Friday, August 5, 2011

ததஜ தத்து எடுத்தது உண்மையானால்.....!

 ததஜ தத்து எடுத்தது உண்மையானால்.....!
        



ஏக இறைவனின் திருப்பெயரால்....
ஒரு நேரத்தில் அண்ணன் எது சொன்னாலும் தெய்வீகம் என்று எண்ணி இருந்த நம்
சகோதரர்களில் சிலர் இன்று அவர் மீதும் சந்தேகப்பார்வையை படர
ஆரம்பித்துவிட்டனர்.அதன் விளைவு தான் அவர்குறித்த கேள்விகளும் அவர் ஆட்டி
படைக்கும் அவரது அமைப்பு குறித்த கேள்விகளும் இன்று சரமாரியாக
சகோதரர்களால் தொடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு சகோதரரால் முஹைமின் என்ற சகோதரரிடம் "ஆன்லைன் பொய்ஜெ"என்ற
இணையதளத்தின் பெயர் மாற்றுவது குறித்த கேள்வி ஒன்று சமீபத்தில்
தொடுக்கப்பட்டது.அதற்க்கு அற்புதமான தலைப்பில் நிதர்சனமான உண்மையை
விளக்கமாக அளிக்கப்பட்டது.அந்த விளக்கத்தினால் விழி பிதுங்கி போன அண்ணன்
அண்ட் கோவினர் அது குறித்து ஓர் வியாக்கியானத்தை விளக்கமாக
அளித்திருந்தனர்.அதன் சாரம்சத்தை சற்று அலச விரும்புகிறோம்.



 பொதுமக்களின் பணத்தில் நடத்தப்படும் "ஆன்லைன் பொய்ஜெ"என்ற இணையதளம்
தனி நபர்ஒருவரின் ஆக்கிரமப்பின் பெயரில் இருக்கலாமா?என்பதுதான் நடுநிலை பேணும்
நல்லுள்ளங்களின் கேள்வி.அண்ணன் பெயர் வந்து விட்டாலே அப்பிலே இல்லை என்று
ஒரு வார்த்தையில் சம்மந்தப்பட்டவர்கள் விளக்கமளித்துவிட்டு
ஒதுங்கிருக்கலாம். காரணம் அவர்களின் விளக்கம் தவறாக இருந்தாலும் எந்த
தம்பிமார்களும் தட்டி கேட்டுவிடப்போவதில்லை.அதற்க்கு எதிராக
திரண்டுவிடப்போவதுமில்லை.நிலைமை இப்படி இருக்க சுற்றி வளைத்து விளக்கம்
என்ற பெயரில் உளறுவது ஏன்?
பொருளாதார சிக்கலால் "ஆன்லைன் பொய்ஜே"என்ற இணையதளம் தொடர்ந்து நடத்த
முடியாமல் போனதால் அப்பவே ததஜ அதை லீசுக்கு தத்து எடுத்துக் கொண்டது
அன்று முதல் தனி நபர் கட்டுப்பாட்டில் அது இல்லை ததஜ வின்
கட்டுப்பாட்டில் தான் உள்ளது.என்று கூறி பொது மக்களின் பணம் தனி நபர்
கையாளவில்லை என்ற ரீதியல் தனது வாதத்தை வைக்கின்றனர் அண்ணன் அண்ட்
கோவினர்.
"பொது மக்களின் பணத்தில் அவர்களின் நன்மை நாடி ஒரு இயக்கம்
இயங்குமேயானால் அது மக்களின் நன்மைக்காக  மற்றவர்களிடம் செய்துக்கொள்ளும்
ஒப்பந்தங்கள் குறித்து கண்டிப்பாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுவான
விதி".இதை புரிந்துக் கொள்வோமேயானால் பொய்யர்களின் முகத்திரையை எளிதில்
கிழித்து விடலாம்.

ஒருவர் சொந்தமாக இணையத்தளம் ஒன்றை நடத்துகிறார்.பொருளாதார சிக்கலால்
அவரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை அந்த தளத்தின் சேவையில் திருப்பதி
அடைந்த மக்கள் அதை தொடர்ந்து நடத்துவதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்ளும்
அதே வேளையில்,பொது மக்களின் பணம் தனி நபர் தின்பதா? கூடவே!கூடாது!என்ற
நல்ல எண்ணத்தில்..?மக்களின் சேவையே மகத்தான...!! சேவை என்றும் மறுமை
கூலியே உண்மையான கூலி...!! என்றும்கருதி செயல்படும் ஒரு இயக்கம்(?) அந்த
இணையதளத்தை தத்து எடுக்குமேயானால் அதன் விவரங்களை மக்களுக்கு அறிவித்து
தான்ஆகவேண்டும். அறிவிக்க முடியாது என்பது அயோக்கியத்தனம் ஆகும்.இதைதான்
இன்று ததஜ செய்திருக்கிறது.காரணம் பொதுமக்கள் என்பவர்கள் முதலிட்டாளர்கள்
அவர்களுக்கே தெரியாமல் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.
பித்னாகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து "சுரோளிங்' ஓடவிட்டு
அறிவிப்பு செய்யும் இவர்கள் இந்த முக்கியமான ஒப்பந்தத்தை மறைத்த மர்மம்
என்ன?

"ஆன்லைன் பொய்ஜே" என்ற தளம் யாரிடத்தில் உள்ளது என்று கூட தெரியாமல் வாரி
வாரி வழங்கி உள்ளனர் மக்கள்.அள்ளி!அள்ளி!கொடுத்த மக்களே! சிந்தியுங்கள்.
அடுத்து பொது மக்களின் பணத்தில் நடத்தப்படும் "ஆன்லைன் பொய்ஜே"வில் ததஜ
வின் மற்ற அறிஞர்களின் உரைகள் ஏன் பதியப்படுவதில்லை என்று கேட்டவுடன்
அவர்களுக்கென்று தனித்தளம் உள்ளது என்று கூறுகின்றனர்.அந்த தனி தளம்
எதுவென்று அவர்கள் விளக்க வேண்டும்.ததஜ தளம் தான் அது என்று
கூறுவார்களேயானால் அந்த தளத்தில்,பொய்ஜேவின் உரைகள் மட்டும் ஏன் பதிய
வேண்டும் அவருக்கென்று ஒரு தளம் இருக்க. ததஜ வில் அவர் அங்கம் வகித்தார்
அதனால் பதிந்தோம் என்றால் ததஜ வில் அங்கம் வகிக்காத காலகட்டத்திலும்
அதில் பதியப்பட்டதே!அதற்க்கு என்ன பதில்.

சரி இது அத்தனையும் போகட்டும் ததஜ ஆன்லைன் பொய்ஜே வை தத்து எடுத்தது
உண்மையென்றால் அந்த தளத்தோடு மற்ற அறிஞர்களின் உரைகள் அடங்கிய அந்த தனி
தளத்திற்கு இணைப்பு தருவார்களா?ஏனெனில் தினமும் ஐந்தாயிரம் பேர்
பார்க்கும்  ஆன்லைன் பொய்ஜே என்ற தளத்தோடு சேர்த்து மக்கள் அதையும்
பார்த்து பயனடையட்டுமே!இப்படி செய்தால் மட்டுமே ததஜவிடம் ஆன்லைன் அடக்கம்
இல்லையெனில் ததஜதான் ஆன்லைனிடம் அடக்கம் என்பது திண்ணம்.
-முபாரக்



0 comments:

Post a Comment