Tuesday, December 27, 2011

சென்னை சேரி பகுதிகளில் இதஜவின் இஸ்லாமிய அழைப்புப் பணி!


சென்னை சேரி பகுதிகளில் இதஜவின் இஸ்லாமிய அழைப்புப் பணி!

இஸ்லாம் காட்டித்தந்த உன்னத பணியான தஃவா எனும் அழைப்புப் பணியை தனது தலையாய பணியாக செய்யும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்  அனைவரும் அழைப்புப் பணியினை பல வழிகளிலும் செய்து வருகின்றனர்.
மண்டபங்களிலும், மாபெரும் மாநாடு பொதுக் கூட்டங்களிலும் மட்டுமே மார்க்கத்தை சொல்லும் அழைப்பாளர்களுக்கு மத்தியில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தாயிக்கள்    மருத்துவமனை, பூங்கா, கடற்கரை, கோயில்கள், சர்ச்கள் மற்றும் சேரிகள் மற்றும் மாற்று மத மக்கள் குடி இருக்கும் வீடுகள் தோறும் சென்று இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆன் மற்றும் கண்ணியத்திற்குரிய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகள் அடங்கிய அழகிய நூல்களை வழங்கி அழைக்கின்றனர்.
இன்றைய தினம் [22.12.11] சென்னை பல்லவன் இல்லம் அருகில் உள்ள சேரிகளுக்கு சென்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் துணைத் தலைவர் முனீர், மாநில பேச்சாளர் முகைதீன் லாக் நகர் யூசுப், சேப்பாக்கம் கலீல் ரஹ்மான் திருவல்லிக்கேணி நசிர், முத்து இப்ராகிம்  உள்ளிட்ட தஃவா குழுவினர் வீடு வீடாக சென்று இஸ்லாமிய அழைப்புப் பணியினை செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
அஸர் மற்றும் மக்ரிப் தொழுகைகளை ஆள் அதிகமற்ற அங்குள்ள பிரம்மாண்டமான கவர்னர் பாடி கார்டு பள்ளிவாசலில் தொழுத போது 7000 பேர் வசிக்கும் அந்த சேரியில் இஸ்லாமிய வசந்தம் வீசினால் அங்கிருக்கும் நாற்றம் மறைவதோடு அந்தப் பள்ளியும் நிறையும் எனும் எண்ணம் ஏற்பட்டது!     இன்ஷா அல்லாஹ்!  

Sunday, December 25, 2011

பிரதமர் வருகையால் பள்ளியில் தொழத் தடை! INTJ கண்டனம் .


பிரதமர் வருகையால் பள்ளியில் தொழத் தடை! INTJ கண்டனம் .

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாத்திமா பீவி கவர்னராக இருக்கும் போது ஒரு பள்ளி வாசல் கட்டப்பட்டு அங்கு பணிபுரியும் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அப்பகுதி முஸ்லிம்களும் தொழுது வருகின்றனர்.


தற்போது பிரதமரின் வருகையை ஒட்டி அந்தப் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்கள் உள்ளே சென்று தொழத் தடை விதித்து பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி செய்துள்ளனர்.


இது பற்றி பகுதி முஸ்லிம்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தகவல் தர மாநிலப் துணை பொது செயலாளர் செய்யது இக்பால் காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களிடம் கேட்ட போது , அது எங்களின் தவறு அல்ல !தற்போது அந்த கவர்னர் மாளிகை மத்திய பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டப்பாட்டில் உள்ளது !   இன்று மதியம் லுஹர் தொழுகைக்கு வழக்கம் போல் அனுமதிக்கப் படும் !   என சொன்ன போது இக்பால் தனது கண்டனத்தை காவல் துறை அதிகாரிகளிடம் பதிவு செய்தார்.

கண்டன சுவரொட்டி  

                        பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய   கண்டன  அறிக்கை 
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் துரோகத்தால் பாபர் மஸ்ஜிதை இழந்த முஸ்லிம்கள் தற்போது காங்கிரஸ் பிரதமரால் இரண்டு நாள் வழிபாட்டு உரிமையை இழந்துள்ளனர். இவர்கள் ஆட்சியில் இரண்டு நாள் என்றால் நாளை அத்வானியோ, மோடியோ அந்த பிரதமராக வந்தால் நம் நிலை என்ன ? இந்திய அரசியல் சட்ட சாசனப்படி நம் வழிபாட்டு உரிமையை மறுக்க எந்தக் கொம்பனுக்கும்   அதிகாரமில்லை என்பதை ஆளும் வர்கத்திற்க்கு அறிவிக்கவேண்டும் ! காங்கிரஸ் கட்சிக்கு நம் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும். -செங்கிஸ் கான்.

அல்லாஹ்வின்   பள்ளியில் அவன் பெயர்   கூறி, அவனை துதிப்பதை தடுப்பவனை விட அநியாயக்காரன் யார்? அல்-குர்ஆன் [2;114] 

சேப்பாக்கத்தில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம்.

சேப்பாக்கத்தில்  ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம். 

பல்வேறு நலப் பணிகளை செய்து வரும் சேப்பாக்கம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஏழைகளுக்குரிய குர்பானி தோல்களை வசூலித்து அதன் மூலம் வாழ்வாதார உதவிகளை வருடந்தோறும் வழங்கி வருகிறது!
இந்த ஆண்டு அந்தப் பகுதியை சேர்ந்த ஏழை பெண் ஒருவர் தனக்கு ஒரு தையல் இயந்திரம் தந்தால் தன்னுடைய வருவாயை ஈட்டிக் கொள்ள முடியும் என கோரியதன் அடிப்படையில் நேற்று சேப்பாக்கம் பகுதி செயலாளர் 
  யூசுப் லாக் நகர் தவ்ஹீத் பள்ளியில் வைத்து இந்த இயந்திரத்தை வழங்கினார்.






திருச்சியில் கொள்கை சகோதரர்களின் குமுறல்கள் -2 அதிரை அன்வர்

எஸ்.எஸ்.யு.சைபுல்லாஹ் தலைமையில் திருச்சியில் நடந்த தவ்ஹீத் மர்கஸ்கள்-தாயிக்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் 
     கொள்கை சகோதரர்களின் குமுறல்கள் -2 அதிரை அன்வர்


INTJ மதுரை மாவட்டத்தின் மகத்தான பணிகள் .

INTJ மதுரை   மாவட்டத்தின்  மகத்தான  பணிகள் .

மதுரை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மூத்த நிர்வாகிகளின் வழிகாட்டலின் பேரில் தேர்ந்தெடுக்கப் பட்ட இளைங்கர்களை கொண்ட புதிய நிர்வாகம் பல்வேறு மக்கள் பிரச்னைகளைக் கையில் எடுத்து மகத்தான பணிகளை ஆற்றி வருகிறது.அவைகளில் சில உங்கள் பார்வைக்கு !

ஐக்கிய ஜமாஅத் ஏற்பாடு செய்த முல்லை பெரியாறு குறித்த முஸ்லிம்கள் நிலைப்பாடு குறித்து உரை நிகழ்த்தும் INTJ பேச்சாளர்  


இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மதுரை MMC கிளை துவக்க நிகழ்ச்சியின் போது...
 '                
                  சத்திய மார்க்கம்' எனும் அழைப்புப் பணியின் மாதாந்திர பிரசுரம்.

                 
                   பள்ளிவாசல் அருகில் மதுக்கடை அகற்றக் கோரி சுவரொட்டி!
                       
                       மதுக்கடையை மூட வைத்த  முற்றுகைப் போராட்ட்டத்தில்


சமூக நல்லிணக்க இரத்ததானத்தின் போது நிர்வாகிகள் & மருத்துவ குழுவினர்.




                            அல்ஹம்து லில்லாஹ் ! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

குருதி மக்களுக்கு குரான் உங்களுக்கு' இறை மறை நிகழ்ச்சியான சேப்பாக்கம் இரத்த தான முகாம்.

இறை மறை நிகழ்ச்சியான சேப்பாக்கம் இரத்த தான முகாம். 

 எங்கும் தஃவா எதிலும் தாஃவா எனும் தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாத்தின் மீதான ஊடகங்களின் தீவிரவாத பிரசாரத்தை மாற்றும் முகமாக 'இஸ்லாம் இரத்தத்தை வோட்டும் மார்க்கமல்ல மற்ற மக்களுக்க்ளுக்காக இரத்தத்தை கொடுக்கும் மார்க்கம் என்று நிருபிக்கும் முகமாக இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சமுக நல்லிணக்க இரத்த தான முகாம்கள் நடை பெற்றது.
அதில் சேப்பாக்கம் லாக் நகரில் நடந்த ரத்ததான முகாமில் எராளமான முஸ்லிமல்லாத மக்கள் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.
 'குருதி மக்களுக்கு குரான் உங்களுக்கு' 
என இரத்ததானம் செய்த அனைத்து முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கும் திருமறை தமிழாக்கம் வழங்கப் பட்டது.  அதைப் பெற்றுக் கொண்ட சகோதர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் 'இது வரை குரானை படிக்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது! அதை யாரிடம் கேட்பது என்ற தயக்கம் இருந்தது!' அந்த ஏக்கத்தை போக்கிய இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு நன்றி!
என்று கூறிய போது இன்னும் எத்தனை பேர் இப்படி ஏங்கி இருப்பார்கள் ? இன்ஷா அல்லாஹ் இறுதி வேதத்தை எப்பாடு பட்டாவது இந்த மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் எனும் உறுதி ஏற்ப்பட்டது.    










                                                  சபரி மலைக்கு மாலையணிந்த
                                  சகோதரரிடம் ஓரிறை   பற்றி,  இறை மறை பற்றி

                                ஊனம் உதவிக்கு தடையல்ல எனும் சகோதரர் சாகுல்

Saturday, December 24, 2011

ஏன் இந்த கொ[ல]ள்கை வெறி? பொய்யர்களுக்கு புத்திமதி சொல்லும் முஹம்மத் அலி IPS


ஏன் இந்த கொ[ல]ள்கை வெறி? பொய்யர்களுக்கு  

புத்திமதி சொல்லும் முஹம்மத் அலி IPS

சென்ற 2010 ஜூலை மாதம், 'சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு' என்ற கட்டுரையும், அதே வருடம் நோன்பு நேரத்தில், 'தஞ்சை மாவட்டத்தில் திருவிடைசேரி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பந்தமாக, 'கண்கள் குலமாகுதம்மா சகோதர யுத்தம் கண்டு' என்ற கட்டுரையும் மின் அஞ்சலில் வெளியிட்டும், சமுதாய ஊடகங்களிலும் வெளி வந்தன பலர் அறிந்திரிப்பீர்கள்
முபெல்லாம் கதைகள், கட்டுரைகளைப் பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் காசு கொடுத்து வாங்கிப் படிப்போம். தற்போது அசூர வேகத்தில் சுழலும் மின்சார உலகில் பல்வேறு அலுவல்களுக்கிடையே
சில நிமிடங்களிலேயே பல்வேறு நாடுகளிலிருந்து நண்பர்கள்,
உறவினர்கள், உடன் பிறந்தோர், அறிவு ஜீவிகள், மார்க்க அறிஞர்கள் போன்றோர்களிடம் இருந்து செய்திகளைப் பெற மின் அஞ்சல் மிக இன்றியமையானதாக ஆகி விட்டது. ஆனால் அதேமின் அஞ்சலை தங்களது சொந்த விருப்பு, வெறுப்பினை தரம் தாழ்ந்து கொட்டித் தீர்ப்பது சரிதானா என்பதே என் கேள்வியே?

20.12.2011 அன்று மின் அஞ்சலை திறந்து ஒவ்வொன்றாக படித்துக் கொண்டு வந்தேன். அதில் புனித குரான் தமிழ் விளக்கம்,ஹதீசுகள், தவா நடவடிக்கைகள், நோயிற்றிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ உதவி, துவா கேட்டல், பல்வேறு மவுத்து செய்திகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கான விளம்பரங்கள், வெளி நாட்டில் வாழும் ஈமான்தார் ஆக்கப் பூர்வமான செயல்கள் போன்றன வந்திருந்தது கண்டு, ஆகா மின் அஞ்சல் எந்த விதத்தில் நமது சகோதரர்களை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது என்று எண்ணி மகிழ்ந்து இருக்கும்
வேலையில்,அனைவருக்கும்அனுப்பட்டஒரு மின்அஞ்சல் மட்டும்
என்னை திடுக்கிடச் செய்தது. அது என்ன என்று நீங்கள் அறிய உங்களுக்கு
ஆவல் இருப்பது நியாயமே!
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் கடைப் பிடிக்க தமிழ் இலக்கியம் கூறுவது, 'இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகும்'
ஏன் ரசூலல்லாவும் அவர்களது தோழர்களும் எந்த நேரத்திலும் தரம் தாழ்ந்த வார்த்தைகளை உபயோகித்ததில்லையே!
ஆனால் ரசூலல்லா வழி வந்த நாம் மட்டும் நல்ல சொற்கள் இருக்க நாறச் சொற்களை மின் அஞ்சலில் உபயோகிக்கலாமா
என்பதே என் கேள்வியே!

அதுவும் எப்படிப் பட்ட கடுஞ் சொற்கள் என்றால் ஒரு இயக்கத்தினர் அடுத்த இயக்கத்தினவரினை காதில் கேட்க முடியாத
சொற்களைக் கொண்டு வசை பாடி இருந்தனர். அது என்ன காதில் கேட்க முடியாத சொற்கள் என்று கேட்கலாம். வேற்று இயக்கத்தின் தொண்டர் ஒருவரின் மனைவியினை அடுத்தவருக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாகவும், அந்த நபர் அடுத்தவருடன் ஹோமோ செக்ஸ்சில் ஈடுபட்டதாகவும், அந்த இயக்கத்தினர் காதல் களியாட்டங்களில் ஈடு படுவதாகவும், மின்அஞ்சல் திருட்டுச் செய்வதாகவும் மனம் போன போக்கில் சொல்லப் பட்டிருந்தது. 

கல்லூரி மாணவனாக இருந்திருந்தால், 'மஞ்சள் பத்திரிக்கை மற்றும் கிளு கிளுப் பூட்டும் செய்திகள் படிபதிற்கு மிகவும் சுவையாக இருந்திருக்கும்.
ஆனால் வயது முதிர்ச்சியடைந்து, 'வீடு போ போ என்றும் காடு வா வா' என்றும் சொல்லும் நிலையில் இருக்கும் என் போன்றவர்களும், அறிவில் முதிர்ச்சியடைந்த பல்வேறு நாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர் உங்களுக்கும் அதிர்ச்சியாக இருந்ததில் நியாயம் இருக்கத் தான் செய்திருக்கும்! 

சமுதாய இயக்கங்கள் அனைத்தும் ஏக அல்லாவினையும் அவனுடைய இறுதித் தூதரையும் ஏற்றுக் கொண்டு ஒரே கோடையில் வாழ்பவர் தானே!
சமுதாய இளைஞர் பட்டாளத்தினை வழி நடத்த விரும்பும் இயக்கங்கள் தாங்கள் கடைப் பிடிக்கும் வழிகள் பலவாக இருக்கலாம். ஆனால் வெறுமையில் ஒற்றுமை உள்ள இயக்கமாக ஏன் மாறக்கூடாது என்பதே என் கேள்வியே!

ஏக இறைவன் அஹிலத்தினை 'பிக் கோலுசன்' என்ற செயல் மூலம் பல கிரகங்கள் படைத்து அவைகள் அத்தனையும் அதன் அதன் பாதையில்
சுழல விடவில்லையா என்ன? பின் ஏன் நாமும் நமது
இயக்கங்களிடையே உள்ள வேற்றுமை மறந்து அவரவர்
கொள்கையில் இளைஞர்களை வழி நடத்திச் செல்லக்கூடாது?

அந்தரத்தில் உள்ள சில விசயங்களை ஏன் அரங்கத்திற்கு கொண்டு வர வேண்டும்? பிறரைப் பற்றி உண்மை தெரிந்தால் அதனை கூட்டம் போட்டு
பறை சாற்றுவது நல்லது தானா? பிறரைப் பற்றி புறம் பேசுவது மனித மாமிசத்தினை தின்பது போன்றது என்று ஹதிசுகளில் சொல்லவில்லையா?
பின் ஏன் அதுபோன்ற மின் அஞ்சலை எல்லோருக்கும் அனுப்ப வேண்டும்?
உலகில் குறை இல்லா மனிதர் உண்டா? கடைக் கண் பார்வையில் கூட கற்பிற்கு களங்கம் விளைவிற்காதவர் ஊர் முச்சந்தியில் உள்ள
பானையில் பாலைக் கொட்டுங்கள் என்று சொல்லி ஒருவர் கூட ஊற்றவில்லை என்ற கதையினை அனைவரும் படித்திருகின்றோம்., 

மாசில்லா தங்கம் உண்டா? அல்லது துருப் பிடிக்கா ஆயுதம் உள்ள ஆர்மேரி உண்டா?ஆகவே சமுதாய இயக்கங்களிடையே உள்ள குறைகளை பூதக் கண்ணாடிப் போட்டு பெரிதாக்காமல் சமுதாயதினவர்க்கு நாம் என்னென்ன நல்லதுசெய்யலாம் என்று சிந்தனை செய்து அதனை முயற்சிக்கலாம்.
இந்த நேரத்தில் சமுதாயத்தினர் ஒற்றுமை பற்றி தன்னல மற்ற தலைவர் காயிதே மில்லத் அவர்கள் 5.5.1970 அலிகார் பொதுக் கூட்டத்தில்
பேசிய உரைகள் உங்கள் முன் வைக்கின்றேன், 'நாம் சிறுபான்மை மக்களாக வாழ்கிறோம். நமக்குள் ஒற்றுமை மிக மிக அவசியம்.
பெரும்பான்மை சமுதாயம் எப்படியும் பிரிந்து இருக்கலாம். ஆனால் சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்து வாழ்வது குரானின் கட்டளையாகும்' என்றார்கள்.

சிறுபான்மையினர் ஒற்றுமையுடன் வாழ்ந்தபோது அதிக பலத்துடன் இருந்தனர். ஆனால் வேற்றுமையுடன் இருந்ததால் சிறுபான்மையினரை கால் தூசுக்கு மதிப்பில்லாதவர் என பெரும்பான்மையினத்தவர் சிலர் நினைக்கின்றனர்.உதாரணத்திற்கு, லோக் பால் மசோதாவில் 50 சதவீத கோட்டா கொண்டு வருவதினை திண்ணைப் பேச்சு அண்ணாச்சி ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பாருங்களேன்!
அது மட்டுமா தேசிய சிறுபான்மை கமிஷன் மைனாரிட்டி மக்களுக்கு கோட்டா வழங்க வேண்டும் என்ற சிபாரிசின் பேரில் மத்திய அரசு மைனோரிட்டி சட்டம் 1992 பிரிவு 2(சி) யில் உள்ளபடி 4.5 சதவீத கோட்டா
வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இது மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான 10 சதவீதத்திற்கும் குறைவானதானாலும் அதனைக் கூட பி.ஜே.பி
சட்டத்திற்கு புறம்பானது எனசொல்லி ஆர்பாட்டம் செய்கிறது.
அது மட்டுமா? ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகத் சொல்கிறார் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடத்தில் நிச்சியமாக தாவா நிலம் அத்தனையிலும் பெரிய ராமர் கோவில் அயோத்தில் கட்டவேண்டும் என்கிறார்.அதற்குத்
தான் அவர்களின் சாதகமான ஆட்சி மத்தியில் வேண்டும். அதற்கு முன்னோடிதான் திண்ணைப் பேச்சு அண்ணாச்சியின் ஆர்ப்பாட்டம் என்றால் மிகையாகாது.
ஆகவே சமுதாய இயக்கங்கள் தங்களுக்குள் சுயக் கட்டுப் பாட்டுகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களுக்குள் தரம் தாழ்ந்து சண்டையிடாமல், அத்துடன் பொது நலன் சமுதாய மக்களை வழிப் படுத்தினால் நலமாக இருக்கும்.
2) சமுதயத்திற்கு மாறுதலாக அடுத்தவர் நடந்தார் என்றால் அந்த
நபருக்கு தனிப் பட்ட முறையில் மின் அஞ்சல் அல்லது தபால்
எழுதலாம். அல்லது அவர் நடவடிக்கையினை அந்த இயக்க முன்னோடிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.
3) அரசு அலுவலங்களிலும் நமது முஸ்லிம் கல்வி தொழில் அமைப்புகளிலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படுகிறதா என்று கவனித்து அவைகள் கிடைக்க இணைத்து நடவடிக்கை எடுக்கலாம்.
4) பல்வேறு நகரங்களில் கிராமங்களில் சமுதாயத்தினவற்கு ஏற்படும் இன்னல்களை அனைவரும் இனைந்து தட்டிக் கேட்கலாம்.
அதற்கான கிரிடிட் தங்கள் இயக்கம்தான் என்று பறைசாற்றி அடுத்த இயக்கங்கலினை அனாவசியமாக வெறுப்பேற்றத் தேவையில்லை.
5) நமது நாடு ஜனநாயக நாடு. ஆகவே மக்கள் பிரதிநிதிகளுக்குத் தான் முக்கியம் கொடுக்கப் படும். ஆகவே இயக்கங்கள் தேர்தல் நேரத்தில் பொது கொள்கையுடன் இணைந்து சமுதாயம் சார்பாக பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கலாம்.
6) புராதான வழிபாட்டு தளமான பாப்ரி மஸ்ஜிதை இருந்த இடத்திலே கட்டும் வரை தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும். சமீபத்தில் மின் அஞ்சல்களையும், தொலை பெசிகளையும் மத்திய உளவு நிறுவனங்கள் முன் அனுமதியின்றி ஆறு மாத காலத்திற்கு கண்காணிக்கலாம் என்று அனுமதிக்கப் பட்டுள்ளது. உங்களுடைய மின் அஞ்சல்களை வேற்று மத உளவு அமைப்புகளும் கண்காணிக்கின்றன. ஆகவே மின் அஞ்சல்களை அனுப்புவதில் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தனிப் பட்டவர் உரிமை மின் அஞ்சலில் மீறினால் 'சைபர் கிரைம்' சட்டத்தின் மூலம் தண்டிக்கப் பட வாய்ப்புண்டு என்று சுட்டிக் காட்டி
சமுதாய இயக்கங்களிடையே உள்ள குரோதத்தினை அடியோடு  ஒழிப்போமா!

திருச்சியில் கூடிய கொள்கை சகோதரர்களின் குமுறல்கள்-1

திருச்சியில் கூடிய கொள்கை சகோதரர்களின் குமுறல்கள்-1 

திருச்சியில் எஸ்.எஸ்.யு சைபுல்லாஹ் தலைமையில் நடந்த தாவா  ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கொள்கையை விட இயக்க வெறி பிடித்து தறிகெட்டுப் போன ,ததஜ வினரின் தரங்கெட்ட போக்கால் வெளியேறிய சகோதரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களையும் இன்னல்களையும் ,   உள்ளக் குமுறல்களையும் கொட்டித் தீர்த்தனர் ! அவை உங்கள் பார்வைக்கு!
தௌஹீத் இயக்கங்களின் தோற்றமும் - பிரிவினையும் 
இந்த ஒருங்கிணைப்புக்கு முக்கிய காரணம் 

அஸ்ஸலாமு அலைக்கும் 
பள்ளிவாசல் என்பது இறைவனுக்கு சொந்தம் இதனை நிர்வகிப்பவர்கள் யார் ??
கொள்கை மலிவு விலைக்கு விற்கப்படுகிறதோ என்று வினவுகிறார் 
புலிவலம் அமீர் ஹம்சா??

இன்ஷா அல்லாஹ் கொள்கை சகோதரர்களின் குமுறல்கள் தொடரும்.
  

இட ஒதுக்கீட்டில் ஏமாற்று வேலை வேண்டாம்! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை!


இட ஒதுக்கீட்டில் ஏமாற்று வேலை வேண்டாம்!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை!

பெரிதாக்கி படிக்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.


அண்ணன் ஹஜ்ஜுக்கு செல்லாத காரணம் என்ன?


அண்ணன் ஹஜ்ஜுக்கு செல்லாத காரணம் என்ன? 

அப்துல் முஹைமின் எழுதிய உமர் ரலி ஆட்சியளராக் இருந்தால் அண்ணன் மேல் ஜிஸ்யா வரி விதிக்கப் பட்டிருக்கும் என்ற கட்டுரையில் 'ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்' ஹஜ் செய்யாததன் காரணம் என்ன என்பது பற்றி விமர்சிக்கப் பட்டு இருந்தது.

அவருக்கு  ஹஜ் கிரியை மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் என்று ஒரு சாராரும் அல்லது மொகலாய அரசர்கள் போல் ஹஜ்ஜுக்கு சென்று இருக்கும் காலங்களில் தலைமைப் 
பதவியை யாரும் கைப்பற்றி விடலாம் எனும் அச்சம் காரணமாக இருக்கலாம்
என்று ஒரு சாராரும் , 'தஜ்ஜால் மக்காவிலும் மதீனாவிலும் நுழைய முடியாது எனவே இவரும் நுழைய முடியாது '  என சுன்னத் ஜமாஅத் ஆலிம்களும், 
என இது நாள் வரை பல்வேறு காரணங்கள் கூறிக் கொண்டிருந்தாலும் , தற்போது அவர் தனது கொள்கைப்படி தனியார் ஹஜ் சர்விஸ் மூலம் செல்லாமல் ஹஜ் கமிட்டி மூலம் செல்ல இந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தும் செல்லாததற்கு காரணம் தனக்கு அரசால் வழங்கப் பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்பதால் தான்.

ஏன் எனில் சிறப்பு பாதுகாப்பு பெற்ற ஒருவர் வெளிநாடு செல்லும் போது அவரது பாதுகாப்பு விலக்கப் பட்டு, மீண்டும் திரும்பி வந்து அதைப் பெறுவது மிகவும் சிரமம்.மேலும் அதில் எராளமான நடை முறை சிக்கல்கள் உள்ளது.  கடந்த முறை தமுமுகவில் இருந்த போது பெற்ற போலிஸ் பாதுகாப்பு வெளிநாடு சென்று வந்த பிறகு பல்வேறு முயற்சி செய்தும் கிடைக்காமல் இப்போதுதான் அண்ணன் தன்னால் காட்டிக் கொடுக்கப் பட்ட சிறைவாசிகள் நிறைய பேர் வெளியே வந்து விட்டதால் சிறைவாசிகளால் தன உயிருக்கு ஆபத்து என    பல நாடகங்கள் நடத்தி படாத பாடுபட்டு பாதுகாப்பை பெற்றுள்ளார்.
எனவே அதை இழக்க   அண்ணன் தயாரில்லை.ஆகவே தான் கடந்த ஜூலை மாதம் குவைத்திற்கு அண்ணன் வருவதற்க்காக வியர்வையை சிந்தி விசா எடுத்து அனுப்பிய சகோதரர்களின் விருப்பத்தைக் கூட புறக்கணித்தார் என்பதை அண்ணனின் இணைய தள காதல் விவகாரங்களை எல்லாம்  வெளியிட்டுக் கொண்டுள்ள    இலங்கை சலபி அனுப்பியுள்ள  அந்த குவைத் விசா காபி மற்றும் அண்ணனின் பாஸ்போர்ட் நகல் மூலம் அறிந்து கொள்ளலாம்.  
VISA-PJ.PDFVISA-PJ.PDF
1035K   View   Download  

யார் அந்த மக்கா நகரத்திற்குள் நுழைந்து விட்டாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை பெற்று விட்டார். எனும் இஸ்லாமிய அடிப்படையை மறந்து விட்டு அற்ப மனித பாதுகாப்பை நம்பி அபயமளிக்கப் பட்ட பூமிக்கு செல்லாமல்
இருக்கும் இவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை   நம்பும் மனிதரா?  அரசாங்கத்தின் பாதுகாப்பை நம்பும் மனிதரா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்  .

ஏன் எனில் 'எவர் சுப்ஹு தொழுது விட்டாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளார்' எனும் நபி மொழியை நம்பி சுலபமான முறையில் அல்லாவின் பாதுகாப்பைப் பெற சுப்ஹு தொழாதவர் , காசு செலவழித்து அபயமளிக்கும் பூமி செல்வாரா?    பலவருடமாய் வசதி இருந்தும் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றாமல்   இருப்பது, ஏற்கனவே தொழுகை ,நோன்பு, ஜகாத்  போன்றவற்றில் அவருக்கு உள்ள அசட்டையான, முனாபிக் தனமான போக்கே இந்த கடமையிலும் தொடர்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இதே நிலையில் மரணித்தால் அவரின் நிலை என்னவாகும் என்பதை அவரை நிர்வாகிகளும், நேசிக்கும் நபர்களும்   எடுத்து சொல்லவேண்டும்.
- இப்னு  ஹுசைன்

Friday, December 23, 2011

சென்னையில் ஏழு இடங்களில் INTJ சமூக நல்லிணக்க ரத்த தான முகாம்.

சென்னையில் ஏழு இடங்களில் INTJ


சமூக நல்லிணக்க ரத்த தான முகாம்.


ஒரு உயிரை வாழவைத்தவர் ஒட்டு மொத்த மனித குலத்தை வாழவைத்தவர் ஆவார்.எனும் குரான் வசனத்தின் படி மனிதநேய பணியான ரத்ததான முகாம்களை நடத்தி வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நாளை 2512.11 அன்று சமூக நல்லிணக்க ரத்ததான நாளாக அறிவித்து தமிழகம் முழுதும் பல இடங்களில் ரத்ததான முகாம்கள் நடை பெறுகிறது.அதில் சென்னையில் மட்டும் கீழ்க்கண்ட ஏழு இடங்களில் நடை பெறுகிறது. 


சேப்பாக்கம் லாக் நகர்,
சைதாபேட்டை,
எம்.ஜி.ஆர்.நகர்,
சூளைமேடு 
துறைமுகம்,
நேதாஜி நகர்,
அல்லிக்குளம் [சென்ட்ரல்]   


அனைவரும் பங்கேற்று உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்! 
தொடர்புக்கு ;மருத்துவ அணி 9841470019 9841655345

Thursday, December 22, 2011

உமர் ரலி இந்தியாவின் மன்னராக இருந்தால் பீஜே மீது ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டிருக்கும்?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கடமையான ஹஜ்ஜை நீங்கள் விரைந்து நிறைவேற்றுங்கள்;ஏனெனில், உங்களில் ஒருவர் தமக்கு என்ன நேரும் என்பதை அறியமாட்டார் என்ற நபிமொழிக்கு மாற்றமாக வசதியிருந்தும் ஹஜ் செய்யாமல் காலம் கடத்தி வருகிறார் அண்ணன். கேட்டால் நான் ஹஜ் கமிட்டி மூலமாகத்தான் செல்வேன் என்று அடம்பிடிக்கிறார். அண்ணன் ஒரு ஊருக்கு சென்றால் அரசாங்க பஸ்ஸில் தான் செல்வேன் என்று சொல்வதில்லை. தனியார் சொகுசு வால்வோ ஏஸி பஸ்ஸில் பயணிக்கிறார். ரயிலில் பயணித்தாலும் சொகுசு வகுப்பில் பயணிக்கிறார். இதிலெல்லாம் கணக்கு பார்க்காத அண்ணன் தனியார் ஹஜ் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதாக கூறி அதில் நான் ஹஜ் செல்லமாட்டேன் என்கிறார். என்றைக்கு எனக்கு ஹஜ் கமிட்டி குலுக்கலில் பெயர் வருகிறதோ அன்றுதான் நான் ஹஜ்ஜுக்கு செல்வேன் என்கிறார். ஆனால் அமீருல் முஃமினீன் உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்;

நான் இந்த நகரங்களுக்கு ஆட்களை அனுப்பி, அங்கு யாரெல்லாம் வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தும் ஹஜ் செய்யாமல் உள்ளார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அத்தகையோர் மீது காப்புவரி ஜிஸ்யா விதிக்கச் சொல்லலாம் எனக் கருதுகிறேன். ஏனெனில்,அவர்கள் முஸ்லிம்கள் அல்லர்; அவர்கள் முஸ்லிம்கள் அல்லர். 
நூல்; நைலுல் அவ்த்தார், நஸ்புர் ராயா. இப்னு கதீர் திருக்குர்ஆன் விரிவுரை பாகம் 4

ஒருவேளை உமர் ரலி அவர்கள் இந்தியாவின் மன்னராக இப்போது இருந்திருந்தால் பீஜே மீது ஜிஸ்யாவரி விதிக்கப்பட்டிருக்க கூடும். மேலும், அண்ணன் சுன்னத் ஜமாஅத் இமாமை பின்பற்றி தொழக்கூடாது என்று சொல்லி வருகிறார். ஆனால் ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ்ஜுக்கு செல்வேன் என்கிறாரே! ஹஜ் கமிட்டி தவ்ஹீத் ஆலிம்ஷாவையா வழிகாட்டியாக நியமிக்கிறது?இல்லை. அப்படிஎன்றால் ஹஜ்ஜில் மட்டும் சுன்னத் ஜமாஅத் ஆலிம்ஷாவை அண்ணன் பின்பற்றி ஹஜ் கிரியைகளை செய்வாரோ? அப்படி செய்தால் என்ன நிலை ஏற்படும்? நாம்  சொல்வதை விட அண்ணனால் அபகரிக்கப்பட்ட வார இதழ் உணர்வு சொல்வதை கேட்போமா?

பெரியவர்; ஹஜ்ஜின் போது மினாவில் தொழுகைகளை சுருக்கித்தானே தொழவேண்டும். ஏன் நான்கு ரகாத்துக்கள் முழுமையாக தொழ சொல்கிறீர்கள்?

மவ்லவி; ஏன் ஒய்வாகத்தானே இருக்கிறீர்கள். சுருக்கித் தொழ வேண்டிய அவசியமில்லை. முழுமையாக தொழுதால் நல்லது தானே!

பெரியவர்; ஹஜ்ஜின் போது நபி  ஸல் மினாவிலும் அரபாவிலும் தொழுகைகளை முழுமையாக  தொழுதார்களா? அல்லது சுருக்கி தொழுதார்களா?

மவ்லவி; சுருக்கித் தான் தொழுதார்கள்.

பெரியவர்; அது போதும் எனக்கு.

இந்த சம்பாஷனை ஒரு மவ்லவிக்கும் ஊரிலிருந்து ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்ய வந்திருந்த  ஒருவருக்கும் இடையில் நடைபெற்றதாகும் என்கிறது அபகரிக்கப்பட்ட வார இதழ். ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் சென்றால் இதுபோன்ற நிலைதான் வரும் என்று உணர்வு சொல்கிறது. ஆனால் அண்ணனோ நான் ஹஜ் கமிட்டி மூலமே ஹஜ் செய்வேன் என்று அடம்பிடிக்கிறார். ஒருவேளை அண்ணன் அங்கேபோயும் அமல் செய்வதற்கு பதிலாக, இந்த பெரியவர் போன்று விவாதம் செய்யவேண்டும் என விரும்புகிறாரோ?

சென்னை சேரி பகுதிகளில் இதஜவின் இஸ்லாமிய அழைப்புப் பணி!

சென்னை சேரி பகுதிகளில் இதஜவின் இஸ்லாமிய அழைப்புப் பணி!

     
இஸ்லாம் காட்டித்தந்த உன்னத பணியான தஃவா எனும் அழைப்புப் பணியை தனது தலையாய பணியாக செய்யும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்  அனைவரும் அழைப்புப் பணியினை பல வழிகளிலும் செய்து வருகின்றனர்.

மண்டபங்களிலும் , மாபெரும் மாநாடு பொதுக் கூட்டங்களிலும் மட்டுமே மார்க்கத்தை சொல்லும் அழைப்பாளர்களுக்கு மத்தியில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தாயிக்கள்    மருத்துவமனை, பூங்கா, கடற்கரை, கோயில்கள், சர்ச்கள் மற்றும் சேரிகள் மற்றும் மாற்று மத மக்கள் குடி இருக்கும் வீடுகள் தோறும் சென்று இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆன் மற்றும் கண்ணியத்திற்குரிய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகள் அடங்கிய அழகிய நூல்களை வழங்கி அழைக்கின்றனர்.
இன்றைய தினம் [22.12.11] சென்னை பல்லவன் இல்லம் அருகில் உள்ள சேரிகளுக்கு சென்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் துணைத் தலைவர் முனீர், மாநில பேச்சாளர் முகைதீன் லாக் நகர் யூசுப், சேப்பாக்கம் கலீல் ரஹ்மான் திருவல்லிக்கேணி நசிர், முத்து இப்ராகிம்  உள்ளிட்ட தஃவா குழுவினர் வீடு வீடாக சென்று இஸ்லாமிய அழைப்புப் பணியினை செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
அசர் மற்றும் மக்ரிப் தொழுகைகளை ஆள் அதிகமற்ற அங்குள்ள பிரம்மாண்டமான கவர்னர் பாடிகார்டு பள்ளிவாசலில் தொழுத போது 7000 பேர் வசிக்கும் அந்த சேரியில் இஸ்லாமிய வசந்தம் வீசினால் அங்கிருக்கும் நாற்றம் மறைவதோடு அந்தப் பள்ளியும் நிறையும் எனும் எண்ணம் ஏற்பட்டது!     இன்ஷா அல்லாஹ்!