Monday, November 29, 2010

உலக ஆதாயங்களுக்காக எதையும் செய்வார் பீ.ஜெ !

அன்பிற்கினிய சகோதரர் சர்புதீன்அவர்களுக்கு....
அஸ்ஸலாமு அலைக்கும்..
பாக்கருக்கு தாங்கள் எழுதிய கடிதம் (தங்களுக்கு வந்த கடிதம்) உண்மையிலேயே அழகிய முறையில் சகோதர பாசத்துடன் இருக்கிறது...
ஆனால் தங்களின் கடிதத்தில் கூறி இருக்கும் சம்பவங்கள் பற்றி சிறு சந்தேகம் ..!

பாக்கர் தடம் புரண்டதாக தாங்கள் குறிப்பிடும் நிகழ்வுகள் ஒரே நாளில் நிகழ்ந்து விடவில்லை என்பதை தங்களின் ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது..இந்நிலையில்..பல வருடங்களாகஒழுக்க கேட்டில்
இருக்கும் பாக்கரை தனது நாவன்மையால் (தாங்கள் தான் குறிப்பிட்டீர்கள் ) பீ.ஜெ தூக்கிப்பிடித்து நற்சான்றிதழ் வழங்க வைத்த மர்மம் என்ன?

பீ.ஜெ வின் நாவன்மை க்கு முன் டி.என்.டி.ஜெ. வினர் சரணடைகிறார்கள் எனில் இது நாள் வரை பாக்கரை போல் தவறுகள் செய்து பீ.ஜெ வின் நாவன்மையால் வெளிவராமல் உள்ளவர்கள் எத்தனைபேர்..?

ஒரு மூமின் ஒரே புற்றில் இருமுறை கொட்டுப்படமாட்டார் எனும் வாக்கை நம்பும் நாம்அடுக்கடுக்காக குற்றம் சாட்டப்பட்ட பாக்கரை பீ.ஜெ நாவன்மையால் தாங்கிப்பிடிக்கும் போது நமது மூளையை பீ.ஜெ விடம் அடகு வைத்து விட்டோமா..?

மார்க்கத்திற்கு புறம்பாக போகும் பாக்கரின் கடந்த கால தியாகங்களை பார்த்து அட்ஜஸ்ட் செய்து கொண்டார் பீ.ஜெ...! எனில் உலக ஆதாயங்களுக்காக எதையும் செய்வார் பீ.ஜெ என்பதில் மாற்றுக்கருத்து இருக்கிறதா..?

ஆக தங்களும் (தங்களுக்கு வந்த கடிதம்) பீ.ஜெ விற்கு வால் பிடிக்கிறீர்கள்..

சகோதரரே..! பாக்கர், முகவை அப்பாஸ், இன்னும் பீ.ஜெ வால் ஓரங்கட்டப்பட்டவர்கள் யாராக இருப்பினும் இன்று மக்கள் முன் உலாவரக்கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள் அவர்களை பார்த்து மக்கள் கேள்வி கேட்கட்டும் ,மக்கள் அவர்களை புறக்கணிக்கட்டும்,

தாங்கள் பாக்கருக்கு எழுதிய கடிதத்தை போல் பீ.ஜெ க்கும் ஒரு கடிதம் எழுதி இது நாள் வரை ...டி.என்.டி.ஜெ சகோதரர்களை தனது நாவன்மையால் பேசி முட்டாள்களாக்கியதற்கு முதலில்
மனம் திறந்து மன்னிப்பு கேட்கச்சொல்லுங்கள்.,

குற்றத்தை மூடி மறைத்ததற்கு பகரமாக இனிமேலும் மற்றவர்களை பற்றி புறம் பேசாமல் அழைப்பு பணிகளை மேற்கொள்ளச்சொல்லுங்கள் அந்த நற்காரியமாவது அவரது கப்ருக் குழிக்கு நன்மைகளை அள்ளித்தரும்..!


இறைஞ்சுதலுடன்...
இறை நேசன்

0 comments:

Post a Comment