ததஜ முன்னாள் மாநில வர்த்தக அணிச் செயலாளர் இதஜவில் சேர்ந்தார்!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்று (31.07.2011) புதுவை மாநில பொதுக்குழு நடைபெற்றது! நிகழ்ச்சியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் வர்த்தக அணிச் செயலாளர் பீர் முஹம்மது (ஸவனி பாய்), மூத்த வழக்கறிஞர் ஸுலைமான் மற்றும் இதர சகோதரர்கள் மாநிலத் தலைவர் S.M. பாக்கர் முன்னிலையில் இணைந்தனர்.
சகோதரர் பீர் முஹம்மத் வல்லம் மாநாட்டின் போது , சிறு தொழில் மற்றும் அரசு உதவிகள் தொடர்பான தகவல்களை திரட்டி , அதெற்கென் மாநாட்டில் அரங்கம் அமைத்து சிறப்பாக செயல் பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது! இவரது வருகை புதுவை இ.த.ஜ. விற்கு புத்துணர்வு அளித்துள்ளது!
மேலும் பொதுக் குழுவில் 'புதுவை சட்ட சபைக்கு நியமன சட்டசபை உறப்பினர்கலில் முஸ்லிம்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும் ! புதுவையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை புதிய அரசு உடனடியாக செயல் படுத்த வேண்டும்' உள்ளிட்ட தீர்மனங்கள் நிறை வேற்றப்பட்டன!
நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் முனீர், மாநில நிர்வாகிகள் அபூஃபைஸல், ஹிதாயதுல்லாஹ் மற்றும் புதுவை தலைவர் ஸபீர் உள்ளிட்ட புதுவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பொதுக் குழுவில் 'புதுவை சட்ட சபைக்கு நியமன சட்டசபை உறப்பினர்கலில் முஸ்லிம்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும் ! புதுவையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை புதிய அரசு உடனடியாக செயல் படுத்த வேண்டும்' உள்ளிட்ட தீர்மனங்கள் நிறை வேற்றப்பட்டன!
நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் முனீர், மாநில நிர்வாகிகள் அபூஃபைஸல், ஹிதாயதுல்லாஹ் மற்றும் புதுவை தலைவர் ஸபீர் உள்ளிட்ட புதுவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment