Wednesday, August 24, 2011

கடவுள்கள் தோன்றிய வரலாறு; கண் முன்னே கடவுளான எம்.ஜி.ஆர்.


கடவுள்கள் தோன்றிய வரலாறு; கண் முன்னே கடவுளான எம்.ஜி.ஆர்.

ந்தியாவில் இருக்கும் மக்களை விட கடவுள் எண்ணிக்கை அதிகம் என்று நாத்திகர்கள் நகைச்சுவையாக மேடைகளில் குறிப்பிடுவதுண்டு.  ஆத்தல்- காத்தல்- அழித்தல் இவ்வாறான மூன்று பிரதானக் கடவுள்கள், பின்னர் இலாகா வாரியாக கடவுள்கள், பின்னர் முப்பத்து முக்கோடி தேவர்கள் என கணக்கிலடங்கா ஒரு பட்டியல் உண்டு. இது போக ஊருக்கு ஒரு எல்லைச்சாமியாக  கடவுள்கள்; அதுவும் காணாது என குடும்பத்திற்கேற்ப விதவிதமான குலதெய்வ கடவுள்கள். இதையும் தாண்டி நடப்பன- பறப்பன- ஊர்வனவைகள் அனைத்தும் கடவுள்களாக ஆக்கப்பட்டன. இவ்வாறெல்லாம் கடவுள்கள் பெருகியதற்கு இதற்கு காரணம் கடவுளின் இலக்கணம் என்ன என்பதை விளங்காத மக்கள் பெரும்பானமையாக வாழ்வதுதான்.
 
எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் ஒருவரால்,  சென்னையில் அவருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.. அக்கோயிலுக்கு பெயர்  "அருள்மிகு எம்.ஜி.ஆர்., ஆலயம், நத்தமேடு, என, முகவரி வெளியிடப்பட்டுள்ளது.  தனது மனதில் ஒரு மனிதரை நல்லவர் என கருதினால் அந்த  மனிதரை மதிக்கலாம். ஆனால் அவரை கடவுளாக்கி, அவருக்கு  கோயில் எழுப்பி கும்பாபிஷேகமும் நடத்தினால் கடவுள் எண்ணிக்கை  உயராமல் என்ன செய்யும்?
 
எம்.ஜி.ஆர், நாம் வாழும் காலத்தில் ஒரு தம்பதிக்கு மகனாக பிறந்து, நாடகம் சினிமாவில் சம்பாதித்து, அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடித்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து மறைந்த ஒரு சாதாரண மனிதர். இவர் இன்று கடவுளாக்கப் பட்டு  'அருமிகு எம்.ஜி.ஆர்' ஆக காட்சி தருகிறார் என்றால், வருங்காலத்தில் இவருக்கு தினமும் ஆறுகால பூஜைகளும், ஆடம்பர திருவிழாக்களும் எடுக்கும் கோயிலாக இது மாறும் என்பதில் ஐயமில்லை. ஆக மனிதன் என்னதான்  கணினியுகத்தில் இருந்தாலும், கடவுளின் இலக்கணத்தை மட்டும் அறிவதில் தோல்வியில் தான் இருக்கிறான் என்பதற்கு இது ஒரு நிதர்சன  சான்றாகத் திகழ்கிறது. இறைவனின் இலக்கணத்தை பற்றி இஸ்லாம் ரத்தினச் சுருக்கமாக சொல்வதை பாரீர்;





(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. 
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். 
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. 
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.  (112:1 ,2 ,3 ,4)
 
இறைவனுக்கு இலக்கணமாக இறைமறை கூறும் இந்த அளவுகோலை மனித சமூகம் கையிலெடுத்தால் ஒரு கடவுளைத் தாண்டி இன்னொன்று  உருவாக வாய்ப்புண்டோ..?

0 comments:

Post a Comment