Monday, May 17, 2010

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்.ஜே.

அல்லாஹ்வின் திருப்பெயரால்....



“தீயவன் ஒரு செய்தியை கொண்டுவந்தால் அதை தீர விசாரியுங்கள் இல்லையேல் அறியாமல் ஒரு சமுதாயத்திற்கு தீங்கிழைத்து பின் வருந்தக்கூடும்” என அல்லாஹ் திருமறையில் கூறியிருப்பதை நாம் உணர்ந்து நடக்க வேண்டும். “கேள்விப்படுவதை எல்லாம் பரப்புவதே ஒருவன் பொய்யன் என்பதற்கு போது மானதாகும்” என்ற நபி மொழிக்கு இணங்க ஏகத்துவத்தை பின்பற்றுவதாக கூறும் நாம் எந்த ஒரு செய்தியையும் ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையை உணராமல் பரப்பிவிடக்கூடாது. அல்லாஹ் தஆலா திருமறையில் “பாதுகாப்பு பயம் பற்றிய செய்தி கிடைத்தால் உடனே பரப்பி விடுகின்றனர்.அதை அதிகாரமுள்ளவர்களிடத்தில் கொண்ட சென்றிருந்தால் அதன் உண்மை தன்மையை அவர்கள் ஆராய்ந்திருப்பர்” என்று கூறுவதன் மூலம் பொருப்பில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் பொய் பரவுவதற்கு காரணமாகி விட கூடாது.

அந்த வகையில் மக்களிடையே மார்க்க அறிஞர் என அறியப்படும் இவர் குர்ஆனை ஆராய்ந்து தான் பின்பற்ற வேண்டும் சஹாபாக்கள் உட்பட எவரது கூற்றையும் ஆதாரமின்றி பின்பற்ற கூடாது ! எனக்கூறும் இவர் நடைமுறையில் இதற்கு நேர் முரணாக தனக்குவரும் ஆதாரமற்ற செய்திகளை அப்படியே பரப்பிவிடுவதை பலசந்தர்பங்களி;ல செய்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நெல்லை யாதவ மாநாட்டில் சிலை திறப்பு விழாவில் பாக்கர் பங்கேற்று மற்றும் தவ்ஹீதை விட்டு தடம்புரண்டதாக தங்களது இணையதளத்திலும் பத்திரிக்கை வெளியான படத்தை போட்டிருந்தனர். கையில் வாக்கி டாக்கியுடன் தேவநாதன் நிற்கும் படத்தை போட்டு இந்த செய்தியை பரப்பினார். ரிமோர்டுக்கும் வாக்கி டாக்கிக்கும் வித்தியாசம் தெரியாமல், சிலை திறப்பு விழாவை புறக்கணித்து மாநாட்டில் மட்டும் பங்குபெற்று அங்கும்கூட “உங்களின் இந்த சிலைகளால் எந்த நன்மையுமில்லை” என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில், இப்ராஹிம் (அலை) வழியில் சத்தியத்தை எடுத்துரைத்த செய்தியை மறைத்து பொய்யை பரப்பியுள்ளனர். இதுபோன்று இவர் தனக்கு வரும் செய்திகளை அப்படியே பரப்ப கூடியவர் என்பதற்கு கீழே சில சம்பவங்களை தருகிறோம்.
இதுவரை நிரூபிக்காத ஆலயபிரவேசம் !
1. திருமாவளவனோடு பாக்கர் கைகோர்த்து ஆலயப்பிரவேசம் செய்தார் என்று இவர் அள்ளிவிட அதை அல்தாபி அப்படியே வாங்கி குவைத் நிகழ்ச்சி மேடை ஒன்றில் அள்ளிவிட இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக நிரூபிக்க தயாரா ?
என இதைபற்றி இதஜ எழுப்பிய சவாலுக்கு இன்று வரை பதிலில்லை.
இம்பீரியல் ஹோட்டல் பொய்
2. விண் டிவியில் தங்கள் கேசட்டை ஒளிபரப்ப மறுத்து விட்டதாக இம்பீரியல் ஹோட்டல் நிகழ்ச்சி மேடையில் வந்த செய்தியை அப்படியே ஆராயாமல் அள்ளிவிட அதன் பின் பல நாட்கள் விண் டிவியில் இவர்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
ஐசிஐசிஐ வங்கியை திவால் ஆக்கிய அண்ணன்
3. ஐசிஐசிஐ வங்கி திவாலாகிவிட்டது உடனே உங்கள் பணங்களை எல்லாம் எடுத்துவிடுங்கள் என தனக்கு வந்த ஆதாரமற்ற செய்தியை அப்படியே எஸ்எம்எஸ்ல் அள்ளிவிட்டு பின் ஐசிஐசிஐ நடவடிக்கைக்கு பயந்து பின்வாங்கினார்.

வக்ஃப் ஊழலும் வக்கீல் நோட்டீசும்
4. வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ ஊழலுக்கு துணைபோனார் என்று உணர்வில் எழுதிவிட்டு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் பின்வாங்கியது.
இருமுறை இறந்த நாகூர் ஹனிபா
5. நாகூர் ஹனிபா இறந்து விட்டார் என்று வந்த செய்தியை ஆராயமல் மேடையில் அறிவித்து மாட்டிக் கொண்டது. அந்த விஷயத்தை எடிட் செய்யாமல் டிவியில் ஒளிபரப்பி இறக்காத நாகூர் ஹனிபாவை இரண்டுமுறை சாகடித்தது.

இஸ்லாத்தை தழுவிய பில்கேட்ஸ் ?
6. பில்கேட்ஸ் இஸ்லாத்தை தழுவி விட்டதாக வந்த செய்தியை ஆராயாமல் சேப்பாக்கம் மேடையிலே அள்ளிவிட்டு பின்னர் சமாளித்தது ! (பெரியார் தசானை கண்காணிப்பவர் பில்கேட்ஸை கண்காணித்து இருக்க கூடாதா?)
அபு அப்துல்லா வாங்கிய சொத்து
7. அபு அப்துல்லா அந்நஜாத் பெயரில் சொத்தை வாங்காமல் தன் பெயரில் வாங்கினார் என கூறிவிட்டு பின்னர் நீதிமன்றம் சென்று பொய்யுரைத்து வழக்கிலிருந்து தப்பியது.
8. வேலூர் நாராயண் பீடத்திற்கு சென்று மடாதிபதியோடு பேசிவிட்டு எழும்போது எடுத்த படத்தை போட்டு சாமயாரின் காலில் விழுந்தார். காதர் மைதீன் என பரப்பியது.
காலில் விழுந்த காதர்மொய்தீன் !
சாமியாரிடம் ஆசிவாங்கிய ஜவாஹிருல்லா
9. தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவாடுதுறை ஆதினத்திடம் குர்ஆன் வழங்கி பேசிக் கொண்டிருந்த படத்தை வெளியிட்டு சாமியாரிடம் ஆசி வாங்கினார் ஜவாஹிருல்லா என பரப்பியது.
பழநி பாபா வைத்திருந்தது யாரை ?
10. மறைந்த பழனி பாபா ஒரு பெண்னை வைத்திருக்கிறார் என செய்தி பரப்பி ! நான் வைத்திருப்பது உன் மனைவியைத்தான் என அவரிடம் வாங்கி கட்டிக் கொண்டது.
இப்படி தனக்கு வரும் செய்திகளை ஆராயாமல் அள்ளிவிடுவதும் பின்னர் பொய்யை மறைக்க மேலும் பொய்களை கூறுவதும் பிறரின் மீது சேற்றை வாறி இறைக்க எத்தகைய அவதூறுகளையும் சுமத்துவதும் மற்ற தலைவர்களின் தரம் தாழ்த்தி அவர்களின் மானத்தோடு கண்ணியத்தோடும் விளையாடுவதும் இதற்காக துணிந்து பொய் வாயிலாக அறிவதோடு மார்க்கத்திலும் பொய் சொல்லக் கூடியவர் என்பதற்கு முஜிபுர்ரஹ்மான் உமரி சொல்லும் சம்பவம் சாட்சியாகிறது. ஒரு விவாதத்தின் போது எதிரணிக்காரர்கள் குறிப்பிட்ட ஒரு ஸஹீஹ் அன ஹதீஸை எடுத்து வைத்தால் என்ன செய்வது என்று இவரது அணியைப் சேர்ந்த ஒருவர் கேட்ட போது அதை நாம் ளயீப் (பலவீனம்) ஆக்கிடுவோம் என்று சொன்ன செய்தி இவர் இதுவரை சொன்ன மார்க்கத்தையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

- மங்கோலியன்

0 comments:

Post a Comment