்கியது என அந்த இஸ்லாத்தை தழுவிய சகோதரரிடம் கேட்டுப் பாருங்கள் !கன்னத்தை தடவியபடி சொல்வார். இவர்களின் மாநில நிர்வாகி சாதிக் , மாவட்ட நிர்வாகி அன்வர் மற்றும் சேப்பாக்கம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் செருப்படி[!?] யாருக்கு விழுந்தது என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் முன்னிலையில் அவர்கள் இடத்திலேயே உள்ளே நுழைந்து அடித்த  என்னை பார்த்து திருடன் என்று சம்பந்தப்பட்ட சேப்பாக்கம் கிளை அல்ஹுதா நிர்வாகிகளை சொல்லச் சொல்லுங்கள்.
காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.
காரைக்குடி பெண் விஷயம் பற்றி சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகி செல்வம் அப்போதே அளித்த பதில் எமது தளத்தில் உள்ளது! சரி நீதி கேட்டு இவர்களிடம் வந்த அந்த 'கலயாணம் பண்ணாமல் ஒரு ஆணோடு குடும்பம் நடத்திய குணவதி'   இப்போ எங்கே  என கேட்டுச் சொல்லுங்கள்! 
இதற்கெல்லாம் என்ன பதில் என்று தக்ளித் ஜமாத் யோக்கியர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். அத்தோடு பொய்யர் பி.ஜே.வின் மார்க்க முரண்பாடுகளை  தினமும் பட்டியல் இடுகிறோமே அதற்க்கும் பதிலை கேட்டு சொல்லுங்கள்.

நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா!


நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்;

 பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அறிஞர் பீஜே அவர்கள், ஒரு ஹதீஸை வைத்து ஒரு சட்டம் சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பின்னாளில் அவரே  அதே ஹதீஸை பலவீனம் என்று சொல்லி வேறு சட்டம் சொன்னால் அதையும் அப்படியே ஆமோதிப்பதையும்  அவரது அபிமானிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு காரணம் பீஜேயிக்கும்  தவறு ஏற்படும் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு, அவர் சொல்லும் அனைத்தையும் சரி காண்பது அவருக்கு தவறே ஏற்படாது என காட்டுவதாகவே  பீஜேயின் அபிமானிகளின் செயல்பாடுகள் உள்ளது. ஆனால் பீஜே ஒரு சாமான்யனுக்கு புரிந்த விஷயத்தைக் கூட புரியாமல் பல விஷயங்களில் ஃபத்வா வழங்கக் கூயயவர் என்பதற்கு ஒரு சான்று;
 
நபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் சராசரி முஸ்லிமும் அறிந்த ஒன்றாகும். ஆனால் பீஜே இது குறித்து வழங்கிய ஃபத்வா பாரீர்;
 
  • நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று எழுதி இருந்தீர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது “ரஸுலுல்லாஹ்” என்ற வார்த்தையைக் காபிர்கள் ஆட்சேபணை செய்த போது தங்கள் கையாலேயே அந்த வார்த்தையை அழித்ததாகக் கூறப்படுகிறதே! குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? இதில் எது உண்மை?

K.A. முஹம்மது கோரி, த.பெ.எண். 6930, ஜித்தா.
இரண்டுமே உண்மைதான், குறிப்பிட்ட சில வார்த்தைகள் படிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. என் மகனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் அவர் பெயரை Mohamed என்று எழுதுவான். அவன் பெயர் ஆங்கிலத்தில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் சரியாகக் கண்டு பிடித்து விடுவான். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது.
எழுதவும், படிக்கவும் தெரியாத எத்தனையோ கிராமவாசிகள் தங்கள் கையெழுத்தை மட்டும் போடுவார்கள். அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று கூற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இந்தக் கருத்தில் தான். அந்த மொழியில் உள்ள எல்லா சொற்களையும் எல்லா வார்த்தைகளையும் அவர்களால் எழுதவோ, படிக்கவோ இயலாது. அவர்கள் ஒரு சில சொற்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.1987 மே,அந்நஜாத்
 
மேற்கண்ட பீஜேயின் ஃபத்வாவில், நபி[ஸல்] அவர்களுக்கு  எழுதப் படிக்கத் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சில சொற்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று கூறியுள்ளார். இவரின் கூற்றுபடி நபி[ஸல்] அவர்கள் குறிப்பறிந்து அழித்தது 'முஹம்மது' என்ற வார்த்தை என்றால் ஓரளவு இவரது கூற்றில் அர்த்தமிருக்கும். ஆனால் நபியவர்கள் அழித்தது அல்லாஹ்வின் தூதர் என்ற வார்த்தையாகும். அவ்வாறாயின்  தனது பெயர் அல்லாத வேறு சொற்களையும் நபி[ஸல்] அறியக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று பீஜே சொல்ல வருகிறாரா? சில சொற்களை நபியவர்கள் அறியக்கூடியவராக இருந்தார்கள் என்றால் இறைவன் 'உம்மி நபி' என்று சொன்னதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே, குர்'ஆன் வசனத்திற்கு எதிராக போய் விடுமே என்றெல்லாம் கூட பீஜே கவலைப்படவில்லை. ஆனால் உண்மை நிலை என்ன? நபி[ஸல்] அவர்களுக்கு எழுதவோ- படிக்கவோ- வார்த்தைகளை அறிந்து கொள்ளவோ[ அது முஹம்மத் என்பதாக இருந்தாலும்] அவர்களுக்கு தெரியவே  தெரியாது. அப்படியாயின் ஒரு வார்த்தையை நபியவர்கள் அழித்தது எப்படி? இதோ விடை;
 
பராஉ(ரலி) அறிவித்தார்.

(ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாள்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) எழுதலானார்கள். அப்போது அவர்கள், 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தமாகும்" என்று எழுதினார்கள். மக்காவாசிகளில், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்று) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, 'இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்த சமாதான ஒப்பந்தம்' என்று எழுதுங்கள்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்" என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன்" என்று மறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்" என்று கேட்டார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும் படி கூறுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ(ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆமாம் (புறப்பட வேண்டியது தான்)" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். நூல்; புகாரி எண்; 3184 ]
 
அலீ[ரலி]அவர்கள் சம்மந்தப்பட்ட வார்த்தையை அடையாளம் காட்டிய பின்பே நபியவர்கள் அதை அழித்தார்கள் என்று புகாரியிலேயே ஹதீஸ் இருக்கும் போது அதைக் கூட கவனிக்காமல் இவர் ஃபத்வா வழங்குகிறார் என்றால் இவரது பொடுபோக்கை விளங்கிக் கொள்ளலாம்.
 
குறிப்பு; வழக்கம் போல இப்போது இந்த விஷயத்திலும் பீஜே தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டார்  என்றாலும், இவர் மார்க்க சட்ட விஷயத்தில் எவ்வளவு மேம் போக்கானவர் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே இங்கே இதை பதிவு செய்கிறோம். எனவே பீஜே சொல்லும் சட்டத்தை அப்படியே நம்பி விடாமல் ஆய்வு செய்து அங்கரிக்க வேண்டும். இல்லையேல் அமல்கள் பாழாகும் என்று அவரது அபிமானிகளுக்கு அறிவுறுத்துகிறோம்.

நெல்லை மாவட்ட போலீஸ் கமிஷனருக்கு திருக்குர்'ஆன் பரிசு!


நெல்லை மாவட்ட போலீஸ் கமிஷனருக்கு திருக்குர்'ஆன் பரிசு!

இதஜ கடையநல்லூர் கிளை இஃப்தார் நிகழ்ச்சி!




                       இதஜ கடையநல்லூர் கிளை இஃப்தார் நிகழ்ச்சி!


இதஜ'வின் மனிதநேய உதவிகள் வழங்கல்




                        இதஜ'வின் மனிதநேய உதவிகள் வழங்கல்


இதஜ தலைமையகத்தில் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்கும் இஃப்தார் நிகழ்ச்சி!

இதஜ தலைமையகத்தில் சமுதாயத் தலைவர்கள்
 பங்கேற்கும் இஃப்தார் நிகழ்ச்சி!


பெரிதாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.

Saturday, August 27, 2011

காயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்!


காயிப் ஜனாஸா தொழுகை தொழலாமா என்பதில் பீஜே தொடர்ந்து முரண்பட்டு  வருகிறார். இந்த மஸாயில் பிரச்சினையில் பீஜே'யின் முதல் பரிமாணம்;
கேள்வி: காயிப் ஜனாஸா தொழலாமா? ஹனபி மத்ஹப் கூடாது எனிகிறார்களே?  – T. ஷேக் ஜாகிர் ஹுஸைன், கடையநல்லூர்.
பதில்: தொழலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு வஸல்லம் வெளியூர் சென்றிருந்த போது, உம்முஸஃது என்பவர் இறந்து விடுகிறார். ஒரு மாதம் கழித்து மதீனா வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள், காயிப் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என்று திர்மிதீயில் ஹதீஸ் உள்ளது. இன்னும் பைகஹீ தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் காயிப் ஜனாஸா பற்றி ஹதீஸ்கள் உள்ளன. இவைகள் காயிப் ஜனாஸாத் தொழலாம் என்று தெளிவாகக் காட்டுகின்றன. [1986 அக்டோபர் அந்நஜாத்]
மேற்கண்ட ஃபத்வாவில் காயிப் ஜனாஸா கூடும் என்பதற்கு திர்மிதி உள்ளிட்ட ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது என்று கூறிய பீஜே, பின்னாளில்  காயிப் ஜனாஸா கூடாது என்ற சட்டத்தை அறிவித்தார். அப்படியாயின் கூடும் என்பதற்கு ஆதாரமாக இவர் வைத்த ஹதீஸ்களின் நிலை குறித்த இவரின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், அந்த ஹதீஸ்களை கண்டு கொள்ளாமல் காயிப் ஜனாஸா கூடாது என்று அவர் வழங்கிய ஆய்வை[?] படிக்க இங்கே கிளிக் செய்க; http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/kayip_janaasa_eppothu/
முந்தைய ஃபத்வாவில், ஒருமாதம் கழித்து நபியவர்கள் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள் எனவே கூடும் என்றவர், பிந்தைய பத்வாவில்,  தொழுகை நடத்தப்பட்ட ஒரு ஜனாஸாவுக்கு மீண்டும் ஜனாஸா தொழுகை கூடாது என்கிறார். இதிலாவது இவர் உறுதியாக உள்ளாரா என்றால் இல்லை. காயிப் ஜனாஸா விசயத்தில் இவர் [அதாவது இவரது கண்ணசைவில் செயல்படும் ஜமாஅத்] மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதை படியுங்கள்;
உணர்வு வார இதழில், [15;42 ] ''காயிப் ஜனாஸா தொழுகை' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
''நல்ல கவுண்டன் பாளையம் தவ்ஹீத் கல்லூரி ஆலிமா ஒருவர் மரணித்துவிட, நபிவழியின் அடிப்படையிலேயே அவருக்கான இறுதிக் காரியங்கள்  அனைத்தும் நடக்கவேண்டும் என்று மரணித்தவரின் தாயார் உள்ளிட்டோரின் வேண்டுகோளை புறந்தள்ளி, சுன்னத் ஜமாஅத்தினர் ஜனாஸா தொழுகை நடத்தி விட்டார்களாம். பிறகு பீஜே ஜமாஅத்தினர்,மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி தனியாக, இறந்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக காயிப் ஜனாஸா [பிரேதம் இல்லாமல் நடத்துவது] தொழுகை நடத்தினார்களாம்.
மேற்கண்ட செய்தியை கவனமாக  படியுங்கள். ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்ட ஒரு பெண்ணிற்கு இவரது ஜமாஅத், மீண்டும் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளது. இந்த செய்திக்கும் பீஜேயிக்கும் சம்மந்தமில்லை  என்று கூறி தப்பிக்க முடியாது. ஏனெனில்,மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி  [மாநிலத் தலைவர் பீஜேயின் ஆலோசனையின் படி]   நடந்துள்ளது.
மேற்கண்ட விஷயங்களை மாச்சர்யமின்றி படித்தால், இவர் ஒரு மஸாயில் பிரச்சினையில் நாளுக்கொரு அவதாரம் எடுப்பவர் என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

நபியும்-ரசூலும் ஒன்றா? பீஜே அன்றும்-இன்றும்!


அறிஞர் பீஜே, நபியும்- ரசூலும் ஒன்றுதான் என்ற கொள்கையை இப்போது கொண்டிருக்கிறார். இதே அறிஞர் பீஜே நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று அன்று வழங்கிய ஃபத்வா'வை கீழே படியுங்கள்;
 
கேள்வி: நபி, ரசூல் வேறுபாடு என்ன? நபிமார்கள் எத்தனை? ரசூல்மார்கள் எத்தனை? K.நதீம் அஹ்மது, ஆம்பூர்.
 
பதில்: முந்திய சமுதாயத்துக்கு இருந்த சட்டங்களில் சில மாறுதல்களுடன் புதிய சட்டங்கள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட இறைதூதரை ரசூல் என்று கூறுகிறோம். ஒரு ரசூல் கொண்டு வந்த சட்டங்கள் மறக்கப்பட்டு விட்ட கால கட்டத்தில் அந்தச் சட்டங்களுக்குப் புத்துயிர் ஊட்ட இறைவனால் அனுப்பபட்டவர் நபி எனப்படுவார். எண்ணிக்கை பற்றி பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அல்லாஹ் அனுப்பிய அனைவரையும் ஏற்றுக் கொள்வதாகப் பொதுப்படையாக நாம் நம்பிக்கை  கொள்ளவேண்டும். அல்லாஹ்வும், அவனது ரசூல் என்று கூறினார்களோ அவர்களை அவ்வாறே ஏற்க வேண்டும்.
-அந்நஜாத் 1986 ஆகஸ்ட்
 
மேற்கண்ட ஃபத்வா'வில் நபி வேறு; ரஸூல் வேறு என்று தெளிவாக குறிப்பிடுகிறார் பீஜே. மேலும் தனது இந்த தீர்ப்பு குர்'ஆனின் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் பீஜே கூறுவதை கீழ்கண்ட ஃபத்வா'வில் படியுங்கள்;
 
ரசூல், நபிக்கு உள்ள வேறுபாட்டைச் சென்ற இதழில் எழுதி இருந்தீர்கள்! அந்த விளக்கம் குர்ஆன், ஹதீஸிலிருந்து பெறப் பட்டதா?
S.A. இப்னு அப்துல்லா, அம்மாபட்டினம்.
ஆமாம்! குர்ஆனிலிருந்து பெறப்பட்டதுதான்.
“நாம் தவ்ராத்தை இறக்கியருளினோம். அதில் நேர்வழியும் பிரகாசமும் உண்டு. அதைக் கொண்டு பல நபிமார்கள் தீர்ப்பு வழங்குவர்” (அல்குர்ஆன் 5:44)
இந்த இறைவசனம், “மூஸா” என்ற ரசூலுக்கு அருளப்பட்ட தவ்ராத்தை அடிப்படையாகக் கொண்டு, பல நபிமார்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்” என்று தெளிவாகின்றது.
-அந்நஜாத்1986 அக்டோபர் 
நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்றும் குர்'ஆன் அடிப்படையில் இருவரும் வெவ்வேறானவர்கள் என்றும் தீர்ப்பளித்த பீஜே, இன்று நபியும் ரசூலும் ஒன்றே என்று வாதிடுவதை இந்த இணைப்பை கிளிக் செய்து படியுங்கள்;
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/398/
அன்று நபி வேறு; ரஸூல் வேறு என்று ஃபத்வா வழங்கும் போதும் தனது கூற்றுக்கு குர்'ஆனை ஆதாரம் வைத்தார். இன்று அந்த 5:44வசனத்தின் அர்த்தம் மாறி விட்டதா? அல்லது அந்த வசனம் குர்'ஆனிலிருந்து மறைந்து விட்டதா? இப்போது நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று கூறுவதற்கும் வேறு பல குர்'ஆன் வசனங்களை ஆதாரமாக வைக்கிறார்.
 
இவர் சில சட்டங்களை மாற்றியது குறித்து கேள்வி எழுப்பினால், ''சம்மந்தப்பட்ட இந்த ஹதீஸ் இப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது; உடனே மாற்றிக் கொண்டேன் என்பார். ஆனால் இந்த நபி-ரஸூல் பிரச்சினையில் அன்றும் சரி, இன்றும் சரி  குர்'ஆன் வசனங்களை வைத்தே இரு வேறு முரண்பட்ட தீர்ப்பை வழங்குகிறார். அவ்வாறாயின் நபியும்-ரசூலும் ஒன்றுதான் என்று கூறும் இந்த வசனங்கள் கூட இவரது கவனத்திற்கு இப்போதுதான் வந்ததா?
 
இதன் மூலம் ஒன்று தெளிவாக புலப்படுகிறது. இவர் அன்றும் இன்றும் தான் கொள்ளும் கருத்திற்கு ஏற்ப உள்ள வசனங்களை மட்டும் கையிலெடுத்து, கண்டபடி தீர்ப்பு வழங்கி, கண்ட நேரத்தில் மாற்றிக் கொள்பவர் என்பதற்கு இவரது இந்த நபி-ரஸூல் சட்ட முரண்பாடும் ஒரு சான்றாக திகழ்கிறது. சிந்திப்பவர்கள் இவரது முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள்.  

மன்னடி TO கோடம்பாக்கம்...! தடுமாறும் த.த.ஜ!


மன்னடி TO கோடம்பாக்கம்...!


சில மாதங்களுக்கு முன் .மு.மு. வின் ஆம்புலன்ஸ் ஒன்று சன்டி.வி.யில் ஒளிபரப்பாகும் நாடக தொடர் ஒன்றில் நடித்ததாக ..வின்இனையதளத்தில் படிக்க நேர்ந்தது.(பார்க்க: http://www.tntj.net/39694.html  ).
நாடகத்தில் நடிக்கும் தமுமுக ஆம்புலன்ஸ்
செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, July 1, 2011, 11:56
பொதுமக்களிடம் அவசர காலத்தில் நோயாளிகளுக்கு  சேவைசெய்யப்போகின்றோம் எனக் கூறி வசுல் செய்து ஆம்புலன்சைவாங்கியது நாடகத்தில் நடிக்க விடத்தானா?

சமூக சேவை செய்ய அர்ப்பணிக்கப்பட்ட ஆம்புலன்ஸ், நாடகத்தில்நடிக்க வைக்கப்பட்டதை குறைகூறி இருந்தனர்ஆனால் இன்றோ..ஜவின் சகர் நேரத்தில் ஒளிபரப்பப்படும் தவறான வாதங்களும்தக்க பதில்களும் நிகச்சியில், வரும் வெள்ளிகிழமை காலை 3:30மணியளவில் மூடநம்பிக்கையின் அடிப்படையில், முஸ்லிம்கள் செய்யும் அனாச்சாரங்களை விழிப்புணர்வு நாடகமாக(?) சில மூடர்களை நடிக்க வைத்து, ஒளிபரப்ப இருப்பதாக ஒரு வீடியோ கிளிப்பிங்கை காட்டினார்கள்!.

இந்த வீடியோ கிளிப்பிங்கில் காட்டப்பட்ட ஒரு காட்சியில்இரண்டுநபர்கள் பாவா வேஷம் பூண்ட நபரின் காலில் விழுவது போன்றும் ஒருகாட்சியை வைத்து (நடிப்பே என்றாலும் மனிதரின் காலில் விழலாமா?)உள்ளார்கள்மேலும் வேஷம் பூணுவது இஸ்லாத்தில்அனுமதிக்கப்பட்ட ஒன்றா?. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!மக்கள்செய்வதைத்தானே நாடகவடிவில் காட்டுகின்றோம் என்று சொல்லவருவீர்களேயானால்சினிமாவிலும் சீரியலிலும் மக்களின்நடவடிக்கையையே படமாக்கி காட்டுகின்றார்கள்!பின் அந்தநாடகத்தையும் நாம் ஆதரிக்க வேண்டிவரும்!.

சமுதாயத்தில் புரையோடிபோகியுள்ள அனாச்சாரங்களுக்கு எதிராக மார்க்க பிரசாரம் செய்ய வேண்டியதுதான்!. ஆனால் அதை நாடகவடிவில் சிலரை நடிக்க வைத்து, அதை படமாக்கி ஒளிபரப்ப மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?. அதற்கு குரான் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் என்ன ஆதாரம் என இவர்கள் விளக்குவார்களா?. மக்கள் கலைஇலக்கிய கலகம் போன்ற அமைப்புக்கள்தான் இது போன்று நாடக வடிவில் தங்களின் கொள்கைகளை பிரச்சாரமாக செய்வார்கள். இது இஸ்லாத்தின் வழிமுறை அல்ல!.

முஸ்லிம் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும், ஏகத்துவ பணிக்காகவும், ஜக்காத் போன்ற மார்க்க கடமைக்காகவும் வழங்கப்படும் நிதியை  இதுபோன்று நாடகத்திற்கு பயன்படுத்திவிட்டு பின், தவ்ஹீது ஜமாத்தின் பணிக்காக ஒருவருடத்திற்கு சுமார் 52 இலட்சம் தேவை உள்ளது. தவ்ஹீது ஜாமாத், நிதி சுமையில் சிக்கி தவிக்கின்றது எனவே பொதுமக்கள் தாரளமாக நிதி உதவி செய்யுங்கள் என்றால் எப்படி உதவி செய்ய முன்வருவார்கள்?. ஆக தவ்ஹீது ஜமாஅத் சிலரது தவறான நபர்களின் ஆலோசனையின் பெயரில், தவறான வழியில் செயல்பட ஆரம்பித்துள்ளதையே இது காட்டுகின்றது. இன்று தலைமையில் மூலம் ஒளிபரப்பப்படும் நாடகம், நாளை தமிழகத்தில் உள்ள அணைத்து கிளைகளிலும் வீதிதோறும் நடத்தப்படலாம்!.

எனவே சமூகத்திற்கு எதிரான அனாச்சாரங்களுக்கு மார்க்க பிரசாரத்தை மக்களிடையே இதுபோன்று நாடக வடிவில் கொண்டு செல்வதை உடன் நிறுத்த வேண்டும்!. (இல்லை எனில்) இந்த நாடகத்தில் எந்த ஒழுக்க கேடும் இல்லை. மக்களின் நடவடிக்கையைத்தான் காட்சியாக்கி காட்டுகின்றோம் என்று சொல்ல வருவீர்கலேயானால், நாளடைவில் இக்காட்சிகளில் சிறு சிறு அனாச்சாரங்கள் தலை தூக்க ஆரம்பிக்கும். பின் அதுவே வழிகேட்டில் கொண்டு சென்று விடும் என்பதை மனதில் கொண்டு, இதுபோன்று அனாச்சாரங்களுக்கு எதிராக ஒரு அனாசாரத்தையே மக்களிடையே கொண்டு செல்வதை த,த.ஜவினர் உடன் நிறுத்த முன்வருவார்களா?. இதை மற்ற இயக்க மக்கள் கண்டிக்கும் முன், தவ்ஹீது சகோதரர்களே வன்மையாக கண்டிக்க வேண்டும்!.

இந்த நாடகத்தை ஒளிபரப்பாமல் தடுத்து நிறுத்த வேண்டும்!. அல்லாஹ்நாம் செய்த அணைத்து பாவங்களையும் இந்த புனித ரமளானில்மன்னித்து நம்மை நேர்வழியில் நடத்த துவா செய்தவனாக.

Wednesday, August 24, 2011

கலைஞர் டி.வி.யுடன் எனக்கு தொடர்பு இல்லை; கட்டுச் சோற்றுக்குள் மறைய முயலும் கனிமொழி.


கலைஞர் டி.வி.யுடன் எனக்கு தொடர்பு இல்லை;

 கட்டுச் சோற்றுக்குள் மறைய முயலும் கனிமொழி.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் காரணமாக கனிமொழி எம்.பி. கடந்த மே 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இருவரது ஜாமீன் மனுக்களும், அவை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில்  விசாரணையில் உள்ளது. சாஹித் உஸ்மான் பல்வாவின் டி.பி.ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பாக கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில்,சமீபத்தில் நீதிபதியிடம் பேசும்போது தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த கனிமொழி,  "கலைஞர் டி.வி.க்கும் எனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை. அந்த நிறுவனம் எப்படி இயங்குகிறது, அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது' என்று அவர் கூறியுள்ளார்.
கலைஞர் டிவிக்கும் தனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை என்று கனிமொழி எந்த அர்த்தத்தில் கூறுகிறார் என்று தெரியவில்லை. தான் அந்த டிவியின் பாங்குதாரர் இல்லை என்று சொல்ல வருகிறாரா? அவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் கனிமொழி பங்குதாரர் தான் என்று அவரது தந்தையே வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
“சன்” தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி – 18-10-2005 அன்று “சன்” தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட தொகை 100 கோடி ரூபாயில் – 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்திய பின் எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது என் இளைய மகள் கனிமொழி தனக்குக் கிடைத்த 2 கோடி ரூபாயை பங்குத்தொகையாக செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்கிறார் கலைஞர்.
 
பிறகு எதில் தனக்கு தொடர்பு இல்லை என்கிறார் கனிமொழி? நிர்வாக விஷயத்திலா? நிர்வாகத்தில் இவர் தலையிட்டாலும், தலையிடா விட்டாலும் பங்குதாரர் என்ற வகையில் ஒரு பெருந்தொகை கலைஞர் டிவிக்கு வந்தது தனக்கு தெரியாது என்பது கட்டுச் சோற்றுக்குள் கலைஞர் டிவியை மறைக்க முயல்கிறார் என்பதைவிட இவரே மறைய முயல்கிறார் என்பதுதான்  உள்ளங்கை நெல்லிக்கனியாக புலப்படுகிறது.








 -முகவை அப்பாஸ்.

கடவுள்கள் தோன்றிய வரலாறு; கண் முன்னே கடவுளான எம்.ஜி.ஆர்.


கடவுள்கள் தோன்றிய வரலாறு; கண் முன்னே கடவுளான எம்.ஜி.ஆர்.

ந்தியாவில் இருக்கும் மக்களை விட கடவுள் எண்ணிக்கை அதிகம் என்று நாத்திகர்கள் நகைச்சுவையாக மேடைகளில் குறிப்பிடுவதுண்டு.  ஆத்தல்- காத்தல்- அழித்தல் இவ்வாறான மூன்று பிரதானக் கடவுள்கள், பின்னர் இலாகா வாரியாக கடவுள்கள், பின்னர் முப்பத்து முக்கோடி தேவர்கள் என கணக்கிலடங்கா ஒரு பட்டியல் உண்டு. இது போக ஊருக்கு ஒரு எல்லைச்சாமியாக  கடவுள்கள்; அதுவும் காணாது என குடும்பத்திற்கேற்ப விதவிதமான குலதெய்வ கடவுள்கள். இதையும் தாண்டி நடப்பன- பறப்பன- ஊர்வனவைகள் அனைத்தும் கடவுள்களாக ஆக்கப்பட்டன. இவ்வாறெல்லாம் கடவுள்கள் பெருகியதற்கு இதற்கு காரணம் கடவுளின் இலக்கணம் என்ன என்பதை விளங்காத மக்கள் பெரும்பானமையாக வாழ்வதுதான்.
 
எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் ஒருவரால்,  சென்னையில் அவருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.. அக்கோயிலுக்கு பெயர்  "அருள்மிகு எம்.ஜி.ஆர்., ஆலயம், நத்தமேடு, என, முகவரி வெளியிடப்பட்டுள்ளது.  தனது மனதில் ஒரு மனிதரை நல்லவர் என கருதினால் அந்த  மனிதரை மதிக்கலாம். ஆனால் அவரை கடவுளாக்கி, அவருக்கு  கோயில் எழுப்பி கும்பாபிஷேகமும் நடத்தினால் கடவுள் எண்ணிக்கை  உயராமல் என்ன செய்யும்?
 
எம்.ஜி.ஆர், நாம் வாழும் காலத்தில் ஒரு தம்பதிக்கு மகனாக பிறந்து, நாடகம் சினிமாவில் சம்பாதித்து, அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடித்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து மறைந்த ஒரு சாதாரண மனிதர். இவர் இன்று கடவுளாக்கப் பட்டு  'அருமிகு எம்.ஜி.ஆர்' ஆக காட்சி தருகிறார் என்றால், வருங்காலத்தில் இவருக்கு தினமும் ஆறுகால பூஜைகளும், ஆடம்பர திருவிழாக்களும் எடுக்கும் கோயிலாக இது மாறும் என்பதில் ஐயமில்லை. ஆக மனிதன் என்னதான்  கணினியுகத்தில் இருந்தாலும், கடவுளின் இலக்கணத்தை மட்டும் அறிவதில் தோல்வியில் தான் இருக்கிறான் என்பதற்கு இது ஒரு நிதர்சன  சான்றாகத் திகழ்கிறது. இறைவனின் இலக்கணத்தை பற்றி இஸ்லாம் ரத்தினச் சுருக்கமாக சொல்வதை பாரீர்;





(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. 
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். 
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. 
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.  (112:1 ,2 ,3 ,4)
 
இறைவனுக்கு இலக்கணமாக இறைமறை கூறும் இந்த அளவுகோலை மனித சமூகம் கையிலெடுத்தால் ஒரு கடவுளைத் தாண்டி இன்னொன்று  உருவாக வாய்ப்புண்டோ..?

இந்தியாவின் ராஜபக்சே நரேந்திரமோடி சிக்குவாரா?


2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நர வேட்டை நரேந்திரமோடி - தனது ஆட்சி அதிகாரத் தின் முழுபலம் கொண்டு சிறுபான்மை மக்களைக் கொத்துக் கொத்தாக வேட்டையாடித் தாகம் தீர்த்தார். புரியும்படிச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் ராஜபக்சே என்றே வைத்துக் கொள்ளலாம்.

சிறுபான்மை மக்களின் வணிக நிறுவனங்கள் எல்லாம் கொடிய தீயின் நாக்குக்கு ருசியாகின.

கர்ப்பிணிப் பெண்கள்கூட இந்தக் காட்டு மிராண்டிகளின் கத்திக் குத்துகளுக்குத் தப்பவில்லை.

ஒன்பதாண்டுகள் உருண்டோடி ஓய்ந்து விட்டன. இன்னும் இந்தப் படுகொலைபற்றி விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரி இந்துத் துவக் கொடியவர்களால் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டார். அவரின் மனைவி ஜாகியா அம்மையாரின் கடும் முயற்சிக்குப்பிறகு உச்சநீதி மன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து விசாரணையை நடத்துமாறு உத்தரவிட்டது.

சிறப்புப் புலனாய்வுக்குழு குஜராத் முதல் அமைச்சர் மோடியைப் பல மணி நேரம் விசாரித்தது.

இந்த வழக்கில்  குஜராத் மாநில உளவுத்துறை முன்னாள் தலைவர் சஞ்சீவ்பட்டின் பிரமாண வாக்கு மூலம் மிகவும் முக்கியமானது.

காவல்துறை அதிகாரிகள் மத்தியில் முதல் அமைச்சராகவிருந்த நரேந்திரமோடி எத்தகைய ஆணைகளைப் பிறப்பித்தார் என்பதை எல்லாம் அவர் போட்டு உடைத்து விட்டார்.

இதுதான் சரியான சந்தர்ப்பம், முஸ்லீம்களைத் தண்டிக்க வேண்டும்? கலவரங்களைக் காவல்துறை கண்டு கொள்ளக் கூடாது என்று வாய்மொழி ஆணைகளைப் பிறப்பித்தார். முதல் அமைச்சர் என்கிற தகவல்களை எல்லாம் இந்த மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

இந்தக் காவல்துறை அதிகாரி மாத்திரம் அல்ல; கலவரத்தின் போது காவல்துறை உதவி டைரக்டர் ஜெனரலாக விருந்த ஸ்ரீகுமார் நானாவதி ஆணையத் தின் முன்னர் என்ன கூறினார்?

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. அவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை (FIR) போடப்பட்டு இருந்தும் உடனே விடுதலை செய்யப்பட்டனர். அரசுத் துறையின் வழக்கறிஞர்கள் இதற்குத் துணை போனார்கள்; சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னாரே!

குஜராத்தில் பெஸ்ட் பேக்கரி - படுகொலை சாதாரணமானதா? ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர்களை விறகு கட்டைகளைக் கட்டுவதுபோல கட்டி பேக்கிரியின் அடுப்பில் துடிக்கத் துடிக்கக் கொன்று குவித்தார்களே கொடூரக்காரர்கள் - அந்தக் குடும்பத்தில் தப்பிப் பிழைத்த ஜாஹிரா தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் நரேந்திரமோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிடவில்லையா?

14 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதி மன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததே!

வழக்கை குஜராத்திலிருந்து மும்பையில் நடத்த உத்தரவிட்டதே! இதில் என்ன கொடுமை தெரியுமா? வழக்குத் தொடுத்த அந்த ஜாஹிராவே பிறகு பல்டி அடித்துவிட்டார். இல்லை பல்டியடிக்க வைக்கப் பட்டாரே! எந்த நியாயத்துக்கும் தர்மத்துக்கும் கட்டுப்படாதவர்கள் பிஜேபி - சங்பரிவார்க் கும்பல்!

உச்சநீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு இப்பொழுது அறிக்கையைக் கொடுத்துள்ளது அல்லவா - அதன் நிலை என்ன தெரியுமா? அட்வகேட் ஜெனரல் அந்த அறிக்கையின் முக்கிய அம்சத்தைக் குற்றவாளிகளுக்குக் கசிய விட்டார் என்ற குற்றச்சாற்று எழுந்துள்ளது.

ஆர்.எஸ்.எசுக்கு ஆலோசகராக இருக்கக்கூடிய கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளைக்கும் அந்த ரகசிய அறிக்கை வந்து சேர்ந்ததாக என்.டி.டி.வி. போன்ற தொலைக்காட்சிகளிலேயே செய்தியாக வெளிவந்து விட்டது.

இன்னும் என்னதான் செய்ய மாட்டார்கள்? சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்ற ராமனின் பெயரால் ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கத் துடிப்ப வர்கள் ஆயிற்றே!

குஜராத் கலவர வழக்கில் மோடியும், மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியும் தண்டிக்கப்படாவிட்டால் நாட்டில் நீதிக்கும், சட்டத்துக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும் என்பது மட்டும் உறுதி! உறுதி!!
நன்றி; விடுதலை நாளிதழ் 18 ஆகஸ்ட் 2011


--