Tuesday, August 23, 2011

உங்களை கண்டபடி திட்டி எழுதுகிறார்களே...?

அசலாமு அலைகும்,

கடந்த 2 மாதமாக உங்களுடய வெப்சைடையும், PNTJ வெப்சைடையும்  கவனித்து கொண்டு வருகிறேன்.
 
நீங்கள் கேட்கபடும் எல்லா கேள்விகளுக்கும் அழகிய தமிழில் பதில் அளிகிறீர்கள். 

ஆனால் அவர்களின் பதில்,

அட அறிவு கெட்ட கிருக்குப்பய,அரைலூசு,புறம்போக்கு, கலுசடை, பன்னடை"  


போன்ற அறுவெறுகதக்க  வார்த்தைகளை பயன்படுதுகிறர்களே 

(அல்லாவின் பார்வையில்) இவர்களின் நிலை குறித்து  தங்களின் பதில்?

 
assalamu alaikkum !
அல்லாஹ்வின் அளப்பரிய கிருபையால் இரண்டு தளங்களையும் பார்க்கும் ஏராளமான உங்களைப் போன்ற சகோதரர்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்கள். மேலும்  நபி  ஸல்  கூறியுள்ளார்கள்  !

முனாபிக்குகளின்  அடையாளங்கள்   நான்கு 1 .பேசினால் பொய் பேசுவான்  ,வாக்களித்தால் மாறு செய்வான் , நம்பினால் மோசடி செய்வான்  , வழக்காடினால் வசை மொழி பேசுவான்.

நயவஞ்சகர்கள் நரகில் சேருவார்கள். இதுவே எமது நிலையாகும்!
 
-இவன் செங்கிஸ் கான்.


Best Regards,
Mohamed Rasik.S.
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..
கேள்வி : நீங்கள்  எழுப்பும்  கேள்விகளால் உங்களை கண்டபடி திட்டி எழுதுகிறார்களே!   இதை முறியடிக்க என்ன செய்யப் போகிறீர்கள்?

-அபூ யூசுப், மண்ணடி.

பதில் : அண்ணன் ஜமாஅத்தை  நோக்கி நாம் அழகிய முறையில் எழுப்பும்  கேள்விகளுக்கு பதிலளிக்க  முடியாமல், எம்மீது வசைமாரி பொழிகின்றனர். எந்த அளவுக்கென்றால் இனிமேல் எம்மை  திட்டுவதற்கு அவர்களிடத்தில் வார்த்தையே இல்லை என்று அவர்களே வருந்தும்  அளவுக்கு அனைத்து அநாகரிக, ஆபாசமான அத்தனை வார்த்தைகளையும் பயன்படுத்தி விட்டார்கள். ஆனாலும் நாம் நம்முடைய எழுத்துக்களில் சிறிதும் கண்ணியம் மீறமாட்டோம். ஏனெனில் நாம் தவ்ஹீத் என்ற பெயரில் எந்த ஒரு தனி மனிதனையும் பின்பற்றிக் கொண்டிருக்கவில்லை. அந்த தனிநபர் மீது கொண்ட பக்தியால் வரம்பு மீறி வார்த்தைகளை கொட்டுவதற்கு; 

மேலும் பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்ற இறை வாக்கினை இதயத்தில் தாங்கி, இவர்கள் எம்மீது வீசிய இழி சொற்களை எனக்கு நன்மையாக ஆக்கிட அல்லாஹ்விடம் பிராத்திப்பதே இவர்களுக்கெதிராக நாம் செய்யவிருக்கும் முயற்ச்சியாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
-அப்துல் முஹைமீன்.

0 comments:

Post a Comment