Saturday, November 20, 2010

இதஜ குவைத் மண்டலத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்லாஹ்வின் பேரருளால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், குவைத் மண்டல ஆலோசனை மற்றும் மார்க்க விளக்கக் கூட்டம், மண்டலத் தலைவர்
புகாரி ஹசன் அவர்கள் தலைமையில், ஏனைய மண்டல நிர்வாகிகள் முன்னிலையில், மிர்காப் ரவுண்டனா பள்ளி வளாகத்தில் வெள்ளியன்று (19 -11 -2010) சிறப்புடன் நடைபெற்றது.

ஆரம்பமாக பேசிய மண்டல அழைப்பாளர் சகோதரர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள், இதஜ வின் பணிகளையும், வருங்கால செயல்திட்டங்களையும் விளக்கினார். தொடர்ந்து பேசிய சகோதரர் முகவைஅப்பாஸ் அவர்கள், அழைப்புப் பணியின் அவசியத்தையும் நிர்வாகிகளின் பண்புகளையும் எடுத்துரைத்தார்.

பின்பு அமைப்பை சூழ்ந்துள்ள சதிகளை முறியடிக்கும் வகையில், அமைப்பை வீரியமாக கொண்டு செல்லும் வகையில் நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டு பின் வரும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மண்டலத் தலைவர் :முகவைஅப்பாஸ்.
துணைத்தலைவர் : புகாரி ஹசன்
செயலாளர் : சாதிக் பாஷா.
பொருளாளர் : ராஜ் முஹம்மத்
துணைச்செயலாளர்கள் : முபாரக் பாஷா, ஷேக்தாவூத், முஹம்மது ரபீக், முஹம்மது சேட்.
செய்தி தொடர்பாளர்/ அழைப்பாளர்; ஜாஹித் பிர்தவ்ஸ்.

குறிப்பு; நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக கலந்துகொண்ட சகோதரர்களில் மீரான் மற்றும் முஹம்மது எனும் இரு சகோதரர்கள் தங்களை இதஜ வில் இணைத்துக் கொண்டனர். அவ்விருவரும் முறையே, ஷுஹதா மற்றும் சால்மியா கிளைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

தீர்மானங்கள்;
*சகோதரர் பாக்கர் அவர்கள் தலைமையில், பல சகோதரர்களின் தியாகத்தால் வளர்ந்து, இரண்டாண்டுகளாக மார்க்க/சமூக பணியில் முத்திரை பதித்துவரும் இதஜவை கைப்பற்றும் நோக்கிலும், குழப்பம் விளைவிக்கும் நோக்கிலும் செயல்படும் சதிகாரர்களை கண்டிப்பது.

*சதிகாரர்களின் சதியை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் தலைமைக்கு ஒத்துழைப்பு நல்குவது என்றும், விரைவில் இதஜ தேசிய தலைவரை குவைத் அழைத்து, மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!


குவைத் மண்டல தொடர்புக்கு; 65120393 , 97465872 , 97659759 , 65727633 , 97102763 ,

0 comments:

Post a Comment