Tuesday, November 30, 2010

தூக்கம் ஒரு கடமை !


தூக்கம் ஒரு கடமை

(அல்லாஹ்) அவன் தான் உங்க ளுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை இளைப்பாறுதலாகவும் ஆக்கி இருக்கிறான்.
(அல்குர்ஆன் 25:47, 78:9,10)

தூக்கம்
உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் இறைவன் வழங்கிய அருட் கொடைக ளில் ஒன்று ஆகும். உயிர் வாழ்வதற்கு தேவையான காற்று, தண்ணீர், உணவு என்ற வரிசையில் தூக்கம் என்பதையும் சேர்த்துச் சொன்னால் அது மிகையாகாது என்று கூறும் அளவுக்கு மனித வாழ்வில் ""தூக்கம் என்பது மிக அத்தியாவசிய மான ஒன்றாக விளங்குகிறது.

அலட்சியமும் - அசட்டையும்
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டதாகவே தெரியவல்லை. பலருக்கு தான் எத்தனை மணிக்குத் தூங்குகிறோம், எத்தனை மணிக்கு விழிக்கிறோம் என்பது கூடத் தெரியாது. உணவு விஷயத்தில் ஒரு ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ளா விட்டால் ஏற்படும் பாதிப்பை விட, தூங்கும் விஷயத்தில் ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ளா விட்டால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என்பதைக் கூட பலரும் விளங்கிக் கொள்ளவே இல்லை. அந்த அளவு தூக்கத்தின் விஷயத்தில் அலட்சியமும், அசட்டையும் நிலவுவதைக் காண்கிறோம்.

இரவினில் ஆட்டம் - பகலினில் தூக்கம்
நகர்ப்புறங்களில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள், வீணான விளையாட்டுக்களுக்காகவும், வேடிக்கையான விஷயங்களுக்காகவும் (டிவியில் கிரிக்கெட், சினிமா) வெட்டி அரட்டைகளுக்காகவும் இரவில் கண் விழித்து பகலில் தூங்கும் பழக்கத்தை நடைமுறையாகக் கொண்டு உள்ளனர். இன்னும் சிலரோ, பொருளாதாரத்தை திரட்டுவதற்காக இரவில் உழைத்து பகலில் தூங்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

குர்ஆன் ஹதீஸýக்கு முரண்
தூங்கும் விஷயத்தில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அலட்சியமாகவும், அசட்டையாக இருப்பதும், இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் என்று வாழ்க்கையை முறையை அமைத்துக் கொள்வதும் குர்ஆனுக்கும் -ஹதீஸýக்கும் மாற்றமான செயலாகும்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

(அல்லாஹ்) அவன் தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை இளைப்பாறுதல் ஆகவும் ஆக்கியுள்ளான். இன்னும் அவனே பகலை உழைப்பதற்கு ஏற்றவாறு ஆக்கி உள்ளான்.
(அல்குர்ஆன் 25:47)


அல்லாஹ்தான் நீங்கள் இறைப்பாறு வதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் படைத்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருளைப் பொழிகின்றான்.
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அப்துல்லாஹ்வே நீர் எல்லா நாட்களும் நோன்பு வைப்பதாகவும், இரவு முழுவதும் தொழுவதாகவும் உன்னைப் பற்றிக் கூறப்படுகிறதே (உண்மையா?) என்று கேட்டார்கள். அதற்கு ஆம் (உண்மைதான்) என்று பதில் அளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ""அவ்வாறு செய்யாதே! (சில நாட்கள்) நோன்பு வை. (சில நாட்கள்) நோன்பை விட்டு விடு! (சிறிது நேரம்) தொழு, தூங்கு. ஏனெனில் நீ உனது உடலுக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளது. நீ உனது கண்களுக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளது. நீ உனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளது என்று கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ

உழைப்பதற்காகவும், பார்ப்பதற்காக வும் ஏற்ற வகையில் பகலைப் படைத்தி ருப்பதாகவும், உறங்குவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் ஏற்ற வகையில் இரவைப் படைத்திருப்பதாகவும் அல்ல ôஹ் குர்ஆனில் கூறுவதைப் பார்க்கி றோம்.

இரவு முழுவதும் வணக்கத்திற்காக விழிப்பது கூட தவறு என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டுவதையும், கண்களுக்கு செய்யும் கடமையை தவற விடக் கூடாது என்பதையும் நபிமொழிகள் மூலமாக அறிந்து கொள்கிறோம்.

மருத்துவ உலகம்
இரவு நேர உழைப்பு என்பது மிகவும் கடினமானது. பகலில் எட்டு மணி நேரம் வேலை செய்வதால் ஏற்படும் சக்தி இழப்பும், இரவில் ஒன்றரை மணி நேரம் வேலை செய்வதில் ஏற்படும் சக்தி இழப்பும் சமமாக உள்ளது என்று கூறுகிறார்கள். குர்ஆனின் கூற்றையும், ஹதீஸ்களின் கூற்றையும் உண்மைப்படுத்துகிறார்கள்.

தூக்கமும், துக்கமும்
தூக்கம் சரியாக இல்லை என்றால், வாழ்வு துக்கமாக மாறிவிடுவதைக் காண்கிறோம். நோய் வராமல் இருப்பதற் கும் தூக்கம் அவசியம். வந்த நோய் தீர்வதற்கும் தூக்கம் அவசியம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும். தூக்கம் இல்லை என்றால் அஜீரணக் கோளாறில் ஆரம்பித்து, மன உளைச்சலில் தொடர்ந்து, தீராத வியாதிகள் வருவதற்கு அதுவே காரணமாக அமைந்து விடுகிறது.
அதே போல நோய் வந்தது என்றால் மருந்து உட்கொள்கிறோம். மருந்தினால் உரிய பலன் கிடைக்க வேண்டும் என்றாலும் தூக்கம் அவசியமாகும்.

தூக்கத்தினால் அமைதி
அல்லாஹ் கூறுகிறான்:
(பத்ரு போர்க் களத்துக்கு முதல் நாள்) நீங்கள் அமைதி பெறுவதற்காக அவன் சிறிய தூக்கத்தை உங்களைப் பொதிந்து கொள்ளுமாறு செய்தான். இன்னும் அதன் மூலம் உங்களை தூய்மைப்படுத்தினான்.
(அல்குர்ஆன் 8:11)


(உஹத் போருக்கு) பிறகு, அந்த துக்கத்துக்குப் பிறகு அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக சிறு தூக்கத்தை இறக்கி வைத்தான்.
(அல்குர்ஆன் 3:154)


இந்த இரு வசனங்களையும் ஊன்றிக் கவனியுங்கள்
பத்ருப் போரில் பிரச்சினையை எதிர் கொள்வதற்கு முன்பு தூக்கத்தைத் தந்து உள்ளத்தை அமைதிப்படுத்துகிறான். உஹதுப் போர்க் களத்தில் பிரச்சினை முடிந்த பிறகு தூக்கத்தைக் கொடுத்து அமைதியை ஏற்படுத்துகிறான்.

மொத்தத்தில்...
ஆரோக்கியம், அமைதி, நிவாரணம், இளைப்பாறுதல் அனைத்துக்கும் தேவையானது தூக்கம்தான். சிலர் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்கி விடலாம் என எண்ணுகிறார்கள். அது ஒரு வகையில் போதையைப் போலத்தான். சில நாள் ஒரு மாத்திரை போட்டால் தூக்கம் வரும் பிறகு இரண்டு, மூன்று என்று மாறி தூக்கம் வருவது நின்றுவிடும். அப்படியானால் இதற்கு தீர்வு என்ன?

தூக்கமின்மைக்கான காரணங்கள்
1. மனக் குழப்பம், 2. உடல் உபாதை, 3. பலவீனம்

1. பகல் முழுவதும் அலுவல் காரணமாக எதைப் பற்றியும் மனதை அலட்டிக் கொள்ளாதவர்கள், படுக்கையில் படுத்ததும் அன்றைய தினம் நடந்து முடிந்ததைப் பற்றி யோசிப்பார்கள். விளைவு ஒன்றுக் கொன்று மாறுபட்ட குழப்பங்களை ஷைத்தான் ஏற்படுத்தி தூக்கம் வராமல் செய்து விடுவான்.

2. கடினமாக உழைப்பை மேற் கொண்டு விட்டு படுக்கையில் படுக்கும் போது, அசதி இருந்தால் தூக்கம் வந்து விடும். அதே நேரத்தில் உடம்பு முழுவதும் கடுமையான வலி இருந்தால் ஜுரம் அடிப்பது போன்ற நிலை ஏற்பட்டு, தூக் கத்தை இழக்க வேண்டிய நிலை உண்டாகிறது.

3. சிலர் படுக்கையில் படுக்கும்போது, மறுநாள் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி யோசிப்பார்கள். அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலை கடினமானது என்று, தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் எண்ணும் போதும், தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க வேண்டி நிலை ஏற்படும். பெரும்பாலானவர்களுக்கு படுக்கையில் நேரத்தோடு படுத்த பிறகும் தூக்கம் வராததற்கு இது காரணமாக அமைந்துவிடுகிறது.

இஸ்லாம் கூறும் தீர்வு
1. ஃபித்ரா ஜகாத் பொருட்கள் வசூலிக்கப்பட்டு பெருங் குவியலாக மஸ்ஜிதுன் நபவியில் குவிக்கப்பட்டு இருந்தது. நபி (ஸல்) அவர்கள், அந்தப் பொருட்களை பாதுகாக்க அபு ஹுரைரா (ரலி) அவர்களை நியமித்தார்கள். ஒரு நாள் இரவு திருடன் வந்தான், அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அவனைப் பிடித்து விட்டார்கள். உடனே அந்தத் திருடன் தான் ஏழை என்றும், தன்னை மன்னித்து விட்டு விடும்படியும், இனி வர மாட்டேன் என்றும் கூறினான். அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அவனை விட்டு விட்டார்கள்.

நடந்த விஷயங்களை நபி (ஸல்) அவர்களிடம் அபுஹுரைரா (ரலி) கூறினார். அப்போது நபிகளால் அவன் நாளை மீண்டும் வருவான் விட்டுவிடாதே என்று கூறினார்கள்.
நபிகளார் கூறியது போலவே மறுநாளும் அந்தத் திருடன் வந்தான். அபுஹுரைரா (ரலி) அவனைப் பிடித்து தூணில் கட்டினார்கள். அப்போது அந்தத் திருடன் ""நான் உமக்கு ஒரு விஷயத்தைக் கற்றுத் தருகிறேன். அதனை (இரவில்)ஓதினால், அதிகாலை வரை ஷைத்தானின் தீண்டுதலை விட்டும் பாதுகாப்பு பெறுவீர் என்று கூறி, ""ஆயத்துல் குர்ஷி%%யை கற்றுக் கொடுத்தான். நடந்த விஷயங்களை நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது, ""அவன் சொன்னது உண்மையே. ஆனால் அவன் ஷைத்தான்%% என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபுஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி

2. நபி (ஸல்) அவர்கள் தூங்கச் செல்லும்போது, ""குல்ஹுவல்லாஹு அஹத்%%, ""குல்அவூது பிரப்பில் ஃபலக்%%, ""குல்அவூது பிரப்பின்னாஸ்%% ஆகிய மூன்று அத்தியாயங்களை ஓதுவார்கள். பின்னர் (கையில் ஊதி) தம் உடலில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தடவிக் கொள்வார்கள். தமது தலையில் ஆரம்பித்து முகம் முன் உடற்பகுதி ஆகியவற்றில் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
நபி (ஸல்) அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்படும்போது, குர்ஆனின் 112,113,113 அத்தியாங்களை ஓதி (பரகத்துக்காக) நபிகளாரின் கைகளில் ஊதி அவர்கள் மீது தடவி விடுவேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி

3. நபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா (ரலி) அவர்கள் வீட்டு வேலைகளின் காரணமாக கஷ்டப்பட்டார்கள். அப்போது கணவர் அலி (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று வேலைக்காரர் ஒருவரை கேட்டு வாங்கி வா என்றார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் நபிகளாரிடம் வேலை செய்வதற்காக பணியாளை கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இதைவிட சிறந்த ஒன்றை உங்களுக்குச் சொல்லட்டுமா? என்று கேட்டுவிட்டு, நீங்கள் இருவரும் தூங்கும்போது சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்து லில்லாஹ் 33, தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதிக் கொள்ளுங்கள். இது பணியாளர்களை விட உங்கள் இருவருக்கும் மிகச் சிறந்ததாக இருக்கும் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

இந்த மூன்று வகையான ஹதீஸ்களும், தூக்கத்தை சம்பந்தப்படுத்தியே சொல்லப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

நபிகளாரைப் பின்பற்றுவோம்
மனம் பல்வேறு வகையான சிந்தனையில் குழப்பம் அடைந்திருக்கும் நிலையில் படுக்கைக்குச் சென்றால் அல்குர்ஆன் 2:255 வசனமாகிய ""ஆயத்துல் குர்ஷி%%யை ஓதிவிட்டு தூங்கச் செல்வோம்.

உடல் கடுமையான வலியால் அவஸ்தைப்படும் நிலையில் படுக்கைக்குச் சென்றால் அல்குர்ஆன் 112,113,114 ஆகிய அத்தியாயங்களை ஓதி உடல் முழுவதும் தடவி விட்டு தூங்கச் செல்வோம்.
பணியாள் துணை இல்லாத, கையேறு நிலையில் படுக்கைக்குச் சென்றால் சுப்ஹானல்லாஹ் 33 தடவை அல்ஹம்து லில்லாஹ் 33 தடவை அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதிவிட்டு தூங்கச் செல்வோம்.

படுக்கையில் படுத்ததும்...
நபி (ஸல்) அவர்கள் (இரவில்) படுக்கும்போது, வலது கரத்தை கன்னத்தின் கீழே வைத்து, வலப்புறம் ஒருக்களித்துப் படுப்பார்கள். அப்போது அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா (இறைவா உனது பெயரால் மரணிக்கிறேன். மேலும் உயிர் பெறுகிறேன்) என்று கூறுவார்கள்.
அறிவிப்பாளர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்

அறிந்து கொள்ளுங்கள்:
அல்லாஹ்வை நினைவு கூர்வதால் (மட்டுமே) உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.
(அல்குர்ஆன் 13:28)

நன்றி -தவ்ஹீத் மாத இதழ்
சந்தா தொடர்புக்கு: 9444822331

எங்கே நிம்மதி? அது இங்கே!


எங்கே நிம்மதி? அது இங்கே!

எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! அங்கே எனக்கோர் இடம் வேண்டும்....
என்றான் முந்தைய நாட்களில் ஒரு கவிஞன்.

எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! அதை நான் தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லை.
இது இந்நாளில் வாழும் ஒரு கவிஞனின் வார்த்தை.

கடலின் ஆழத்திற்கு நீந்திச் சென்று, அங்குள்ளவற்றை படம் எடுத்து பாமரனுக்கும் காட்டு
அறி யலாளர்களாலும் எங்கே நிம்மதி என்பதை சொல்ல முடியவில்லை. வானத்தின் உயரே செவ்வாய்க் கிர கத்து காட்சிகளை பூமியில் இருந்தே கண்டு வியக்கும் விஞ் ஞானிகளாலும் எங்கே நிம்மதி என்று கண்டுபிடித்துச் சொல்ல இயலவில்லை.

வெண்ணையைக் கையிலே வைத்துக் கொண்டு, நெய்க்கு அலைந்தானாம் - முட்டாள் களைப் பார்த்து தமிழில் கூறும் பழமொழி இது. இந்தப் பழமொழியை உண் மைப்படுத்துவது போலவே
இன்றைய மனிதனின் நிலை உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒவ்வொருவரும் வெவ்வேறு வழியில் நிம்மதியைத் தேடி அலை கிறார்கள். பல்வேறு வழிமுறை களை தேர்வு செய்கிறார்கள். விளைவு ....

புகைப்பழக்கம்
""சற்றே இளைப்பாறுங்கள் சார்மினார் புகையுங்கள்'' என்றும், ""ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி - ஒரே ஒரு சிசர்ஸ் சிகரெட்'' என் றும் விளம்பரம் செய்யப் படுவதைப் பார்த்து விட்டு, புகைப் பிடித்தலின் மூலம் நிம்மதியை தேடுபவர்கள் ஏராளம். புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றுவோம் என்று கூறிக் கொண்டே, நுரையீரலையும், கல்லீ ரலையும் புண்ணாக்கிக் கொண்டு - இருமலோடும், காச நோயோடும் போராடிக் கொண்டு இருக்கிற நிம்மதியையும் தொலைத்தவர்ளே ஏராளம்.

போதை
மது, கஞ்சா, அபின் போன்றவை மூலம் போதையில் மிதக்கலாம். அதன் மூலம் தன்னிலை மறக்கலாம். தற்காலிகமாவது சற்றே நிம்மதி யைப் பெறலாம் என்று எண்ணி மயங்கியவர்கள் ஏராளம். முடிவு நிம்மதியை மட்டும் அல்லாமல், மானத்தையும், வருமானத்தையும் இழந்து வாழ்வில் அல்லல் படுபவர்களே ஏராளம்.

உழைப்பு
உழைப்பே உயர்வு தரும் என்று வேலையில் முழுமையாக கவனம் செலுத்துபவர்களுக்காகவது நிம்மதி கிடைத்ததா? என்றால் இல்லை. முதலாளி தரும் ஊதி யத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று அங்க லாய்த்துக் கொண்டு நிம்மதியைத் தேடும் தொழிலாளர்கள்
தொழிலாளிகள் பிரச்சனை பெரும் பிரச்சனை என்று கூறிக் கொண்டே முதலாளிகளும் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். நிம்மதியைத் தேடி ஓடுகிறார்கள்.

வீட்டில்...
தொழில் நிறுவனங்களில் நிம் மதி இல்லை. வீட்டுக்குச் செல் வோம், மனைவி மக்களோடு சற்று நேரம் நிம்மதியாக இருப் போம் என்று வீட்டுக்கு வந்தால், வாடகை பாக்கி, கரண்ட் பில், ரேசன் பிரச் சனை, பள்ளிக்கூடம் பீஸ் கட்ட வேண்டும், மளிகைக் கடையில் பாக்கி என்று பல்வேறு பிரச்சனை கள் தலைவிரித்து ஆடிக் கொண்டு இருக்கின்றன. வீடு பலருக்கும் சுடுகாடு போல தோற்றம் அளிக் கிறது.

கடை வீதி
அலுவலகத்திலும் நிம்மதி இல்லை, வீட்டிலும் நிம்மதி இல்லை, சிறிது நேரம் காலாற நடந்துவிட்டு வருவோம். அதன் மூலம் கொஞ்சம் நிம்மதி கிடைக் கும் என்று கடை வீதிகளில் நடந் தால், அவசரம் அவசரமாக செல் லும் மக்கள் கூட்டம், சப்தம், கூச் சல், நெரிசல், சுட்டெரிக்கும் வெயில் ஒருபுறம், போக்குவரத்து இடையூறு மறுபுறம்... சில நேரங்களில் சாவு கிராக்கி வீட்டில் சொல்லிவிட்டு வந்து விட்டாயா? என்று சபிக்கும் ஆட்டோ, பஸ் டிரைவர்களின் சாபம்... எங்குமே நிம்மதியில்லை என்று புலம்ப வைக்கிறது.

கடற்கரை
கடை வீதிகளைத் தாண்டி கடற் கரைக்கும் செல்வோம், நிம்மதியாக கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டே காற்றை அனுபவிக்க லாம் என்று முடிவெடுத்து, கற்கரை மணலில் காலை வைத்தால் அங்கும் சுனாமி பீதி, சுண்டல்காரன் தொல்லை, காதலர் சேட்டை, காமுகர் வேட்டை என்றும் கடல் உள்வாங்கி விடுமோ என்ற பீதியும் மனதை அலைபாய வைக்கிறது. நிம்மதியை கெடுக்கிறது.

கிராமங்கள்
நகர்ப்புற வாழ்வு நரக வாழ்வாக உள்ளது. எனவே நான் கிராமத்திற்கு சென்று "செட்டில்' ஆகிவிடப் போகிறேன். கிராமப்புற வாழ்வில் மட்டுமே நிம்மதி கிடைக்கும் என்ற முடிவெடுத்து கிராமத்தில் குடியேறி னால் அங்கும் மதக் கலவரம், சாதிக் கலவரம், அரிவாள் கத்தி, கம்பு என்று தூக்கிக் கொண்டு அலை கிறார்கள். பயங்கர மான வாழ்க் கையாக கிராம வாழ்க்கை ஆகிவிட் டது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

விண்ணில்
நகர்ப்புறத்திலும் நிம்மதியாக நடக்க முடியவில்லை, கிராமப்புறத் திலும் பயமற்ற வாழ்வு இல்லை, நிம்மதி என்பது வானத்திலாவது கிடைக்குமா என்று பார்த்தால் - அங்கும் விண்கலம், சேட்டிலைட் தொந்தரவு தாங்க முடியவில்லை. அவனவன் அணுகுண்டு வெடித்து பயமுறுத்திக் கொண்டிருக்கும் நிலை. ஓசோன் என்னும் வளி மண்டலத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று கூப்பாடு வேறு.

வலியவன் - எளியவன்
இருவேளை உணவு உருப்படி கிடைக்காத ஏழைகள், வசதி உள்ளவன் மாட மாளிகையில் குளிர்சாதன அறையில் நிம்மதியாக இருக்கிறான். நமக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா? என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறான். பண வசதி படைத்தவனோ, குளிர் சாதன அறையில் பட்டு மெத்தை யில் படுத்தும் கூட மாத்திரை இல்லாமல் வாழ முடியவில்லையே, வாழ்க்கையில் எங்குதான் நிம்ம தியோ என்று ஏக்கப் பெரு மூச்சில் தூக்கம் வராமல் தவிக்கிறான். இரும்புப் பெட்டியில் உள்ள பணத்தை பாதுகாக்கவே அவனுக்கு நேரம் போதவில்லை.

பிரபல்யங்கள்
பாமரர்களும், பரம ஏழைகளும் நிம்மதி இன்றி தவிக்கிறார்கள், பிரபல்யமானவர்களாவது நிம்மதி யாக இருக்கிறார்களா? என்று பார்த்தால், பதில் இல்லை என்பது தான். இந்தியாவிலேயே இவர்தான் சூப்பர் ஸ்டார் என்று மற்றவர்க ளால் புகழப்படுபவர்களும் கூட இமயமலை உச்சியிலாவது நிம்மதி கிடைக்குமா? என்று ஏங்கும் நிலை.

ஆட்சியாளர்கள்
குடிமக்களுக்குத்தான் நிம்மதி இல்லை, குடிமக்களை ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்காவது நிம்மதி கிடைத்ததா? என்றால் இல்லை. ஆட்சியாளர்களால் பயமின்றி சுதந்திரமாக நடமாடவே முடிய வில்லை. குண்டு துளைக்கும் காரில் செல்ல வேண்டி உள்ளது, சுதந்திர தினத்தைக் கூட சுதந்திரமாக கொண்டாட முடியாத அவல நிலை.

காட்டில்
ஆசாபாசங்களும், சொந்த பந் தங்களும் தான் நிம்மதி கெடுவதற் குக் காரணம். ஆசாபா சங்களையும், நாடு நகரங்களையும் துறந்து, துற வறம் மேற்கொண்டு, காட்டுக்குச் சென்று விடுவோம். அங்குள்ள இலை தலைகளை அணிந்து காய் கனிகளை சாப்பிட் டுக் கொண்டு நிம்மதியாக வாழ்வோம் என்று எண்ணி காடுகளுக்குள் சென்றால், அங்கும் நிம்மதி இல்லை. ஏனெனில் காடு கள் என்பது பயங்கரவாதி களின் பதுங்கும் இடமாகவும், தீவிரவாதி களின் பயிற்சிப் பாசறைகளாகவும் மாறிவிட்டது.

மயானம்
கூச்சல் குழப்பம் எதுவும் இல் லாத நிலையை "மயான அமைதி' என்பார்கள். அந்த மயானத்தி லாவது சற்று நேரம் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்து மயா னத்தை நோக்கினால், அது பேய், பிசாசு கதைகளுக்கான ஊற் றுக் கண்ணாடியாகவும், சாராய சாம் ராஜ்யவாதிகளின் கூடாரமாக வும் திகழ்வதையே பார்க்க முடி கிறது.

எங்கே நிம்மதி?
உண்மையிலே நிம்மதி என்பது தேடி அலையக்கூடிய ஒன்றா, எல்லை இல்லை. சில வகையான பயிற்சிகளின் மூலமாகவும், தியா னங்களின் மூலமாகவும் தான் மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்று பிரல்யமான மனோதத்துவ நிபுணர் களும் யோகா பயிற்சியாளர்களும் கூறுகின்றனர். இன்றைய அறிவியல் உலகமும் அதனை சரிகண்டுள்ளது.

இஸ்லாம்
இறை மார்க்கமான இஸ்லாம், தியானத்தின் மூலமும், சில பயிற்சி யின் மூலமாகவும் தான் நிம்மதியை அடைய முடியும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே தெளிவுபடுத்தி விட்டது.
அல்லாஹ் கூறுகிறான்...
அல்லாஹ்வை நினைவு கூர்வதால் (திக்ரு செய்வதால்) அவர்களுடைய உள்ளங்கள் அமைதியைப் பெறுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அல்குர்ஆன் 13:28


இந்த வேதத்தில் இருந்து உமக்கு அறிவிப்பட்டதை எடுத்து ஓதுவீராக. இன்னும் தொழுகையை நிலைநாட்டு வீராக. நிச்சயமாக தொழுகை மானக் கேடானவற்றை விட்டும், தீமையை விட்டும் விலக்கும். நிச்சயமாக அல் லாஹ்வை நினைவு கூர்வது (திக்ரு செய்வது) மிகவும் பெரியதாகும்.
அல்குர்ஆன் 29:45

நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டதும், நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும், அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (திக்ரு செய்யுங்கள்)
அல்குர்ஆன் 4:103


மனிதர்கள், அல்லாஹ்வை (திக்ரு செய்வது) நினைவு கூர்வதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்று வதை விட்டும், ஜகாத் கொடுப்பதை விட்டும், அவர்களது வியாபாரங்களோ, கொடுக்கல் வாங்கலோ பாராமுகம் ஆக்காது. உள்ளங்களும், பார்வைகளும் தடுமாறக் கூடி யஅந்த (மறுமை) நாளை மட்டும் அஞ்சுவார்கள்.
அல்குர்ஆன் 24:37


(அல்லாஹ்வுடைய அடியார்களாகிய) அத்தகையோர், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், தங்களது விலாப்புறங்கள் மீது சாய்ந்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூர்(ந்து திக்ரு செய்)கிறார்கள். வானங்கள் பூமி ஆகியவற்றின் படைப்பை சிந்தித்து, ""எங்கள் ரட்சகனே! இவற்றை எல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகாதூய வன், நரக நெருப்பின் வேதனையில் இருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (என்று பிரார்த்தனை செய்வார்கள்)
அல்குர்ஆன் 3:191


நிம்மதிக்கு வழி
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள், இறை நினைவு மூலமாகத்தான் ஒரு மனிதனுக்கு நிம்மதி கிடைக்கும் என்பதை தெளிவாகக் கூறுகிறான். அதிலும் குறிப்பாக திக்ரு, தொழுகை, பிரார்த்தனை செய்வது தான் சிறந்த இறை நினைவு என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

""அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதால் மட்டுமே உங்கள் அமைதி பெறுகின்றன.'' (அல்குர்ஆன் 13:28)

நன்றி- தௌஹீத் மாத இதழ்.
சந்தா தொடர்புக்கு : 9444822331
=======

Monday, November 29, 2010

காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்!

காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்!

பல்வேறு குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டிருக்கும் காவி பயங்கரவாதம் நமது நாட்டில் புதிதாகத் தலை தூக்கியுள்ளது” என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூறினார். இந்து பயங்கரவாத அமைப்பினர் உடனே துள்ளிக் குதிக்கத் தொடங்கினர். அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டனர். நாடாளுமன்ற மேலவையை ஒருநாள் இயங்கவிடாமல் முடக்கினர்.

காங்கிரசுக் கட்சியின் இளைய தலைவரான ராகுல் காந்தி அண்மையில், “ஆர்.எஸ்.எஸ்., சிமி இரண்டு அமைப்புகளுமே அடிப்படைவாதக் கொள்கைகளைக் கொண்டவை. சிமி தடை செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்படவில்லை. அவ்வளவுதான் வித்தியாசம்”என்று பேட்டி அளித்தார். பா.ஜ.க. கட்சியோ, “வரலாறு தெரியாமல் பேசாதே” எனக் கூச்சல் போட்டு ராகுலுக்கு சில நூல்களையும் அனுப்பி வைத்தது.

அயோத்தி தீர்ப்பு வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன், “ராமர் கோவில் கட்டுவது என்பது பெரும்பாலான இந்துக்களின் உணர்வு” என அத்வானி குறிப்பிட்டதற்கு காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, “பழைய காயத்தை அத்வானி கிளற வேண்டாம்” எனச் சீறினார். அயோத்தி தீர்ப்பு வெளிவந்தவுடன் ப.சிதம்பரம், “மசூதி இடிக்கப்பட்டதைத் தீர்ப்பு நியாயப்படுத்தவில்லை. என்னைப் பொருத்தவரையில் அந்த குற்றச்செயல் அப்படியேதான் இருக்கிறது” எனக் ‘கடுமையாக’ப் பேசினார்.

இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராகச் சீறுவதாக ப.சிதம்பரமும், ராகுல் காந்தியும் தீவிரமாக நடிக்கிறார்களே, அவர்களின் கட்சிதான் இந்த நாட்டில் இந்து மதவெறிப் பாசிசம் உருவாகி வளர்வதற்கு அடிக்கொள்ளியாக இருந்து வருகிறது. காந்தி படுகொலையில் இருந்து குஜராத் இனப்படுகொலை வரை இந்துமதவெறியைச் சீராட்டி வளர்த்தும் இருக்கிறது.

“ராமராஜ்ஜியம் அமைப்போம்”, “பசுவதை தடுப்போம்”, “கிறித்துவ மதமாற்றத்தை எதிர்ப்போம்”, “வர்ணாசிரம தர்மம் காப்போம்” போன்ற ஆர்.எஸ்.எஸ்.-க்கு நெருக்கமான கொள்கைகள்தான் காந்திக்கும் நெருக்கமானதாக இருந்தன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபையைச் சேர்ந்த மத வெறியர்கள் காங்கிரசிலும் உறுப்பினராவது, காந்தி காலத்தில் முரண்பாடானதாக இருந்ததில்லை. பாபர் மசூதி இடிப்புக்குத் துணை நின்ற காங்கிரசின் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவே அப்போதைய காக்கி டவுசர்வாலாதான். முசுலீம் மதவாத தேசியத்தை வளர்த்தது முசுலீம் லீக் என்றால், இந்து தேசியத்தை வளர்த்தது காங்கிரசு.

காந்தி படுகொலையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கத் துணைநின்றவர், காங்கிரசின் துணைப்பிரதமர் பட்டேல். 1947 -இல் சோமநாதபுரம் கோவிலைப் புதுப்பிக்கும் அரசியலைக் கையில் எடுத்தவர்களும் காங்கிரசின் வல்லபாய் பட்டேலும், குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்தும்தான். இக்கோவிலில் இருந்துதான் 1990 -&இல் அத்வானி ரதயாத்திரை தொடங்கினார்.

பெரும்பாலான வட மாநிலங்களில் தற்போது நடைமுறையில் உள்ள “பசுவதைத் தடைச் சட்டம்”, காங்கிரசு அந்தந்த மாநிலங்களில் ஆட்சியில் இருந்தபோதுதான் நிறைவேற்றப்பட்டன. குஜராத், உ.பி., பீகார் மாநிலங்களில் நடந்த மதக் கலவரங்களில் இளைஞர் காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ்.ஸூம் கைகோர்த்துக் கொண்டு முசுலீம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கும்; மீரட், கான்பூர், தில்லி நிஜாமுதீன் ஆகிய இடங்களில் 80-களில் நடத்தப்பட்ட முஸ்லிம் படுகொலைகளில் காங்கிரசின் சேவாதளம் ஆற்றிய பங்குகள் பற்றியும் எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. நெருக்கடி காலத்தில் சஞ்ச காந்தி முசுலீம் மக்களைக் குடும்பக் கட்டுப்பாடு செய்யக் கட்டாயப்படுத்தியதும், துருக்மான் கேட் பகுதியில் இருந்து ஏழை முசுலீம்களை அடித்து விரட்டியதும் என்றென்றும் மறக்க முடியாதவை.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபொழுது, இந்துக்களை தாஜா பண்ணுவதற்காக பாபர் மசூதி வளாகத்தினுள் திருட்டுத்தனமாக வைக்கப்பட்டிருந்த ராமர் சிலையை வழிபட அனுமதிக்கும் வண்ணம் பூட்டப்பட்டுக் கிடந்த அந்த மசூதி வளாகத்தை இந்துக்களுக் குத் திறந்துவிட்டார். இதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் ராமஜென்ம பூமியை முன்வைத்து இந்து மதவெறிப் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்துவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார், அவர். அதன் தொடர்ச்சியாக வட இந்தியாவெங்கும் பதற்றமும், படுகொலைகளும் பற்றிப் படர்ந்தன. 1990-இல் ரத யாத்திரை நடத்திய அத்வானி பீகாரில் கைதானதைத் தொடர்ந்து வி.பி.சிங்கின் அரசுக்கு பா.ஜ.க. ஆதரவை விலக்கிக்கொண்டபொழுது, பா.ஜ.க.-வோடு காங்கிரசும் கைகோர்த்துக் கொண்டது.

காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்

1992-இல் மசூதி இடிப்பின்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசு, ஒரு இலட்சம் துணை இராணுவத்தினரை மசூதிக்கு அருகில் நிறுத்தி வைத்து மசூதி முற்றிலுமாகத் தகர்க்கப்படுவதற்குப் ‘பாதுகாப்பு’ கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் ஆகிய இந்து மதவெறி அமைப்புகளைத் தடை செய்வது போலப் போக்குக் காட்டி விட்டு, ஆறே மாதங்களில் தடையை விலக்கியது

மசூதி இடிப்பைத் தொடர்ந்து மும்பை நகரத்தில் சிவசேனா, பா.ஜ.க. கும்பல் ஒரு பயங்கர கலவரத்தை நடத்தி நூற்றுக்கணக்கான முசுலீம்களின் உயிரைப் பறித்தபொழுது, காங்கிரசுதான் அம்மாநிலத்தில் அதிகாரத்தில் இருந்தது. அக்கலவரம் நடந்தபொழுது அதனைத் தடுக்காத காங்கிரசு, பின்னர் அதனை விசாரிக்க சிறீகிருஷ்ணா கமிசனை நியமித்தது. அக்கமிஷன் பால் தாக்கரே முதல் போலீஸ் கமிஷனர் ஆர்.டி.தியாகி வரை பலரைக் குற்றஞ்சாட்டி இருந்தது. கலவரத்தின் பின் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. – சிவசேனா கும்பல் அக்கமிசனின் அறிக்கையை முடக்கி வைத்தது.

“கிருஷ்ணா கமிசன் அறிக்கையை நிறைவேற்றுவோம்” என வாக்குறுதி அளித்து தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரசு கூட்டணி பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களின் முதுகில்தான் குத்தியது. பால் தாக்கரே உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்யாததோடு, கிருஷ்ணா கமிசனால் குற்றஞ்சாட்டப்பட்ட பல போலீசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்து கௌரவித்தது, காங்கிரசு.

ரோஹிண்டன் மிஸ்த்ரி என்ற நாவலாசிரியர், இருபது ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனாவின் இனவெறி அரசியலை விமர்சித்து எழுதிய “சச் எ லாங் ஜர்னி” (Such AS Long Journey) என்ற ஆங்கில நாவல் மும்ப பல்கலைக்கழகத்தின் இளங்கலை ஆங்கில பட்டப்படிப்புக்கான பாடத் திட்டத்தில் இருந்து வந்தது. தற்பொழுது அப்பல்கலைக்கழகத்தில் படித்து வரும் பால் தாக்கரேயின் பேரன் ஆதித்யா தாக்கரே அந்நாவலைப் பாடத்திட்டத்தில் இருந்து விலக்கக் கோரி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியவுடனேயே, அந்நூலைப் பாடத்திட்டத்திலிருந்து விலக்கிக்கொண்டு சிவசேனாவிடம் அடிபணிந்தது, காங்கிரசு.

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரித்துப் பேசியதற்காக எழுத்தாளர் அருந்ததிராய் மீது தேசத் துரோக வழக்குப் போடத் தயாராகும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைக் கக்கி வரும் நரேந்திர மோடி, பிரவீண் தொகாடியா போன்றோர் மீது ஒரு பெட்டி கேஸைப் போடக்கூடத் துணிந்ததில்லை. இது மட்டுமா, சோராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜஹன் ஆகியோரைப் போலி மோதலில் நரேந்திர மோடி அரசு கொன்றதில் காங்கிரசிற்கும் கணிசமான பங்குண்டு.

இவ்வாறு இந்து தேசியவெறிக்கு அடிக்கொள்ளியாக இருந்தும், இந்து மதவெறிப் பயங்கரவாதிகளைத் தப்பவைத்தும், காவி பயங்கரவாதத்தின் பங்காளியாகவும் விளங்கும் காங்கிரசின் முசுலீம் விரோத அரசியலை 50 ஆண்டுகளாகப் பார்த்துவரும் முசுலீம் வாக்காளர்கள் காங்கிரசு, பா.ஜ.க. அல்லாத பிராந்தியக் கட்சிகளின் வாக்காளர்களாக மாறிப்போ விட்ட சூழலில் அவர்களை எப்படியாவது தாஜா செய்து, பீகார், உ.பி. போன்ற மாநிலங்களில் மறுபடியும் வேரூன்றுவதற்காகத்தான் சிதம்பரமும், ராகுலும் இப்போது ஆர். எஸ்.எஸ்., பா.ஜ.க.-வுக்கு எதிராகச் சவடால் அடிக்கின்றனர்.

__________நன்றி- வினவு தளம்.

அயோக்யா: தீர்ப்பும்,-வரலாறும்!அசுரன்

"அயோத்தியா-தீர்ப்பு-மோசடி-பார்ப்பனியம்-கார்டூன்ஸ்

டந்த கால கசப்பு அனுபவங்களை மறந்துவிட்டு முன்னேறிச் செல்வோம்" - ஆர் எஸ் எஸ் தலைவன் மோகன் பகவத் சொல்கிறான். பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஆதாரமற்ற கசப்பனுபவமாம் ராமன் கோயில் இடிப்பு என்ற கதையை வைத்துக் கொண்டு பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்த பயங்கரவாத அமைப்பின் தலைவன் சொல்கிறான் இதை.

"நமது சமூகத்தில் மதவெறியர்களுக்கு(fanatics) இடமில்லை, இந்தத் தீர்ப்பு நல்ல தீர்ப்பு" இப்படி சொல்வது வேறுயாருமல்ல குஜராத் பாசிச மோடி என்ற மதவெறியன் தான்.

"தேசிய இணைவுக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது, உடனே ராமன் கோயிலை பெரிதாக கட்டுவோம்" இப்படி புரிய வேண்டியவர்களுக்கு மட்டும் புரிகின்றபடி உளறியது போல தெளிவாக உளறியிருப்பவன் திருவாளர் மார்க்கெட் போன அத்வானி.

அயோத்தித் தீர்ப்பு என்ற அயோக்கியத்தனம் செய்யும் மாயம் இந்த அதிசய பேச்சுக்களையெல்லாம் நாம் கேட்க வேண்டிய காலக் கொடுமை நிகழ்ந்துவிட்டது. நேற்று எல்லா தொலைக்காட்சிகளும் இந்து மத வெறித் தலைவர்களின் நல்லொழுக்க பேச்சுக்களால் நிரம்பி வலிந்தன. இது அயோத்தித் தீர்ப்பு அல்ல, அயோக்கியத் தீர்ப்பு என்பதை இதுவே உரக்க ஒலித்தது.

இந்தத் தீர்ப்பில் இந்து ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் மனசாட்சியாக நீதிமன்றத்தின் குரல் ஒலித்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், பாபர் மசூதி மற்றும் அது இருந்த இடத்தின் மீதான முஸ்லீம்களின் உரிமை என்னென்ன காரணங்களை நிராகரித்து பறிக்கப்பட்டதோ அதே நிராகரிக்கப்பட்ட காரணங்களை/வாதங்களை ஏற்றுக் கொண்டு ஆர் எஸ் எஸ் காவி வெறியர்களுக்கு அந்த இடத்தின் மீது உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது முரன்பாடு என்று கேட்டவர்கள் எல்லாம் நேற்று தேசவிரோதிகள் என்று தூற்றப்பட்டார்கள், கேலி செய்யப்பட்டார்கள்.

'அங்குதான் ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை எனவே அந்த இடம் அவர்களுக்கே சொந்தம்' (தீர்ப்பு நகல்1 மற்றும் 2) என்று சொல்லும் நீதிமன்றம்,

'அது பாபருக்கு சொந்தமான இடம் என்பதும், அதைக் கட்டியது பாபர்தான் என்பதும் போதுமான அளவு நிருபிக்கப்படவில்லை, எனவே உரிமையில்லை' (தீர்ப்பு நகல் 2, சரத்து 2) என்று கூறி முஸ்லீம்களின் உரிமையை மறுத்துள்ளது. ஆதாரமே இல்லாத ராமன் பிறந்த இடம் என்ற கட்டுக்கதை உண்மை ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை. ஆனால் நேரடி ஆதாரமற்றது(தீர்ப்பு நகல் 1, சரத்து 2.) என்பதாலேயே 1992ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பொய் ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானது.

இதைத்தான் இந்திய வரலாற்று முக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான இர்பான் ஹபீப் இப்படிக் கூறுகிறார்: "இந்த நாட்டின் இராண்டம்தர குடிமகனாக உணர்கிறேன்". இப்படித்தான் பெரும்பான்மை முஸ்லீம்களும் உணர்கிறார்கள். உலகின் இரண்டாவது மிகப் பெரிய முஸ்லீம் மக்கள் தொகையை கொண்ட நாட்டின் முஸ்லீம்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாக உணர வைக்கப்பட வேண்டும், அதன்படி அவர்கள் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும் என்பதுதான் ஆர் எஸ் எஸ்ன் இலட்சியமும் ஆகும்.இதைத்தான், 'தேசிய ஒருங்கிணைப்புக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது' என்று முழங்குகிறான் அத்வானி.

இல்லாத ராமனுக்கு அந்த இடம் சொந்தமாம், ஆனால் பாபர் கட்டவில்லையென்பதாலேயே அது மசூதிக்கு சொந்தமில்லையாம். அப்படியென்றால் இடிக்கப்பட்ட மசூதி என்ன அந்தரத்திலா தொங்கிக் கொண்டிருந்தது, அந்த இடத்தில்தானே இருந்தது? யார் கட்டினால் என்ன? மசுதி இருந்தது என்ற உண்மைதானே இங்கு முக்கியமானது? 1949ல் ராமன் சிலையை அங்கு வைத்த திருடன் யார் என்று நீதிமன்றம் ஆராய்ந்துதான் தீர்ப்பளித்ததா? அப்போது மட்டும் இந்துக்களின் நம்பிக்கை முக்கியம், அதன் பூர்வாசிரமம் தேவையில்லை?

'1949ல்தான் மசூதியின் மைய கோபுரத்திற்குக் கீழே ராமன் சிலை வைக்கப்பட்டது (தீர்ப்பு நகல் 1,2,3). எனவே அது இந்துக்களுக்குச் சொந்தம்' என்று கூறியுள்ள நீதிமன்றம்.

'மசூதியை இஸ்லாம் சொல்லுகின்ற விதிகளின் படி கட்டவில்லை எனவே அது மசூதியில்லை(தீர்ப்பு நகல் 3), அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை" என்று கூறியுள்ளது. ராமன் சிலை மட்டும் இந்து விதிமுறைகளின் படித்தான் 1949ல் அங்கு திருட்டுத்தனமாக வைக்கப்பட்டதா என்ன? விதிமுறைகளெல்லாம் முஸ்லீமுக்கு மட்டும்தான் போலும்?

1949க்குப் பிறகு மைய கோபுரத்தின் கீழ் ராமன் சிலை வைக்கப்பட்டதால் அது இந்துவுக்குச் சொந்தம்(தீர்ப்பு நகல் 1, 2,3) எனில் 1949க்கு முன்புவரை அங்கு சிலையும் கிடையாது ஒன்றும் கிடையாது. பல நூறு வருடங்களாக அங்கு முஸ்லீம்கள்தான் தொழுதார்கள்(தீர்ப்பு நகல் 1,2). எனில், அவர்களுக்கு உரிமையில்லையா என்று யாரும் கேள்வி எழுப்பிவிடாதீர்கள். தேவைப்பட்டால் ஆயிரம் வருட பழய நம்பிக்கை(ராமன்) என்று நியாயப்படுத்தவும், தேவையில்லையெனில் லேட்டஸ்ட்(1949ல் சிலை வந்தது) என்னவென்று பாருங்கள் என்று நிராகரிக்கவும் ஆர் எஸ் எஸ்ன் மனசாட்சியாம் நீதிமன்றங்களுக்குத் தெரியும்.

அதாவது மைய கோபுரம் முஸ்லீம்களுக்குச் சொந்தம் என்பது நிருபிக்கப்படவில்லை என்கிறது நீதிமன்றம். சரி இருக்கட்டும். ஆனால் இந்துக்களுக்கு மைய கோபுரம் சொந்தம் என்பதை மட்டும் எப்படி நீதிபதிகள் ஆணித்தரமாக சொல்கிறார்கள்? அங்கு 1949ல் சிலை வைக்கப்பட்டதாலேயும், அதற்கு முன்பு வரை பொதுவாக அயோத்தியில் ராமன் பிறந்தான் என்று நம்பிக் கொண்டிருந்த இந்துக்கள், மசூதி உருவான பிறகு அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இராமன் பிறந்தான் என்று மாற்றிக் கொண்ட இந்துக்கள், பிறகு 1949ல் திருட்டுத்தனமாக ராமனது சிலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழே வைக்கப்பட்டது எனவே அது இந்துக்களுக்குச் சொந்தமாம்(தீர்ப்பு நகல் 1, 2,3). நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படித்தான் சொல்கிறது.

நீதிமன்ற தீர்ப்பில் எங்கேயுமே மைய கோபுரம் உள்ள பகுதி இந்துக்களுக்கு சொந்தம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளதால் அதை அவர்களுக்குத் தருகிறோம் என்று சொல்லவில்லை. நிருபணம் எல்லாம் முஸ்லீம்களுக்குத்தான், இந்துக்களுக்கு நம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்பதுதான் இதன் பொருள்.

"மசூதி இருந்த இடத்தின் மீதான உரிமையை சன்னி வக்பு வாரியம் நிருபிக்கவில்லை. மேலும், மசூதி இருந்த இடம் பாபருக்கு சொந்தமானது என்பதும் நிருபனமாகவில்லை" என்று கூறியுள்ளது நீதிமன்றம் (தீர்ப்பு நகல் 1, 2, 3).

ராமன் பிறந்த இடம் என்பதும்தான் நிருபிக்கப்படவில்லை, அங்கு ராமன் கோயில்தான் இருந்தது என்பதோ அல்லது கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்பதோ கூடத்தான் நிருபிக்கப்படவில்லை(தீர்ப்பு 1, 2). அந்த இடம் இந்துக்களுக்கானது என்பதும் கூடத்தான் நிருபிக்கப்படவில்லை. ஆனாலும் இந்துக்களின் நம்பிக்கை என்பதால் அது மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்குத் தரப்படவேண்டும் என்கிறது தீர்ப்பு.

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் படி நிருபிக்கப்பட்டவையெல்லாம் இவைதான், 1) ஏற்கனவே, இடிந்த கோயில் ஒன்று இருந்துள்ளது, அங்குதான் மசூதி கட்டப்பட்டது. 2) கோயிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை. 3) மசூதி கட்டப்பட்ட பிறகுதான் மசூதி இருக்கும் அந்தக் குறிப்பான பகுதியில் ராமன் வழிபாடு நடக்கத் தொடங்கியது. 4)அதுவும் வெளிப் பிரகாரத்தில்தான். 5)1853 வரை மசூதி ஒரு பிரச்சினையாகவே இல்லை, இரு மதத்தவரும் அக்கம் பக்கமாக வழிபட்டு வந்துள்ளனர்.

இதிலும் கோயில்தான் இருந்ததா என்பதை ஆணித்தரமாக அகழ்வாராய்ச்சியால்` சொல்ல இயலவில்லை. பூசி மெழுகவே செய்கிறார்கள்.

இவைதான் நிருபிக்கப்பட்டவையெனில், இதே நிலையை மீண்டும் கொண்டு வருவதுதானே நியாயம்? மசூதியின் பிரகாரத்தில் இந்துவின் வழிபாட்டையும், மசூதி இருந்த இடத்தில் மசூதியையும் கொண்டு வருவதுதானே நியாயம்?

தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், வெளிப் பிரகாரத்தில் சீதா மற்றும் ராமன் வழிபாடு நிகழ்ந்ததால் அது நிர்மோகி அகாராவுக்குச் சொந்தம், உள்ளே மைய ஸ்தூபியில் 1949ல் ராமன் சிலையை வைக்கப்பட்டதாலும் அதையே இந்துக்கள் அன்றிலிருந்து நம்பத் தொடங்கியதாலும் அந்த இடம் இனிமேல் மசூதிக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ சொந்தம் கிடையாது இந்து மகா சபைக்கே சொந்தம், 1992ல் மசூதி இடிக்கப்படும் வரை அங்கு மசூதி இருந்தது என்பது மறுக்க இயலாத அளவு நிருபிக்கப்பட்டுவிட்டது எனவே போனால் போகிறது மூனாவது பங்கு முஸ்லீம்களுக்கு என்று தீர்ப்பு சொல்லியுள்ளனர்.

அதாவது 400 வருடம் மசூதி இருந்தது ரெவின்யு டிப்பார்மெண்டிலோ அல்லது நிலப் பட்டா மூலமோ ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை (பாபருக்கு இந்த சட்டப் பிரச்சினையெல்லாம் தெரியாமல் போனதற்கு பாவம் நீதிபதிகள் என்ன செய்வார்கள்) எனவே அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை போலும். 400 வருட மசூதிக்கு உரிமையில்லை ஆனால் 61 வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட ராமனது திருட்டு சிலைக்கு உரிமையுண்டு. ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை(புதிய நம்பிக்கையா, பழைய நம்பிக்கையா என்பதெல்லாம் நீதிமன்றத்திற்கு தேவையில்லாத விசயம்).

இப்போது இந்தப் பிரச்சினையின் காலனி ஆட்சிக்கால பரிணாமத்தை புரிந்து கொள்வது தேவையாக உள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இந்து முஸ்லீம் பிரித்தாளும் சூழ்ச்சியும், காலனியாதிக்க பிரிட்டிஷ்க்காரர்களின் ஏவல் படையாகச் செயல்பட்ட இந்துத்துவவாதிகளின் முஸ்லீம் எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு அரசியலும் இந்த பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன.

நிர்மோகி என்ற குழு அங்கு கோயில் இருந்ததை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்று களத்தில் இறங்கிய பிறகுதான் 1853ல் அங்கு முதல் மத மோதல் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு வருடங்கள் நடந்த கலவரங்களின் விளைவால், நவாபின் ஆட்சியின் கீழ் இருந்த அங்கு கூட்டாக இந்துக்களும், முஸ்லீம்களும் உள்பிரகாரத்தில் வழிபடுவது தடை செய்யப்பட்டது. ஏற்கனவே மசூதி இருந்தபடியால், இந்துக்களின் வழிபாடிற்கு என்று வெளிப் பிரகாரத்தில் ஒரு இடம் கட்டப்பட்டது.

இதுதான் பிரச்சினையின் மையமான பகுதி. 1850களில் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருங்கிணைந்து பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றும் சுதந்திரப் போரை நடத்திக் கொண்டிருந்தனர். திப்பு சுல்தான் தலைமையில் தென்னிந்தியாவில் ஒரு கூட்டிணைவு உருவாகி அது பிரிட்டிஸால் சிதைக்கப்பட்டிருந்தது. திப்பு சுல்தான் தலைமையில் தந்திரப் போரில் ஈடுபட்ட அரசர்கள் மூட்டிய கனல் 1805ல் வேலூர் சிப்பாய்க் கலகமாக வெடித்தது. பிற்பாடு, 1857ல் இந்திய சுதந்திரப் போராக இந்தியா முழுவதும் வெடித்துக் கிளம்பியது. இவையிரண்டும் பிரிட்டிஷ்க்காரர்களால் ஒடுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு புரட்சியை எதிர்நோக்கி இருந்தது.

மத பிரிவினைகள் இன்றி மக்கள் ஒன்று பட்டு நின்றது பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு அபாயமானது எனவே, பிரித்தாளும் தந்திரம் விரிவாக அமல்படுத்தப்பட்டது. இன்னொரு பக்கம், புரட்சிகரமான இந்த காலகட்டத்தில்தான் துரோகமமும் உத்வேகத்துடன் முன்னுக்கு வந்தது. அந்தத் துரோகத்தின் வரலாற்றுக் குரலாக பதிவு செயப்பட்டதுதான், பக்கிம் சந்தர் சாட்டர்ஜியின் 'ஆனந்த மடம்' என்ற புதினம், அதில் முஸ்லீம்களை நாட்டை விட்டு விரட்டுவதே முக்கியம், பிரிட்டிஷ்க்காரர்களின் ஆட்சி நமக்குத் தேவையானது என்ற அரசியலும் பேசப்பட்டது. முஸ்லீம்களை விரட்ட செல்லும் கூட்டத்தினரின் 'தேசபக்த'ப் பாடலாக வந்தேமாதரம் பாடலும் புதினத்தில் இயற்றப்பட்டது.

இந்துத்துவாதிகளின் மதவெறி முஸ்லீம் வெறுப்புப் பிரச்சாரமும், பிரிட்டிஷ்க்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாளமும், லயமுமாக இணைந்து செயல்பட்டு இந்திய விடுதலைப் போராட்ட அரசியலை பிழைப்புவாத லாவணிக் கச்சேரியாகவும், மதவாத பிரிவினையாகவும் சிதைத்தன. இவைதான் பாபர் மசூதிப் பிரச்சினையில் தெரிந்தே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மோதலைத் தூபம் போடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தன.

ஒரு நீதிமன்றத் தீர்ப்பு முற்றுமுதலாக பெரும்பான்மையினரின் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் வழங்க இயலுமா? அத்தகைய நம்பிக்கை பெரும்பான்மையினருடையது என்பது கூட ஜனநாயக முறையில் நிருபிக்கப்படாத பொழுது தீர்ப்பின் தன்மையை நியாயமானதாக எப்படி புரிந்து கொள்ள இயலும்? மசூதியை இடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் சொல்லியதை மீறி அது இடிக்கப்பட்டுள்ளதற்கு நீதிமன்றத்தின் எதிர்வினை என்ன? இவையெல்லாம் உண்மையில் இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதையல்ல மாறாக இன்னும் சில பல வருடங்களுக்கு அடித்துக் கொண்டு அப்பாவி மக்களை பலி கொடுக்கப்படுவதையே உறுதி செய்யும். அதைத்தான் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளும் விரும்புகிறார்கள்.

இது தீர்ப்பு அல்ல, துரோகம். இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்தவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கைத் துரோகம்.
அயோக்யா: தீர்ப்பும்,-வரலாறும்!
-அசுரன்

உலக ஆதாயங்களுக்காக எதையும் செய்வார் பீ.ஜெ !

அன்பிற்கினிய சகோதரர் சர்புதீன்அவர்களுக்கு....
அஸ்ஸலாமு அலைக்கும்..
பாக்கருக்கு தாங்கள் எழுதிய கடிதம் (தங்களுக்கு வந்த கடிதம்) உண்மையிலேயே அழகிய முறையில் சகோதர பாசத்துடன் இருக்கிறது...
ஆனால் தங்களின் கடிதத்தில் கூறி இருக்கும் சம்பவங்கள் பற்றி சிறு சந்தேகம் ..!

பாக்கர் தடம் புரண்டதாக தாங்கள் குறிப்பிடும் நிகழ்வுகள் ஒரே நாளில் நிகழ்ந்து விடவில்லை என்பதை தங்களின் ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது..இந்நிலையில்..பல வருடங்களாகஒழுக்க கேட்டில்
இருக்கும் பாக்கரை தனது நாவன்மையால் (தாங்கள் தான் குறிப்பிட்டீர்கள் ) பீ.ஜெ தூக்கிப்பிடித்து நற்சான்றிதழ் வழங்க வைத்த மர்மம் என்ன?

பீ.ஜெ வின் நாவன்மை க்கு முன் டி.என்.டி.ஜெ. வினர் சரணடைகிறார்கள் எனில் இது நாள் வரை பாக்கரை போல் தவறுகள் செய்து பீ.ஜெ வின் நாவன்மையால் வெளிவராமல் உள்ளவர்கள் எத்தனைபேர்..?

ஒரு மூமின் ஒரே புற்றில் இருமுறை கொட்டுப்படமாட்டார் எனும் வாக்கை நம்பும் நாம்அடுக்கடுக்காக குற்றம் சாட்டப்பட்ட பாக்கரை பீ.ஜெ நாவன்மையால் தாங்கிப்பிடிக்கும் போது நமது மூளையை பீ.ஜெ விடம் அடகு வைத்து விட்டோமா..?

மார்க்கத்திற்கு புறம்பாக போகும் பாக்கரின் கடந்த கால தியாகங்களை பார்த்து அட்ஜஸ்ட் செய்து கொண்டார் பீ.ஜெ...! எனில் உலக ஆதாயங்களுக்காக எதையும் செய்வார் பீ.ஜெ என்பதில் மாற்றுக்கருத்து இருக்கிறதா..?

ஆக தங்களும் (தங்களுக்கு வந்த கடிதம்) பீ.ஜெ விற்கு வால் பிடிக்கிறீர்கள்..

சகோதரரே..! பாக்கர், முகவை அப்பாஸ், இன்னும் பீ.ஜெ வால் ஓரங்கட்டப்பட்டவர்கள் யாராக இருப்பினும் இன்று மக்கள் முன் உலாவரக்கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள் அவர்களை பார்த்து மக்கள் கேள்வி கேட்கட்டும் ,மக்கள் அவர்களை புறக்கணிக்கட்டும்,

தாங்கள் பாக்கருக்கு எழுதிய கடிதத்தை போல் பீ.ஜெ க்கும் ஒரு கடிதம் எழுதி இது நாள் வரை ...டி.என்.டி.ஜெ சகோதரர்களை தனது நாவன்மையால் பேசி முட்டாள்களாக்கியதற்கு முதலில்
மனம் திறந்து மன்னிப்பு கேட்கச்சொல்லுங்கள்.,

குற்றத்தை மூடி மறைத்ததற்கு பகரமாக இனிமேலும் மற்றவர்களை பற்றி புறம் பேசாமல் அழைப்பு பணிகளை மேற்கொள்ளச்சொல்லுங்கள் அந்த நற்காரியமாவது அவரது கப்ருக் குழிக்கு நன்மைகளை அள்ளித்தரும்..!


இறைஞ்சுதலுடன்...
இறை நேசன்

18.11.10 அன்று பெருநாள்! 17.11.10 குர்பானி ! தக்லீத் ஜமாத்தின் தனி வழி!

அண்ணல் நபி வழியை விட்டு அண்ணனின் தனி வழியில் பயணிக்கும் த.த.ஜ.வினர் தறி கெட்டு, நெறி கெட்டு ,தங்கள் அமல்களை பாழ் படுத்துவதோடு , மக்களின் மார்க்க கடமைகளையும் கேலிக்கூதாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது! !

உலகில் எங்கும் இல்லாத அதிசயமாய் மூன்றாம் நாள் பெருநாள் கொண்டாடிய த,த,ஜ,வினர் முதல் இரண்டு நாள் பெருநாள் கொண்டாடியவர்கள் , வழி கெட்டு விட்டனர் என்றும் அது ஹராம் என்றும் கூறிவிட்டு , வாங்கி கட்டியதை ஏற்கனவே கண்டோம் ! ஹராமாக கொடுக்கப்பட்டகுர்பானி தோல்களை மட்டும் ,வீடு வீடாக சென்று வசூல் செய்ததை ,'ஆடு பகை! குட்டி உறவா? என்பது போல் குர்பானி ஹராம் தோல் ஹலாலா? என்று கேடடு மக்கள் கேட்டனர்.

ஆனால் தற்போது அதை விட மோசமான ஒரு நிகழ்வு காஞ்சி மாவட்டத்தில் நடந்துள்ளது! த.த.ஜ.வினரிடம் கூட்டு குர்பானியில் பங்கு சேர்ந்த சிலர் ' நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பெருநாள் கொண்டாடுங்கள்! எங்களுக்கு 17.11.௧௦ அன்று கறி வேண்டும் எனக்கூற ' ஒரு மாட்டை மட்டும் 17.11.10 அன்று யாருக்கும் தெரியாமல் அறுத்து விநியோகித்துள்ளனர். இந்த விஷயம் வெளியாகி கேள்வி எழ சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகி ' மாடு இறக்கும் தருவாயில் இருந்ததால் அறுத்தோம்' என பொய் சொல்லி சமாளிக்க, சரி அப்படி என்றால் அந்த கறியை ஏன் பங்கு தாரர்களுக்கு கொடுத்தீர்கள் ? என கேள்வி எழுப்ப பதில் இல்லை! 18.11.10 அன்று பெருநாள்! 17.11.10 குர்பானி என்ற கேலிக்கூத்து காஞ்சி மாவட்டத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது!

ஏற்கனவே இந்த வருட பித்ரா தொகையை , பெருநாள் கடந்த பின்னும் விநியோகிக்காமல் , வேறு வகையில் அதை வரவு வைத்து மக்களின் மார்க்க கடமையில் விளையாடியது போல் , தற்போது குர்பானியிலும் விளையாடி உள்ளனர். இவர்களை நம்பி தங்களின் குர்பானி ,பித்ராவை ஒப்படைக்கும் மக்கள் சிந்திக்க வேண்டும்! குறிப்பாக வளைகுடாவில் உள்ள சகோதரர்கள் நீங்கள் பெருநாள் தொழுகைக்கு முன்னதாக கொடுக்க வேண்டிய பித்ராவும், பெருநாளுக்கு பின் கொடுக்க வேண்டிய குர்பானியும் சரியான நாளில் கொடுக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்! இல்லையேல் உங்கள் அமல்கள் பாழ் பட்டு மறுமையில் கைசேதப்படுவீர்கள்.

அல்லாஹ் நம் அமல்களை சீர் செய்யட்டும் !அனைவருக்கும் நேர்வழி காட்டட்டும்!


-ஆலந்தூர் முபாரக்

குற்றத்தில் தனக்கு பங்கிருந்தும் அதை மறைக்கும் அப்பாவி தொண்டன்.!


அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இ த ஜ வின் மாநில பேச்சாளர் சகோ:அப்துல் ஹமீத் அவர்களை தொலை பேசியில்
தொடர்பு கொண்டு உசுப்பேற்றியதன் மூலம் அவர் தவறு செய்ய காரணமாக இருந்த
,அந்த அறிஞரின் அப்பாவி தொண்டர் நசுருதீன்,ஒரு கடிதத்தை சகோ: அப்துல்
ஹமீதுக்கு எழுதியுள்ளார்.தான் பேசியது தவறு தான் என்று மனமுவந்து
சகோ:அப்துல் ஹமீத் அவர்கள் வருத்தம் தெரிவித்ததற்கு பகரமாக தான், இந்த
கடிதத்தை அப்பாவி தொண்டர் எழுதியுள்ளார்.அதில்.. முழுக்க முழுக்க சுயநலமே
மேலோங்கியிருப்பதை படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்...


"தாங்கள் என்னை தவறான வார்த்தைகளினால் திட்டியது தங்களுக்கு வருத்தம்
அளிப்பதினால் அதற்க்கு மன்னிப்பு தெரிவித்து இந்த இணையதளத்தில் எழுதி
இருந்தீர்கள். நான் மிகவும் வருத்தப்பட்டேன் இந்த மன்னிப்பிற்கு."
நானும் அதை மறந்து விட்டேன். தாங்களும் அதை மறந்து விடவும்.
நீங்கள் வயதில் பெரியவரோ அல்லது சிறியவரோ அது எனக்கு தெரியாது.
இருப்பினும் அது தவறு என்று தெரிந்து தாங்கள் மன்னிப்பு கேட்டதற்கு அல்லா
அதை மன்னிப்பானாக
".என்று கூறுகிறார்.

சகோ:அப்துல் ஹமீத் அவர்கள் தவறாக பேசியதற்கு தான் ஒரு முக்கிய காரணமாக
இருந்தும் அதை மறைத்து தனக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாதது போல்
சித்தரிக்கிறார். தான் செய்த தவறுக்கு மன்னிப்போ வருத்தமோ
தெரிவிக்கவில்லை.மாறாக அவருடைய தவறை தான் சுட்டிக்காட்டுகிறார்.

அவருக்கு மன்னிப்பு அளிப்பதின் மூலம் தான் பரிசுத்தவான் போல் காட்ட முற்படுகிறார்.

தான் செய்ததை நியாயப்படுத்த சில காரணங்களையும் முன்வைக்கிறார்.

தவறான நோக்கத்துக்காக பதிவு செய்துவிட்டு ,அப்படி ஒரு நோக்கம் தனக்கு
இல்லை. என்று திசை திருப்புகிறார்.

"மேலும் நானும் தாங்களை கோபப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்
ரெகார்டிங் செய்யப்படவில்லை. தாங்கள் சார்ந்து இருக்கும் இயக்கத்தின்
கொள்கை நிலைபாடு வித்தியாசப்படுகிறதே! என்றும், தனி ஒருவருக்கு (அதாவது:
உங்களுக்கு) கருத்து வேறுபாடு இருந்தால்! தாங்கள் ஆய்வு பணியை செவ்வனே
செய்ய வேண்டும், அல்லது தனித்து இருக்கவேண்டுமே தவிர பிற நமது
சகோதரர்களுக்கும் புகுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் தான் இதை ரெகார்டிங்
செய்தேனே தவிர தங்களை புண்படுத்தும் நோக்கத்தோடு செய்யவில்லை."

எனவே இந்த கடிதத்தை ஒரு கபட நாடகமாகவே கருதேவேண்டியுள்ளது.இறுதியாக ஒரு
கோரிக்கையை வைத்து விடைபெறுகிறார் .

"இந்திய தவ்ஹீது ஜமாஅத் டிரஸ்ட்டை” சார்ந்த சகோதரர் அப்துல் ஹமீது
அவர்கள் தன் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்த காரணத்தால்! இனி இவர்
என்னை தவறான வார்த்தைகளினால் பேசியதை விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக்
கொள்கிறேன்.


மேலும் இந்த வாக்கியத்தில், அப்துல் ஹமீத் அவர்கள் தவறுக்கு மன்னிப்பு
கேட்டு விட்டதால்,அவர் தொடர்பான பேச்சுக்களை இனி விமர்சிக்க வேண்டாம்
என்று கோரிக்கை வைக்கிறார். இந்த கோரிக்கை யாரை நோக்கி வைக்கிறார் என்று
தெரியவில்லை . இவர் மதிக்கும் அந்த அறிஞருக்கு[?] மட்டும் இதில்
விதிவிலக்கு உண்டா! என்பதையும் புரியவில்லை.அனைவருக்கும் சேர்த்துதான்
கூறுவாரேயானால். இதிலாவது நசுருத்தீன் உண்மையாளராக இருப்பாரேயானால்
முதலில் அபகரிக்கப்பட்ட கள்ள வெப்சைட்டில் உள்ள சகோ:அப்துல் ஹமீத்
அவர்களின் உரையாடல் அடங்கிய பதிவுகளையும் ,அது தொடர்பான ஆக்கங்களையும்
தனது ஆன்மீக அறிஞரிடம்[?] சொல்லி அகற்றிவிட்டு தனது தூய்மை தனத்தை
நிலைநாட்டட்டும்.

அப்பொழுதுதான் சகோ :அப்துல் ஹமீதின் மன்னிப்பை ஏற்றத்தை போல் ஆகும்
.இல்லை என்று சொன்னால் மக்களை ஏமாற்ற தான் இந்த கடிதம் என்ற நிலைக்கு
தான் வரவேண்டியிருக்கும். அறிஞரிடம்[?] சொல்லி அகற்ற போகிறாரா அல்லது
அவரோடு சேர்ந்து ஐக்கியமாகி தனது நிறத்தை வெளிபடுத்தப் போகிறாரா ?
பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

Sunday, November 28, 2010

டிசம்பர் -6- மாவட்ட தலை நகரங்களில் போராட்டம்! இ.த.ஜ.செயற்குழு முடிவு ! .


28112010137.jpg28112010(026).jpg28112010(009).jpg28112010(017).jpg28112010(024).jpg28112010(010).jpg
இறைவனின் திருப்பெயரால் !
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற் குழு கூட்டம் நேற்று சென்னை தலைமையகத்தில் நடை பெற்றது .அதில் டிசம்பர் ஆறு போராட்டத்தை பல முஸ்லிம் அமைப்புகள் கை விட்ட நிலையில், நாமும் கை விட்டால், பாபர் மஸ்ஜித் இடம் பற்றிய அலஹாபாத் தீர்ப்பை ஆமோதிப்பதாகவும், இடமே எங்களுக்கு சொந்தம் என்ற இடித்த இந்துத்துவ சக்திகளின் கூற்றை வலுப்படுத்தும் என்பதாலும் , இன்ஷா அல்லாஹ்
வரும டிசம்பர் ஆறு அன்று மக்களை திரட்டி மாவட்ட தலை நகரங்களில் கண்டனப்போராட்டம் மற்றும் ஆர்பாட்டங்களை மிக வீரியமாக நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது!

சுவரொட்டி வாசகங்கள் :

மறக்க மாட்டோம் டிசம்பர் -6
பாபர் பள்ளி இடித்த நாளை மறக்க மாட்டோம் !
ஏற்றி வைத்த போர் நெருப்பை
அணைக்க மாட்டோம்!

மறக்க மாட்டோம் டிசம்பர் -6
உரிமையை இழந்தோம் ,
உடமையை இழந்தோம்!
உணர்வை மட்டும்
இழக்க மாட்டோம்!

மறக்க மாட்டோம் டிசம்பர் -6
இறை இல்லம் இழந்தோம்
இடத்தையும் இழந்தோம் !
ஈமானை மட்டும்
இழக்க மாட்டோம் !