Saturday, November 20, 2010

பாபர் மஸ்ஜித் கட்டவிட மாட்டோம்; தொகாடியா கொக்கரிப்பு!


முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபர் மஸ்ஜிதில் , இரவோடு இரவாக சிலை வைத்து, பின்பு ஒரு கட்டத்தில் மஸ்ஜிதை உலகறிய இடித்து தரைமட்டமாகிவிட்டு, 'நாங்கள்தான் பள்ளியை இடித்தோம்; அதற்காக பெருமைப்படுகிறோம் என்று கொக்கரித்த இந்துத்துவாக்களின் கொட்டத்தை ஒடுக்கி, அவர்களை சிறைக்கூடத்தில் தள்ள துணிவற்ற ஆட்சி தொடர்ந்து நீடிப்பதாலும், மஸ்ஜித் நிலத்தை மரத்தடி தீர்ப்பின் மூலம் இந்துத்துவாக்களுக்கு தாரை வார்க்கும் நீதிமன்ற நீதிபதிகள்[!] நாட்டில் இருப்பதாலும், இந்துத்துவாக்களின் கொக்கரிப்பு நாளுக்குநாள் அதிகரிக்கிறது.

அயோத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள விசுவ இந்து பரிஷத் தலைவர் தொகாடியா,
அயோத்தியில் ராமர் பிறந்த இடம் இதுதான் என்பதை உறுதியாக நம்புகிறோம். இந்த இடத்தில் புதிய மசூதி கட்டுவதற்கு நாங்கள் ஒரு போதும் அனுதிக்க மாட்டோம். இங்குள்ள 67 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து மிகப் பெரிய ராமர் கோவிலை கட்டுவோம். இந்துக்களும் முஸ்லிம்களும் கலாச்சார ரீதியாக ஒன்றாக வாழ முடியாது என்று முகமது அலி ஜின்னாவே கூறி இருக்கிறார். அப்படி இருக்க மசூதியும், ராமர் கோவிலும் அருகருகே எப்படி இருக்க முடியும். அயோத்தியில் மசூதியும் கட்ட வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரிக்கை விடுப்பதை நிறுத்தி விட்டு ராமர் கோவில் கட்டுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பேசியுள்ளார் அல்ல. உளறியுள்ளார்.

இதன் மூலம் தங்களுக்கு சாதகமான அலகாபாத் தீர்ப்பைக் கூட இந்துத்துவாக்கள் ஏற்கத் தாயரில்லை என்பதும், அவர்களின் நோக்கம் பாபர் மஸ்ஜித் இடத்தை முற்றிலுமாக அபகரிப்பது என்பதும் தெளிவாகிறது. அயோத்தியில் மசூதியும் கட்டவேண்டும் என்பது முஸ்லிம்களின் கோரிக்கையல்ல. மாறாக மசூதி மட்டும்தான் கட்டவேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் கோரிக்கை என்பதை தொகாடியாக்கள் புரிந்து கொள்ளட்டும். எங்கள் இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதை தடுக்கும் திராணி தொகாடியாக்களுக்கு இருந்தால் தடுத்துப் பார்க்கட்டும். எங்கள் உடல்களை செங்கல்களாக்கி, எங்கள் உதிரத்தை கலவையாக்கியேனும், எங்கள் உயிருக்கும் மேலான இறைவனின் இல்லத்தை நிர்மாணித்தே தீருவோம் இன்ஷா அல்லாஹ்.

இந்த நேரத்தில் இங்கே இன்னொன்றை பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும். முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட காய் நகர்த்தலை இந்துத்துவாக்கள் திடமாய் செய்துவரும் வேளையில், இந்தியாவிலேயே முதல்முறையாக பாபர் மஸ்ஜித் கட்டபஞ்சாயத்து தீர்ப்பைக்கண்டு கொதித்தெழுந்து உடனடியாக களம் இறங்கிய இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நீதிமண்ற முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் தலையை எண்ணி, தமது குரோதத்தை வெளிப்படுத்திய தற்பெருமை கொண்ட தலைக்கனம் பிடித்தவர்கள், அந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை கைப்பற்றும் காய் நகர்த்தலை செய்வதை முதல் பணியாக கொண்டும், பாபர் மஸ்ஜித் போராட்டத்தை சாவகாசமாக அடுத்த வருஷம் வைத்திருப்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சமாகும்.

ஏனெனில், அவர்களுக்கு பள்ளிவாசல் என்பதும் இயக்கம் வளர்க்கும் ஒரு கருவிதான் என்பதற்கு இவர்களால் பூட்டப்பட்ட எஸ். பி. பட்டினம் சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு தொகாடியாக்கள் எல்லாம் எதிரிகள் அல்ல. தொழும் முஸ்லிம்களே எதிரிகள். அல்லாஹ் தொகாடியாக்களிடமிருந்தும், தொகாடியாக்களின் ஆக்கிரமிப்பு பணியை செய்துவரும் இத்தகைய சூழ்ச்சியாளர்களிடமிருந்தும் முஸ்லிம்களை பாதுகாப்பானாக!-mugavai abbas.

0 comments:

Post a Comment