Saturday, November 20, 2010

கலகக்கார பி.ஜே.வே எங்கள் ஊருக்குள் வராதே ! காயல்பட்டினத்தில் கண்டன போஸ்டர்.

திருவிடசேரி சம்பவத்திற்கு பின் தமிழக முஸ்லிம்களின் வெறுப்பை சம்பாதித்துள்ள பி.ஜே. தன்னுடைய தொடர் சமுதாய விரோதப்போக்கால் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்! சிறை வாசிகள் விசயத்தில் இவரின் சமிபத்திய அறிக்கைகளும் ,மற்ற முஸ்லிம் அமைப்புகளிடம் நடந்து கொள்ளும் முறையும் , போராட்டம், ஆர்பாட்டம் மாநாடு என்றால் , எந்த மக்களை அழைக்கின்றார்களோ பின்னர் அந்த மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தவது போன்ற செயல்களால் கேவலப்பட்டு நிற்கிறார். மற்ற முஸ்லிம்களின் மானத்தோடும் கண்ணியத்தோடும் உயிரோடும் விளையாடும் இவருக்கு காயல் பட்டினம் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது! நாளை நிகழ்ச்சி ஒன்றிக்காக செல்லும் பி.ஜே.வை கண்டித்து காயல்பட்டினம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் ' கலகக்கார பி.ஜே. வே எங்கள் ஊருக்குள் வராதே' என கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது!

0 comments:

Post a Comment