Sunday, December 11, 2011

எழுச்சியுடன் நடைபெற்ற தென் சென்னை பொதுக்குழு.


எழுச்சியுடன் நடைபெற்ற தென் சென்னை பொதுக்குழு.




                                   பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம் !

 இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டத்தின் பொதுக் குழு இன்று 11.12.11 அன்று மாநிலத் தலைமையகத்தில் நடை பெற்றது ! மாவட்ட செயலாளர் காஜா கரிமுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் குழுவில்
திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கிரிஷ்ணாம்பேட்டை, சூளைமேடு , சைதாபேட்டை எம்.ஜி.ஆர்.நகர், வேளச்சேரி, மடுவின்கரை ஆசாத் நகர், அமிஞ்சிக் கரை, MMDA    உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தலைமை நிர்வாகிகள் , எஸ்,எம்,பாக்கர் , தொண்டியப்பா , அப்துல் ஹமித் இணையதுல்லாஹ், முஹம்மத் மைதீன்,கலிமுல்லாஹ், செங்கிஸ் கான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

வரும் 25.12.11 அன்று தமிழகம் முழுதும் நடைபெற உள்ள சமூக நல்லிணக்க ரத்த தான முகாம்களை தென் சென்னைக் கிளைகள் எங்கும் நடத்துவது, தஃவா உடைய வேலைகளை முடுக்குவது, தர்பியாக்களை   கிளைகள் தோறும் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப் பட்டன. மாவட்ட நிர்வாகத்தை மறு சீரமைத்து தேர்தல் நடத்தப் பட்டு கீழ்க் கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்த்டுக்கப் பட்டனர்.

புதிய நிர்வாகிகள் :

தலைவர் : யூனுஸ் பாஷா
துணை தலைவர்: சிக்கந்தர்
செயலாளர் : யூசுப்
துணை செயலர்கள்: சம்சுதீன் , சேட் , JM.கனி
பொருளாளர்: பயாஸ் அஹமத்

தொண்டர் அணி: செய்யது
வர்த்தக அணி : சுல்த்தான்.
 மாணவர் அணி : நசிர் அஹ்மத்
மருத்துவ அணி : கலீல் அஹ்மத்
                                   புதிய  நிர்வாகிகளுடன் மாநில நிர்வாகிகள்.   

0 comments:

Post a Comment