தூக்கம் ஒரு கடமை
(அல்குர்ஆன் 25:47, 78:9,10)
உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் இறைவன் வழங்கிய அருட் கொடைக ளில் ஒன்று ஆகும். உயிர் வாழ்வதற்கு தேவையான காற்று, தண்ணீர், உணவு என்ற வரிசையில் தூக்கம் என்பதையும் சேர்த்துச் சொன்னால் அது மிகையாகாது என்று கூறும் அளவுக்கு மனித வாழ்வில் ""தூக்கம் என்பது மிக அத்தியாவசிய மான ஒன்றாக விளங்குகிறது.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டதாகவே தெரியவல்லை. பலருக்கு தான் எத்தனை மணிக்குத் தூங்குகிறோம், எத்தனை மணிக்கு விழிக்கிறோம் என்பது கூடத் தெரியாது. உணவு விஷயத்தில் ஒரு ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ளா விட்டால் ஏற்படும் பாதிப்பை விட, தூங்கும் விஷயத்தில் ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ளா விட்டால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என்பதைக் கூட பலரும் விளங்கிக் கொள்ளவே இல்லை. அந்த அளவு தூக்கத்தின் விஷயத்தில் அலட்சியமும், அசட்டையும் நிலவுவதைக் காண்கிறோம்.
நகர்ப்புறங்களில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள், வீணான விளையாட்டுக்களுக்காகவும், வேடிக்கையான விஷயங்களுக்காகவும் (டிவியில் கிரிக்கெட், சினிமா) வெட்டி அரட்டைகளுக்காகவும் இரவில் கண் விழித்து பகலில் தூங்கும் பழக்கத்தை நடைமுறையாகக் கொண்டு உள்ளனர். இன்னும் சிலரோ, பொருளாதாரத்தை திரட்டுவதற்காக இரவில் உழைத்து பகலில் தூங்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
தூங்கும் விஷயத்தில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அலட்சியமாகவும், அசட்டையாக இருப்பதும், இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் என்று வாழ்க்கையை முறையை அமைத்துக் கொள்வதும் குர்ஆனுக்கும் -ஹதீஸýக்கும் மாற்றமான செயலாகும்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
(அல்குர்ஆன் 25:47)
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) கூறினார்கள்:
ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ
இரவு நேர உழைப்பு என்பது மிகவும் கடினமானது. பகலில் எட்டு மணி நேரம் வேலை செய்வதால் ஏற்படும் சக்தி இழப்பும், இரவில் ஒன்றரை மணி நேரம் வேலை செய்வதில் ஏற்படும் சக்தி இழப்பும் சமமாக உள்ளது என்று கூறுகிறார்கள். குர்ஆனின் கூற்றையும், ஹதீஸ்களின் கூற்றையும் உண்மைப்படுத்துகிறார்கள்.
தூக்கம் சரியாக இல்லை என்றால், வாழ்வு துக்கமாக மாறிவிடுவதைக் காண்கிறோம். நோய் வராமல் இருப்பதற் கும் தூக்கம் அவசியம். வந்த நோய் தீர்வதற்கும் தூக்கம் அவசியம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும். தூக்கம் இல்லை என்றால் அஜீரணக் கோளாறில் ஆரம்பித்து, மன உளைச்சலில் தொடர்ந்து, தீராத வியாதிகள் வருவதற்கு அதுவே காரணமாக அமைந்து விடுகிறது.
அதே போல நோய் வந்தது என்றால் மருந்து உட்கொள்கிறோம். மருந்தினால் உரிய பலன் கிடைக்க வேண்டும் என்றாலும் தூக்கம் அவசியமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
(பத்ரு போர்க் களத்துக்கு முதல் நாள்) நீங்கள் அமைதி பெறுவதற்காக அவன் சிறிய தூக்கத்தை உங்களைப் பொதிந்து கொள்ளுமாறு செய்தான். இன்னும் அதன் மூலம் உங்களை தூய்மைப்படுத்தினான்.
(அல்குர்ஆன் 8:11)
(அல்குர்ஆன் 3:154)
பத்ருப் போரில் பிரச்சினையை எதிர் கொள்வதற்கு முன்பு தூக்கத்தைத் தந்து உள்ளத்தை அமைதிப்படுத்துகிறான். உஹதுப் போர்க் களத்தில் பிரச்சினை முடிந்த பிறகு தூக்கத்தைக் கொடுத்து அமைதியை ஏற்படுத்துகிறான்.
ஆரோக்கியம், அமைதி, நிவாரணம், இளைப்பாறுதல் அனைத்துக்கும் தேவையானது தூக்கம்தான். சிலர் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்கி விடலாம் என எண்ணுகிறார்கள். அது ஒரு வகையில் போதையைப் போலத்தான். சில நாள் ஒரு மாத்திரை போட்டால் தூக்கம் வரும் பிறகு இரண்டு, மூன்று என்று மாறி தூக்கம் வருவது நின்றுவிடும். அப்படியானால் இதற்கு தீர்வு என்ன?
1. மனக் குழப்பம், 2. உடல் உபாதை, 3. பலவீனம்
1. ஃபித்ரா ஜகாத் பொருட்கள் வசூலிக்கப்பட்டு பெருங் குவியலாக மஸ்ஜிதுன் நபவியில் குவிக்கப்பட்டு இருந்தது. நபி (ஸல்) அவர்கள், அந்தப் பொருட்களை பாதுகாக்க அபு ஹுரைரா (ரலி) அவர்களை நியமித்தார்கள். ஒரு நாள் இரவு திருடன் வந்தான், அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அவனைப் பிடித்து விட்டார்கள். உடனே அந்தத் திருடன் தான் ஏழை என்றும், தன்னை மன்னித்து விட்டு விடும்படியும், இனி வர மாட்டேன் என்றும் கூறினான். அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அவனை விட்டு விட்டார்கள்.
நபிகளார் கூறியது போலவே மறுநாளும் அந்தத் திருடன் வந்தான். அபுஹுரைரா (ரலி) அவனைப் பிடித்து தூணில் கட்டினார்கள். அப்போது அந்தத் திருடன் ""நான் உமக்கு ஒரு விஷயத்தைக் கற்றுத் தருகிறேன். அதனை (இரவில்)ஓதினால், அதிகாலை வரை ஷைத்தானின் தீண்டுதலை விட்டும் பாதுகாப்பு பெறுவீர் என்று கூறி, ""ஆயத்துல் குர்ஷி%%யை கற்றுக் கொடுத்தான். நடந்த விஷயங்களை நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது, ""அவன் சொன்னது உண்மையே. ஆனால் அவன் ஷைத்தான்%% என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபுஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
நபி (ஸல்) அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்படும்போது, குர்ஆனின் 112,113,113 அத்தியாங்களை ஓதி (பரகத்துக்காக) நபிகளாரின் கைகளில் ஊதி அவர்கள் மீது தடவி விடுவேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி
அறிவிப்பாளர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
மனம் பல்வேறு வகையான சிந்தனையில் குழப்பம் அடைந்திருக்கும் நிலையில் படுக்கைக்குச் சென்றால் அல்குர்ஆன் 2:255 வசனமாகிய ""ஆயத்துல் குர்ஷி%%யை ஓதிவிட்டு தூங்கச் செல்வோம்.
பணியாள் துணை இல்லாத, கையேறு நிலையில் படுக்கைக்குச் சென்றால் சுப்ஹானல்லாஹ் 33 தடவை அல்ஹம்து லில்லாஹ் 33 தடவை அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதிவிட்டு தூங்கச் செல்வோம்.
நபி (ஸல்) அவர்கள் (இரவில்) படுக்கும்போது, வலது கரத்தை கன்னத்தின் கீழே வைத்து, வலப்புறம் ஒருக்களித்துப் படுப்பார்கள். அப்போது அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா (இறைவா உனது பெயரால் மரணிக்கிறேன். மேலும் உயிர் பெறுகிறேன்) என்று கூறுவார்கள்.
அறிவிப்பாளர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்
அல்லாஹ்வை நினைவு கூர்வதால் (மட்டுமே) உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.