Sunday, May 30, 2010

மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை !

அன்பிற்குரிய சகோதரர்களே ! இணைய தளத்திலே சில சகோதரர்கள் இந்த இணைய சண்டையை நிறுத்த வேண்டும் ! என கோரிக்கை வைத்துள்ளனர். நமக்கு ஆசைதான் ! பேசிச் சேர்த்த நன்மைகளை எல்லாம் ஏசித் தீர்பதற்கு எமக்கும் விருப்ப மில்லைதான் ! ஆனால் நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான். என்ற மாவோவின் தத்துவப்படி மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று அதை இருக்கவிடுவதில்லை. என்பதுபோல் இரண்டாண்டு காலமாக அவர்கள் பொய்யையும் அவதூறையும் ஆயுதமாக சுமந்து தங்கள் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும், இணையத்திலும் இவர்கள் கக்கிய விஷம், ஆபாசம், சொல்லி மாளாது ! மார்க்க வரையறைகளை மீறி மனிதக்கறி தின்ற இவர்களை பார்த்து இப்போது கேட்பவர்கள் அப்போது ஏன் கேட்கவில்லை ! மறுமை நம்பிக்கையற்ற கொள்கையற்ற அரசியல்வாதிகள் கூட பிரிந்துள்ளனர். இவர்களைப்போல் ஒரு மனிதனின் கண்ணியத்தோடும் மானத்தோடும் விளையாடவில்லை ! ஆனால் ஏகத்துவம் பேசும் இவர்களை எதிர்த்து கேள்வி கேட்டவர்களின் குடும்பத்தை இழுக்கும் கேடு கெட்ட இவர்களின் வாயிலிருந்து வந்த வசுவுகள் கொஞ்சமல்ல ! பிரிந்த அன்றே இவர்கள் கேட்ட கேள்வி பாக்கரோடு உன் மனைவியை பஸ்ஸில் அனுப்புவாயா ? கேட்டவர்கள் கிளை நிர்வாகிகள் அல்ல ! கேவலத்திலும் கேவலம் குர்ஆன் ஹதிஸ் பேசும் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள். நாங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டோம். அநீதி இழைக்கப்பட்ட எங்களுக்கு அதே அளவில் பதிலடி கொடுக்க அல்லாஹ் அனுமதித்துள்ளான். பாக்கரோடு பஸ்ஸில் உன் மனைவியை அனுப்புவாயா ? என்று அவர்கள் கேட்டால் குற்றமில்லை ! ஏற்கனவே நீங்கள் உங்கள் மனைவியை அனுப்பினிர்களா ? என்று நாங்கள் கேட்டால் குற்றமா ? நியாத்தை பேசினால் பாக்கர் போடும் எலும்பு துண்டுக்கு பேசுகிறார்கள் என்பவர்களை பார்த்து ஏற்கனவே பாக்கர் போட்ட எலும்பை தின்ற அனுபவமா ? என்று கேட்டால் தவறா ? அவர்களின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பாக்கருக்கு லட்சக்கணக்கில் பணம் தரவேண்டிய நிலையில் இருக்க கேவலம் ரூ. 50,000/- ஜமாஅத் பணத்தை பாக்கர் தின்றார் என்று கூறுகின்றீர்களே நெஞ்சிலே கைவைத்து அல்லாஹ்வுக்கு அஞ்சி சொல்லுங்கள் ! உண்மையை யார் குடும்பத்தோடு ஜமாஅத் பணத்தை தின்கிறார்கள் என்பதை தம்பிக்கு உணர்வு, மைத்துனர்களுக்கு சன், மூன், மகனுக்கு எடிட்டிங், தனக்கு குர்ஆன், என மாதம் ஒன்றுக்கு பல லட்சத்தை மக்களிடம் தவ்ஹீத்தை சொல்லி சுரண்டும் கூட்டத்தை ஊருக்கு உணர்த்தினால் தவறா ?

மேலும், பொய்யன் பிஜே வலைத்தளம் துவங்கியது முதலிலா ? நாம் வலைத்தளம் தொடங்கியது முதலிலா என்பதை சிந்தித்துப் பாருங்கள் ? அபு யூசுப் எனும்பெயரில் அவரே தரம் தாழ்ந்து அவதூறை பரப்பியதால் தான் பதிலுக்கு பதில் என்கிற ரீதியில் நாமும் இறங்கினோம். சகோதரர் சொல்வதுபோல் தாக்குதலை துவங்கியவர்கள் நிறுத்தட்டும் ! பிறகு நாமும் நிறுத்துகிறோம். அவர்கள் ஆயுதத்தை கீழே வைக்காத வரை நாமும் வைக்கப்போவதில்லை.

1 comments:

அல்லாஹ் அனுமதித்தபடி அவர்களுக்கு பதிலடி கொடுங்கள் அவர்கள் உங்களுக்கு அநீதி இழைக்கும் பட்சத்தில் ஆனால் சேர்ந்திருக்கும் போது தமுமுகாவை ஜவாஹிருல்லாவை பழ்லுல் இலாஹியை வசை பாடிவிட்டு ஒரு தனிமனிதனின் மீது உள்ள வெறுப்பின் காரணமாக அவர்கள் அனைவரையும் அனைத்து கொண்டு நட்பு பாரட்டுகிறீர்களே இதை எந்ந வகையில் சேர்ப்பது. மாநில் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளுக்கு கடன் கொடுத்தார் என்று சொல்வது உங்கள் மீது தவ்ஹீத் ஜமாத்தால் சுமத்தபட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலாகிவிடுமா அப்படியே நீங்கள் கொடுத்திருந்தாலும் அது உங்களுக்கும் அந்த தனிபட்ட நபருக்கம் உள்ள பிரச்சனையே தவிர ஒட்டுமொத்த ஜமாத்தையும் குற்றம்சாட்டுவது எவ்வித்தில் நியாயம்?

Post a Comment